Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaikarai Nila
Vaikarai Nila
Vaikarai Nila
Ebook136 pages42 minutes

Vaikarai Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vaikarai Nila

Read more from Rajeshkumar

Related to Vaikarai Nila

Related ebooks

Related categories

Reviews for Vaikarai Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaikarai Nila - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    பூஜை அறையிலிருந்து வெளிப் பட்டாள் பாக்யா.

    கையில் கற்பூர ஆரத்தி தட்டு.

    உடம்பு - நாற்பத்தியாறு வயதைத் தொட்டிருந்தாலும், இளமையை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. தலை கொள்ளாத கேசத்தில் ஒரு முடிவாவது நரைக்கு கட்சி மாற வேண்டுமே...? கத்தரிப் பூ நிற பட்டுப் புடவை, வைர மூக்குத்தி, நெற்றியில் ஒரிஜினல் குங்குமப் பொட்டு, முடிச்சிட்ட வேகத்தில் சின்னதாய் ஒரு மல்லிகைச்சரம். ஏதோ ஒரு ஸ்லோகத்தை முணுமுணுக்கும் உதடுகள்.

    யாதேவீ! ஸர்வ பூதேஷி லட்சுமி ரூபேண ஸமஸ்தித்தா! நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம!

    அம்மா...!

    குரல் கேட்டு திரும்பினாள் பாக்யா.

    மகன் வைகுந்த் பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். ஃபுல்சூட் தரித்து உயரமாய் தெரிந்த மகனை பெருமையோடு பார்த்தாள் பாக்யா.

    என்னடா இப்பவே ஆபீஸுக்கு கிளம்பிட்டே?

    இன்னைக்கு எங்க கம்பெனி எம்.டி. ஃபாரின்லிருந்து வர்றாரும்மா... நான் ஏர்ஃபோர்ட் போய் அவரை ரிஸீவ் பண்ணனும். நேத்து ராத்திரியே உன்கிட்டே சொல்லியிருந்தேனே...?

    ஆமா... சொன்னே... நான்தான் மறந்துட்டேன்...! சரி... பூட்ஸை கழட்டி வெச்சுட்டு நெத்திக்கு பிரசாதம் இட்டுக்கோ...

    அய்யோ... அம்மா... எனக்கு நேரமாச்சு

    ஏண்டா... எல்லா காரியத்துக்கும் நேரம் இருக்கும். நெத்தியில பிரசாதம் இட்டுக்கிறதுக்கு மட்டும் நேரம் இருக்காதா...? கழட்டுடா பூட்ஸை...

    'நீ விடமாட்டியே...?

    ஷூக்களை கழற்றினான் வைகுந்த்.

    பாக்யா அவனுடைய நெற்றிக்கு பிரசாதம் இட்டாள். டிபன் சாப்பிட்டியா...?

    ம்...

    எவ்வளவு இட்லி...?

    நாலு...

    ஊ...ஹ...ம்... போதாது... வா... இன்னும் நான்கு சாப்பிடுவியாம்...

    அய்யோ... அம்மா... சாவகாசமா உட்கார்ந்து இட்லி சாப்பிடறதுக்கெல்லாம் நேரமில்லை... நான் உடனே கிளம்பியாகணும்... பரபரவென்று மறுபடியும் ஷக்களை மாட்டிக் கொண்டான்.

    மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுவியா...?

    ம்... பார்க்கலாம்...

    என்னடா பார்க்கலாம்னு... சொல்றே... இன்னிக்கு மகாலட்சுமி விரதம். மத்தியானச் சாப்பாட்டுக்கு நீ கண்டிப்பா வரணும்...

    சரி... சரி... வர்றேன்...

    எதிர் அறையிலிருந்து குரல் கொடுத்தபடியே வெளிப்பட்டார் சக்ரபாணி. பாக்யாவின் ஐம்பத்திரண்டு வயது கணவர்.

    ஆபீஸுக்கு புறப்பட்டு போறவனை நிறுத்தி வெச்சுகிட்டு ஏண்டி இப்படி படுத்தறே...? டேய்... வைகுந்த் நீ கிளம்புடா...

    வைகுந்த் பைக் சாவியோடு வெளியே விரைந்தான்.

    பாக்யா கணவனை ஏறிட்டாள்.

    இந்த கற்பூரத் தட்டை பிடிங்க...

    எதுக்கு...?

    பிடிங்க சொல்றேன்... அவர் வாங்கிக் கொண்டார்.

    அப்படி கிழக்கே திரும்பி நில்லுங்க...

    நின்றார்.

    ஊ...ஹு...ம்... இப்படியில்லை... இன்னும் நேரா பார்த்து நில்லுங்க...

    ஏண்டி... என்னை இப்படி ட்ரில் வாங்கறே...?

    சொன்ன மாதிரி நில்லுங்க...

    நின்னுட்டேன்...! சரியா...?

    ரொம்பச் சரி...

    சொன்னவள் சக்ரபாணியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். எழுந்தாள்.

    உங்க கையால கொஞ்சுண்டு குங்குமத்தை எடுத்து என் நெற்றி வகிட்டில் வெச்சுடுங்கோ...

    குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துவிட்டு, பாக்யாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார் சக்ரபாணி.

    பாக்யா வெட்கித்தாள்.

    எதற்கு அப்படி பாக்கறீங்க... புதுசா கல்யாணம் பண்ணிகிட்டவர் மாதிரி...?

    பாக்யா...

    ம்...

    உன்னை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு...

    எதுக்காக ஆச்சர்யப்படறீங்க...?

    எப்படி ஒவ்வொரு விரதத்தையும் ஞாபகம் வெச்சுகிட்டு, ஸ்லோகமெல்லாம் சொல்லி - பூஜை புனஸ்காரம் பண்றே...?

    செய்யணும்னு நினைச்சா... எதையும் செய்யலாம்...

    பூஜை பண்ணும்போது நீ சொல்ற ஸ்லோகமெல்லாம் சம்ஸ்க்ருதம்தானே...?

    ஆமா...

    அந்த ஸ்லோகத்துக்கெல்லாம் உனக்கு அர்த்தம் தெரியுமா...?

    தெரியாமலா சொல்வாங்க...

    கொஞ்ச நேரத்துக்கு முந்தி பூஜை ரூமிலிருந்து வெளியே வர்றப்ப ஒரு ஸ்லோகம் சொன்னியே...? அதுக்கு என்ன அர்த்தம் சொல்லு பார்க்கலாம்...? யாதேவி ஸர்வ பூதேவி... இந்த ஸ்லோகத்தைத்தானே சொல்றீங்க...?

    ஆமா...

    அது ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தில் ஒண்ணு. அந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் இதுதான்! எந்த தேவியானவள் எல்லா உயிர்களிலும் மங்கள நாயகியாய் திருமகளாய் விளங்குகின்றாளோ... அந்த மகாலட்சுமியை வணங்குகிறேன் நான்...

    சக்ரபாணி சிரித்தார்.

    பேசாம நீ கதாகாலட்சேபம் பண்ணப் போயிடலாம்...

    நீங்க மிருதங்கம் வாசிக்க தயார்னா... நானும் கதாகாலட்சேபம் பண்ணத் தயார்...

    இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போதே...

    அய்யா...!

    வாசலினின்று அந்தப் பெண் குரல் கேட்டது. இருவரும் திரும்பினார்கள். அந்த நடுத்தர வயதுப் பெண் கண்களில் கனத்துநின்ற நீரோடு கைகளை கூப்பியபடி நின்றிருந்தாள்.

    சக்ரபாணி அந்தப் பெண்ணை நோக்கிப் போனார்.

    யாரம்மா... நீ...?

    அய்யா...!

    குரல் தழுதழுக்க - சட்டென்று சக்ரபாணியின் கால்களில் விழுந்துவிட்டாள் அந்தப் பெண்.

    அடேடே... எந்திரிம்மா! விபரம் என்னன்னு சொல்லாம கால்ல விழுந்தா... என்ன அர்த்தம்...? நீ யாரு... அதைச் சொல்லு முதல்ல...

    அந்தப் பெண் எழுந்து சேலைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டபடி சொன்னாள்.

    நான் சியாமளாவோட அம்மா.

    எந்த சியாமளா...?

    உங்கள் கம்பெனியில் டைப்பிஸ்ட்டா வேலை பார்க்குதே அந்த சியாமளாவோட அம்மா...

    சக்ரபாணியின் முகம் 'திடும்'

    Enjoying the preview?
    Page 1 of 1