Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagal Nera Minnal
Pagal Nera Minnal
Pagal Nera Minnal
Ebook135 pages43 minutes

Pagal Nera Minnal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Pagal Nera Minnal

Read more from Rajeshkumar

Related to Pagal Nera Minnal

Related ebooks

Related categories

Reviews for Pagal Nera Minnal

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagal Nera Minnal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    தாம்பரத்தில் மின்சார ரெயில் நின்றதும் கும்பலோடு கும்பலாய் இறங்கிக் கொண்டார்கள் சீனிவாசனும் வேதாவும். ஒன்பதரை மணிக்கு சூரியன் நூறு டிகிரியில் கிழக்கின் உச்சியில் கொதிக்க எல்லோர் பிடரியிலும் அக்குளிலும் வெள்ளமாய் வியர்வை. வேதாவுக்கு அதிகமாய் வியர்த்தது. அவளுடைய சிவந்த முகம் வெம்மை தாளாமல் கன்றிப் போயிருக்க கையிலிருந்த கர்ச்சீப் தெப்பமாய் நனைந்திருந்தது. சீனிவாசன் வியர்க்காத முகமாய் நடந்து வர ஆச்சர்யப்பட்டாள்.

    நாம இரண்டு பேரும் சேர்த்துதான் வர்றோம். உங்களுக்கு வேர்வை கொஞ்சம் கூட வரலை...? வேதா டிபன் பாக்ஸ் இருந்த பிளாஸ்டிக் கூடையை வலது கைக்கு மாற்றிக் கொண்டே கேட்டாள். சீனிவாசன் சிரித்தான்.

    அது ஒரு வரம்...

    வரமா...?

    ம்... பாம்பாட்டி சித்தர்ன்னு கேள்விப்பட்டிருக்கியா?

    இல்லையே...?

    வெள்ளியங்கிரி மலையில் முன்னூறு வருஷமா... இருக்கார். அவர் கொடுத்த வரம் இது. வெய்யில் நூத்தி இருபது டிகிரியே கொளுத்தினாலும் சரி... உடம்பிலிருந்து ஒரு சொட்டு வேர்வைகூட வராது.

    வெய்யிலைக்கூட தாங்கிக்கலாம் போலிருக்கு."

    நான் பேசறது அறுவையாயிருக்குன்னு சொல்ல வர்றியா?

    பின்னே...?

    சரி... கூல்ட்ரிங்க் ஏதாவது சாப்பிடறியா...?

    வேண்டாம்... ஆபீஸுக்கு நேரமாச்சு...

    இன்னும் முழுசா... இருபது நிமிஷம் இருக்கே...

    நீங்க வேலை பார்க்கிற மாதிரி... இது ஒண்ணும் கவர்மெண்ட் ஆபீஸ் இல்லை... அஞ்சு நிமிஷம் லேட்டா போனாலும் மெமோ தர்ற பிரைவேட் ஆபீஸ்...

    இப்போ வந்திருக்கிற மானேஜர் ரொம்பவும் நல்ல மாதிரின்னு சொன்னியே...?

    ஐஸ்வாட்டர் மாதிரி இதமா பேசி வேலை வாங்கறார். எங்கப்பா ஒரு ரிடையர்ட் ஸ்கூல் டீச்சர்ன்னு தெரிஞ்சதும்... அவர்க்கு என் மேல...தனி பிடிப்புதான். அதுக்காக... அதையெல்லாம் ஒரு அட்வான்டேஜா எடுத்துகிட்டு... லேட்டா போறதா...?

    உனக்கு நல்லதைத்தானே சொன்னேன்... பார்! முதுகெல்லாம் என்னமா வேர்த்து... ஜாக்கெட்டெல்லாம்... தெப்பல் தெப்பலா...

    அங்கெல்லாம் ஏன் கண்ணு போகுது...?

    ஏன் போனா என்னவாம்... நீ என்னோட ஒண்ணுவிட்ட அத்தை பொண்ணு. என்னிக்கு இருந்தாலும் கட்டிக்கப் போறவன்...

    ஓ... ஓஹ்ஹோ...! அந்த கெட்ட நெனைப்பு வேற மனசுல இருக்கா...?

    இருவரும் சிரித்துக் கொண்டே ஓவர் பிரிட்ஜ் ஏறி ரோட்டுக்கு வந்தார்கள்.

    வேதா...

    ம்...

    நீ எப்பத்தான் கல்யாணத்துக்கு சரின்னு தலையாட்டப் போறே?

    திடீர்ன்னு ஒருநாள்...

    அந்த நாள் இந்த வருஷத்திலேயே வருமா...?

    வரலாம்...

    பிடி குடுக்காமே பேசறியே...

    இதோ பாருங்க சீனி... எனக்கு ஆபீஸ் லோன் சாங்க்ஷனாகி அப்பாவுக்கு அந்த ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்ச பின்னாடிதான் உங்களுக்கும் எனக்கும்... டும்...டும்...

    அதுவரை காத்து இருக்கணுமா?

    ஆமா...

    ஆபீஸ் லோன் பணத்தை நீ ஏன் எதிர்பார்க்கிறே... நா... வேணும்னா பணம் தர்றேன்.

    நீங்க சேர்த்து வெச்சிருக்கிற பணம் உங்க தங்கச்சியோட கல்யாணத்துக்கு...! அந்தப் பணத்தை நீங்க தொடவே கூடாது...

    எதுக்குமே... நீ ஒத்துவர மாட்டேங்கிறே...

    அதோ... உங்களுக்கு பஸ் வந்தாச்சு... ஏறி ஆபீஸுக்கு கிளம்புங்க.

    பாழாப்போன பஸ்காரன்... இன்னிக்கு அஞ்சு... நிமிஷம் முன்னாடி வர்றான்...

    புலம்பாதீங்க...! சாயந்தரம் அஞ்சு மணிக்கு... இங்கேயே நின்னுட்டிருக்கேன். இன்னிக்கு என்னோட சம்பள நாள்.

    அப்படீன்னா எனக்கு நாயர் ஹோட்டல்ல டிபன் உண்டு

    உண்டு... உண்டு...

    சீனிவாசன் கையை ஆட்டிக்கொண்டே போய் பஸ்ஸுக்குள் தாவி ஏறிக் கொண்டான். வேதாவும் கையசைத்துவிட்டு ரோட்டை க்ராஸ் செய்தாள். வேதாவுக்கு இருபத்தி மூன்று வயது. தலை கொள்ளாத கேசமும் உடம்பில் சிவந்துவிட்ட செம் பொன் நிறமும்... பிற பெண்களின் மனசில் பொறாமைத் தீயை உண்டு பண்ணக்கூடிய வல்லமை. படைத்தவை. ஆனால் வேதா தன் உடம்பு அழகாக இருக்க வேண்டுமே என்பதற்காக எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. முகத்திற்கு லேசாய் பெளடர் பூச்சு மட்டும் உண்டு. பி. ஏ. லிட்டரேச்சரை முடித்துவிட்டு அதிகம் சிரமப்படாமல் ஒரு கெமிக்கல்

    கம்பெனியில் டைப் தட்டும் வேலையை வாங்கிக் கொண்டவள். தி. ஜானகிராமனையும் படிப்பாள். மாதாமாதம் க்ரைம் நாவலும் வாங்குவாள். கண்ணதாசனுக்குப் பிறகு சினிமாவுக்கு பாட்டெழுத வந்துள்ள சினிமா கவிஞர்களை பிய்த்து உதறுவாள். 'பாட்டா எழுதறானுக... இவங்க கையில் இருக்கிற பேனாவையும் பேப்பரையும் பிடுங்கிகிட்டாலே போதும். தமிழ்ப்படத்தோட... தரம் உயரும்... என்று பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதிப் போட்டவள். பெண்களுக்கு இந்த சமுதாயம் நிறையவே உரிமைகளை குடுத்திருக்கு. பெண்கள் அதை உபயோகப்படுத்திக்க வராததினாலே... அவங்களுக்கு உரிமைகளே இல்லாத மாதிரி தெரியுது. அவ்வளவுதான். பெண்ணுக்கு உரிமை தரலைன்னா... ஒரு இந்திராகாந்தி பிரதமரா வந்திருக்க முடியுமா...? ஒரு பெண் சுப்ரீம் கோர்ட் நீதிபதியா... பதவி ஏற்றிருக்க முடியுமா...? பெண்களில் எத்தனை பேர் டாக்டர்கள்... என்ஜினியர்கள்...

    Enjoying the preview?
    Page 1 of 1