Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeyippathu Nijam
Jeyippathu Nijam
Jeyippathu Nijam
Ebook139 pages35 minutes

Jeyippathu Nijam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Jeyippathu Nijam

Read more from Rajeshkumar

Related to Jeyippathu Nijam

Related ebooks

Related categories

Reviews for Jeyippathu Nijam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeyippathu Nijam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    "ஜே!" என்றான் விவேக். கையில் இருந்த ரிஸீவரை வைத்தபடி. ராத்திரி மணி பத்து. டெல்லி குளிர்க்கு இதமாய் கம்பளிக்குள் புகுந்து கொண்டு ஸ்டார் டி.வி.யில் ஃபேஷன் ஷோ பார்த்துக் கொண்டிருந்த ரூபலா விவேக்கை ஏறிட்டாள்.

    இப்போ எதுக்காக 'ஜே' போட்டீங்க...?

    விவேக் ரூபலாவுக்கு பக்கத்தில் வந்து அவளை நெருக்கிக் கொண்டு உட்கார்ந்தான்.

    நாம் டெல்லிக்கு வந்து இப்போ எத்தனை நாளாச்சு?

    இன்னிக்கு சரியா ஒரு வாரம்...

    நான் எதுக்காக டெல்லி வந்தேன்...?

    நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் உங்களை உடனே வரச்சொல்லி... கான்பிடென்ஷியல் லெட்டர் போட்டாங்க... வெந்நீரை கால்ல கொட்டிகிட்ட மாதிரி உடனே அடுத்த ஃப்ளைட்டை பிடிச்சு டெல்லி வந்தோம்... வந்து ஒரு வாரமாகியும் நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் உங்களை கண்டுக்கலை. இந்த ஸ்டார் ஹோட்டல்ல தங்கி கவர்மெண்ட் பணத்தை பாழ் பண்ணிட்டிருக்கோம்... இந்த நிமிஷம் வரை.

    கவலைப்படாதே... ரூபி... நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸிலிருந்துதான் போன் வந்தது. பத்து நிமிஷம் கழிச்சு சேர்மன் எனக்கு போன் பண்ணுவாராம். போனுக்குப் பக்கத்திலேயே இருக்கச் சொல்லியிருக்காங்க...

    வந்து ஒரு வாரத்துக்கு அப்புறம்தான் அவங்களுக்கு போன் பண்ணனும்ன்னு தோணியிருக்கு.

    விவேக் அவளுடைய தோளைத் தட்டினான்.

    ரூபி! நேஷ்னல் செக்யூரிடி ஃபோர்ஸ்ங்கிறது ஒரு பஞ்சாயத்து ஆபீஸோ... ஒரு முன்சிபல் கட்டிடமோ இல்லை. இந்த தேசத்தோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதுக்குள்ளே எத்தனையோ அந்தரங்கங்கள், சூட்சமங்கள் இருக்கு. யாரை எந்த நேரத்துல கான்டாக்ட் பண்ணனும்ன்னு அங்கே இருக்கிற அதிகாரிகளுக்கு தெரியும்...

    உங்களை எதுக்காக கூப்பிட்டிருப்பாங்கன்னு நினைக்கறீங்க...?

    புரியலையே...! ஒரு வாரமா இந்தக் கேள்விதானே மண்டையை குடைஞ்சுட்டிருக்கு...

    எனக்கு தோண்றதை சொல்லட்டுமா?

    சொல்லு...

    தேசத் தலைவர்கள்ல யாருடைய உயிர்க்காவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். அதுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்றதுக்காக உங்களை கூப்பிட்டிருக்காங்க...

    எனக்கு அப்படி தோணலை... இது ஏதோ வேற விவகாரம். நீ சொல்ற மாதிரி தலைவர்களோட உயிர்க்கு ஆபத்துங்கிற விவகாரமா இருந்தா... டெல்லி வந்து சேர்ந்த என்னை ஒருவாரம் காக்க வைக்க மாட்டாங்க... உடனடியாக கூப்பிட்டு பேசுவாங்க...

    நேஷ்னல் செக்யூரிட்டிஃபோர்ஸ் சேர்மன் பேர் என்ன?

    பிரதாப் சட்டர்ஜி... தேசத்தோட பாதுகாப்பு சங்கதிகள் பூராவும் இவர்க்கு அத்துபடி... விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டெலிபோன் மறுபடியும் கனைத்துக் கூப்பிட்டது.

    இரண்டே எட்டில் எழுந்து போய் ரிஸீவரை எடுத்தான் விவேக். மறுமுனையில் பிரதாப் சட்டர்ஜி கணீரென்ற குரலில் தெளிவான ஆங்கிலத்தில் பேசினார்.

    மன்னிக்க வேண்டும் மிஸ்டர் விவேக்... நீங்கள் டெல்லி வந்து ஒரு வாரகாலமாகியும் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. காரணம், குறுக்கிட்டுவிட்ட சில அரசாங்கப் பணிகள். அந்தப் பணிகளை முடிப்பதற்காக ஜம்மு ஸ்ரீநகர் வரை செல்ல வேண்டி வந்து விட்டது...

    விவேக் சிரித்தான்.

    பரவாயில்லை ஸார். உங்கள் பணியின் பளு எனக்குத் தெரியும். காரணம் இல்லாமல் என்னைக் காக்க வைக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்...

    இப்போது நீங்கள் ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள்?

    ஆமாம்...

    என்.எஸ். ஃபோர்ஸ் அலுவகத்திற்கு உடனடியாய் புறப்பட்டு வாருங்கள். ஒரு மணி நேரமாவது உங்களோடு பேச வேண்டியிருக்கிறது. டெல்லி போலீஸ் உங்களுக்கு கார் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா?

    ஆமாம்...

    உடனே புறப்பட்டு வாருங்கள்... அடுத்த அரை மணி நேரத்திற்குள் உங்களை நான் எதிர்பார்க்கலாமா...?

    கண்டிப்பாய்...

    நீங்கள் இங்கே என்னை பார்க்க வருவது உங்கள் மனைவி தவிர வேறு யார்க்கும் தெரியவேண்டாம்...

    நிச்சயமாய் தெரியாது...

    காத்திருக்கிறேன்... வாருங்கள்...

    மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட விவேக்கும் ரிஸீவரை வைத்துவிட்டு ரூபலாவிடம் திரும்பினான்.

    ரூபி... டேக்... கேர்... நான் என்.எஸ்.எஃப். சேர்மனை மீட் பண்ணிட்டு வந்துடறேன்...

    எவ்வளவு நேரமாகும்...?

    எப்படியும் ரெண்டு மணி நேரமாயிடும் விவேக் சொல்லிக்கொண்டே ஹேங்கரில் இருந்த ஓவர் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டான்.

    கார் சாவியை எடுத்துகிட்டீங்களா? ரூபலாவின் குரல் முதுகுக்குப் பின்னால் கேட்க - விவேக் திரும்பிப் பார்த்து சிரித்தான். ஆட்காட்டி விரலில் சாவி சுழன்றது.

    விவேக் லிஃப்டில் பயணித்து - ஹோட்டலின் ரிசப்ஷனுக்கு வந்தான். கௌண்டரில் இருந்த பெண் ஒருவார ஸ்நேகிதத்தில் ஒரு புன்னகையை விநியோகம் செய்தாள். விவேக் பதிலுக்கு புன்னகைத்து விட்டு வெளியே வந்து - பார்க்கிங்கில் நின்று பனியில் நனைந்து கொண்டிருந்த காண்டஸா கார்க்குள் நுழைந்தான் இன்னீஷியனை உசுப்பி கியரை மாற்றி சைலன்ஸரில் நீலநிறமாய் புகை தள்ள - பனி பெய்து ஈரமாகியிருந்த ரோட்டுக்கு வந்தான். மின்சாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த டெல்லி கார்ப்பரேஷனின் மெர்க்குரி விளக்குகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வெளிச்ச உருண்டைகளாய் தெரிந்தது.

    விவேக் காரை அறுபதில் விரட்டினான். பார்வை சாலையின் மையத்தில் இருந்தாலும் மனசுக்குள் யோசனைத் திவலைகள் அலைந்தன.

    'நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸின் சேர்மன் பிரதாப் சட்டர்ஜி எதற்காக என்னைக் கூப்பிட்டிருப்பார்...?'

    'என்.எஸ்.எஃப். சேர்மன் அழைப்பு விடுப்பது வெகு அபூர்வம்!'

    Enjoying the preview?
    Page 1 of 1