Kanavile Vanthu Nilladi
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Sinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsOruvar Manathil Oruvaradi Rating: 0 out of 5 stars0 ratingsKaaththiruppen Kanna Rating: 0 out of 5 stars0 ratingsNilavukkum Niramundu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavile Vanthu Nilladi
Related ebooks
Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPadigal Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Thulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Uthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsMarainthu Vidathey Maya Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsEn Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Neeyadi Penney! Rating: 0 out of 5 stars0 ratingsKanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsAthu veru Mazhaikkalam Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsIrubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsUllamellam Thalladuthey! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavile Vanthu Nilladi
1 rating0 reviews
Book preview
Kanavile Vanthu Nilladi - R.Sumathi
13
1
"உன்னையெல்லாம் பெத்ததுக்கு ஒரு கருங்கல்லை பெத்து போட்டிருக்கலாம். படிச்சு படிச்சு சொன்னேன். புத்தியில ஏறினாத் தானே. வெட்கமாயில்லை? என் முன்னாடி நிக்காதே. என்னை அவமானப்படுத்திட்டேயில்லை? என்னை தலைகுனிய வச்சுட்டேயில்லை? அந்த கோகிலா என்னைப் பார்த்து சிரிக்கும்படி செய்திட்டேயில்லை? இனிமே உன் விஷயத்துல தலையிட்டேனா பாரு. எக்கேடாவது கெட்டுப்போ."
கூடத்தில் மணிமேகலை கத்துவது அந்த வீட்டையே கிடுகிடுக்க வைத்தது.
அவளுக்கு எதிரே ராணி தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்.
கண்கள் சிவந்து ததும்பிக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாக மேஜைக்கு இருபுறமும் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஜான்சியும், இந்திராவும் விழிகளில் மிரட்சி தெரிய பார்த்துக் கொண்டிருந்தனர்.
அம்மாவின் முகத்தை பார்க்கவே பயமாயிருந்தது.
"உனக்கு ராணின்னு ஏன் பெயர் வச்சேன் தெரியுமா? நீ ராணிமாதிரி இருக்கணும். மத்தவங்களுக்கு தலைவியா இருக்கணும். எல்லாத்திலேயும் சிறந்தவளாயிருக்கணும்னு கனவு கண்டேன். அந்த கனவை ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டேயிருந்தேன். ஆனா... ஆனா நீ இப்படி மார்க் வாங்கியிருக்கே...
அந்த கோகிலா யாரு? என்னை மாதிரி படிச்சவளா? என்ன தெரியும் அவளுக்கு? தன் பொண்ணு என்ன படிக்கிறாள்னு கூட அவளுக்குத் தெரியாது. ஆனா... நான் ஒவ்வொரு எழுத்தையும் உனக்கு கத்து கொடுத்தவள். ராவும் பகலும் கண்ணுல தூக்கம் இழந்து உன் பக்கத்துல இருந்து ஒவ்வொண்ணையும் சொல்லிக் கொடுத்தவள். பொம்பளைப் பிள்ளைதானேன்னு என்னைக்காவது உங்களை அலட்சியப்படுத்தியிருக்கேனா? ஒரு வார்த்தை இளக்காரமா பேசியிருக்கேனா? ஆண் பிள்ளைகளுக்கு மேல வரணும்னு தானே லட்சியத்தோட வளர்த்தேன். பொம்பளை பிள்ளைக்கிட்டே தோத்துட்டு வந்து நிக்கறியே. பத்து மார்க். பத்தே மார்க். எப்படி உன்ன விட அவ கூட வாங்கினா? அதை உன்னால வாங்க முடியாதா? அவ மட்டும் ஸ்பெஷலா என்ன படிச்சுட்டா? எங்கே கோட்டைவிட்டே?"
விழிகளை உருட்டி மிரட்டினாள் மணிமேகலை.
ராணியின் கன்னங்களில் கண்ணீர் உருண்டது. விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள்.
அந்த கோகிலா என்னை இனிமே எவ்வளவு அலட்சியமா பேசுவா தெரியுமா? திங்கறதிலேர்ந்து சினிமா நடிகை மாதிரி மினுக்கிக்கற வரைக்கும் என்ன குறை வச்சேன்? இதுதான் பெத்தவளுக்கு பதிலுக்கு காட்டின பெருமையா? போடி.. போ... என் முன்னால நிக்காதே. மூத்தவ நீ முதன்மையா இருந்தாத்தான் அடுத்ததுங்களும் அதேமாதிரி வரும். நீயே இப்படி இருந்தா அதுங்க இன்னும் லட்சணத்துல இருக்கும். எல்லாம் சோம்பேறித்தனம். திமிரு... போடி... போய் உங்கப்பாவை மாப்பிள்ளை பார்க்க சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்த் தொலை.
மணிமேகலை வெந்நீரை வார்த்தைகளில் கலந்து ராணியின் நெஞ்ச பாத்திரத்தில் ஊற்றிவிட்டு சென்றாள்.
அம்மா உபயோகித்த அந்த கடைசி வார்த்தைகள்தான் ராணியை அதிகமாக பாதித்தன.
ஓவென அழுதாள். குலுங்கி குலுங்கி அழுதாள்.
பக்கத்து அறைக்குள் ஓடினாள்.
படுக்கையில் குப்புற விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.
ஜான்சிக்கும் இந்திராவுக்கும் ராணியை பார்க்க பாவமாக இருந்தது. அவர்களுடைய கள்ளமற்ற விழிகள் கலங்கின. ஜன்னல் வழியாக இருவரும் அம்மா இருக்கிறாளா என பயப்பார்வை பார்த்தனர். மணிமேகலை சமையலறையில் பாத்திரங்களை ‘டங் டங்’ என்ற ஓசையுடன் கையாண்டு கொண்டிருந்தாள்.
அந்த ஓசை அவளுடைய ஆத்திரத்தை உணர்த்தியது.
இருவரும் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து அக்காவிடம் ஓடினர்.
ஜான்சி ஒன்பதாம் வகுப்பும், இந்திரா ஐந்தாம் வகுப்பும் படிக்கின்றனர். அக்கா...
இருவரும் சேர்ந்து அழைத்தனர். இருவரின் குரலும் உடைந்திருந்தது.
அக்கா... அழாதக்கா. அழாத ப்ளீஸ்...
இருவரும் சொல்லிக் கொண்டே அழுதனர்.
ராணி அவர்களுடைய கைகளைத் தள்ளிவிட்டாள்.
முகத்தை தலையணையில் மீண்டும் புதைத்துக் கொண்டு அழுதாள்.
இந்திராவும் ஜான்சியும் தங்கள் முயற்சியில் தோற்றவர்களாக மேஜைக்கு திரும்பினர்.
ச்சை! இந்த அம்மா ரொம்ப மோசம். அக்கா நல்ல மார்க்தானே வாங்கியிருக்கு. அந்த சுபாவைவிட பத்துமார்க் குறைஞ்சுட்டுன்னு இப்படி திட்டறாங்க. இதுக்கே இப்படி திட்டறாங்க. சிலபேரை மாதிரி ஃபெயிலாகியிருந்தா... கொலையே பண்ணி குழிதோண்டி புதைச்சிடுவாங்க.
ஜான்சி முணுமுணுத்தாள்.
சின்னக்கா... ராணியக்கா நல்லா படிச்சு மார்க் வாங்கும்போதே அம்மா இப்படி திட்டறாங்களே... எனக்கோ கணக்கு ரொம்ப வீக்காயிருக்கு. அதை நினைச்சாத்தான் பயமாயிருக்கு. இந்த கணக்கை பாரேன். வரவே மாட்டேங்குது. எனக்கு சொல்லித்தரியா?
இந்திரா ராணிக்கு கிடைத்த டோஸில் தனக்கு வராத கணக்கைப் பற்றி மிகவும் கவலை கொள்ள ஆரம்பித்தாள்.
ப்ச்! அப்பறம் சொல்லித்தர்றேன். மனசே சரியில்லை!
ராணி அழுவதால் வேதனையடைந்த ஜான்சி வருத்தத்துடன் இருந்தாள். அம்மா கூடத்திற்கு வரும் காலடி ஓசை கேட்டது. இருவரும் சட்டென்று படிப்பதைப் போல் பாவனை செய்தனர்.
வீடு நிசப்தமாயிருந்தது. ராணி விசும்பும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
ஜான்சிக்கு அம்மாவை நினைத்தால் எரிச்சல் வந்தது.
இன்று ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. ராணி ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்.
நல்ல மதிப்பெண்தான். சந்தோஷத்தை தரக்கூடிய மதிப்பெண்தான்.
ஆனால் மணிமேகலைக்கு சந்தோஷம் இல்லை.
காரணம் -
அவளுடைய ஓரகத்தியான கோகிலாவின் மகள் சுபா இவளைவிட பத்தே பத்து மார்க்தான் அதிகம் வாங்கியிருக்கிறாள். அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மணிமேகலையால். இன்றைக்கு என்றில்லை. ஆரம்பத்திலிருந்தே மணிமேகலை இப்படித்தான். எல்லாவற்றிலும் தன் மகள் ராணிதான் முதலில் வரவேண்டும் என நினைப்பாள்.
படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும். எதிலும் தன் பிள்ளைகள் தான் முதன்மையில் இருக்க வேண்டும் என்ற வெறி உண்டு. கோகிலா இவளுடைய கணவனின் அண்ணனுக்கு மனைவியாக வந்தவள். படிப்பறிவு குறைந்தவள். நான்காவதோ ஐந்தாவதோதான் படித்தவள்.
ஆனால் மணிமேகலை டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு செகண்ட் கிரேடு டீச்சராக பணியாற்றுபவள். படிக்காத கோகிலா வீட்டிற்கு மூத்தமருமகளாகயிருந்தாலும் மணிமேகலை கோகிலாவை மட்டமாகவே நினைப்பாள். படித்து வேலை பார்க்கும் தன்னை உசத்தியாக நினைத்துக் கொள்வாள்.
படிப்பு விஷயத்தில் ஒரு முறை கணவன் ஏதோ மட்டம் தட்டிவிட்டான் என்பதற்காக அஞ்சல் வழியில் பி.ஏ படித்து பிறகு எம்.ஏ.வும் படித்து பட்டம் வாங்கிவிட்டாள்.
இப்போது வேலை பார்த்த பள்ளியிலேயே தலைமையாசிரியர் அளவிற்கு உயர்ந்திருக்கிறாள்.
கோகிலாவிற்கு முதல் குழந்தை ஆண் குழந்தை, அடுத்து இரண்டும் பெண்கள்.
மணிமேகலைக்கு இரண்டு பெண்கள் பிறந்ததும் போதும் என கணவன் கூறியும் கேளாமல் ஆண் பிள்ளை வேண்டும் என்று மூன்றாவதாக முயன்றதில் இந்திரா அவதரித்தாள்.
அதற்குமேல் பெற்றுக் கொள்ள படித்த நாகரீகம் இடம் தரவில்லை. தனக்கு ஆண் பிள்ளை இல்லையே என்ற ஆதங்கம் மணிமேகலையின் மனதில் ஒரு உறுத்தலாக இருக்கவே செய்தது. இழப்பாக இம்சிக்கவே செய்தது.
பெண்ணாயிருந்தால் என்ன? ஆணுக்கு நிகராக... இல்லை... இல்லை... ஆணைவிட