Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aluminiya Paravaigal
Aluminiya Paravaigal
Aluminiya Paravaigal
Ebook135 pages35 minutes

Aluminiya Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Aluminiya Paravaigal

Read more from Rajeshkumar

Related to Aluminiya Paravaigal

Related ebooks

Related categories

Reviews for Aluminiya Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aluminiya Paravaigal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஏர்போர்ட்,

    நள்ளிரவு. ஒரு மணி பதின்மூன்று நிமிஷம். கண்ட்ரோல் அறைக்குள் குளிர்க்கு அடக்கமாய் உட்கார்ந்து - கண்ணாடிக். குவளையில் சூடான கறுப்பு டீயை சப்பிக் கொண்டிருந்த கண்ட்ரோல் ஆபீஸர் சாஸ்திரி - வயர்லெஸ் முணுமுணுத்ததும் கண்ணாடிக் குவளையை அவசர அவசரமாய் மேஜையின் மேல் வைத்துவிட்டு - ஹெட்போனை எடுத்து மாட்டிக் கொண்டு – ரிஸீவரில் செய்தி வாங்கினார். மறுமுனை தகரக் குரலில் கரகரத்தது.

    A-137 கட்டாயமாக கொச்சி ஏர்ஃபோர்ட்டில் லேண்ட் செய்யப்பட்டுள்ளது...

    காரணம்...?

    பெய்லியர் ஆஃப் எயிலிரான்கள்...

    இந்த ஏர்போர்ட்டுக்கு எப்போது எதிர்பார்க்கலாம்.

    விடிகாலை ஐந்தரை மணிக்கு.

    அதற்கு முன்னால்...?

    சாத்தியமில்லை... மேஜர் ரிப்பேர். என்ஜீனியர்ஸ் நாளைக்கு காலையில்தான் கிடைப்பார்கள்...

    பாஸஞ்சர்ஸ்...

    ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

    'A-137 பைலட்ஸ் யார்...?

    கோவிந்த் அண்ட் அருண்குமார்

    மொத்தம் எத்தனை பயணிகள்...?

    "எழுபத்தியேழு...

    வயர்லஸ் அணைந்து போனதும் - சாஸ்திரி ஹெட்போனை கழற்றிவிட்டு பக்கத்து மேசையின் மேல் இருந்த ஊதாநிற இண்டர்காமின் ரிஸீவரை எடுத்து - ஒரு பட்டனைத் தட்டி - விமான நிலையத்தின் பிரதான கட்டிடத்துக்குள்ளேயே இருந்த விங் கமாண்டர் - 'மகாவீர் ஜோஷியை' தொடர்பு கொண்டார்.

    ஸார்... நான் சாஸ்திரி...

    சொல்லுங்கள்...

    A-137 நான்கு மணி நேரம் லேட்.

    காரணம்...

    எய்லிரான்கள் செயல்படவில்லையாம். கொச்சின் ஏர்போர்ட்டில் கட்டாயமாக லேண்ட் செய்திருக்கிறார்கள்.

    மகாவீர் எரிச்சல் பட்டார். சட்! அது ஒரு ஃப்ளைட்டா! கோவேறு கழுதை. வாரத்தில் இரண்டு நாளாவது அதற்கு முடக்கு வாதம் வந்துவிடும். அதை உருக்கி அலுமினிய பாத்திரங்கள் செய்யச் சொல்லி ஏர் கிராஃப்ட் செண்டர்க்கு கடிதம் எழுத வேண்டும்...

    சாஸ்திரி குரலை பவ்யமாக்கினார்.

    ஸார்! காலை ஐந்தரை மணி வரைக்கும் கண்ட்ரோல் ரூம் ஊமைதான். எனக்கு எந்தப் பணியும் கிடையாது

    ஓய்வு அறைக்குப் போய் - அலாரம் வைத்துவிட்டுத் தூங்குங்கள்...

    "ஒரு ரெக்வெஸ்ட் ஸார்...

    என்ன…?

    நான் என்னுடைய குவார்ட்டர்ஸுக்குப் போய் ஓய்வு எடுத்துக் கொண்டு - நான்கு மணிக்கெல்லாம் திரும்பி விடுகிறேன்...

    சரியாய் நான்கு மணிக்கு வந்துவிடுவீங்களா?

    வந்துவிடுவேன்...

    ஏ.ஸி.ஓ... எங்கே...?

    பக்கத்து அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

    அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நீங்கள் குவார்ட்டர்ஸுக்குப் புறப்படுங்கள்.

    தாங்க்யூ ஸார்...

    சாஸ்திரி ரிஸீவரை வைத்துவிட்டு உற்சாகமாய் எழுந்தார். நாற்காலியின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த - உல்லன் கோட்டை எடுத்து உடம்புக்கு கொடுத்தபடி – பக்கத்து அறைக்கு வந்தார். கீழே பேப்பர் விரித்து தூங்கிக் கொண்டிருந்த அஸிஸ்டண்ட் கண்ட்ரோல் ஆபீஸரின் தோளைத் தட்டினார்.

    வின்சென்ட்...

    வின்சென்ட் சட்டென்று தூக்கம் கலைந்து 'ஸார்' - என்றபடி எழுந்தார்.

    A-137 நாலு மணி நேரம் லேட்... நான் குவார்ட்டர்ஸுக்கு போய்ட்டு வந்துடறேன்... சி.ஆர். இன்சார்ஜை எடுத்துக்குங்க...

    எஸ்... ஸார்...

    நான் அஞ்சு மணிக்குள்ளே திரும்பிடுவேன்... சொன்ன சாஸ்திரி, கண்ட்ரோல் அறையைவிட்டு வெளியே வந்தார்.

    விமான நிலையம் - அந்த நள்ளிரவு நேரத்தில் நிசப்தமாய் இருந்தது. லேசான பனிப் பொழியல். தொலைதூர ரன்வேயின் இரண்டு பக்கங்களிலும் - ரத்தத் துளிகள் சிதறிய சைஸில் - சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்தன.

    லௌன்ஞ்சுக்கு வந்தார். வர்ணமயமான பாலிவினைல் நாற்காலிகள் வெறிச்சோடிக் கிடக்க - அவைகளுக்கு மத்தியில் நடந்து - லௌன்ஞ்சின் கோடியில் இருந்த பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள் நுழைந்தார். கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு - ஏர்ஹோஸ்டஸ் ரூப்கலா வீட்டு போன் நெம்பரை மனசுக்கு கொண்டு வந்து டயல் பட்டன்களைத் தட்டினார். இணைப்பு கிடைத்து 'ரூப்கலா' வின் செர்ரி பழக் குரலைக் கேட்டதும் காசைப் போட்டுவிட்டு ரூப்! நான் சாஸ்திரி - என்றார்.

    மறுமுனையில் ரூபகலா வியந்தாள்.

    வாவ்...! என்ன இந்த நேரத்துல... போன்...?

    பண்ணக்கூடாதா?

    பண்ணலாம்... பண்ணலாம்...! என்ன விஷயம்...?

    வீட்டுக்கு வரலாமா...?

    இன்னிக்கு ட்யூட்டி இருக்கிறதாய் சொன்னீங்க?

    இந்த நிமிஷத்திலிருந்து நாலு மணி வரைக்கும் நான் ஃப்ரீ...

    ஏன்...

    A-137 லேட்... 'அரைவல் டைம்' அஞ்சரை மணி! அதுவரைக்கும் கண்ட்ரோல் ரூம்ல உட்கார்ந்திட்டிருக்க முடியுமா...? அதான் ஏ.ஓ. பர்மிஷன் கேட்டுட்டு வெளியே வந்துட்டேன்...

    ஏர்போர்ட் லௌன்ஞ் பூத்திலிருந்தா பேசிட்டிருக்கீங்க?

    ஆமா...

    நீங்க இப்ப அவசியம் என் வீட்டுக்கு வரணுமா?

    ஆமா... ஆமா...

    சிரித்தாள் ரூப்கலா.

    பேரு சாஸ்திரி... வயசு கிட்டத்தட்ட அம்பது... உங்களுக்கு இருக்கிற வேகம் ஒரு சின்னப் பையனுக்கு கூட இருக்காது போலிருக்கே...

    வளவளன்னு பேசிட்டிருக்காதே...! இப்ப வரட்டுமா வேண்டாமா?

    வாங்க...! கோபிச்சுக்கறீங்களே...!

    பத்தே நிமிஷத்துல வந்துடறேன்...

    ரிஸீவரை கொக்கியில் மாட்டிவிட்டு சாஸ்திரி பூத்தை விட்டு வெளியே வந்தார். ஏர்போர்ட்டுக்கு வெளியே

    Enjoying the preview?
    Page 1 of 1