Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Kattalai
Kadaisi Kattalai
Kadaisi Kattalai
Ebook149 pages55 minutes

Kadaisi Kattalai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kadaisi Kattalai

Read more from Rajeshkumar

Related to Kadaisi Kattalai

Related ebooks

Related categories

Reviews for Kadaisi Kattalai

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Kattalai - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    டில்லி, குளிரான டிசம்பர் மாதம்.

    சாயந்தரம் ஆறு மணி.

    கோலப்பொடி சைஸில் பனி. தரித்திருந்த நீல நிற யூனிபார்மை உருவி - ஹேங்கர்களில் மாட்டிவிட்டு - தன்னுடைய மடிப்பு கலையாத பேண்டையும் சர்ட்டையும் உடம்புக்கு கொடுத்து - குளிர்க்கு பாந்தமாய் ஜெர்கின் கோட்டுக்குள் புகுந்தான் ஜெகந்நாத். இண்டியன் ஏர்லைன்ஸ் ஏர் கிராபஃப்ட் செக்கிங் விங் பிரிவில் பணிபுரியும் ஜெகந்நாத், இருபத்தாறு வயது இளைஞன். அபாரமான தேகாபியாச உடம்பு. நீள் பட்டை முகத்தில் யாரையும் அலட்சியமாய் பார்க்கும் கண்கள். கூர்மை தவறிய மூக்கு. சிகரெட் பிடித்து பிடித்து - ஊதா நிறத்துக்கு போய்விட்ட முன்னாள் ரோஸ் நிற உதடுகள். மேவாய் திட்டில் கொஞ்சுண்டு தாடி. கழுத்தோடு ஒட்டிய வெள்ளிச் செயின்.

    ஸ்டாண்டில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து - தலையில் கவிழ்த்துக் கொண்டபோது - மெக்கானிஸ்ட் அன்வர் உள்ளே எட்டிப் பார்த்தான்.

    ஜெகந்நாத்... அவன் திரும்பினான்.

    என்ன?

    சீஃப் என்ஜீனியர் உன்னை வரச் சொன்னார்.

    எதுக்காம்.

    தெரியலை...

    வீட்டுக்குப் போகும் போதுதான் கூப்பிடுவானுக... பொண்டாட்டி ஊர்ல இல்லேன்னா வீட்டுக்குப் போகாமே இங்கேயே உட்கார்ந்துடுவானுக...

    மட்டமான இந்தியில் திட்டிக் கொண்டே - ஹெல்மெட்டைக் கழற்றி - ஸ்டாண்டில் மாட்டிவிட்டு - அறையை விட்டு வெளியே வந்தான் ஜெகந்நாத்.

    கண்ணுக்கு சிக்கிய ரன்வே திடலில் பயிற்சி விமானம் ஒன்று வெட்டுக்கிளி மாதிரி தத்திக் கொண்டிருக்க - கனமான உல்லன் கோட்டில் ட்ரெய்னர் ஜோஷி நின்று கையை அசைத்து இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

    ஜெகந்நாத் மேஜர் பிளாக்கை நோக்கி ° நடந்தான். அநேகமாய் சுற்றுப்புறம் பூராவும் நிசப்தம். காலொடிந்த விமானங்கள் உயரமான ஸ்டாண்ட்களின்மேல் மெளண்ட் செய்யப்பட்டு - சிகிச்சைகளுக்காக காத்துக் கொண்டிருந்தன. சிமெண்ட் தரையில் பெட்ரோல் வாசத்தோடு விமானத்தின் ஏராளமான உதிரி உறுப்புகள் இறைந்து கிடக்க - பக்கவாட்டு ஷெல்டர்களில் நுழைந்து - மேஜர் கட்டிடத்தைத் தொட்டு - க்ரௌண்ட் ப்ளோரில் விரியக் கிடந்த லிப்ட்டுக்குள் திணிந்து - உயர்ந்து - மூன்றாவது மாடியில் வெளிப்பட்டு - புள்ளி மொசைக் தரையில் முகம் பார்த்துக் கொண்டே நடந்து - சீஃப் என்ஜீனியர் ஷிவ்ராமின் அறைக்கு முன்பாய் நின்றான்.

    டொக்... டொக்...

    ஆள் காட்டி விரலால் - கதவை - சத்தப்படுத்தி உள்ளே வர அனுமதி கேட்டான்.

    எஸ்... கம்மின்... - உள்ளேயிருந்து கனமான குரல் வரவும் - ஜெகந்நாத் கதவைத் தள்ளிக் கொண்டு - வரவழைத்துக் கொண்ட பவ்யத்தோடு நுழைந்தான். உள்ளே ஹீட்டர் 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்று பாடி, அறையின் காற்றை உஷ்ணமாக்கியிருந்தது.

    வாங்க ஜெகந்நாத்

    இந்தியில் சம்பாஷித்த ஷிவ்ராம் ஐம்பது வயதின் - விளிம்பில் இருந்தார். சதை பிடிப்பான வெளிச்ச முகம். காற்றடித்தால் கலைந்து போய் விடக்கூடிய சாத்தியத்தில் மெலிதான நரை கிராப். ஸ்நஃப் நிறத்தில் பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி, சாம்பல் நிற ஃபுல்சூட்டில் கச்சிதமாய் நுழைந்து ட்ரிம் காட்டினார்.

    உட்கார்ங்க...

    உட்கார்ந்தான்.

    வீட்டுக்கு புறப்பட்டுட்டிருந்தீங்களா?

    "ஆமா...

    உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

    சொல்லுங்க சார்.

    சென்ற போரில் வீரச் செயல் புரிந்து - உயிர் பிழைத்த ஊனமான வீரர்களுக்கு ஏர் மார்ஷல் 'விக்ரம் தாக்கரே’ தலைமையில் விருதுகள் வழங்க அரசாங்கம் ஒரு விழாவை ஏற்பாடு பண்ணியிருக்கு.

    ஜெகந்நாத் ஷிவ்ராமையே பார்த்துக் கொண்டிருக்க - அவர் தொடர்ந்தார்.

    விருது பெறும் ஆறு வீரர்களில் உங்கப்பா விஸ்வதீப்பும் ஒருவர்.

    ஜெகந்நாத் முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் உட்கார்ந்திருந்தான்.

    ஷிவ்ராம் ஆச்சர்யமாய் கேட்டார்.

    என்ன ஜெகந்நாத்... முகத்தில் சந்தோஷத்தையே காணோம்?

    ஸாரி... ஸார்... இந்த நியூஸ் எனக்கு - சந்தோஷத்தை தரலை?

    ஒய்? வாட்ஸ் த ரீஸன்?

    என்னோடஃபாதர் இந்த விருதுக்காகவா வார்ஃப்ரென்ட்டுக்கு போனார்? ஒருகாலை பறி கொடுத்தார்?

    ஐ... திங்க் ஸோ... யூ ஆர் நாட் இன் ஏ மூட்... நாட்டுக்காக தன்னை ஊனமாக்கிகிட்ட வீரர்களை கௌரவப்படுத்தறது அரசாங்கத்தோட கடமை இல்லையா?

    விருதுன்னா என்ன ஸார் கொடுப்பாங்க?

    தாமிரப் பட்டயம்...

    நாட்டுக்காக ஒரு காலையே பறி கொடுத்த எங்கப்பாவுக்கு அந்த தாமிரப் பட்டயம் போதுமா ஸார்?

    ஜெகந்நாத்! நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

    எங்கப்பாவுக்கு எதைக் கொடுக்கணுமோ... அதைத் தர்றதுக்கு இந்த அரசாங்கத்தினாலே முடியலை...? அரையடி தாமிரப் பட்டயத்தைக் கொடுத்து என்ன ஸார் பிரயோஜனம்?

    ஜெகந்நாத்!

    ஸார்... எங்கப்பாவுக்கு... கால் போய்... எத்தனை வருஷமாகுதுன்னு உங்களுக்குத் - தெரியுமா?

    ரெண்டு வருஷம்...

    அப்பா ஊன்று கோலோடு மிலிடரி ஹாஸ்பிடலிலிருந்து வந்த நாளே - சொந்தமா ஒரு தொழில் தொடங்க முதலீடு வேணும்ன்னு... கேட்டு... லோன் அப்ளை பண்ணினாங்க... அடுத்த மாசம் கிடைக்கும் அடுத்த மாசம் கிடைக்கும்ன்னு சொல்லி சொல்லியே ரெண்டு வருஷமாக்கிட்டாங்க... எங்க ஏரியாவுக்கு எந்த மினிஸ்டர் வந்தாலும் அப்பா லோனை சாங்ஷன் பண்ணச் சொல்லி மனு கொடுப்பார்..

    மை குட்னஸ்

    நெற்றியைத் தேய்த்துக் கொண்டே ஷிவ்ராம் கொஞ்சம் கவலையான குரலில் கேட்டார்.

    லோன் கிடைக்காததுக்கு என்ன காரணம்?

    "பாழாப்போன அரசியல் தான் காரணம். கார்ல போய் இறங்கி மேஜைக்கு கீழே - கரன்ஸியை நீட்டினா போதும் - எப்பேர்ப்பட்ட காரியமும் இந்த இந்தியாவில் நடக்கும். மேஜைக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1