Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oosi Munaiyil Oor Uyir
Oosi Munaiyil Oor Uyir
Oosi Munaiyil Oor Uyir
Ebook98 pages37 minutes

Oosi Munaiyil Oor Uyir

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oosi Munaiyil Oor Uyir

Read more from Rajeshkumar

Related to Oosi Munaiyil Oor Uyir

Related ebooks

Related categories

Reviews for Oosi Munaiyil Oor Uyir

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oosi Munaiyil Oor Uyir - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    இந்திரா நகரின் மையத்தில் இருந்தது அந்த நவீன மோஸ்தர் பங்களா. அதன் வாசலில் கணிசமாய் வாகனங்கள். பெரும்பாலானவற்றின் நெற்றியில் PRESS எழுத்துக்கள் பளிச்சிட்டன.

    உள்ளே ஒரு விசாலமான ஹாலில் நிருபர்கள் நிரம்பியிருக்க - அவர்களுக்கு எதிரே சக்சேனாவும், வினயாவும் கேள்வி மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள்.

    அந்தக் கெச்சலான நிருபர் எழுந்து நின்று சொன்னார்.

    சீனியர் நிருபர் என்ற முறையில் பத்திரிகை உலகம் சார்பாக என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி... சொல்லிப் புன்னகைத்தார்கள் ஜோடியாய் நின்றிருந்த சக்சேனாவும் வினயாவும்.

    இந்த இளம் வயதில் உங்கள் மூளைத்திறனை ஆக்கப் பூர்வமான ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்துவது பாராட்டுக்குரிய செயல்... என்றார். மற்றொரு பத்திரிகை நிருபர்.

    மறுபடி உதடுகளில் புன்னகையைக் கொடுத்து நன்றி... பாராட்டு போதுமே... இந்தப் ப்ரஸ் மீட்டின் நோக்கமே - பொதுஜனங்களுக்கு எங்கள் ஆராய்ச்சியைப் பற்றி விளக்குவதுதானே. ஆகவே ஆராய்ச்சியைப் பற்றி கேள்விகளை எழுப்ப வேண்டுகிறேன் என்றார் சக்சேனா.

    உங்களுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையிலிருந்து அரசு நிதி சமீபத்தில் வழங்கப்பட்டதே... நிதி வழங்கப்பட்டதன் காரணத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாமா...?

    ஷ்யூர்... மனிதனின் உழைப்புத்திறனை அதிகரிப்பதற்கான ரிசர்ச்சில் தற்போது நானும் என் மனைவி வினயாவும் ஈடுபட்டுள்ளோம். அதற்குத் தேவைப்படும் அத்யாவசியச் செலவினங்களுக்கான தொகையைத்தான் அரசாங்கம் உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

    ஒரு கேள்வி... நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் கேட்க விரும்புகிறேன்...

    ஆராய்ச்சியைப் பற்றித்தானே...?

    ஆமாம்...

    தாராளமாகக் கேட்கலாம்...

    கிட்டத்தட்ட அரைகோடி ரூபாய்க்கு மேல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டோம்... உண்மையா...?

    சிரித்துக் கொண்டே தலையசைத்தார் சக்ஸேனா. உண்மைதான்...

    நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏராளமாய் உள்ளன. அப்படி இருக்கையில் வளர்ந்த நாடுகளைப்போல் இந்த மாதிரி ஆராய்ச்சிக்கெல்லாம் இத்தனை கோடி செலவு செய்வது சரிதானா...?

    நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்று எதைக் கருதுவீர்கள்...?

    உழைப்பு,

    கரெக்ட். மனித உழைப்பு... அது முழுமைப்படுத்தப்படத்தான் நாங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் நூறு சதம் பயனளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை... அரசாங்கம் எங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்துள்ளது. உதவி அளித்துள்ளது. அரசின் நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம்...

    மன்னிக்கவும் உங்கள் திறமையை சந்தேகித்து அந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை...

    பத்திரிகை நிருபர்களான உங்களுக்கு சந்தேகப்பட உரிமை உள்ளது... சிரித்தபடியே சொன்னார் சக்ஸேனா.

    மனித உழைப்புத் திறனை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி எனக் குறிப்பிட்டீர்கள். அதைப் பற்றி இன்னும் விரிவாக நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்...

    ஸாரி... இப்போது அதைப்பற்றி என்னால் கூற முடியாது...

    ஏன்...?

    இரண்டு காரணங்கள்... ஒன்று... ஆராய்ச்சி ஐம்பது சதவீதமே முடிவடைந்துள்ள நிலையில் அதைப்பற்றி சாதாரண பாமரனும் புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்வது இயலாத காரியம்... காரணம் நெ. இரண்டு… இப்போதே ஆராய்ச்சி பற்றி வெளிப்படையாக எல்லாவற்றையும் நான் சொல்லி விட்டால் இதே துறையைச் சேர்ந்த மற்றவர்களுக்கு முந்திக் கொள்ள க்ளு கிடைக்க நேரிடும். அதை நான் விரும்பவில்லை...

    எப்போது உங்கள் ஆராய்ச்சி பற்றி முழுமையாகச் சொல்வீர்கள்...?

    ஆராய்ச்சி முடிவடையும்போது...

    எப்போது முடிவடையும்...?

    நிருபரின் விடாப்பிடியான கேள்விக்கு புன்னகையை பதிலாக்கினார் சக்ஸேனா.

    வினயா சொன்னாள். "ஆராய்ச்சி என்பது நிர்ணயிக்கப்பட்ட வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1