Eppadi Solvenadi
By R.Sumathi
4.5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Puthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Vaazhnthaal Unthan Madiyil Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Malarkal Rating: 5 out of 5 stars5/5
Related to Eppadi Solvenadi
Related ebooks
Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Thoduvaanam Thodum Dhooram Rating: 4 out of 5 stars4/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Ullam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Azhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Aaruyire Mannipaaya Rating: 0 out of 5 stars0 ratingsNeeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Velicha Poove Vaa Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Devathai Rating: 0 out of 5 stars0 ratingsEn Mel Vizhuntha Mazhai Thuliye Rating: 0 out of 5 stars0 ratingsNee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kaadhal Ennai Kaadhal Seiya... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhale...! Kaadhale...!! Rating: 0 out of 5 stars0 ratingsThen Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Eppadi Solvenadi
3 ratings0 reviews
Book preview
Eppadi Solvenadi - R.Sumathi
16
1
கல்லூரியின் மணியோசை இனிமையாக ஒலித்தது. பேராசிரியை புத்தகத்தை மூடினார். மாணவ, மாணவிகள் எழுந்து நன்றி சொன்னதும் அதை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
வகுப்பே ‘சுந்தரவனம்’ போன்றிருந்தது. எல்லாம் சுடிதார் சுந்தரிகள். ஒற்றைப் பின்னல், இரட்டைப் பின்னல், ஒருங்கிணைத்துக் கட்டிய குதிரைவால், ஒரேயடியாக விரித்துவிட்ட கூந்தல் என விதவிதமான சிகையலங்காரம்.
எளிமையாக நகையலங்காரம். கட்டழகு சிலைகள் கல்வி கற்ற களைப்பில் புத்தகங்களைப் பொறுக்கினர் புறப்படுவதற்காக.
கவர்ச்சியான தன் அழகை இந்தக் கலியுகம் பார்த்து விடக்கூடாது என்பதைப் போல் புத்தகத்தை நெஞ்சில் கவிழ்த்தபடி தன் வகுப்பை விட்டு வெளியே வந்தாள் மான்சி.
கடைசி எழுத்தை எடுத்துவிடலாம் என்ற ஆசை வரும்படி மான் போலவேயிருந்தாள். மான்விழிகளில் தேன் கலந்த இதழ்கள். ஆண்மகனைப் பின்னால் சுற்ற வைக்கும் அழகு.
விழிகளால் யாரையோ தேடினாள். அதற்கு விடைபோல் வந்தாள் வேணி. ஏணியைப் போல் சற்று கூடுதல் உயரம். இன்னும் கொஞ்சம் சதைபோட்டிருக்கலாம் என இளைஞர்கள் கவலைப்படும் உடல்வாகு. மான்சிக்கு அருகில் வந்து நின்று அவளுக்கு மதிப்பெண்ணை அதிகமாக்கினாள்.
என்னடி பின் பெஞ்சுல உட்கார்ந்து நல்லாத் தூங்கிட்டியா? பெல் அடிச்சு எவ்வளவு நேரமாகுது. ஆடி அசைஞ்சு வர்றே? இப்படி வந்தா பஸ் போய்டும்
என்று அழகு விழிகளை கோபத்திற்கு பழக்கினாள் மான்சி.
மான்சி, நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீ கிளம்பு. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு.
வேணி அவளுடன் நடந்தபடியே சொன்னாள்.
ஏன்? லைப்ரரிக்கு போறியா?
இல்லை. ஆமா...
ஏன் பொய் சொல்றே? பிரபுகூட எங்காவது போறியா?
- வேணியின் முகத்தில் வெட்கம் தற்காலிகமாகத் தோன்றி மறைந்தது.
ஆமா! வெளியில ஹோட்டலுக்குப் போய் டிபன் சாபிட்டுட்டு போகலாம்னு...
வேணி... சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்தக் காதல் கண்றாவியெல்லாம் வேண்டாம்... விட்டு விடு.
விளையாடற வயசுல விவேகானந்தர் மாதிரி பேசாதே. காதலிக்கற பருவம் இதுதான்! இந்த வயசுல காதலிக்காம வேற எப்போ காதலிக்கறதாம்?
நீ சொல்றது சரிதான். ஆனா... காதலிச்சா மட்டும் போதாது. அதுல ஜெயிக்கணும். அப்பத்தான் வாழ்க்கை சந்தோஷமாயிருக்கும். ஒருவேளை தோத்துப் போய்ட்டா அதைத் தாங்கிக்கற பக்குவமும், தைரியமும் வேணும். அப்படியே பக்குவமும் தைரியமும் இருந்தாலும் தோற்றுப் போன காதல் ஒரு மூலைல இருந்துக்கிட்டு காலம் முழுவதும் ஒரு வேதனையையும், உறுத்தலையும் தந்துக்கிட்டுதானேயிருக்கும்?
உனக்கு எப்பவுமே நெகட்டிவ் சிந்தனைதான். நல்லதே நினைக்கமாட்டியா?
வேணியின் முகத்தில் எரிச்சல் படர்ந்தது.
காலம் அப்படியிருக்கு வேணி. காதல்ங்கறது ஒரு வாழ்க்கைங்கறது போய் இப்போ அது ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆயிட்டு.
அப்போ... நானும் பொழுதுபோக்கா காதலிக்கிறேன்னு சொல்ல வர்றியா?
ச்சே! நான் அப்படியெல்லாம் சொல்லலை. இந்தக் காலத்து ஆண்கள் மேல நம்பிக்கை குறைஞ்சுட்டு. பசங்க சரியில்லை.
இருவரும் காலேஜ் வாசலுக்கு வந்துவிட்டனர்.
அப்படின்னா... பிரபு சரியில்லைன்னு சொல்றியா? அவனைக் கெட்டவன்னு நினைக்கறியா?
இல்லை. ஆனா... அவன் காலேஜ்ல உன்கூட பழக்கமானதிலிருந்துதான் உனக்குத் தெரியும். அவன் பெங்களூர்லயிருந்து இங்க வந்து தங்கிப் படிக்கிறான். அவன் எப்படி, குடும்பம் எப்படின்னு எதுவுமே தெரியாம நீ அவனைக் காதலிக்கிறியே...
இதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் வேணி. சிரிப்பில் அதிக அளவில் இருந்தது அலட்சியம்தான்.
நீ சொல்றதைப் பார்த்தா குலம் கோத்திரமெல்லாம் பார்த்து ஜாதகம் பார்த்து சரியாயிருந்தா மட்டும் காதலிக்கச் சொல்வே போலிருக்கே? இது காதல்டி. கல்யாணம் இல்லை.
அதனாலதான் சொல்றேன். குலம் கோத்ரம், ஜாதகம் பார்த்து ஆயிரம் பேர் சாட்சியா நின்னு நடத்தற கல்யாணமே இப்பவெல்லாம் சரியாயிருக்கறதில்லை. இந்த லட்சணத்துல எங்கயிருந்தோ படிக்க வந்தவனை நீ விரும்பறது ஏனோ எனக்கு சரியாப்படலை. இந்தக் காலத்துல நாளைய வாழ்க்கைக்கு சம்பாதிச்சு வச்சுக்கிட்டாத்தான் பாதுகாப்பு. வாழ்க்கையில ஒவ்வொரு விஷயத்திலேயும் பாதுகாப்பா இருக்க வேண்டியது முக்கியம். இந்த வயசுல மனசை செலவு பண்ணாம சேமிச்சு அப்படியே வச்சிடணும். அப்பத்தான் கல்யாண வாழ்க்கை பாதுகாப்பாயிருக்கும்.
அப்படின்னா நீ யாரையுமே காதலிக்க மாட்டியா?
நோ. யாரையும் காதலிக்க மாட்டேன். வாழ்க்கையை சந்தோஷமா வாழணும்னு நினைக்கிற யாரும் காதல் வலையில விழ மாட்டாங்க. நானும் அப்படித்தான். நிறைய படிக்கணும். அம்மா பார்த்து வைக்கற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கணும். சந்தோஷமா வாழ்க்கை நடத்தணும். டென்ஷன் இல்லாம வாழ்க்கை போகணும்.
வேணி வேண்டுமென்றே பெரிதாக சிரித்தாள்.
இப்படி சொன்ன எத்தனை பேரை பார்த்திருக்கேன்? நீ மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன? ‘விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே’ன்னு ஒருநாள் எவன் கூடவாவது டூயட் பாடப்போறே பாரு.
அதெல்லாம் நிச்சயமா நடக்காது.
உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா ஆளைக் கவிழ்க்கறமாதிரியான இந்த அழகுமேல நம்பிக்கை இல்லை. என் அழகிலேயே ஒருத்தன் மயங்கி என்னைக் காதலிக்கும்போது ஆண் உலகம் உன்னை சும்மாவிடுமா? இப்போதே எத்தனை பேர் கனவை நீ ஆக்ரமிச்சுட்டிருக்கியோ? எத்தனை பேர் ‘சொல்லாமலே...’ ஸ்டைல்ல காதலிக்கிறான்களோ?
வேணி சிரிப்பை சீரியல் போல் இழுத்துக் கொண்டே போக மான்சி கையமர்த்தினாள்.
போதும். உன் பிரபு பொறுத்திருந்து பார்த்துட்டு ‘தாவணி போனா சல்வார் உள்ளதடா’ ஸ்டைல்ல வேற எவ பின்னாடியாவது போய்டப்போறான். சீக்கிரம் போய் அவன் தாவக்காட்டியும் தடுத்து நிறுத்து.
நீ என் பிரபுவை ரொம்ப அலட்சியப்படுத்தறே. உன்னை...
அவள் போலியாக அடிக்க வர - விலகி சிரித்தாள்.
உனக்கு வேணா காதலனே கண்கண்ட தெய்வமாயிருக்கலாம். ஆனா... எனக்கு அப்படியில்லை.
அவர்கள் பேசிக் கொண்டே கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது வேணிக்காக தயாராக தன் பைக்கில் அமர்ந்திருந்த