Nilave Mugamkaattu
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Puthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Varalaamaa Rating: 3 out of 5 stars3/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsOonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Thavaminri Kidaitha Varame Rating: 5 out of 5 stars5/5Neengatha Ennam Ondru Rating: 5 out of 5 stars5/5
Related to Nilave Mugamkaattu
Related ebooks
Thulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Ullukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Enkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Venpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaamiyaar Veettu Seethanam Rating: 0 out of 5 stars0 ratingsKaththirukka Neramillai Karuna Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Maname Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsEllaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Mannithuvidu Maayaa Rating: 5 out of 5 stars5/5Mella Vilagum Irul Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsKanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nilave Mugamkaattu
1 rating0 reviews
Book preview
Nilave Mugamkaattu - R.Sumathi
18
1
அந்த ஹாஸ்டலே வழக்கத்திற்கு மாறான அமைதியில் கட்டுண்டு கிடந்தது. எப்பொழுதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலகலப்பிற்கு பஞ்சமில்லாத அந்த ஹாஸ்டல் இப்படி அமைதியில் இருப்பதற்குக் காரணம் நடந்து கொண்டிருக்கும் பரீட்சைதான்.
எல்லா அறைகளிலும் மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர்.
வராண்டாக்களிலும் மரத்தடி பெஞ்ச்சுகளிலும் ஆக்ரமிப்பு செய்திருந்தனர்.
தன் அறையில் படித்துக் கொண்டிருந்த பைரவி புத்தகத்தை மூடினாள்.
எழுந்து நின்று கைகளை உயர்த்தி உடம்பை வளைத்து சோம்பல் முறித்த பைரவி அழகுப் பெண்ணாக இருந்தாள். வளைத்து வரைந்த புருவங்கள். பிறரை தொலைத்து விடும் விழிகள். சுருள் சுருளாக இடைவரை பறந்த கூந்தல் இயற்கையின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். இருள் நிற அக்கூந்தல் அருள்வந்து ஆடும் பக்தனைப்போல் ஜன்னல் வழியே வந்த காற்றிற்கு ஆடியது.
மென்மையான இடை. அதை வன்மையாய் பிடித்த உடை. தன்மையாய் தழுவிய துப்பட்டா.
மனசோர்வை விலக்கும் மனமகிழ் பருவம். ஜன்னலோரம் அமர்ந்து தூங்கு மூஞ்சி மரத்தில் பாங்கியோடு பாடிக் கொண்டிருந்த குயிலையும் அதைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த அதன் ஜோடியையும் பார்த்தவாறே படித்துக் கொண்டிருந்த கங்காவின் அருகே வந்தாள்.
அவளுடைய புத்தகத்தை மூடி வைத்தாள்.
ஏய்.. என்னது?
படிச்சது போதும் எழுந்திரு!
எங்கே?
மீட்டிங் ஹாலுக்கு.
மீட்டிங் ஹாலுக்கா..? எதுக்கு?
சரியா மூணு மணிக்கெல்லாம் வார்டன் எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச் சொல்லியிருந்தாங்க.
எப்போ சொன்னாங்க? எனக்குத் தெரியாதே!
தெரியாட்டி என்ன? அதான் சொல்லிட்டேன்ல. எழுந்திரி.
மத்தவங்களுக்கெல்லாம் தெரியுமா?
இனிமேதான் சொல்லணும்.
நீ முதல்ல போய் சொல்லு. நான் வர்றேன்.
சரி வா!
என்றவள் அறையை விட்டு வெளியே வந்தாள். வராண்டாவில் காலை நீட்டிக் கொண்டும், குத்துக்காலிட்டுக் கொண்டும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டும் படித்துக் கொண்டிருந்த பெண்களிடம்,
ஹாய்... ஃபிரண்ட்ஸ்! ஒரு முக்கிய அறிவிப்பு
என்றாள். அனைவரும் என்ன என்பதை போல் நிமிர்ந்தனர்.
என்ன... எக்ஸாம் டேட் தள்ளிப் போய்ட்டா?
என்றாள் ஒருத்தி.
ஆமா! எல்லா எக்ஸாமும் முடிஞ்சுட்டு. ஒரு எக்ஸாம்தான் பாக்கி. அதை இன்னும் ஒரு மாசம் கழிச்சு வைக்கப்போறாங்க. ஆளைப்பாரு.
வேற என்னடி முக்கிய அறிவிப்பு. காலேஜ் எக்ஸாம்ல என்ன மார்க் வாங்கினாலும் பரவாயில்லை. ஆள் பாஸுன்னு ஏதாவது அறிவிப்பு வந்திருக்கா..?
ஆமாடி! நீ படிக்கவே வேண்டாம். ஸீரோ மார்க் வாங்கினாலும் யுனிவர்சிட்டி உனக்கு பட்டம் கொடுக்கறதா முடிவு பண்ணிட்டு. புத்தகத்தை தூக்கி பரண்ல போட்டுட்டு தூங்கு.
ஏய்... விஷயத்தை சொல்லு.
நம்ம வார்டன் எல்லாத்தையும் மீட்டிங் ஹாலுக்கு கூப்பிட்டிருக்காங்க. வாங்க.
எதுக்கு?
ம்... உனக்கு ஏதோ அவார்டு கொடுக்கப் போறாங்க.
ஏய்... அந்த கிழத்துக்கு வேற வேலை இல்லை. ஹாஸ்டல் ஃபீஸ் யார் யார் கட்டலை? ரூம் ஜன்னல் க்ளாஸை யார் யார் உடைச்சு வச்சிருக்கோம் - இதையெல்லாம் சொல்லப் போகுது! பாத்ரூம்ல லவ்வர் பேரை எழுதி வச்சவளெல்லாம் அதையெல்லாம் அழிக்கணும். தரையில கொட்டின நெயில் பாலிஷையெல்லாம் சுரண்டணும். இதையெல்லாம் பண்ணினாத்தான் எக்ஸாம் முடிஞ்சு எல்லாரும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்ப முடியும்னு சொல்லப்போகுது. அதுக்குத்தான் இந்த மீட்டிங்!
இதுக்குத்தான் என் லவ்வர் பேரை அதோ தெரியுதே அந்த தூங்கு மூஞ்சி மரத்துல செதுக்கி வச்சிருக்கேன். காலத்தால அழியாத காவியச் சின்னம்
ஒருத்தி பெருமிதமாக தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
அதான்... உன் லவ்வர் சதா சர்வ காலமும் தூங்கி வழியறான். நேத்து கூட எக்ஸாம் ஹால்ல ஒரு கேள்விக்கு கூட பதில் எழுதலை. பேப்பர் மேலேயே தலையை வச்சு தூங்கறான் முட்டாள்.
யேய்... வாயிலேயே போடுவேன். என் ஆளை முட்டாள் கிட்டாள்னு சொன்னே முகரை பேந்துடும்.
ஆஹா... அறிவுல அப்படியே அப்துல்கலாம்தான்.
யேய்... சண்டையை அப்பறம் போட்டுக்கலாம். வாங்கடி முதல்ல. அப்புறம் அந்த வார்டன் கொள்ளிவாய் பிசாசு மாதரி அலறும்.
அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் அந்த மீட்டிங் ஹாலில் கூடினர்.
வார்டன் என்ன சொல்லப் போகிறாரோ என ஆளாளுக்கு கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
நம்மையெல்லாம் வரச் சொல்லிட்டு இந்த பைரவி எங்கே போனா?
பைரவி கடைசி ஆளாக உள்ளே வந்தாள்.
ஸாரி ஃபிரண்ட்ஸ். உங்களையெல்லாம் கூப்பிட்டது நான்தான். வார்டன் பாட்டி நல்லா தூங்கிட்டு இருக்கு.
என்னது வார்டன் கூப்பிடலையா? எங்க படிப்பைக் கெடுத்து எதுக்கு இங்க வரவழைச்சே?
இருக்கு. விஷயம் இருக்கு. சொல்றேன்
என்று நடுநாயகமாக நின்று கொண்டு கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டாள்.
சீக்கிரம் சொல்லு. எங்களுக்குப் படிக்கிற வேலையிருக்கு.
ஆமா! அப்படியே படிச்சு யுனிவர்சிடி ஃபர்ஸ்ட் வந்துடப் போறீங்க!
யேய்... சொல்லுடி!
ஓ.கே! நாளைக்கு நமக்கெல்லாம் கடைசிப் பரீட்சை இல்லையா?
ஆமா! அதுக்கென்ன?
பரீட்சை முடிஞ்சதுமே எல்லாரும் மூட்டை முடிச்சைக்கட்டிக்கிட்டு ஊரைப் பார்க்க கிளம்பிடக்கூடாது.
எக்ஸாம் முடிஞ்சதும் வேற என்ன பண்றதாம்?
எல்லாரும் ஒரு வாரம் கழிச்சுத்தான் போறோம்.
ஏன்?
ஒரு வாரம் முழுசும் ஜாலியா தினமும் வெளியே போறோம். சினிமா, ஹோட்டல், பார்க், பீச்... இப்படி சுத்தப் போறோம். அப்புறமாத்தான் ஊருக்கு கிளம்பணும்.
அய்யோ... என்னால முடியாதுப்பா. எனக்கு உடனே எங்க அம்மா அப்பாவைப் பார்க்கணும்.
ஆமா! நேத்துதான் பொறந்த குழந்தை. அம்மாக்கிட்டே போய் பால் குடிக்கணும். மூஞ்சைப் பாரு, நோ... எக்ஸ்க்யூஸ். எல்லாரும் என்ஜாய் பண்றோம். அப்புறம் ஊரை நோக்கி சிறகை விரிக்கிறோம். சரியா?
எல்லோரும் வேறு வழி இன்றி அரைமனதாக தலையாட்டினர்.
ஓ... கே! இப்ப எல்லாரும் போய் படிக்கலாம்.
எல்லாரும் கலகலப்பாக எழுந்து கலைந்து சென்றனர்.
கங்கா அருகே வந்தாள்.
ஏண்டி... உனக்கு வேற வேலையே இல்லையா? ஒரு வாரம் அதிகம்டி. ஒரு ரெண்டு நாள் என்ஜாய் பண்ணினா பத்தாதா? ஊரைப் பார்த்துப் போய் அம்மா அப்பாவோட ஜாலியா இருக்கலாம் இல்லை?
யேய்... சும்மா ஊர் ஊர்னு புலம்பாதே. அம்மா அப்பாவோட எப்ப வேணா இருக்கலாம். அவங்க நம்மை விட்டு ஓடிடமாட்டாங்க. ஃபிரண்ட்ஸுங்களோட இருக்கற இந்த லைஃப் திரும்பக் கிடைக்காது. புரியுதா? எல்லாரும் ஒரு வாரம் கழிச்சுத்தான் போறோம். இதுல எந்த மாற்றமும் இல்லை. போ.
நீ திருந்தவே மாட்டே! உன்னையெல்லாம் எவன் கட்டிக்கிட்டு குப்பை கொட்டப் போறானோ?
"நான் என்ன