Inimai Ninaiuvgal Thodarattume
By R.Sumathi
4/5
()
About this ebook
Read more from R.Sumathi
Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsAnbirkkup Panjamillai Rating: 5 out of 5 stars5/5Karpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Vantha Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Kanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5Naan Pesa Ninaippathellaam Rating: 5 out of 5 stars5/5
Related to Inimai Ninaiuvgal Thodarattume
Related ebooks
Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsOru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5Oru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5En Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsPenalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsNilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Sarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNindru Kollum Rating: 4 out of 5 stars4/5Tholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Thunaiyiruppaal Durga Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Un Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Inimai Ninaiuvgal Thodarattume
1 rating0 reviews
Book preview
Inimai Ninaiuvgal Thodarattume - R.Sumathi
16
1
"அம்மு... அம்முக்குட்டி... எழுந்திரிடா கண்ணு. ஸ்கூலுக்குப் போணும்ல. நேரமாகுது பாரு எழுந்திரிடா செல்லம்."
போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இன்னும் சுருண்டாள் அம்மு என்று அழைக்கப்பட்ட மஞ்சு.
சுனிதா கொஞ்சிக் கொஞ்சி அழைத்தும் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை மஞ்சு.
அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மஞ்சு. உறங்கும் நிலையில் ஒரு தெய்வீக அழகு குடி கொண்டிருந்த அந்த பிஞ்சு முகத்தைப் பார்க்க பார்க்க இதயம் நெகிழ்ந்தது. அந்த தெய்வீக உறக்கத்தைக் கலைக்க மனம் வரவில்லைதான். அப்படியே அருகில் அமர்ந்து அந்த அழகை ரசித்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது.
கலைந்து கிடக்கும் கூந்தலை வருடி கன்னங்களில் முத்தமிட்டு ‘காலமிது... காலமிது... கண்ணுறங்கு மகளே...
காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...’ என்று பாட வேண்டும் போல்தான் ஆசையாயிருந்தது.
எப்படி பாட முடியும்? எட்டு மணிக்கெல்லாம் ஸ்கூல் பஸ் டாண் என்று வாசலில் வந்து நின்று விடுமே.
அதற்குள் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி கணவனை வேலைக்கு அனுப்பி அவளும் வேலைக்கு சென்றாக வேண்டும்.
காத்திருக்கும் கடமைகள் ஒரு உலுக்கு உலுக்க தன் ஆசையை உதறிவிட்டு ஒரு அதட்டு அதட்டினாள்.
என்னம்மா... நீ. கொஞ்ச நேரம் தூங்க விடேன்.
என்னது? கொஞ்ச நேரமா? ஸ்கூல் போக வேண்டாமா? எழுந்திரு...
ஒருவழியாக அவளை எழுப்பி குளியலறைக்குள் கொண்டு விட்டுவிட்டு சமையலறைக்கு வந்தாள்.
வசந்தன் வெண்டைக்காயை பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டிருந்தான்.
என்ன எழுந்துட்டாளா?
என்றபடியே காய் நறுக்குவதைத் தொடர்ந்தான்.
உங்க சீமந்த புத்திரியை எழுப்பி குளிக்க அனுப்பக்காட்டியும் போதும் போதும்னு ஆயிட்டு. உங்களையும் அவளையும் கிளப்பி அனுப்பிவிட்டு நானும் வேலைக்கு போகக்காட்டியும் போதும் போதும்னு ஆயிடுது.
ஏன் வேலைக்குப் போறே? விட்டுடேன்.
ஏன் விட்டுட்டு முழுநேர வேலைக்காரியா உங்களுக்கு இருக்கணுமா?
சீறினாள்.
ரொம்ப அலுத்துக்காதே. உனக்கு காய் வெட்டிக் கொடுத்து கூட மாட வேலை செய்யறேன் பாரு... என்னை சொல்லணும். மகாராணியம்மாவுக்கு காலையில பெட் காபி கொடுத்து எவன் எழுப்புவான்? அக்கம் பக்கம் பாரு...
உண்மைதான்!
முதலில் அலாரம் வைத்து அந்த வீட்டில் எழுபவன் அவன்தான். ஐந்து மணிக்கே எழுபவன் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு அவளுக்கும் தனக்குமாக காபி போட்டு எடுத்து கொண்டு வந்து எழுப்புவான். பல்துலக்கி விட்டு அந்த காபியை பருகும்போது அது விடியற்காலையில் கிடைத்த ஒரு சொர்க்கம் போலிருக்கும்.
அந்த காபியும் கணவர் தந்த அன்பும் கலந்து உண்டான புத்துணர்வுடன் அன்றைய வேலைகளை செய்யத் தொடங்குவாள். வசந்தனுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்துடன் உத்யோகம்.
நிறுவனம் தந்த வீடு, இதர வசதிகள், நிறைவான வாழ்க்கை.
எல்லாவகையிலும் வசந்தன் அவளுக்கு உதவியாக இருப்பான். ஆணாதிக்க உணர்வோ எந்த ஈகோவோ இல்லாமல் ஒரு நண்பனைப் போல் துணையாயிருப்பான். அதனால்தான் அவளாலும் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்க்க முடிகிறது.
என்ன முறைக்கிறே?
அவளுடைய சிந்தனையை உலுக்கினான். அவனருகே வந்தவள் செல்லமாக அவனுடைய கேசத்தை கலைத்து சிரித்தாள்.
உண்மைதான். உங்களை கணவனா அடைய நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.
இரு கைகளாலும் அவனுடைய முகத்தை தாங்கி நெற்றியில் முத்தமிட்டாள். முத்தம் தர்றதுதான் தர்றே... அதை நெற்றியிலதான் கொடுக்கணுமா? உதடுன்னு ஒண்ணு இருக்கே? அதை மறந்துடுவியே...
ச்சை! ஆசையைப் பாரு.
என செல்லமாகக் குட்டியவளை கையிலிருந்த காய்கறிகளையும் கத்தியையும் போட்டுவிட்டு இடுப்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அய்யோ... என்னங்க இது? பொண்ணு குளிச்சுக்கிட்டிருக்கா.
குளிச்சிக்கிட்டுத்தானே இருக்கா. அவ குளிச்சுட்டு வர அரைமணி நேரமாகும். அதுக்குள்ள...
அவன் மோகத்தை அதிகப்படுத்த...
கையில என்ன இருக்குப் பாருங்க....
என அவன் போட்ட கத்தியை கையிலெடுத்துக் கொண்டாள்.
அடிப்பாவி... என்னமோ அடுத்த வீட்டுக்காரன் தொட்ட மாதிரி கத்தியை கையில எடுக்கறே...
என்றான்.
கண்ட கண்ட வேளையில தொட்டா கட்டியவனாயிருந்தாலும் கத்திதான் வரும்.
அம்மா... என்ன கத்தி கித்திங்கிறே...
என்றபடி குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள் மஞ்சு.
அவசரமாக கணவனிடமிருந்து விலகிய சுனிதா அது... ஒண்ணுமில்லைடா... காலையில காட்டியும் உங்கப்பா ரொம்ப கத்தி பேசறார். அதான்... கொஞ்சம் மெதுவாப் பேசுங்கன்னு திட்டினேன்.
சமாளித்தபடி அவன் வெட்டி வைத்திருந்த காய்கறியை எடுத்து எண்ணெய் சட்டியில் போட்டு வதக்கத் தொடங்கினாள்.
மஞ்சு ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி.
படிப்பில் படு சுட்டி. படிப்பு மட்டுமல்ல விளையாட்டு, பாட்டு, டான்ஸ் என எல்லாவற்றிலும் முதல்தான். இருவரின் அன்பிற்கும் பாத்திரமான ஒரே செல்ல மகள்.
கணவனின் செயலுக்கு ரகசியமாக முறைப்பும் எச்சரிக்கையும் விடுத்துவிட்டு அவசர அவசரமாக வேலைகளில் இறங்கினாள்.
சமையல், சிற்றுண்டி என எல்லாவற்றையும் முடித்துவிட்டு நிமிர்ந்தபோது...
வசந்தன் அலுவலகத்திற்கு தயாராகி விட்டான்.
அம்மா... ஜடை கட்டிவிடு
கலைந்த கூந்தலுடன் வந்து நின்றாள் மஞ்சு.
உனக்கு எத்தனை தடவை சொல்றது? எண்ணெய் தடவி சீவி சிக்கெடுத்துக்கிட்டு வந்தாத்தான் தலை பின்னி விடுவேன்னு. அவசர அவசரமா வேலைக்கு கிளம்பும்போது இப்படி பேய் மாதிரி தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு வந்து நின்னா... கோபமா வருது... பேசாம முடியை வெட்டிக்க.
ஏன்... மொட்டையே அடிச்சுக்கறேனே..!
மஞ்சு கோபமாக சீறினாள்.
அடிச்சுக்கயேன். ரொம்ப அழகாயிருக்கும்.
அப்பா... பாருங்கப்பா இந்த அம்மாவை...
உங்கம்மாவை அடிச்சுக்க சொல்லு. உன்னைவிட அவளுக்கு ரொம்ப அழகாயிருக்கும்.
வசந்தன் சட்டைக்கு பட்டனைப் போட்டவாறே வந்து கிண்டலடித்தான்.
உங்களை...
அவனை செல்லமாக அடித்தாள்.
மஞ்சு பெரிதாக சிரித்தாள்.
என்னம்மா... பொண்டாட்டிக்கிட்டே அடி வாங்கறேனேன்னு பார்த்து சிரிக்கிறியா?
"இல்லப்பா அம்மா மொட்டையாயிருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன். சிரிப்பு வந்துட்டு. அதிலும் ரெண்டு பேரும் ஜோடியா வெளியில போனா எப்படியிருக்கும்னு நினைச்சேன். சிரிப்பு தாங்க