Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akalyavin Aagayam
Akalyavin Aagayam
Akalyavin Aagayam
Ebook130 pages39 minutes

Akalyavin Aagayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Akalyavin Aagayam

Read more from Rajeshkumar

Related to Akalyavin Aagayam

Related ebooks

Related categories

Reviews for Akalyavin Aagayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akalyavin Aagayam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஆல்பர்ட் நெஞ்சில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு தன் சுழல் நாற்காலியில் சாய்ந்ததும் - இண்டர்காம் கூப்பிட்டது. ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    எஸ்...

    குட்மார்னிங் ஸார் நான் பி.ஆர்.ஓ. பேசறேன்...

    என்ன...?

    ஜெகன் இன்னிக்கு வேலைக்கு வந்திருக்கான் ஸார். அவன் வேலைக்கு வந்தா உடனடியா இன்ஃ பார்ம் பண்ணச் சொல்லியிருந்தீங்க...

    நீங்க அவனை ஏதும் பேசலையே...?

    இல்ல... ஸார்...

    சரி என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க... - ஆல்பர்ட் ரிஸீவரை கவிழ்த்துப் போட்டுவிட்டு - மேஜையின் இடதுபக்க ஓரமாய் அருகில் வைத்திருந்த ஃபைல்களில் ஒன்றை எடுத்து பிரித்தார். இரண்டு பக்கங்களை புரட்டி கையெழுத்து போட்டிருந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.

    டொக்... டொக்...

    எஸ்... கம்... இன்...

    அந்த இளைஞர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். இருபத்தைந்து வயது இருக்கலாம். லேசாய் முரட்டு முகம். மேலுதட்டிலும் தாடையிலும் ஒரு வார ரோமம். சிகரெட் புகையில் ஸ்நானம் செய்து செய்து - கரு ஊதா நிறத்தில் நிகோடின் உறைந்துவிட்ட உதடுகள். சிவப்பு கலந்த கண்கள். பொம்மை போட்ட முழங்கை பனியனும் - கறுப்பு பேண்ட்டும் - தடித்த மணிக்கட்டில் செம்பு வளையம் மாட்டியிருந்தான்.

    வணக்கம் ஸார்... கூப்பிட்டீங்களாம்... பி.ஆர்.ஓ. சொன்னாரு... ஆல்பர்ட் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு - கேட்டார்.

    யூனிஃபார்ம் ஏன் போட்டுகிட்டு வரலை...? ஃபாக்டரிக்கு வரும்போது யூனிஃபார்ம் போட்டுகிட்டுதான் வரணும்ங்கிற ரூல் இருக்கு தெரியுமா...?

    தெரியும் ஸார்...

    பின்னே ஏன் போட்டுகிட்டு வரலை...?

    போட்டுகிட்டுதான் ஸார் வந்தேன்... வந்த வழியில மாட்டு வண்டிக்காரன் ஒருத்தன் என் சைக்கிள் மேல மோதிட்டான்... ரோட்ல தேங்கியிருந்த மழைத் தண்ணியில விழுந்து... போட்டிருந்த யூனிஃபார்ம் நாசமாயிடுச்சு ஸார்... உடனே வீட்டுக்கு போய் மாத்திட்டு வந்தேன்...

    கம்பெனி உனக்கு ரெண்டு செட் யூனிஃபார்ம் குடுத்திருக்கில்ல?

    ஆமா...

    இன்னொரு 'செட்'டை போட்டுட்டு வரலாமே...?

    அது கிழிஞ்சு போச்சு ஸார்...

    அவன் பொய் சொல்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவர் சில விநாடிகள் அவனை உற்றுப் பார்த்து விட்டு கேட்டார்.

    சரி... ரெண்டு நாளா... ஏன் வேலைக்கு வரலை...?

    லீவு லெட்டர் குடுத்துட்டு தானே போனேன்...?

    எதுக்காக லீவு... போட்டே...?

    திருச்சூர்ல என் ஃப்ரண்ட் ஒருத்தன் செத்துட்டான்... சின்ன வயசிலிருந்தே ஸ்நேகிதம். அதான் போயிட்டு வந்தேன்...

    அந்த ஃப்ரண்ட்டோட பேரென்ன...?

    நாராயணன்...

    சரி இந்த லெட்டரைப் படி... தன் மேஜையின் இழுப்பறையை திறந்து - உள்ளேயிருந்த இன்லேண்ட் கவர் ஒன்றை எடுத்து நீட்டினார். ஜெகன் அதை வாங்கிப் பிரித்தான். உள்ளேயிருந்த வாசகங்களில் பார்வை பரபரவென்று அலைந்தது.

    மதிப்பிற்குரிய ஃபேக்டரி மேனேஜர் ஆல்பர்ட் அவர்களுக்கு

    - வணக்கம். இப்பவும் உங்கள் ஃபாக்டரியில் 'போர். மென்' வேலை பார்க்கும் ஜெகனைப் பற்றி உங்களுக்கு சில தகவல்களை சொல்ல விரும்புகிறோம். நாங்கள் வசிக்கும் குடித்தனப் பகுதியான முத்தப்பா காலனியில் - ஜெகன் பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தி வருகிறார். நல்ல குடும்பங்கள் வாழ்க்கை நடத்தும் அந்த பகுதியில் - விபச்சார விடுதி இருப்பதால் எங்கள் வீட்டுப் பெண்கள் - இருட்டியதும் தெருவில் நடமாட முடியவில்லை. இதைப் பற்றி போலீஸில் புகார் செய்தும் அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. ஜெகன் போலீஸார்க்கு கணிசமான தொகையை லஞ்சமாய் கொடுத்துவிடுவது தான் காரணம். அந்த விவலயக்கில் ஒரு நல்ல முடிவு கிடைக்க - உங்களுடைய

    உதவியை நாடுகிறோம். ஜெகனுக்கு உங்கள் பேக்டரியில் வேலை கொடுத்து வைத்திருக்கும் நீங்கள்தான் அவருக்கு புத்திமதி சொல்ல வேண்டும். எங்கள் காலனியில் அவன் வைத்து நடத்தும் விபச்சார விடுதியை அகற்ற வேண்டுகிறோம்.

    இப்படிக்கு

    முத்தம்மா காலனிவாசிகள்.

    கடிதத்தை படித்துவிட்டு நிமிர்ந்தான் ஜெகன். அவனுடைய உதட்டில் கோணலாய் ஒரு சிரிப்பு தொற்றியிருந்தது. ஆல்பர்ட் தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே கேட்டார்.

    சிரிச்சா என்ன அர்த்தம்...?

    இந்த லெட்டரை நீங்க நம்பறீங்களா ஸார்?

    நம்பற மாதிரி தானே இருக்கு...

    ஸார்... என்னைப் பிடிக்காதவங்க யாரோ... எழுதிப் போட்ட லெட்டர் இது... முத்தம்மா காலனி எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது...

    நிஜமா உனக்குத் தெரியாது?

    தெரியாது ஸார்...

    அப்படீன்னா நீ விபச்சார விடுதியை நடத்தலை...?

    நடத்தலை...

    Enjoying the preview?
    Page 1 of 1