Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iruttai Thedi
Iruttai Thedi
Iruttai Thedi
Ebook154 pages56 minutes

Iruttai Thedi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Iruttai Thedi

Read more from Rajeshkumar

Related to Iruttai Thedi

Related ebooks

Related categories

Reviews for Iruttai Thedi

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iruttai Thedi - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ‘சுமங்கலி பட்டுச் சேலைகள்’ என்று பக்கவாட்டில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்த மாருதிவேன், பங்களாவின் அகன்ற வாயிலில் நுழைந்து குரோட்டன்சு செடிகளுக்கு நடுவில் நேராய் ஓடி - போர்டிகோவில் வந்து பதுங்கி நின்றது. வேனிலிருந்து இரண்டு சிப்பந்திகள் இறங்கினார்கள். பின்பக்கக் கதவை மேலே உயர்த்த வேனின் உள்ளே வரிசையாகப் பட்டுச் சேலைகளைக் கர்ப்பம் தாங்கிய அட்டைப் பெட்டிகள் நூற்றுக்கணக்கில் தெரிந்தன.

    சிப்பந்திகள் தங்களுக்குள் பேசிக் கொண்டே அட்டைப் பெட்டிகளை இறக்கி வைத்தார்கள்.

    மொத்தம் முன்னூறு பட்டுச் சேலைகள் கொண்டு வந்திருக்கோம். இதுல எவ்வளவு எடுப்பாங்கன்னு நினைக்கிறே... சுந்தரம்...?

    ஒரு இருபத்தஞ்சு எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    எனக்கென்னமோ நம்பிக்கையில்லை...

    நீ வேணுமின்னா பாரு... நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண இடமில்லை... இருக்கிற ஒரே பெண்ணுக்கு கல்யாணம்... மனுசன் செலவு பண்ணத் தயங்குவாரா... அதோ... அவரே வந்துட்டார்... பேச்சு நின்றது.

    மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். சிவானந்தம். ஐம்பது வயது. பழைய ரங்காராவ் உயரம். தங்க பிரேமிட்ட கண்ணாடியில் சங்கிலி கோர்க்கப்பட்டு காதுக்கும் போயிற்று. பிடரியிலும் காதோரத்திலும் நரைமுடிகள் பிழைத்திருக்க - மற்ற இடம் பளீர் வழுக்கை. கொக்கு வெள்ளையில் முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்திருந்தார் கைவிரல்களில் மோதிரங்கள் நிறம் நிறமாய் மின்னின.

    வேலையாள் ஒருவன் ஓடிவந்து எதிரில் நின்று பவ்யமாய், கைகட்டி சொன்னான்.

    அய்யா...! பட்டுச் சேலை வந்திருக்குங்க...

    சரி... போய் அவங்களுக்கு உதவி பண்ணு. அறையில் சேலைகளை பரப்பி வைக்கச் சொல்லு...

    சரிங்கய்யா...

    அவன் பங்களாவின் முன் பக்கத்தை நோக்கி ஓட சிவானந்தம் வேட்டி சரசரக்க ஹாலின் கோடியில் இருந்த மகள் திவ்யாவின் தனி அறையை நோக்கிப் போனார்.

    அறைக்கதவு வெறுமனே சாத்தியிருக்க தள்ளிக்கொண்டே குரல் கொடுத்தார். திவ்யா...

    வாங்கப்பா... திவ்யாவின் குரல் தர்பூசணிப்பழ குளிர்ச்சியோடு உள்ளேயிருந்து வெளிப்பட்டது. கதவை திறந்து கொண்டு உள்ளே போக - கட்டிலுக்குச் சாய்ந்து உட்கார்ந்து - புத்தகமொன்றைப் பிடித்திருந்தாள் திவ்யா.

    கண்களைப் பறிக்கிற மாதிரி - அழகாக இருந்த திவ்யாவுக்கு இப்போது இருபத்தோரு வயது. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய உயரம். எலுமிச்சை நிறம். மை தீட்ட வேண்டிய அவசியமில்லாத கண்கள். மெலிதான நீலவர்ண பூனம் சேலை உடம்பின் மேடு பள்ளங்களில் பொருந்தியிருந்தது. செதுக்கின உதடுகளில் ஈரம் மினுமினுத்தது.

    என்னம்மா... நீ புத்தகத்தைப் படிச்சிட்டிருக்கே...?

    ஏம்பா...

    கல்யாணப் பத்திரிகையைத் தேர்வு பண்ணச் சொன்னேனே...?

    அதுக்கு இப்ப என்னப்பா அவசரம்...? கல்யாணத்துக்குத்தான் இன்னும் மூணு மாசம் இருக்கே...!

    அம்மா! மூணுமாசம்ங்கிறது... கைசொடுக்குப் போடற நேரத்துல வந்துடும். இப்பயிருந்தே ஒவ்வொண்ணையும் பண்ணினாத்தான்... கல்யாணம் பக்கத்துல வரும்போது பதட்டம் இல்லாமே இருக்கும்...

    இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே... கல்யாணப் பத்திரிகையைத் தேர்வு பண்ணிடறேம்பா... போதுமா...?

    சரி... இப்ப... வாம்மா...

    எதுக்கு...?

    பட்டுச் சேலைகள் வந்திருக்கு... வந்து உனக்கு வேண்டியதை இஷ்டம்போல எடுத்துக்க... ஒரு மாருதிவேன் நிறைய அடுக்கி கொண்டு வந்திருக்காங்க. நல்ல சேலைகளா... எடுத்துட்டு வரச்சொன்னேன்...

    எவ்வளவு எடுத்துக்கலாம்பா...?

    நீ எவ்வளவு ஆசைப்படறயோ... - அவ்வளவு எடுத்துக்கோம்மா...! நான் சம்பாதிக்கிறதெல்லாம்... உனக்கு ஒருத்திக்குத்தானே...? உங்கம்மா உயிரோடு இருந்திருந்தா... உனக்குக் கல்யாணம் நடக்கப் போகிற இந்த மகிழ்ச்சியில் எப்படி பூரிச்சு போயிருப்பா தெரியுமா... அதுவும் நீ அமெரிக்கா மாப்பிள்ளைக்கு...

    அம்மாவைப் பத்தி பேசாதீங்கப்பா... அப்புறம் எனக்கு அழுகை வந்துரும்... வாங்க... போகலாம்.

    இருவரும் அறை வாசலுக்கு வந்தார்கள்.

    அங்கே ஜவுளிக்கடையே வந்து இறங்கிய மாதிரி இருந்தது. அட்டைப் பெட்டிகளிலிருந்து வெளிப்பட்ட சேலைகள் தங்க ஜரிகை வேலைப்பாடுகளோடு நிறம் நிறமாய் ஜொலித்தன. திவ்யா குதிநடை போட்டுக் கொண்டு - பரப்பியிருந்த சேலைகளுக்கு முன்னால் போய் உட்கார்ந்தாள். எதை எடுப்பது...? எதைத் தவிர்ப்பது...? திணறினாள்.

    மயில் கழுத்து வண்ணப்புடவை ஒன்று கண்களைச் சுண்டி இழுக்க- அதை எடுத்தாள் திவ்யா.

    அதே விநாடி- பக்கத்து அறையில் தொலைபேசி உச்சமாய்க் கத்தி கூப்பிட்டது.

    நீ பாரம்மா...! நான் யாருன்னு பார்க்கறேன். கம்பெனியிலிருந்து மானேஜர்தான் பேசுவார். - சொன்ன சிவானந்தம் பக்கத்து அறைக்குள் நுழைந்து தொலைபேசியின் ஒலி வாங்கியை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார்.

    அலோ...

    மறுமுனையில் - ஒலித்த குரலை செவிமடுத்த சிவானந்தத்தின் முகம் மகிழ்ச்சியைப் பூசிக்கொண்டது. ஒலிவாங்கியின் வாயைப் பொத்திக்கொண்டு ஹாலை நோக்கி குரல் கொடுத்தார்.

    அம்மா... திவ்யா...! ஒரு நிமிடம் இங்கே வந்துட்டுப் போம்மா...

    திவ்யா வேகவேகமாய் வந்தாள்.

    போனில் யாரப்பா...?

    அமெரிக்காவிலிருந்து மாப்பிள்ளை பேசறார் அம்மா... உன்கூட பேசணுமாம்... இந்தா... பேசு...

    கண்களை வியாபித்துக் கொண்ட மகிழ்ச்சியுடன் காதுக்குக் கொடுத்து அலோ என்றாள் திவ்யா. சிவானந்தம் நாகரீகம் கருதி அறையிலிருந்தும் வெளியேறினார். மனசுக்குள் எக்கச்சக்க பூரிப்பு.

    கிசுகிசுத்தது - அமெரிக்க மாப்பிள்ளை சங்கரின் குரல்.

    எப்படியிருக்கே திவ்யா...?

    நல்லாயிருக்கேன். நீங்கள்...?

    பகல் பூராவும் உடம்பு நல்லாயிருக்கு! இராத்திரியில் தான்... சரியில்லை...

    என்ன பண்ணுது…?

    காய்ச்சல்.

    மருத்துவர்கிட்டே காட்ட வேண்டியதுதானே?

    காட்டினேன்...

    என்ன சொன்னார்...?

    மருந்து எழுதிக் கொடுத்தார்...

    மருந்தை ஒழுங்கா சாப்பிடறீங்களா...?

    அந்த மருந்து இங்கே கிடைக்கலை... இந்தியாவில்தான் கிடைக்குமாம். முக்கியமா... சென்னையில்...

    Enjoying the preview?
    Page 1 of 1