Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Thaa
Unnai Thaa
Unnai Thaa
Ebook157 pages45 minutes

Unnai Thaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Unnai Thaa

Read more from Rajeshkumar

Related to Unnai Thaa

Related ebooks

Related categories

Reviews for Unnai Thaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Thaa - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    டார்ச் வெளிச்சம் பளீரென்று - வயல் வரப்பின் மேல் விழுந்து - இருட்டைத் துடைத்து காட்ட - சாம்பமூர்த்தி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நடை போட்டான். கதிர் முற்றிய சோளப்பயிர். ராத்திரி குளிர் காற்றில் கும்மென மணத்தது. கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு பூராவும் சோளப் பயிர்கள்தான். அந்த பயிர்களுக்கு வேலி போட்ட மாதிரி - நிலத்தின் ஓரம் பூராவும் கருவேல மரங்கள் அடர்த்தியாய் செழித்து அந்த இருட்டில் கிளைகளை ஆட்டின. சாம்பமூர்த்தி பழக்கமான அந்த வயல் வரப்பில் வேக வேகமாய் நடந்தான். வயல் வெளிக்கு நடுவே இருந்த பரணும் - அந்த பரணையொட்டி நடப்பட்ட நீளமான கழியில் தொங்கிக் கொண்டிருந்த சோலை கொல்லை பொம்மையும் இருட்டின் பின்னணியோடு தொலைவில் தெரிந்தன. இடையே குறுக்கிட்ட சின்ன வாய்க்காலைத் தாண்டினான் சாம்பமூர்த்தி. அதே விநாடி - முதுகுக்குப் பின்னாடி அந்தக் குரல் கேட்டது.

    எலே... யார்ராது… வயக்காட்டுக்குள்ளே...?

    சாம்பமூர்த்தி டார்ச் வெளிச்சத்தோடு திரும்பினான். அவனுக்கு ஐம்பதடி தொலைவில் ஒரு அரிக்கேன் விளக்கு அசைந்து அசைந்து வந்தது.

    யாரது?

    குரல் மறுபடியும் கேட்க - அந்தக் குரலை சட்டென்று அடையாளம் தெரிந்து கொண்டான் சாம்பமூர்த்தி.

    மணியக்கார மாமா குரல்.

    நான்தான் மாமா சாம்பமூர்த்தி...

    சாம்பமூர்த்தியா...? காவலுக்கு கிளம்பிட்டியா?

    ஆமா... மாமா...

    உனக்கேண்டா இந்த தலையெழுத்து...? பெரிய பண்ணைக்கு ரெண்டாவது மகனா பொறந்துட்டு - பஞ்சு மெத்தையில படுத்து தூங்கறதை விட்டுட்டு - இப்படி பண்ணையாள் மாதிரி டார்ச்சையும் கம்பையும் தூக்கிட்டு அலையறே...?

    மணியக்கார மாமா சொல்ல - சாம்பமூர்த்தி டார்ச் வெளிச்சத்தோடு அவரை நெருங்கினான். கதிர் பத்து நாளா திருட்டு போகுது மாமா... நம்ம சோமய்யா நாலைஞ்சு நாள் காவலுக்கு இருந்து பார்த்தான். அவனால் கண்டு பிடிக்க முடியலை… அதான் நான் ரெண்டு நாளா போயிட்டிருக்கேன்...

    வெளைஞ்ச கதிர் மேல கையை வெக்கிற அளவுக்கு நம்ம கிராமத்துல எவனுக்கு துணிச்சல் இருக்கு?

    ஊர் முன்ன மாதிரி இல்லே மாமா... ரொம்ப கெட்டுப் போச்சு... ஆமா நீங்க எங்கே இந்த ராத்திரிக் குளிர்ல கிளம்பிட்டீங்க...?

    இடது கையில் வைத்திருந்த நீர் நிரம்பின அலுமினியச் சொம்பை உயர்த்திக் காட்டினார் மணியக்காரர்.

    மத்தியானம் ஈரல் குழம்பு நல்லாயிருந்ததுன்னு ராகி களியோடு சேர்த்து ஒரு பிடி பிடிச்சேன். வயித்துக்கு ஒத்துக்கலை. அதான் ஒதுங்கலாம்ன்னு இப்படி வந்தேன்... சரி... சரி... நீ... போ...

    அவர் வலது கையில் அரிக்கேன் விளக்கோடும் இடது கையில் நீர் சொம்போடும் - சோளக் கொல்லைக்குள் நுழைந்தார்.

    சாம்பமூர்த்தி சிரித்துக் கொண்டே - டார்ச் லைட் வெளிச்சத்தை திருப்பிக் கொண்டு நடந்தான். இருட்டின் கறுப்பு நீளமாய் கரைந்து - வரப்பு தெரிந்தது. தூரத்து ஏற்றக் கிணற்றின் மீதும் அருகேயிருந்த வேப்ப மரத்தின் மீதும் வெளிச்சம் சிதறியது.

    மெதுவாய் நடந்து பரணை நெருங்கினான்.

    வலுவான நான்கு இரும்புக் கழிகளின் உதவியால் - கிண்ணென்று நின்றிருந்த பரணின் மேல் தாவி ஏறினான் சாம்பமூர்த்தி. வைக்கோல் பிரி பரப்பப்பட்டிருந்த பரண் முழுவதும் கதகதப்பாய் மெத்தென்று இருந்தது.

    டார்ச்சைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு - சம்மணம் போட்டு உட்கார்ந்தான். சட்டையின் மேல் பாக்கெட்டிலிருந்து சிகரெட் கேஸை உருவி சிகரெட் ஒன்றை உதட்டில் பொருத்திக் கொண்டான்.

    தீக்குச்சியை உரசி - சிகரெட் தலைக்கு தகனம் நடத்திய போது -

    அந்த சத்தம் கேட்டது.

    ‘சர... சர...’

    சாம்பமூர்த்தியின் முகம் மலர்ந்தது.

    செண்பகம் வந்துட்டியா?

    புகையை ஆழமாய் இழுத்துக் கொண்டே திரும்பி உட்கார்ந்தான் சாம்பமூர்த்தி. அவனுக்கு இடது பக்க சோளப் பயிர்கள் மெல்ல அசைந்தது.

    கழுதை! ரொம்ப நேரமா வந்து காத்திட்டிருக்கியா... வா... வா... சட்டு புட்டுன்னு வெளியே வந்து... பரண் மேலே ஏறு... சொல்லிக் கொண்டே டார்ச் வெளிச்சத்தை அவள் மேல் திருப்பினான் சாம்பமூர்த்தி. பயிர்களுக்கு மத்தியிலிருந்து - அந்தப் பெண் வெளியே வந்தாள்.

    அழகாக இருந்தாள்.

    கிராமப்புறத்து பெண்களுக்கே உரித்தான கறுப்பு நிறமும் உடம்புக் கட்டும் பொருந்தி திம்சுக்கட்டை மாதிரி கிண்ணென்று இருந்தாள்.

    எத்தினி நேரமா வந்து காத்திட்டிருக்கேன்...? நீங்க என்னடான்னா... மாமியார் வூட்டுக்கு போற மாதிரி சாவகாசமா வர்றீங்க...

    மொதல்ல... பரண் மேல ஏறு... அப்புறமா வந்து கோவிச்சுக்குவியாம்... சொல்லிக் கொண்டே கையை கீழே நீட்டினான் சாம்பமூர்த்தி. அவள் அவன் கைகளைப் பற்றிக் கொண்டே ஊஞ்சலாடியபடி மேலே ஏறினாள்.

    மேலே ஏற ஏறவே –

    அவளை தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டான்.

    அம்... அம்மாடி... என்ன கனம்...?

    பேச்சை மாத்தாதீங்க...? ஏன் லேட்டு?

    எங்கப்பா... காவலுக்கு... போக வேண்டாம்ன்னு சொல்லிட்டார்...

    அப்புறம்? அவள் அவனோடு ஒண்டிக் கொண்டாள்.

    அப்புறமென்ன? போய்த்தான் தீருவேன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு டார்ச் லைட்டை எடுத்துகிட்டு வந்துட்டேன்...

    அவர் பின்னாடி வந்துட மாட்டாரா?

    வரமாட்டார்... ஆமா நீ வந்து ரொம்ப நேரமாச்சா?

    டூரிங் டாக்கீஸ்ல பாட்டுச்சத்தம் நின்னதும் நான் வந்துட்டேன். வீட்ல அண்ணன் குடிச்சுட்டு வந்து நல்லா தூங்கிட்டிருக்கார். நான் வீட்டை பூட்டிகிட்டு வந்துட்டேன்...

    சரி... பக்கத்துல வா...

    மொதல்ல இந்த சிகரெட்டை எறிங்க...

    சிகரெட்டை சுண்டினான் சாம்பமூர்த்தி... எறிஞ்சுட்டேன்... போதுமா? செண்பகம் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு பரண்மேல்

    Enjoying the preview?
    Page 1 of 1