Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Objection Your Aanar
Objection Your Aanar
Objection Your Aanar
Ebook128 pages30 minutes

Objection Your Aanar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Objection Your Aanar

Read more from Rajeshkumar

Related to Objection Your Aanar

Related ebooks

Related categories

Reviews for Objection Your Aanar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Objection Your Aanar - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அந்த நட்சத்திர ஹோட்டலின் - கான்ஃபரன்ஸ் ஹாலில் அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏ.ஸி.ஹால். இருக்கைகள் அநேகமாய் நிரம்பியிருந்தன. பெரும்பாலும் படித்த முகங்கள். அதில் பாதிப் பேர் பெண்கள்.

    வலைக்கொண்டை போட்டு - மல்லிகைச்சரம் வைத்திருந்த ஒரு நாற்பது வயதுப் பெண் மைக்கில் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசிக் கொண்டிருந்தாள்.

    கடந்த நான்கு வருடங்களாக ஹைகோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட திருமதி சுதந்திராதேவி அவர்களைப் பாராட்டுவதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இன்றைக்கு மாதம் ஒன்று கழிந்து விட்ட பிறகு - இவ்வளவு தாமதமாக விழா எடுப்பதற்கு காரணம் திருமதி சுதந்திராதேவி அவர்கள்தான். மகளிர் மன்ற அமைப்பைச் சேர்ந்த நாங்கள் அவரை சந்தித்து பாராட்டுவிழா ஒன்று நடத்த வேண்டும் என்கிற எங்கள் விருப்பத்தைச் சொன்ன போது அவர் எளிதில் ஒப்புக் கொள்ளவில்லை. 'எனக்கு எதற்காக பாராட்டுவிழா? நான் என்ன அரசியல்வாதியா?' என்று கூறி தட்டிக் கழித்துவிட்டார். நாங்கள் அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாய் - பலநாட்கள் முயன்று - இந்த பாராட்டு விழாவை நடத்த சம்மதம் வாங்கினோம்...

    ஹாலில் கைத்தட்டல் எழுந்தது.

    கொண்டை பேச்சைத் தொடர்ந்தது.

    திருமதி சுதந்திராதேவியைப் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் கோவை செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றி - அந்தத் தொழிலில் முத்திரை பதித்தார். பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டும் எடுத்துக் கொண்டு வாதாடி - அதில் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும் படியாய் பார்த்துக் கொண்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன் சாதாரண வக்கீலாய் கோர்ட்டுக்குள் நுழைந்தவர் - இன்றைக்கு நீதிபதி பதவியை வகித்து விட்டு - ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் கோர்ட்டில் நீதிபதியாய் இருந்த காலத்தில் நீதி தேவதையின் முகம் நிமிர்ந்தே இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி தயவு தாட்சண்யம் காட்டாமல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருக்கிறார். திருமதி சுதந்திராதேவி இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் - அவருடைய துணிச்சல், நீதியையும் நியாயத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்கிற ஆர்வம் - மற்ற நீதிபதிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை!

    மறுபடியும் கைத்தட்டல்.

    அவருடைய நீதித்துறை சேவையைப் பாராட்டி - எங்கள் மகளிர் மன்றத்தின் சார்பாக திருமதி சுதந்திராதேவி அவர்களுக்கு 'நீதிச்சுடர்' என்னும் பட்டத்தை வழங்குகிறோம்...

    கரகோஷத்துக்கு இடையே - மேடையில் நடுநாயகமாய் உட்கார்ந்திருந்த சுதந்திராதேவி எழுந்தார்.

    அடுத்த சில வருடங்களில் அறுபது வயதைத் தொடப் போகும் சுதந்திராதேவிக்கு வெள்ளரிப்பழ நிறம். ஒற்றை நாடி தேகம். முகத்தில் படிப்பின் ஒளி. முன் நெற்றி தலை முடியில் இந்திராகாந்தி நரை. உடம்பில் மெலிதான நீலநிறக் கதர்சேலை. நெற்றியின் மையத்தில் துளியூண்டு சாந்துப் பொட்டு.

    நீதிச்சுடர் என்று பொறிக்கப்பட்ட வெள்ளித் தட்டு ஒன்றை கண்ணாடிப் பெட்டியில் வைத்து விருதாகக் கொடுக்க சுதந்திராதேவி அதை வாங்கி மேடையில் இருந்த மேஜை மேல் வைத்து விட்டு - மைக்குக்கு பக்கத்தில் வந்து நின்றாள். பேச ஆரம்பித்தாள்.

    "என்னைப் பாராட்டுவதற்காக இங்கே வந்திருக்கிற எல்லோருக்கும் என் வணக்கம். அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு - என்னுடைய வேலையை நான் செய்ததற்கு பாராட்டுவிழா எதற்கு...? நான் என் கடமையைச் செய்தேன். அவ்வளவுதான். 'சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம்’ என்கிற ஒரு வாக்கியத்தை மட்டும் என் மனதில் செதுக்கிக் கொண்டு அந்த நீதிபதியின் ஸ்தானத்தில் உட்கார்ந்தேன்.

    வழக்குகளில் அரசாங்கமே தப்பு செய்திருந்தாலும் அதைக் கண்டித்தேன். பதவியில் இருந்தபோது - எனக்கு எந்த சமயத்திலும் பயம் என்பதே ஏற்பட்டது இல்லை. யாரைப் பார்த்தும் நான் பயப்பட்டது இல்லை."

    ஓர் உற்சாகமான கைத்தட்டல் எழுந்தது.

    நான் இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். அரசாங்கம் எனக்கு ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டாலும் நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை. ஏழை எளிய மக்கள் என்னைத் தேடி எந்த நேரத்திலும் வரலாம். அவர்களுக்கு இலவசமான எல்லா சட்ட ஆலோசனைகளையும் சொல்லக் காத்திருக்கிறேன். முடிந்தால் க்ரிமினல் லாயராக இருக்கும் என் மகன் ஆதர்ஷ், அவர்களுக்காக இலவசமாகவே கோர்ட்டில் வாதாடுவான். என் வீட்டுக் கதவு ஏழை எளிய மக்களுக்காக எந்த நேரமும் திறந்திருக்கும்.

    பலத்த கைத்தட்டலுக்கு இடையே பேசி விட்டு, கூட்டம் முடிவுற்றதும் கீழே இறங்கினாள் சுதந்திராதேவி. காத்திருந்த பத்திரிக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1