Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karaikku Varatha Alaigal
Karaikku Varatha Alaigal
Karaikku Varatha Alaigal
Ebook129 pages43 minutes

Karaikku Varatha Alaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465568
Karaikku Varatha Alaigal

Read more from Rajeshkumar

Related to Karaikku Varatha Alaigal

Related ebooks

Reviews for Karaikku Varatha Alaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karaikku Varatha Alaigal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த அலுவலக உதவியாளன் தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிலிருந்து அந்த நீள் செவ்வகத்தாள்களை எடுத்து நீட்டினான்.

    இந்தாங்க சார்...

    விமலானந்த் நிமிர்ந்தான்.

    "கிடைச்சுதா...?

    கிடைச்சுது சார்...

    எத்தனை மணிக்கு...?

    சரியா ஆறு மணிக்கு...

    சரி, நீ போகலாம்.

    உதவியாளன் அறையைவிட்டு வெளியேறவும், மேசைமேலிருந்த டெலிபோன் குரலைத் துப்பவும் சரியாயிருந்தது.

    அலோ...

    மறுமுனையிலிருந்து டெலிபோன் ஆபரேட்டரின் குரல் கேட்டது.

    உங்களுக்கு போன் சார்...

    யாரு...?

    உங்க மனைவி...

    சரி... கொடு...

    பீத்தோவனின் சிம்பொனி இசை சில விநாடிகளுக்கு கேட்டது. அதைத் தொடர்ந்து விமலானந்த்தின் மனைவி கற்பகாவின் குரல்.

    அலோ...

    சொல்லு கற்பகா... நான்தான் பேசறேன்...

    இன்னிக்கு நீங்க சீக்கிரம் கிளம்பணும்... ஞாபகம் இருக்கா...

    நல்லா ஞாபகம் இருக்கு...

    இப்படித்தான் சொல்லுவீங்க... ஆனா கடைசி நேரத்துல முக்கியமான வேலை வந்துடுச்சு... வேலை மும்முரத்துல மறந்தே போயிட்டேன்னு... இழுப்பீங்க...

    இல்லை... இல்லை... கண்டிப்பா வந்துடுவேன்...

    சரியா ஆறு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கணும். அப்பதான் கோயிலுக்குப் போக சரியா இருக்கும் ஏழு மணிக்கு அபிசேகம்...

    நான் அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டில் இருப்பேன்...

    அவ்வளவு சீக்கிரமே வந்துடுவீங்களா...?

    ஆமா... நான் வேற நிகழ்ச்சி போட்டு வெச்சிருக்கேன்...

    என்ன நிகழ்ச்சி?

    நாம் கோயிலுக்குப் போகலை... சினிமாவுக்குப் போறோம்...

    என்னங்க நீங்க... பிறந்த நாளும் அதுவுமா கோயில்ல போய் அர்ச்சனை பண்ண வேண்டாமா...?

    சாமி மனசில் இருந்தா போதும்... காலைல வீட்ல சாமி கும்பிட்டோமே... அதுவே போதும்... நானும் நீயும் என்ன சாமியார் சாமியாரிணியா...?

    ......

    என்ன பேச்சையே காணோம்.?

    கோயிலுக்குப் போறோம்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அதைத் தடை பண்ணிட்டு சினிமாவுக்குப் போறதுக்கு மனசுக்குள்ளே லேசா கிலேசமா இருக்கு...

    அதனாலென்ன...? சாமிகிட்டே மன்னிக்க சொல்லிடு... நான் டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டேன்... இப்பதான் பியூன் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனான். ஆக நாம சினிமாவுக்குத்தான் போறோம்...

    சரி...

    சொல்லி ரிசீவரை வைத்தான்

    டொக்...

    டொக்.

    டொக்...

    கதவுத் தட்டலும் - அதைத் தொடர்ந்து குலாப்ஜாமூனில் குழைத்த மாதிரிக் குரலில்...

    மே ஐ கமின் சார்...?

    எஸ்.

    வழவழ ஷிபான் சேலைக்குள் இருந்த எக்சிகியூட்டிவ் பிரியா உள்ளே வந்தாள்.

    புன்னகை உறைந்திருக்கும் உதடுகள். சிரத்தை மேக்கப். தூக்கலாய் வாசனைத் திரவியம்.

    குட் ஈவினிங் சார்... நீங்க அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிடுவிங்கன்னு பியூன் சொன்னான். உங்ககிட்ட சில அலுவலக விசயம் பேசலாமா?

    என்ன விசயம்...?

    டெண்டர் அறிவிப்பு பண்ணியிருந்தோமே... அதுக்கு நிறைய பதில் வந்திருக்கு...

    எத்தனை பேர் அனுப்பியிருக்காங்க...?

    மொத்தம் பதினைஞ்சு சார்...

    அதை இப்போ பார்க்க ஆரம்பிச்சா எப்படியும்? இரண்டு மணி நேரம் தேவைப்படுமே...

    ஆமா சார்... அதை நான் பெண்டிங் வெச்சிடட்டுமா...?

    ஏன் பெண்டிங் வெக்கறிங்க...?

    சீலை உங்க முன்னாடி 'ப்ரேக்' பண்ணி... நீங்க கையெழுத்துப் போடணுமே சார்...

    சரி... நாளைக்குக் காலைல முதல் வேலையா இந்த டெண்டர்களைப் பார்த்துடுவோம்...

    சரி சார்...

    வேறு ஏதாவது...?

    இன்னொரு கடிதம் வந்திருக்கு சார்...

    என்ன கடிதம்...?

    இது உங்களுக்கு வந்திருக்கும் தனிப்பட்ட கடிதம் மாதிரி தெரியுது...

    தனிப்பட்ட கடிதமா...?

    விமலானந்த் நெற்றியைச் சுருக்கினான்.

    ஆமா சார்... அதனாலதான் 'ஓப்பன்' பண்ணலை...

    கொடுங்க...

    பொதுவாய் அலுவலகக் கடிதங்கள் தவிர வேறெதுவும் ஆபீசுக்கு வருவதில்லை.

    ‘யாராக இருக்கும்...?’

    யோசனையுடனே அந்தக் கடிதத்தை வாங்கினான்.

    சதுரமாக இருந்தது அந்தக் கடிதம்.

    அதன் மேல் பச்சை நிற ஸ்கெட்சில் அழுத்தமாய் விமலானந்த் என்ற பெயரும், அதற்குக் கீழே சற்றுச் சின்ன எழுத்துக்களில் முகவரியும் எழுதப்பட்டிருந்தது.

    அனுப்பியவர் முகவரியைக் கவரில் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தான் விமலானந்த்.

    இருக்கவில்லை.

    அவளிடம் நிமிர்ந்தான்.

    பிரியா... நீங்க போகலாம்...

    சரி சார்... டெண்டர் கடிதங்களை மார்போடு அணைத்தபடி அந்த ஏசி அறையிலிருந்து வெளியேறிச் சென்றாள். - அவள் சென்றதுமே - விமலானந்த் அந்த சதுர கவரின் வாயைச் சின்னக் கத்தரிக்கோலின் உதவியோடு கிழித்தான்.

    உள்ளே இருந்து அதே சதுர சைசில் ஒரு வெள்ளை தாள் வெளிப்பட்டது.

    அந்த வெள்ளைத் தாளைப் பார்த்தவன் திகைத்தான்.

    யாரோ ஒரு பெண் லிப்ஸ்டிக் பூசிய உதடுகளால் தாளின் மேல் அழுத்தமாய் முத்தம் இட்டிருக்கிறாள்

    Enjoying the preview?
    Page 1 of 1