Poo Malarum Saththam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poo Malarum Saththam
Related ebooks
Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPoi Satchi Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5Kuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Yuttha Boomi Rating: 0 out of 5 stars0 ratingsThookkumara Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKavitha Nagar Kadaisi Theru Rating: 0 out of 5 stars0 ratingsNitthiyavin Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipithazh Rating: 1 out of 5 stars1/5Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsPoiyai Thavira Verondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsUyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsMiss Bharatha Maathaa Rating: 0 out of 5 stars0 ratingsOru Mathippirkkuriya Kutram... Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Muraiyil Maranam! Rating: 5 out of 5 stars5/5Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsObjection Your Aanar Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munaiyil Oor Uyir Rating: 5 out of 5 stars5/5Ellam Nanmaikke Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5Sumathi Engira Sumai Rating: 0 out of 5 stars0 ratingsIthuthan India Rating: 0 out of 5 stars0 ratingsIndian Enbathu En Peru Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Indian Rating: 0 out of 5 stars0 ratingsIndian Endru Sollada Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Yutham Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Poo Malarum Saththam
0 ratings0 reviews
Book preview
Poo Malarum Saththam - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
செங்காவி நிறத்தில் பிரிட்டிஷ் காலத்திய கோர்ட் கட்டடம்.
இரண்டாவது சேம்பரின்ஓய்வறையில் இருந்தார், நீதிபதி சிவஞானம். நடுத்தர வயதைத் தொட்டிருந்தவரின் தலைப் பிரதேசத்தைக் கவ்வியிருந்த கறுப்பு டை ஒன்றிரண்டு வருடங்களைக் குறைத்துக் காட்ட முயற்சித்து, பின் மண்டையில் பூத்திருந்த வழுக்கை அதை பாலன்ஸ் செய்கிறாற்போல் வயதைக் கூட்டிக் காண்பித்தது.
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இன்னொரு நீதிபதி தடிமனான சட்டப் புத்தகத்தைக் குடைந்து கொண்டிருந்தார்.
எதேச்சையாய் நிமிர்ந்து சிவஞானத்தைப் பார்த்து விட்டுப் புன்னகைத்தார்.
சிவஞானம்... ரொம்ப நாளைக்கப்புறம் ரிலாக்ஸ்டா இருக்கிங்க போலிருக்கே...?
ஆமா... பதினெட்டு மாசமா டென்ஷன்... டென்ஷன். போதும்ப்பா... இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த அரசியல் கேஸ்களே வேண்டாம்...
அத்தனை பத்திரிகைகளிலும் உங்க தீர்ப்பைப் பத்திதான் நியூஸ்... தீர்ப்பு ரியலி போல்டா இருந்தது, சிவஞானம்... ஆளுங்கட்சி மந்திரி மேல குற்றத்தை உறுதிப்படுத்தித் தீர்ப்புச் சொல்றது சாதாரண விஷயமில்லை...
கான்க்ரீட் ஆதாரங்களை சப்மிட் பண்ணிட்டாங்க... நான் அப்படித் தீர்ப்பு வாசிக்கலைன்னா அது நீதித் துறைக்கே பெரிய களங்கமாயிருக்கும். அதனாலதான் மிரட்டல்களைப் பத்திக் கவலைப்படாம தீர்ப்பை வாசிச்சிட்டேன்...
இப்பவும் மிரட்டல் வருதா...?
கட்சிக்காரங்கதான் மிரட்டல் போன்கால், லெட்டர்ஸ்ன்னு பீதியைக் கிளப்பிட்டிருந்தாங்க... நான் தீர்ப்புவாசிச்ச அடுத்த அரை மணி நேரத்தில் அந்த மந்திரியைப் பதவியை விட்டு டிஸ்மிஸ் பண்ணிக் கட்சியை விட்டும் நீக்கிட்டாங்க... அவர் இப்போ செல்லாக் காசாகிட்டார்... அதனால் நாலைஞ்சு நாளாவே மிரட்டல்கள் எதுவும் இல்லை...
எதுக்கும் ஜாக்கிரதையாகவே இருங்க, சிவஞானம்... செக்யூரிட்டி ஃபோர்ஸை இம்மீடியட்டா குறைச்சுக்காதிங்க...
வீட்டில் ஒய்ஃப்தான் ஒரேயடியா பயந்து சாகறா...வெத்து மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட்டா ஜட்ஜா இருக்க முடியுமா...?
சிரித்துக் கொண்டே கேட்டவர், சட்டென்றுவாட்சைப் பார்த்து விட்டு எழுந்தார்.
பதினொண்ணரைக்கு ஒரு ஹியரிங் இருக்கு...
என்ன கேஸ்...
ஒரு மர்டர் கேஸ்...
இதுவும் பொலிட்டிக்கலா...?
இல்லை... பார்ட்னர்ஷிப் தகராறுல தினேஷ்ங்கற ஆளு ராமசாமிங்கறவனைக் கொலை பண்ணிட்டான். கொஞ்சநாளைக்கு பொலிட்டிகல் இஷ்யூஸ் வேண்டாம்னு கேட்டுகிட்டேன்...
இன்னிக்குத்தான் ஃபர்ஸ்ட் ஹியரிங்கா...?
ஆமா...
அவர் சொன்ன போது கோர்ட் குமாஸ்தா தயக்கமாய் அறைக்கு வந்தார்.
எக்ஸ்க்யூஸ் மீ ஸார்...
இப்போ ஹியரிங் இருக்கு. அதைத்தானே சொல்ல வந்தே...?
எஸ் ஸார்...
நான் சேம்பருக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன்...
சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினார்.
குமாஸ்தா முன்னே செல்ல - நீளமான வராந்தாவில் நடந்தார். கருங்கல் கட்டடத்தின் தூண்கள் ஒவ்வொன்றாய்ப் பின்னே சென்றன. வராந்தா கோடியில் இருந்த கதவுக்குள் அவர் நுழைந்ததும் - அத்தனை நேரம் சலசலப்பாய் இருந்த கோர்ட் பவர் கட் ஆனதைப் போலச் சட்டென்று நிசப்தத்துக்கு வந்தது.
சிவஞானம் உயரத்திலிருந்த அவருடைய இருக்கையைத் தொட்டார். கோர்ட் குமாஸ்தா டேக் போட்டுக் கட்டப்பட்டிருந்த கேஸ் தஸ்தாவேஜ்களை அவரிடம் பவ்யமாய் நீட்டினார்
அதைப் பிரித்து டைப் செய்யப்பட்ட அந்தக் காகிதங்களின் மேல் ஒரு சில விநாடிகள் கண்களை நிலைக்க விடட்டிருந்தவர் நிமிர்ந்து, விசாரணை துவங்கலாம்...
என்றார்.
ஓரமாக கான்ஸ்டபிள்களின் பிடியில் நின்றிருந்த தினேஷ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டான்.
சிவஞானம் அவனுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பார்வையை நகர்த்தினார்.
முப்பத்திரண்டு வயதுக்கு மதிக்கலாம். தாடை பூராவும் முள் முள்ளாய்த் தாடி பயிராகியிருந்தது. கண்களில் சோர்வும், பீதியும் அப்பியிருந்தது. போலீசின் அடியினாலோ... அழுத்தினாலோ கன்னங்கள் வீங்கியிருந்தன...பொதுவாய் முதல் பார்வையிலேயே இவன் குற்றம் செய்திருக்கிறான் அல்லது செய்யவில்லை என்பதைச் சிவஞானம் அடி மனசுக்குள் அனுமானித்து விடுவார்.
இந்த தினேஷைப் பொறுத்தவரை அவரால் எந்த அனுமானத்துக்கும் வர முடியவில்லை.
சிவஞானம் தளர்ச்சியாய் நின்றிருந்த அவனைப் பார்த்துக்
கேட்டார்.
உன் பேரென்ன...?
தினேஷ்...
என்ன தொழில் செஞ்சிட்டிருந்தே...?
எலக்ட்ரிக்கல் கூட்ஸ் ஏஜென்சி நடத்திட்டிருந்தேன்...
பார்ட்னர்ஷிப் பிசினசா.?
இல்லை... நான்தான் ஸோல் ப்ரொப்ரைட்டர்...
அவன் சொன்னதும் - லேசான திகைப்போடு மூக்குக் கண்ணாடியைச் சரியாய்ப் பொருத்தினார் சிவஞானம். தன்னிடமிருந்த தஸ்தாவேஜுகளைச் சரி பார்த்து விட்டுக்கேட்டார்.
நீ ராமசாமி என்பவரோட பார்ட்னர்ஷிப்பில் பிசினஸ் நடத்தி வந்ததா கேசில் குறிப்பிட்டிருக்காங்களே...
இல்லை. ஏஜென்சியை நான் மட்டுந்தான் நடத்திட்டு,வர்றேன்...
பார்ட்னர் ராமசாமியை நீ கொலை செஞ்சிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கு... அவர் என்னோட பார்ட் இல்லைன்னு நீ சொல்ற... அப்படின்னா ராமசாமி உன்னோர் நண்பரா?
இல்லை...
உறவினரா...?
அதற்கும் அவனிடம் இருந்து மறுப்பு வந்தது.
இல்லை...
அப்படின்னா ராமசாமிக்கும் உனக்கும் என்னதா தொடர்பு...?
ராமசாமிங்கறவர் யாருன்னே எனக்குத் தெரியாது...
சிவஞானம் உச்சபட்சமாய்த் திகைத்து அவனை ஏறிட்டு பார்த்தார்.
அவன் அப்பாவியாய்ச் சொல்கிறானா... இல்லை, அழுத்மாய்ச் சொல்கிறானா... என்று அவருக்குப் புரியவில்லை. சிவஞானம் மெதுவான குரலில் சொன்னார்.
இங்கே பாருப்பா... இன்னிக்குத்தான் இந்தக் கேஸ் ஆரம்பம் ஆகிறது... உண்மைகளைத் தயங்காம சொல்றதுதான் உனக்கு எல்லா வகையிலும் நல்லது. விசாரணை - குறுக்கு விசாரணைன்னு இன்னும் நிறைய இருக்கு. அதிலெல்லாம் பொய்கள் சாயம் வெளுத்துடும்... நீ சொல்றதுக்கும் நிரூபனமாகிற உண்மைகளுக்கும் முரண்பாடு அதிகமா இருந்தா உனக்குத் தரப்படும் தண்டனை கடுமையா இருக்கும். அப்புறம் உன் மேல் கருணை காட்ட இடமிருக்காது...
"நான் மனசார உண்மையைத்தான் சொல்றேன்... ராமசாமிங்கற பேரில்