Rajini Raajyam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Rajini Raajyam
Related ebooks
Bombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Maranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Athikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Nirangal Rating: 3 out of 5 stars3/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsAvenue Marangal Rating: 5 out of 5 stars5/5Readymade Sorkkam Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/511 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Elithu Elithu Kolvathu Elithu Rating: 5 out of 5 stars5/5முத்திரை சதி Rating: 5 out of 5 stars5/5Andha Naal... Andha Nimidam... Andha Nodi! Rating: 0 out of 5 stars0 ratingsKurithuvaithu Kol! Rating: 5 out of 5 stars5/5Pagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik December Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Nerungathey Neruppu Rating: 5 out of 5 stars5/5Thalaippu Seithi Rating: 5 out of 5 stars5/5Magaa Sathi Rating: 0 out of 5 stars0 ratingsPaththu Vinaadi Aabathu! Rating: 0 out of 5 stars0 ratingsOne + One = Zero Rating: 2 out of 5 stars2/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Theera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Rajini Raajyam
0 ratings0 reviews
Book preview
Rajini Raajyam - Rajeshkumar
–
1. மலர் வளையம்
உயர் போலீஸ் அதிகாரிகளின் ரகசியக் கூட்டம் - ஏ.ஸி. அறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ரஜினி ஒரு நாற்காலியை ஆக்ரமித்து, தன் சிவந்த கண்களால், மெலிதாய் பேசிக் கொண்டிருந்த டி.ஜி.பி.யை பார்க்க அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
பம்பாயிலும் கல்கத்தாவிலும் குண்டுகள் வெடித்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக இறந்து போயிருக்கிறார்கள். மரணமென்றால் சாதாரண மரணமில்லை. கோரமான மரணங்கள். 'கான்க்ரீட் கட்டிடங்களே துகள்துகளாய் சிதறும்போது...? கட்டிட இடிபாடுகளுக்கிடையில் கண்டெடுக்க முடிந்தது நூற்றுக்கணக்கான கைகளையும் கால்களையும்தான்.
ரஜினி எழுந்து கேட்டார்.
ஸார்... இந்த நாச வேலைக்கு யார் காரணம்...? டெல்லியிலிருந்து என்ன தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது...
இது வெளிநாட்டு சதி என்று சொல்லப்படுகிறது. 'இன்னும் இரண்டு நாட்கள் போனால்தான் டெல்லியிலிருந்து முழுமையான தகவல் நமக்கு கிடைக்கும். ' நாம் இங்கே இப்போது கூடியிருப்பது பம்பாய் - கல்கத்தாவில் நேரிட்ட அந்த மோசமான வெடிகுண்டு சம்பவங்கள் சென்னையில் நிகழாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி 'பேசத்தான், பம்பாய், கல்கத்தாவுக்கு அடுத்தபடியாக சதிகாரர்களின் பார்வை சென்னையின்மேல்தான் இருக்கும். நாம் விழிப்போடு செயல்பட்டால் அந்த வெடிகுண்டுகளை ஊமைகளாக்கி சதிகாரர்களைப் பிடிக்கலாம்.*
அதிகாரிகள் மத்தியில் மௌனம். டி.ஜி.பி. சில நொடி மௌனத்திற்குப்பின் கூப்பிட்டார்.
மிஸ்டர் ரஜினி...
ஸார்...
அந்த பொறுப்பை உங்ககிட்டத்தான் கொடுக்கப் போகிறேன். உங்களுக்குக் கீழே பத்து பேர் அடங்கிய ஒரு குழு செயல்படும். அது தவிர பாம் ஸ்க்வாட். டிடெக்டர்ஸ் விங். ட்ரெயின்ட் டாக்ஸ் அடங்கிய ரா க்ரூப்பும் உங்களுக்குத் தரப்படும். சென்னையை வெடிகுண்டு பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுடையது.
எஸ்... ஸார்...
ஒரு மணிநேர ஆலோசனைக்குப்பின் கூட்டம் முடிந்து வெளியே வந்தார் ரஜினி. குளிர்கண்ணாடியை கண்களில் பொருத்திக் கொள்ள சீப்புக்கு கட்டுப்படாத தலைமுடி காற்றில் பறந்தது.
அதிகாரிகளோடு பேசிக் கொண்டே வந்தவர் - பக்கத்து அறையில் மேஜையிலிருந்து டெலிபோன் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் உள்ளே போய் இடது கையால் தூக்கிப்போட்டு வலது கையில் ஸ்டைலாகப் பிடித்து இடது காதுக்குக் கொடுத்தார்.
ஹலோ...
க்ரைம் ப்ராஞ்ச்...?
ஒரு ஆண் குரல் கேட்டது.
எஸ்...
ரஜினி இருக்காரா...?
ஹோல்டிங்...
அட..., நீங்கதானா...? பழம் நழுவி பால்ல விழுந்து அது நழுவி வாய்க்குள்ள விழுந்த மாதிரியான ஒரு சந்தோஷம்....
யார் நீங்க...?
ரிஸீவரை வெக்கறப்போ சொல்றேன். இப்ப நீங்க 'என்ன பண்றீங்கன்னா... பொடி நடையா க்ரைம் ப்ராஞ்ச் கட்டிடத்துக்குப் பின்னாடி போறீங்க. அங்கே காம்பெளண்ட் சுவர் ஓரமா உங்களுக்காக ஒரு விஷயம் காத்திட்டிருக்கு... போய் பாருங்க...
ஏய், யார்... நீ...?
"முதலாம் குலோத்துங்க சோழ மகாராஜான்னு வெச்சுக்கோங்களேன்...
ரிஸீவர் மறுமுனையில் சாத்தப்பட்டதும் - ரஜினி ரிஸீவரைவைத்து விட்டு க்ரைம் ப்ராஞ்ச் கட்டிடத்தின் பின்பக்கத்தை நோக்கி வேகமாய் போனார். - உபயோகப்படுத்த முடியாத இரண்டு வயோதிக ஜீப்கள் மண்ணில் புதைந்து கிடக்க அதைச் சுற்றிலும் ஏராளமான பார்த்தீனிய செடிகள்.
ரஜினியின் பூட்ஸ்கால்கள் அந்தச் செடிகளை துவம்சம் செய்து கொண்டே காம்பௌண்ட் சுவரை நெருங்கியது. டாய்லெட்டுக்கு கொஞ்சம் தள்ளி - சுவரோரமாய் - அந்த மலர் வளையம் வைக்கப்பட்டிருந்தது. சற்று பெரிதான மலர் வளையம். ரஜினி அதை நோக்கி நடந்தார். ரஜினி மலர் வளையத்தை நெருங்கினார். சாமந்திப் பூக்களாலும், ரீத் இலைகளாலும் நேர்த்தியாய் செய்யப்பட்ட அந்த மலர் வளையம் சற்று பெரியதாக தெரிய - அதன் நடுவில் ஒரு ப்ரெளன் கவர் சொருகி வைக்கப்பட்டிருந்தது. தன் லேஸர் விழிகளால் அந்த மலர் வளையத்தை உற்றுப் பார்த்த ரஜினி தன் இடது கை விரல்களால் அந்தக் கவரை எடுத்து அதன் வாயை பட்டென்று உடைத்து உள்ளேயிருந்த காகிதத்தை உருவி பார்த்தார். தமிழில் அடித்தல் திருத்தல்களோடு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. படித்தார்.
ரஜினி அவர்களுக்கு,
முதலாம் குலோத்துங்க சோழ மகாராஜாவின் விண்ணப்பம். கல்கத்தாவிலும் பம்பாயிலும் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் மாதிரி சென்னையிலும் நடந்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பு உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு இருக்கிறது நியாயம். கடமையை உயிராய் மதிக்கிற உங்களுக்கு அதைவிட பதைதைப்பு இருக்கிறது ரொம்ப ரொம்ப நியாயம்...! அதுக்காக எங்க கடமையை நாங்கள் செய்யாமே இருக்க முடியுமா...? அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே - அதாவது இந்தக் கடிதத்தை படிக்க ஆரம்பித்த நிமிடத்திலிருந்து 1440 ஆவது நிமிஷத் துக்குள்ளே மெட்ராஸ்ல எந்தக் கட்டிடம் வேணுமின்னாலும் வெடிக்கலாம். நூற்றுக்கணக்கான பேர்கள் சாகலாம். அப்படி செத்துப் போகப் போகிற ஜனங்களுக்கு அஞ்சலி செலுத்த எங்களுக்கு நேரம் இருக்காதுங்கிற காரணத்துக்காகத்தான் இப்பவே உங்க போலீஸ் ஹெட்க்வார்டர்ஸ் வளாகத்துக்குள்ளே இந்த மலர் வளையத்தை வெச்சு அஞ்சலி செலுத்துறோம். இது எங்க அட்வான்ஸ் அஞ்சலி! உங்க பாஷையில் நீங்க அடிக்கடி சொல்ற மாதிரி நாங்க ஒண்ணும் ஜுஜுபி இல்லை. நாங்க வேகமானவங்க, விவேகமானவங்க, வித்தியாசமானவங்க. இதை நீங்க நம்பணும்னா ஒரு சின்னக் காரியம் பண்ணுங்க... போதும். பெரிசா ஒண்ணும் இல்லை. இந்த மலர் வளையத்தை வெச்சிருக்கிற இடத்துக்குக் கீழே தோண்டிப்பாருங்க... நாங்க எப்பேர்ப்பட்டவங்கன்னு புரியும்.
மிகுந்த நன்றியோடு முதலாம் குலோத்துங்க சோழன்.
ரஜினி கடிதத்தைப் படித்து விட்டு நிமிர்ந்தார்.
மிஸ்டர் கனகராஜ்...
சற்று தள்ளி நின்றிருந்த அந்த க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேகவேகமாய் பக்கத்தில் வந்து பவ்யம் காட்டினார்.
ஸார் இந்த மலர் வளையம் இருக்கிற இடத்தை தோண்ட ஏற்பாடு பண்ணுங்க...
எஸ்... ஸார்.
அவர் ஓடிப்போய் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஆட்களைக் கூட்டி வந்தார். அதற்குள் டிபார்ட்மெண்ட் முழுவதும் விஷயம் பரவிவிட அதிகாரிகள் வேகவேகமாய் வந்து சூழ்ந்தார்கள். ரஜினி அவர்களுக்கு மலர் வளையக் கடிதத்தைக் காட்டி விபரம் சொன்னதும் முகங்கள் இருண்டார்கள், தோண்டப்படுகிற இடத்தைப் பார்த்தார்கள். பிராந்தியம் நிசப்தத்தால் உறைந்து போயிற்று.
மலர் வளையம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கடப்பாரைகள் இறங்கின. மண்வெட்டிகள் மண்ணை அள்ள குழியொன்று வேகவேகமாய் பிறக்க ஆரம்பித்தது. ரஜினியின் பார்வை அகற்றப்படுகிற மண்ணின் மீது அழுத்தமாய் படிந்திருந்தது.
குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுகிற குழி அது. எனவே குழியின் வாய் வேக வேகமாய் அகலமாக ஆழமாகியது. குழி நான்கு அடி ஆழத்துக்கு வந்தபோது அந்த காக்கி யூனிஃபார்ம் பார்வைக்கு கிடைத்தது. உடனே திகிலாகி இன்னும் வேக வேகமாக தோண்டினார்கள். மண் உடனுக்குடன் அகற்றப்பட குழிக்குள்ளே ஒரு போலீஸ் அதிகாரியின் உடல் குப்புறவாக்கில் புதைக்கப்பட்டிருந்தது.
குழிக்குள்ளிருந்து உடலை எடுத்து - மேலே கொண்டு வந்து மல்லாத்தினார்கள். முகம் முழுக்க களிமண் அப்பியிருந்தது."
முகத்தை நீர்விட்டு கழுவிய போது அந்த அகலமான முகம் சட்டென்று பிடிபட - ரஜினி உட்பட எல்லோரும் உறைந்து போனார்கள். ஒரு அதிகாரி அதிர்ச்சி தாளாமல் கத்தினார்.
இது... இது... டி.எஸ்.பி. தியாகராஜன்...
ரஜினி கலங்கிப் போய் உடலருகே குனிந்தார். காக்கி சட்டைக்குள் ஒரு பாலிதீன் பை திணிக்கப் பட்டு தெரிய அதை எடுத்தார். உள்ளே தமிழ் டைப் வாசகங்களோடு அந்த காகிதத்துண்டுதட்டுப்பட்டது. எடுத்துப் படித்தார்.
'நாங்க வேகமானவங்க; விவேகமானவங்க, வித்தியாசமானவங்க' ங்கிறது இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே ரஜினி சார்... டி.எஸ்.பி. தியாகராஜன் எங்களுக்கு கொஞ்சம் இடைஞ்சல் பண்ணினார். உங்க போலீஸ் வளாகத்துக்குள்ளேயே புதைச்சுட்டோம்... எங்களுக்கு யார் இடைஞ்சல் பண்ணினாலும் அவங்களுக்கு இந்த கதிதான். இது உங்களுக்கும் சேர்த்துத் தான்...! வெடிக்கப் போகிற வெடிகுண்டுகளை ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்க. அது புத்திசாலித்தனம்.?
ரஜினி ஆத்திரம் தாளாமல் கடிதத்தைக் கசக்கினார்.
டி.எஸ்.பி. தியாகராஜனின் மினி சைஸ் பங்களா மகாகவி பாரதியார் நகரின் கடைசியில் இருந்தது. வாசலில் வாதாம் மரம் ஒன்று நிழலைப் பரப்பிக் கொண்டு நிற்க - காம்பௌண்ட்சுவரில் புதுவிதமான க்ரிப்பர்.
ரஜினி தன் புல்லட்டை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனார். போர்டிகோவில் ஃபியட் தெரிந்தது. கட்டிப் போட்டிருந்த ஒரு நாய் குரைக்கலாமா... வேண்டாமா என்று யோசிக்க - வாசற்படி ஏறி காலிங் பெல்லைத் தட்டினார். கதவு திறந்தது. டி.எஸ்.பி. தியாகராஜனின் சாயலில் அவருடைய மகன் ஆனந்த் நின்றிருந்தான். ரஜினியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான். இளைஞன். வயது இருபத்தைந்து இருக்கலாம். குட் மார்னிங் சார்...
என்றான்.
ரஜினி 'குட்மார்னிங்' சொல்லாமல் உள்ளே நுழைந்தார். ஹால்வாசலில் தியாகராஜனின் மனைவி போட்டோவாய் மாறியிருக்க - படத்துக்கு போட்டிருந்த ரோஜாமாலை வாடியிருந்தது. விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆனந்த் உபசரித்தான்.
உட்காருங்க ஸார்...
என்றான். கவலையாய் அவனை ஏறிட்ட ரஜினி
அப்பா... எங்கே?
என்று ஒன்றும் தெரியாதவர் போல்