Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mathangalil Aval Margazhi
Mathangalil Aval Margazhi
Mathangalil Aval Margazhi
Ebook116 pages31 minutes

Mathangalil Aval Margazhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465568
Mathangalil Aval Margazhi

Read more from Rajeshkumar

Related to Mathangalil Aval Margazhi

Related ebooks

Reviews for Mathangalil Aval Margazhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mathangalil Aval Margazhi - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    கல்யாண ரிசப்ஷன் உற்சாகத்தின் உச்சியில் இருக்க - தருண் புறப்பட எழுந்தான். பக்கத்தில் இருந்து நண்பன் ஈஸ்வரமூர்த்தி அவனுடைய கையைப் பற்றினான்.

    என்னடா தருண்... எந்திரிச்சுட்டே...?

    பிசினஸ் விஷயமா ஒருத்தரை பார்க்கப் போகணும்.

    சரியா போச்சு... உனக்கு எப்பப் பார்த்தாலும் பிசினஸ் நினைப்புத்தானா...? ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு வந்தோம்... கொஞ்சநேரம் -உட்கார்ந்தோம்னு வேண்டாம்...? கிஃப்ட் பாக்ஸைக் குடுத்துட்டு டிஃபன் சாப்பிட்டுட்டு போறதுக்கா வர்றது...?

    தருண் அசுவாரசியமாய் உட்கார்ந்தான். மேடையில் ஆர்க்கெஸ்ட்ரா தன் வாத்தியக் கருவிகளை தட்டி சரிபார்த்துக் கெண்டிருந்தது. தபேலா ஒற்றைத் தாளம் போட - கிடார் மின்சாரத்தை சாப்பிட்டு விட்டு 'டிடிங்' என்றது. ட்ரூப்பில் இருந்த பாதி பேரில் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் - அநேகமாய் ஜீன்ஸ் பேண்ட் சர்ட்டுக்குள் இருந்தார்கள். மேடைக்கு பின்புறம் இருந்த சுவரில் 'ஜனனி - ஆர்கெஸ்ட்ரா' என்ற எழுத்துக்களோடு ஜிகினா பேனர் காற்றில் ஆடியது.

    அதற்குக் கீழே போட்டிருந்த - பாலிமர் வண்ண நாற்காலியில் அந்த இரண்டு பெண்கள் தெரிந்தார்கள்.

    ஒருத்தி அழகாய் இருந்தாள். உடம்பில் மஞ்சள் - சிவப்பு பூக்கள் இறைந்த கறுப்பு வண்ண கார்டன் ஷிபான்.

    டேய்... ஈஸ்வர்...

    ம்...

    அந்த ப்ளாக் ஸாரியைப் பார்த்தியா...?

    ஜொள்ளு விடாதே... அவ இந்த ஆர்க்கெஸ்ட்ராவின் பிரதான ஸிங்கர் வாணி...!

    கண்ணை சுண்டறா...

    குரலைக் கேட்டா தேனா பாயும்.

    என்ன ஒரு ஹோம்லி.ஃபேஸ்... முகத்தை பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கே...

    தருண் வைத்த கண் வாங்காமல் அந்த வாணியை பார்த்துக் கொண்டிருக்க - மைக்கில் ஒரு இளைஞன் பேச ஆரம்பித்தான்.

    திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் 'ஜனனி' வருக வருக என வரவேற்கிறாள். இது எங்களுடைய நூறாவது நிகழ்ச்சி. கடந்த வருடம்தான் இந்த இசைக்குழுவை தொடங்கினோம். ஒரு வருட காலத்திற்குள் நூறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டோம் என்றால் அதற்கு காரணம் ரசிகப் பெருமக்களாகிய நீங்கள் காட்டிய ஆதரவுதான். சினிமா பாடல்களை மட்டுமே ரசிக்கிற மனோபாவத்திலிருந்து விடுபட்டு - எங்கள் குழுவின் மெல்லிசை பாடல்களை ரசித்துப் பாராட்டும் உங்களுக்கு எங்கள் நன்றி. இப்போது எங்கள் குழுவின் இன்னிசை ஆரம்பமாகிறது. முதல் பாடலை கடவுள் வாழ்த்தாக குமாரி வாணி அவர்கள் பாடுவார்கள்.

    இளைஞன் மைக்கைவிட்டு நகர்ந்து - கையை சொடுக்கி ஒன்... டூ... த்ரி... ஃபோர் சொல்ல அனைத்து வாத்தியங்களும் ஒரே விநாடியில் உயிர் பெற்று இசையாய் பொழிந்தது.

    அந்த வாணி எழுந்து வந்தாள். அளவான உயரத்தில் சதைபிடிப்பான உடம்பு. கூந்தலில் சொருகியிருந்த ஒற்றை ரோஜா அவளுடைய உதட்டு நிறத்தோடு ஒத்துப் போயிருந்தது. சுருட்டை முடி, பெரிய கண்கள். கழுத்தில் மெலிதாய் புரளும் செயின். அடித்த காற்றில் ஒரு குழல் காதோரம் ஒதுங்க அதை நெயில் பாலிஷ் பூச்சு விரல்களால் ஒதுக்கினாள்.

    ஒருவன் மைக்கை நீட்ட வாங்கிக் கொண்டு உதட்டுக்குக் கொடுத்தாள். மெல்ல ஹம் செய்து குரலை இழுத்த பின் பாடினாள்.

    கற்பூர நாயகியே கனகவல்லி.

    குரல் பாகாய் இழைந்தது. வீணையின் தந்தி நாதம் அவளுடைய குரலில் கலந்து விட்டது போன்ற ஒரு உணர்ச்சி.

    தருண் பிரமித்தான்.

    டேய்... ஈஸ்வ ர்...

    ம்...

    குரலா அது...?

    நான் என்ன சொன்னேன்...?

    சரீரம், சாரீரம் ரெண்டுமே அழகு...

    சே! என் கையெல்லாம் ஒரே ஈரம்...

    என்னடா சொல்றே...?

    நீ விடற ஜொள்ளை சொல்றேன்...

    இது ஜொள்ளு இல்லை. ரசனை...

    ஆர்கெஸ்ட்ரா வேண்டாம்...! நான் போறேன்னு சொன்னியே...!

    தப்புத்தான்...

    வாணி உதடுகளை அளவாய் திறந்து - பல்வரிசை பளிச்சிட பாடிக் கொண்டிருந்த அழகில் லயித்துப் போனான் தருண்.

    ஈஸ்வர் அவனுடைய இடுப்பில் செல்லமாய்க் குத்தினான்.

    கச்சேரி முடிகிற வரைக்கும் இருப்பே போலிருக்கு...

    கண்டிப்பா...

    மேடையில் பாட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1