Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ondru Irandu Iranthu Vidu
Ondru Irandu Iranthu Vidu
Ondru Irandu Iranthu Vidu
Ebook155 pages52 minutes

Ondru Irandu Iranthu Vidu

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ondru Irandu Iranthu Vidu

Read more from Rajeshkumar

Related to Ondru Irandu Iranthu Vidu

Related ebooks

Related categories

Reviews for Ondru Irandu Iranthu Vidu

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ondru Irandu Iranthu Vidu - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஹோட்டல் சோழாவில் பார்ட்டி முடிகிறபோது சரியாய் பத்துமணி. ஹரிஹரேஷ் தன் மனைவி கீதாம்பரியோடு ஹாலை விட்டு வெளியே வர எத்தனித்தபோது - பத்திரிகை நிருபர்கள் காமிரா ப்ளாஷ்களோடு சூழ்ந்து கொண்டார்கள்.

    மிஸ்டர் ஹரிஹரேஷ்... உங்ககிட்டே சில கேள்விகள்... ஒரு அரைமணி நேரம் எங்களுக்காக ஒதுக்கித்தர முடியுமா...?

    ஹரிஹரேஷ் களைப்பான விழிகளோடு கீதாம்பரியைப் பார்த்தான். வியர்த்துப் போயிருந்த முகத்தை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே கேட்டான்.

    என்ன கீத்து பண்ணலாம்...?

    கீதாம்பரி புன்னகைத்தாள்.

    தமிழ் பத்திரிகைகளோட ஆதரவு மட்டும் இல்லாமே இருந்திருந்தா. நான் ஒரு நடிகையாகவோ... நீங்க ஒரு டைரக்டராகவோ வளர்ந்திருக்க முடியாது... ஸோ... அவங்க பேட்டிக்காக கேட்கிற அரைமணி நேரத்தை நீங்க கொடுத்துதான் ஆகணும்...

    பத்திரிகை நிருபர்கள் கைதட்டினார்கள்.

    தாங்க்யூ மிஸஸ் கீதாம்பரி...

    காமிராக்கள் குத்தகைக்கு பேசின மாதிரி ஒன்றாய் பளிச்சிட்டு அடங்கின.

    என்னோட ஒய்ப் ஆர்டர்க்கு கட்டுப்பட்டு அரைமணி நேரத்தை போட்டிக்காக ஒதுக்கியிருக்கிறேன்... கேள்விகளை மளமளன்னு கேட்க ஆரம்பிச்சுடுங்க...

    சினிமாலயா பத்திரிகை நிருபர் முதல் கேள்வியைக் கேட்டார்.

    உங்க திருமண வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷமாருக்கா...?

    ஏன் அப்படி கேட்கறீங்க...?

    உங்க ரெண்டு பேரோட திருமணத்துக்கு வெளியே இருந்து நிறைய எதிர்ப்பு வந்ததா கேள்விப்பட்டோம்...

    எதிர்ப்பு வராமல் இருக்குமா...? நான் ஏற்கெனவே கல்யாணமானவன். முதல் மனைவியின் சம்மதத்தின் பேரில் - கீதாம்பரிக்கு தாலி கட்டியிருக்கேன். கீதாம்பரியும் ஏற்கெனவே கல்யாணமானவள். கோர்ட் மூலமாக கணவனிடமிருந்து டைவோர்ஸ் வாங்கிக்கொண்டு - உடனே எனக்கு கழுத்தை நீட்டியவள். என்னோட தரப்பிலேயும் சரி... அவளோட தரப்பிலேயும் சரி... நிறைய எதிர்ப்புகள் இருந்தது. இப்பவும் இருக்கு... அதைப்பத்தி - நானோ அவளோ கவலைப்படப் போறதில்லை...

    நாளைக்கு மத்தியானம் நீங்க ரெண்டுபேரும் சிங்கப்பூர் போறதா ஃபீல்ட்ல பேச்சு அடிபடுதே... உண்மையா...?

    உண்மைதான்... நானும் கீதாம்பரியும் ஒரு மாத காலம் சிங்கபூர்ல இருந்துட்டு வர்றதுக்காக - நாளைக்கு மத்தியானம் புறப்படறோம்...

    ஒரு வயதான நிருபர் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டார். இதை ஹனிமூன் ட்ரிப்ன்னு நாங்க வெச்சுக்கலாமா...?

    நீங்க வெச்சுக்க முடியாது. நாங்கதான் வெச்சுக்கணும்...

    ஹால் முழுக்க சிரிப்பு பரவியது.

    மிஸஸ் கீதாம்பரி... உங்ககிட்டே ஒரு கேள்வி...

    'ம்... கேளுங்க..."

    புதுப்படங்களை நீங்க ஒத்துக்கிறதில்லையாமே...?

    ஆமா...

    ஏன்...?

    இனிமே நடிக்க வேண்டாம்ன்னு பார்க்கிறேன்...

    உங்களை மாதிரியான - ஒரு திறமையான நடிகை தமிழ், பீல்டை விட்டு போறது அவ்வளவு ஆரோக்கியமா எனக்குத் தெரியலை... வருஷத்துக்கு ரெண்டு படங்களிலாவது நடிக்கலாமே...

    நான் வேண்டாம்ன்னு முடிவு பண்ணி ஒருமாசமாச்சு...

    உங்க கணவர் ஹரிஹரேஷ் உங்களை நடிக்க வேண்டாம்ன்னு சொல்றாரா?

    அவர் என்னோட சுதந்திரத்துல குறுக்கிடறதில்லை... இது நானா எடுத்த முடிவுதான்... இதுவரைக்கும் அறுபத்தெட்டு படம் பண்ணியிருக்கேன். அதுல இருபது படம் ஜூபிலி போயிருக்கு. முப்பத்திரெண்டு படம் நூறு நாள் ஓடியிருக்கு... ஒரு தடவை ஊர்வசி விருது வாங்கியிருக்கேன். என்னோட முதல் கல்யாணம்... அவசர அவசரமா நடந்த ஒரு அலங்கோலக் கல்யாணம்... எனக்கு கணவனா வாய்ச்சவர்...

    கையை உயர்த்தினான் ஹரிஹரேஷ். கீத்து... வேண்டாம்... பழசைக் கிளறாதே... நடந்ததையெல்லாம் மறக்கத்தான் நீயும் தானும் வாழ்க்கையில இணைஞ்சிருக்கோம். சட்டப்படி நீ உன்னோட முதல் கணவன்கிட்டயிருந்து பிரிஞ்சுட்டே... இனிமே அவரைப்பத்தி நீ எதுவுமே பேசக்கூடாது...

    சரி... பேசலை... வாய் மேல் தன் நீளமான பொன்னிற விரலை வைத்துக்கொண்டாள் கீதாம்பரி.

    தேவி பத்திரிகையின் நிருபர் தயக்கமான முகபாவத்தோடு கீதாம்பரியை ஏறிட்டார்.

    நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை உங்ககிட்டே கேட்கலாமா?

    என்ன கேள்விப்பட்டீங்க?

    ரெட்டிகாரு ஒரு புதுப்படத்திற்கு புக் பண்ண உங்க வீட்டுக்கு வந்ததாகவும் - நீங்க அவரை மரியாதைக்குறைவா பேசி தொரத்திட்டதாகவும் சொல்றாங்களே உண்மைதானா?

    கீதாம்பரி புன்னகைத்தாள்.

    நான் அப்படி நடந்துகிட்டது உண்மைதான்... அதுக்கான காரணத்தையும் இப்ப சொல்றேன்... கேட்டுக்குங்க... ரெட்டிகாரு அட்வான்ஸ் பணத்தோடு வந்து - புதுப் படத்துல நடிக்கக் கூப்பிட்டார். நான் இனிமே நடிக்கப் போறதில்லைன்னு சொன்னேன். உடனே என்னைப் பத்தி மோசமாக பேச ஆரம்பிச்சார். என்னோட கடந்தகால சம்பவங்களைக் கிளறினார். அவர் ரொம்பவும் மோசமா பேசினதைக் கேட்டிட்டிருந்த என்னோட வீட்டு சமையல் ஆள் சங்கர சுப்பு... கோபம் தாங்காமே செருப்பை எடுத்துக் காட்டிட்டான். உடனே அவர் எகிறி குதிக்க, நான் திட்ட - ரோட்ல ஜனம் கூடி...

    பேட்டியை முடிச்சுக்கலாமா...?

    ஹரிஹரேஷ் வாட்ச்சைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

    இன்னும் ஒரேயொரு கேள்வி ஸார்...

    சீக்கிரமா கேளுங்க...

    உங்க முதல் மனைவி மனப்பூர்வமா சம்மதக் கடிதம் எழுதிக் கொடுத்துதான் - ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டிங்களா...?

    ஹரிஹரேஷ் முகத்திலிருந்த புன்னகை காணாமல் போனது. கேள்வி கேட்ட நிருபரை எரிச்சலோடு பார்த்தான். வார்த்தைகளில் மரியாதை சேதமாகியது.

    "ஏய்யா... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா... என்னோட முதல் பெண்டாட்டி சம்மதம் குடுத்தா என்ன, குடுக்காமே போனா உங்களுக்கு என்னய்யா... ஒரு சினிமா டைரக்டர்ன்னா அவன் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் கிளறிப் பார்க்கிறதுக்கு நீங்க யாரய்யா? அடுத்த படத்தோட கதை என்ன...? யார் யார் நடிக்கப் போறாங்க... தமிழ்ப் படம் ஏன் இன்னும் ஆஸ்கார் பரிசு வாங்கலை... இந்த மாதிரியான கேள்விகளை கேக்கிறதை விட்டுட்டு... உம் பொண்டாட்டி சம்மதக் கடிதம் கொடுத்தாளா...? அந்த நடிகைகூட சேர்ந்துகிட்டு ஹோட்டலுக்குப் போனியா...ன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1