Ullur Sathigal Thani
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ullur Sathigal Thani
Related ebooks
Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsAugust Athirchi Rating: 4 out of 5 stars4/5Rattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Pagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsSorry, Konnutten! Rating: 3 out of 5 stars3/5Sathamillatha Samuthiram! Rating: 0 out of 5 stars0 ratingsKoodave Oru Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsMudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Sivappai Sila Pulligal and Sivappu kavithai Rating: 5 out of 5 stars5/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5Endrendrum Un Ethiri Rating: 5 out of 5 stars5/5Nimishathukku Nimisham Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5January Maranangal Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Paris Bayangaram Rating: 5 out of 5 stars5/5Anthamaan Abaayam Rating: 0 out of 5 stars0 ratingsMathumithaavin Manjal Pakkangal Rating: 5 out of 5 stars5/5Naan Unnodu! Nee Yaroodu…? Rating: 5 out of 5 stars5/5Nilavukkul Iruttu and Velvet Kanavugal! Rating: 5 out of 5 stars5/5Rajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsSamaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5Mottukkal Pookattum Rating: 5 out of 5 stars5/5Julaiyil Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5
Related categories
Reviews for Ullur Sathigal Thani
0 ratings0 reviews
Book preview
Ullur Sathigal Thani - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
மின்சாரம் தவறியிருந்த அந்த புறாக்கூண்டு அறையில் - ஒரு மெழுகுவர்த்தியின் சுடர் நடனமாடிக்கொண்டிருக்க - அந்தச் சுடரின் உபயத்தில் கடிதத்தை எழுதிக்கொண்டிருந்தான் சபரி வார்த்தைகள் கோபம் கோபமாய் - வரிகளாக மாறிக்கொண்டிருந்தது.
அன்பான மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் இந்த ஊருக்கு வந்து 'கலெக்டர்' என்னும் பதவியில் ஒட்டிக்கொண்டு இன்றோடு ஆறுமாத காலம் முடிந்து விட்டது. அதாவது மொத்தம் நூற்றி எண்பத்தைந்து நாட்கள் என்னுடைய கணக்குப்படி நீங்கள் வேலை பார்த்திருக்கிறீர்கள். அதில் பாதி நாட்களை மந்திரி வருகிறார். கவர்னர் வருகிறார் என்பதற்காக அவர்களுக்கு காத்திருந்து, அவர்களோடு அசட்டு இளிப்போடு சுற்றுவதில் வீணாக்கியிருக்கிறீர்கள். மீதி இருக்கும் பாதி நாட்களில், கால்வாசி நாட்களை அரசாங்க விழாக்களில் கலந்துகொள்ள செலவு செய்துவிட்டீர்கள். மிச்சம் இருந்த கால்வாசி நாட்களில் - பத்து நாட்கள் சொந்த விடுப்பில் உங்கள் சொந்த ஊரான அருமணைக்கு போய்விட்டீர்கள். கடைசியில் கொஞ்ச நஞ்சம் உயிரோடு இருந்த நாட்களில், நீங்கள் இந்த மாவட்டத்திற்காக என்ன வேலை பார்த்தீர்கள் என்பது ஏசுவுக்கும், அல்லாவுக்கும், அந்த விநாயகப் பெருமானுக்கும்தான் வெளிச்சம், மாவட்டத்தில் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா...? ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை வழங்குவதில் தில்லு முல்லுத்தனம், நகரைச் சுற்றிலும் இருக்கிற கிராமங்களில் போலீஸ் அதிகாரிகளின் ஆசீர்வாதத்தோடு நடைபெறும் கள்ளச் சாராயத் தொழில், நகரில் ஆங்காங்கே உடைப்பெடுத்துக்கொள்ளும் சாக்கடைக் குழாய்கள், டவுன் பஸ்களில் பல்கிப் பெருகியிருக்கும் பிக்பாக்கெட் பேர்வழிகள், திப்பம் பாளையம் நெசவாளர் பிரச்னை, நகரில் இருக்கும் தொண்ணூறு சதவீத லாட்ஜ்களில் நடைபெறும் விபச்சாரத் தொழில், பகிரங்கமாக லஞ்சம் கேட்கும் உங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள், - இப்படி பல முறைகேடுகளை உங்கள் ராமராஜ்யத்தில் சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளையெல்லாம் களைவதற்காக நீங்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.
பத்திரிகைகளுக்கு பல்லிளித்து போஸ் கொடுப்பதற்கும் மந்திரிகளுக்கு மாலை போடுவதற்கும் மட்டுமே கலெக்டர்க்கு படித்துவிட்டு வந்தீர்களா...? எங்களுடைய வரிப் பணத்திலிருந்து கொள்ளை கொள்ளையாய் சம்பளம் வாங்கிக்கொள்ளும் நீங்கள் இந்த மாவட்டத்திற்காக ஏதாவது செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு அற்றுப்போய்விட்டது. எனவே இந்தக் கடிதம் கண்ட பத்தாவது நாள் நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சொந்த ஊரான அருமணைக்கு போய்விட வேண்டும். இது இந்த மாவட்டத்தின் நாற்பது லட்ச குடிமக்களில் ஒரு குடிமகன் தேச விசுவாசத்தோடு எழுதிக் கொண்டது. அடுத்த வாசகம்தான் கடிதத்தின் மிக முக்கியமான வாசகம். கவனமாக படியுங்கள்.
நீங்கள் பத்தாவது நாள் பதவி விலகவில்லையென்றால் - அதற்குப் பிறகு வருகிற ஏதாவது ஒரு நாளில் ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு ஆயுதத்தால் இரவு பகல் எந்த நிமிஷத்திலாவது என்னால் கொல்லப்படுவீர்கள்.
இது வெறும் மிரட்டல் இல்லை. சர்வ நிச்சயமான ஒன்று. ஆயுசு வேண்டுமென்றால் அருமணைக்கு போங்கள்.
அமரர் பதவி வேண்டுமென்றால் கலெக்டர் பதவியிலேயே ஒட்டிக்கொண்டு இருங்கள். இப்படிக்கு இம்மாவட்டத்தின் குடிமகன்.
- கடிதத்தை எழுதி முடித்த சபரி, ஒரு தடவை எழுதின வாசகங்களை சரி பார்த்துவிட்டு ஒரு வெள்ளைக் கவரிலிட்டு ஒட்டி அட்ரஸை கொட்டை கொட்டையான எழுத்துக்களில் எழுதினான். பின்கோட் நெம்பரைப் போடும்போது -
டொக்... டொக்...
கதவை யாரோ தட்டினார்கள்.
சபரி பதட்டமாகி பேனாவை மூடி கவரை மேஜையறைக்குள் தள்ளிவிட்டு எழுந்தான். இருபத்தேழு வயதுக்குரிய ஒடிசலான தேகம். சிவந்த நிறம். பெண்களுக்கு இருக்க வேண்டிய பெரிய கண்கள்.
அவிழ இருந்த லுங்கியை அவசர அவசரமாய் கட்டிக் கொண்டு போய் கதவைத் திறந்தான்.
வாசற்படியின் இருட்டில் மசமசப்பாய் நின்றிருந்த அந்தப் பெண்ணை பார்த்ததும் வா... வைஷ்ணவி...
என்றான்.
ஒரு மெழுகுவர்த்தி கடனா வேணும்... கிடைக்குமா?
வைஷ்ணவி அறைக்குள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே கேட்டாள்.
மெழுகுவர்த்தியா...? இருந்தது ஒண்ணே ஒண்ணுதான்... அதுதான் இந்த ரூமுக்கு சூரியனாயிருந்து ஒளி கொடுத்துட்டிருக்கு. ஏன் நம்ம பாய்கடையில் மெழுகுவர்த்தி விற்குமே...?
தீர்ந்து போச்சாம்...
கண்டிப்பா மெழுகுவர்த்தி வேணுமா...?
ஆமா...! எங்கப்பா... குடிச்சுட்டு வந்து வீடு பூராவும் வாந்தி பண்ணி வெச்சிருக்கார். சுத்தம் பண்ணணும்... அதான்...
சரி... இந்த மெழுகுவர்த்தியை எடுத்துகிட்டு போ...
உங்களுக்கு...?
எனக்கு வேண்டாம்... இன்னும்... கொஞ்ச நேரத்துல கரெண்ட் வந்துடும்... நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன். நீ இந்த மெழுகுவர்த்தியை எடுத்துகிட்டுப்போ.
சொன்னவன் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் சுடரை அணைத்து அவளிடம் நீட்டினான்.
ஸாரி... என்னமோ எழுதிட்டிருந்தீங்க போலிருக்கு...?
திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தான்.
நான் எழுதிட்டிருந்தது உனக்கு எப்படி தெரியும்...?
கதவு இடுக்கு வழியா பார்த்தேனே...?
ஒ... ஒரு கவிதை... எழுதிட்டிருந்தேன்...
என்ன கவிதை...?
கவிதை கேக்கிற நேரமா... இது...? உங்கப்பா வாந்தி பண்ணி வெச்சிருக்கிறதைப் போய் சுத்தம் பண்ண வேண்டாம்...?
தினசரி அவர் பண்ற வாந்திதானே அது...? எங்கே நீங்க எழுதின கவிதையை சொல்லுங்க பார்க்கலாம்...
நீ விடமாட்டியே...? உனக்காகவே சீக்கிரம் இந்த பொன்னைய ராஜபுரத்தை விட்டு காலி பண்ணிகிட்டு ஓடிடப் போறேன்...
சாவகாசமா ஓடலாம். மொதல்ல கவிதையைச் சொல்லுங்க...
சபரி அவளைப் பார்த்தான். 'இவள் கவிதை கேட்காமல் இங்கிருந்து நகர மாட்டாள் போலிருக்கிறதே, ஏதாவது ஒரு கவிதையைச் சொல்லி அனுப்பிவிட வேண்டியதுதான்.' யோசித்தான்.
என்ன யோசிக்கறீங்க...?