Vaa Arugil Vaa and Kagitha Ayuthangal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vaa Arugil Vaa and Kagitha Ayuthangal
Related ebooks
Menakavin May Matham and Apuram Anitha! Rating: 0 out of 5 stars0 ratingsRaavana Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5Vinaiya Oru Vidukathai Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5Pagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodu...! Rating: 4 out of 5 stars4/5Rattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Kili Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsMul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Elithu Elithu Kolvathu Elithu Rating: 5 out of 5 stars5/5Moodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThookkumara Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsEram Thedum Vergal and Sharmili Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-II Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Ennaik Kandupidi! and Maranayogam Rating: 0 out of 5 stars0 ratingsIravu Nera Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsMul Gridam and Odum Varai Odu! Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsClydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Magaa Sathi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vaa Arugil Vaa and Kagitha Ayuthangal
0 ratings0 reviews
Book preview
Vaa Arugil Vaa and Kagitha Ayuthangal - Rajeshkumar
எடுக்கப்படும்.
வா அருகில் வா
1
அந்த நள்ளிரவு வேளையில்
வினிதா தன் அருகில் படுத்திருந்த கணவன் மகேந்திரனை உலுப்பினாள்.
என்னங்க...
ம்…
புரண்டு படுத்த மகேந்திரன் கம்பளியை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடியும் மெலிதாக குறட்டைச் சத்தத்தை தொடர்ந்தான்.
என்னங்க... உங்களைத்தாங்க...
இந்த முறை கலவரம் கலந்த குரலில் கூப்பிட்டபடியே சற்று பலமாக அவனை உசுப்பினாள்.
தூக்கத்தில் இருந்து விடுபட விருப்பம் இல்லாமல் கண்ணை மூடியபடியே திரும்பிப் பார்க்காமலே கேட்டான்.
என்ன வினிதா...?
கொஞ்சம் எந்திரிங்க...
எதுக்கு...?
நீங்க எந்திரிச்சாதானே சொல்ல முடியும்...? தூக்கத்தில் உம் உம்ன்னு உம் கொட்டிட்டு திரும்பிப் படுத்துடுவீங்க…
மணி எத்தனை...?
சரியா பனிரெண்டு…
முன்னேதான் பாத்ரூம் போகணும் துணைக்கு வாங்கன்னு தூக்கத்தில் இருக்கறப்போ தொந்தரவு பண்ணுவே... உன் தொந்தரவு தாங்காமதான் நான் அட்டாச்டு பாத்ரூம் கட்டிக் கொடுத்துட்டேனே... போயிட்டுவா
அது இல்லீங்க
பின்னே என்ன...?
காத்துல ஏதோ வாசனை அடிக்கிற மாதிரி இருக்கு…"
வாசனையா...?
கேட்டவன் மூச்சை இழுத்துப் பார்த்து விட்டு தலையை ஆட்டினான்.
எனக்கு ஒண்ணும் தெரியலையே...?
எனக்கு தெரியுது... என்னால் தூங்கக் கூட முடியலை... அந்த வாசனை மூக்கைத் துளைச்சுகிட்டு போய் குடலைப் புரட்டுது...
கொல்லைப் பக்கம் எலி ஏதாவது செத்துக் கிடக்கலாம்... காலைல பார்த்து எடுத்துப் போட்டுடலாம்... இப்போ நடு ராத்திரியில்... நீயும் தூங்காம தூங்கறவனையும் ஏன் தொந்தரவு பண்ணிட்டு இருக்கே...? காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சாதான் நான் ட்யூட்டிக்குப் போக முடியும்... இந்த வாரம் மார்னிங் ஷிப்ட்... ஞாபகம் இருக்கா... இல்லையா...?
சொல்லிக் கொண்டே திரும்பிப் படுத்தவனின் முகத்தைத் திருப்பினாள்.
எலி செத்துக் கிடக்கிற நாத்தம் வேற மாதிரி இருக்கும். இது வேற ஸ்மெல்ங்க...
வினிதா... அது என்னவா இருந்தாத்தான் என்ன...? இப்ப நடு ராத்திரில எதுக்கு இந்த ஆராய்ச்சி...?
அவள் குரல் நடுங்கச் சொன்னாள்.
அதில்லைங்க... எ… எனக்கு... ரொம்ப பயமாயிருக்கு...
அவன் சலிப்போடு எழுந்து உட்கார்ந்தான்.
எது எதுக்கு பயப்படறதுன்னு ஒரு விவஸ்தையே கிடையாதா...?
நான் சொன்னதை அலட்சியம் செய்யாம கொஞ்சம் கவனமா ஸ்மெல் பண்ணிப் பாருங்க...
மகேந்திரன் வினிதாவை முறைத்துப் பார்த்துவிட்டு மூச்சை உள்ளே இழுத்தான்.
இப்போது அவன் நெற்றி சுருங்கியது. ஆமா ஏதோ நெடி
ஒரு மாதிரி மோசமான நெடி
ஆமா...
அது என்ன நெடின்னு ஃபீல் பண்ண முடியுதுங்களா...?
இன்னும் சில விநாடிகள் நெடியை உணர்ந்து பார்த்தவன் மெல்லிய குரலில் சொன்னான். அது ஒரு குறிப்பிட்ட பொருளோட வாசனை கிடையாது வினிதா எல்லாமும் கலந்த மாதிரி ஒரு வாசனை
மட்டமான ஊதுபத்திப் புகை...
வினிதா சொன்னாள்.
"கரெக்ட்.
கூடவே அழுகின பழ வாசனை...
அப்புறம் சாம்பிராணி வாசனை
எல்லாம் கலந்து ஒரு மாதிரி குடலைப் புரட்டுது
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே - அந்த நடுராத்திரி நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வெகு தூரத்தில் ஒரு தெரு நாய் ஊளையிட்டது.
ஊளைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வருவதுபோல் தோன்றியது.
ஸ்மெல் எங்கிருந்து வருதுன்னு நான் பார்த்துட்டு வரட்டுமா...?
கேட்டுக் கொண்டே எழுந்த மகேந்திரளைத் தடுத்தாள்.
வேண்டாங்க…
பின்னே எதுக்காக என்னை எழுப்பினே...?
எனக்கு பயமாயிருந்தது... அதான்
கெட்ட வாசனை அடிக்குது. என்னன்னு பார்த்துட்டு வந்துடலாம்...
வேண்டாங்க
தலையை பலமாய் ஆட்டிய வினிதா சொன்னாள்.
சுடுகாட்டுப் பக்கமா போறப்ப மட்டும்தான் இந்த மாதிரி வாசனை வரும். நீங்க வெளியே போகாதீங்க
அநாவசியமா கற்பனை பண்ணாதே...
இல்லைங்க. நீங்க இப்போ வெளியே போக வேண்டாம். நாய் வேற ஓயாம ஊளையிட்டுட்டே இருக்கு...
தொப்...
வினிதா பயம் இழையோடும் குரலில் சொல்லிக் கொண்டிருந்த விநாடி - சமையலறையிலிருந்து பெரிய சத்தமும் தொடர்ந்து பாத்திரங்கள் உருளும் ஒசையும் கேட்டது.
திடுக்கிட்டு போய் சட்டென்று எழுந்தான் மகேந்திரன்.
என்ன சத்தம்...?
கிச்சன் பக்கமிருந்ததுதான் சத்தம் வந்தது.
பெட் ரூமை விட்டு வெளியே வந்து சமையலறை லைட் சுவிட்சைப் போட்டாள்.
வினிதா அவன் பின்னாலேயே வந்து கலவரப் பார்வையோடு கணவனின் தோளைப் பற்றிக் கொண்டு நின்றாள்.
டம்ளர்கள் சில உருண்டிருக்க - சமையலறைத் திட்டின் மேல் அட்டைக்கரி நிறத்தில் ஒரு பூனை வெளிர் பச்சை நிறக் கண்களால் அவர்களை முறைத்து மெல்ல பின் வாங்கி சுவரோரம் போய் உடல் முடிகள் அத்தனையையும் சிலிர்த்துக் கொண்டு நின்றது.
இந்தப் பூனைதான் ஜன்னல் வழியா வீட்டுக்குள் குதிச்சு பாத்திரங்களைத் தட்டி விட்டிருக்கு...
மகேந்திரன் சொல்ல வினிதா பயத்தில் நடுங்கினாள்.
உடம்பையெல்லாம் விறைச்சிகிட்டு நிக்குதே...?
வெளியே எதையோ பார்த்து பயந்து போய்த்தான் வீட்டுக்குள்ளே குதிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...
வினிதாவுக்குள் வியர்வை சுரப்பிகள் ஓவர் டைம் பார்க்க ஆரம்பித்தன.
மகேந்திரன் அந்தப் பூனையை விரட்டி விட்டு - நடுக்கமாய் நின்றிருந்த வினிதாவை அணைத்தாற்போலக் கூட்டிச் சென்றான்.
வா போய்ப் படுக்கலாம்.
சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் –
தட்... தட்... தட்...
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
மகேந்திரன் நின்றான்.
வினிதா… யாரோ கதவைத் தட்டறாங்க
இந்த நடு ராத்திரியில் யார் வந்திருப்பாங்க...?
தட்... தட்... தட்...
தெரியலையே… காலிங் பெல் இருக்கிறப்போ ஏன் கதவைத் தட்டறாங்க...?
யாருன்னு பார்க்கலாம் வா
வினிதாவிடம் நடுக்கம் அதிகரித்திருந்தது.
ஜன்னல் வழியா எட்டிப் பாருங்க... வெளியே யார் இருந்தாலும்... வீட்டுக்குள்ளிருந்தே பேசி அனுப்பிடுங்க...
மகேந்திரன் முன்னறையை நோக்கிச் சென்றான்.
வாசல் விளக்கின் ஸ்விட்சைப் போட்ட அதே விநாடி மின்சாரம் இறந்து போக -
தார் டிரம்முக்குள் முக்கி எடுத்த மாதிரி அந்த பிரதேசம் அடர்த்தியான இருட்டுக்குப் போனது.
வியர்த்துக் கொட்டிய வினிதா இருதயம் படபடக்க மகேந்திரனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
தட்… தட்... தட்...
அந்த நடுநிசி நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கதவுத் தட்டல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
டார்ச் லைட் எங்கிருக்கு...?
ஷெல்ஃபில்
எடுத்துட்டு வர்றியா...?
ஊஹூம்... நான் உங்களை விட்டுட்டு... நான் போக மாட்டேன்... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
கதவைத் தட்டிட்டே இருக்காங்க… யாருன்னு பார்க்கணுமே...
இங்கிருந்தே யாருன்னு கேளுங்க...
கதவுக்குப் பக்கவாட்டில் இருந்த ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து வெளியே பார்த்தான் - மகேந்திரன்.
கெட்டியான இருட்டில் தெளிவாக எதுவும் அவன் கண்களுக்குக் கிடைக்கவில்லை.
கதவுத் தட்டல் மட்டும் நிற்கவே இல்லை.
மகேந்திரன் உலர்ந்திருந்த தொண்டைக் குழியை ஈரப்படுத்திக் கொண்டு கேட்டான்.
யாரது?
பதிலுக்கு கிணற்றின் ஆழத்தில் இருந்து பேசுவதைப் போல வெளியேயிருந்து ஒரு குரல் வந்தது. முக்கல் முனகலோடு ஒரு வாக்கியம்.
வார்த்தைகள் தெளிவாய்ப் புரியவில்லை.
யாரது…? உங்களுக்கு என்ன வேணும்…?
சற்றே பலமான குரலில் மகேந்திரன் கேட்க - மறுபடியும், பதிலாக அதே தெளிவற்ற குரல்.
மகேந்திரன் வினிதாவைப் பார்த்தான்.
யாரோ வயசான ஆள் மாதிரி தெரியுது... கதவைத் திறந்து பார்த்துடலாம்... உடம்பு சரியில்லையோ என்னவோ... உதவிக்காக நம்ம வீட்டுக் கதவைத் தட்டியிருக்கலாம்...
கதவைத் திறக்கப் போனவனின் உள்ளங்கையைப் பற்றி அழுத்தினாள் வினிதா -
டார்ச் லைட்டை எடுத்துகிட்டு வந்து கதவைத் திறங்க...
இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி நடந்து ஷெல்ஃபைத் தொட்டான் மகேந்திரன். அரை நிமிடத் தேடலுக்குப் பின் -
டார்ச் லைட் கிடைத்தது.
சுவிட்சைத் தள்ளி அதை உயிர்ப்பிக்க முயன்றான்.
பேட்டரி காலாவதியாகியிருக்க - அது பலஹீனமாய்க் கண்ணைச் சிமிட்டியது.
மகேந்திரன் அதை ஷெல்ஃப்லேயே தூக்கி எறிந்தான்.
சமயத்துக்கு எதுவுமே கை கொடுக்காது
என்னங்க...?
பேட்டரி வீக்
சரி வந்து கதவைத் திறந்து பாருங்க
வினிதா சொல்ல மகேந்திரன் வாசல் கதவுக்கு வந்தான்.
தாழ்ப்பாளை மெல்ல விலக்கினான்.
வாசல்புற - இருட்டில் மசமசப்பாய் யாரோ நின்றிருந்தார்கள்.
அந்த உருவத்தைப் பார்த்ததுமே மகேந்திரனின் உச்சந்தலை துவங்கி உள்ளங்கால் வரை விர்ர்ர்ரென்று ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது.
இவர்... இவர்...
நாலைந்து வருஷங்களுக்கு முன்னால் செத்துப் போன குமாரராஜா.
புகை மாதிரி எதிரே நின்றிருந்தார்.
மட்டமான ஊதுபத்தி வாசனை சாம்பிராணி நெடியுடன் கலந்து தீவிரமாய் அவரிடமிருந்து பரவிக் கொண்டிருந்தது.
2
அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராட்சஸ இரைச்சலோடு ஸ்டேஷனுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்க – பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களை எடுத்து வைத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.
எஸ்-5 கம்பார்ட்மென்ட்டில் இருந்தாள் ஆஷிகா. பர்ப்பிள் நிறத்தில் தொள தொள டி.சர்ட்டும் கறுப்பில் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். தோள்வரை நின்றிருந்த கூந்தல் காற்றில் பறந்தது.
ஹேண்ட் பேகைத் தோளில் மாட்டிக் கொண்டவள் - பெரிய சூட்கேஸை வலது கைக்கு கொடுத்து எடுத்துக் கொண்டாள்.
ரயில் கம்பார்ட்மெண்ட்கள் ஏர் பிரேக்கின் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே கிறீச்சென்று அலறியபடி இயக்கங்களைப் படிப்படியாய் நிறுத்திக்