Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoduvanai Thottuvidu
Thoduvanai Thottuvidu
Thoduvanai Thottuvidu
Ebook136 pages2 hours

Thoduvanai Thottuvidu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465636
Thoduvanai Thottuvidu

Read more from R.Sumathi

Related to Thoduvanai Thottuvidu

Related ebooks

Reviews for Thoduvanai Thottuvidu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoduvanai Thottuvidu - R.Sumathi

    13

    1

    வெகுநேரமாக சுருஷ்டியின் செல்போன் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    அவள் எடுக்கவே இல்லை. அவளுக்குத் தெரியும். சுரேஷ்தான் அழைக்கிறான்.

    எடுத்தால் என்ன பேசுவானென்பது தெரியுமாதலால் எடுக்காமலிருந்தாள்.

    அவளைக் கடந்து சென்ற மாலதி "என்ன... செல் கூப்பிட்டுக்கிட்டேயிருக்கு.

    நீ பாட்டுக்கு வேலை பார்க்குறே? உன் ஆள்தான் போலிருக்கு. பேசேன்டி. கோபிச்சுக்கப் போறாரு..." என்று சொல்லிவிட்டுப் போனாள்.

    அவள் சென்றதும் செல்போனைக் கையிலெடுத்தாள். ‘ஆன்’ செய்து காதில் வைத்தாள்.

    சுருஷ்டி! என்ன ஆச்சு உனக்கு? போனை எடுக்கவே மாட்டேங்கறே...

    ஆபிஸ்ல ஆடிட்டிங் நடக்குது. ஜி.எம். ரூம்ல பிஸியா இருந்தேன்.

    இதையேதான் நாலு நாளா சொல்றே. இன்னைக்கு நீ எதை சொல்லியும் தப்பிக்க முடியாது. சரியா அஞ்சு மணிக்கெல்லாம் நாம வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு வந்துடு. நீ மட்டும் வராட்டா அப்புறம் நீ போன் பண்ணினாக் கூட நான் எடுக்க மாட்டேன். நாம எங்கேயுமே சந்திக்க முடியாது. சொல்லிவிட்டு சட்டென்று தொடர்பைத் துண்டித்து விட்டான்.

    சுருஷ்டிக்கு அதன்பிறகு வேலையே ஓடவில்லை. அமைதியாக அமர்ந்துவிட்டாள். அந்த அமைதியில் பெரும் இறுக்கம் இருந்தது. மெல்லிய படபடப்பு உடலெங்கும் ஓடியது.

    சுரேஷ் சொல்வது உண்மைதான். ஒரு வாரமாக அவன் போன் செய்யும் போதெல்லாம் அவள் ஆடிட்டிங் அது இதுவென இப்படித்தான் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவனை சந்திப்பதைத் தவிர்த்தாள்.

    அவளுக்கு மட்டும் அவனை சந்திக்க விருப்பமில்லையா என்ன?

    இந்த நிமிடமே அவனைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் அவளை ஆக்ரமித்துக் கொண்டிருப்பது உண்மைதானே? ஒவ்வொரு நிமிடமும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருப்பது உண்மைதானே?

    ஆனால் அவனை சந்திக்கப் பயமாயிருக்கிறதே!

    காதல் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாட்கள் மிகவும் களிப்பாக இருந்தது.

    தெளிந்த நீரோடையைப் போல் - தெள்ளு தமிழ் தென்றலைப் போல் நகர்ந்த நாட்கள் இப்பொழுது சந்திப்பதற்கே பயமாக இருந்தது.

    காதல் மட்டுமே இப்பொழுது பேசப்படும் விஷயமாக இல்லை.

    கல்யாணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால் நாட்கள் களிப்பாக இல்லை. கனவாக இல்லை. சுரேஷ் கல்யாணத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் மனசுக்குள் ‘திக்திக்’ உண்டானது.

    எதையெதையோ சொல்லி சமாளித்தாள்.

    இப்பொழுது என்ன செய்வது? எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும்?

    உண்மையை ஒரு நாள் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்?

    ஐந்து மணி ஆனதுமே ஒருவித பயம் பந்தாக அடிவயிற்றில் சூழ்ந்துகொண்டு குட்டிப்புயலாக சுழலத் தொடங்கியது.

    ஐந்து மணிக்கு மேல்தான் கிளம்பினாள். அவளும் சுரேஷும் வழக்கமாக சந்திக்கும் இடம் கடற்கரை.

    அவள் வந்தபோது ஓடி வந்து தழுவிக் கொண்ட கடற்கரைக் காற்று மனதில் கிளுகிளுப்பை உண்டாக்கவில்லை.

    படகு ஓரம் சாய்ந்து நின்றபடி கைகட்டிக் கொண்டு அவள் வரும்பாதையில் விழிகளைப் பதித்து நின்றிருந்த சுரேஷைப் பார்த்தபோது வயிற்றில் சுழன்ற குட்டிப் புயல் பெரும் புயலாக மாறி அவளைத் தடுமாற வைத்தது!

    அவளைக் கண்டதுமே சுரேஷின் முகம் பூவாக மலர்ந்தது.

    முன்னால் வந்து கையைப்பற்றிக் கொண்டான். என்ன பயந்துட்டியா? இனிமே நாம சந்திக்க முடியாதுன்னு நான் மிரட்டினதும் தலைதெறிக்க ஓடி வந்துட்டியா? பைத்தியம்! உன்னை சந்திக்காம இருக்க முடியுமா? என அவளுடைய தலையில் தட்டினான்.

    வா.. அப்படி உட்காரலாம் என அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர்த்தினான்.

    அலுவலக விஷயங்களை அக்கறையின்றி ஒப்புக்குப் பேசினான். ஆடிட்டிங் பற்றிக் கேட்டான்.

    எல்லாக் கேள்விக்கும் பதில் சொன்னாள். எப்பொழுது அந்தக் கேள்வியைக் கேட்பானோ என்று பயந்தாள்.

    சில நிமிடங்கள் கழித்து அவன் கேட்டான்.

    சுருஷ்டி, நான் முன்னாடியே சொன்னதுதான். கல்யாணத்துக்கு வீட்ல நச்சரிக்கத் தொடங்கிட்டாங்க. நான் நம்ம காதலை சொல்லிட்டேன். உன்னைப் பெண் பார்க்க எப்ப வர்றதுன்னு தேதியும் குறிச்சுட்டாங்க. நீதான் உங்க வீட்ல காதலை ஏத்துக்க மாட்டாங்கன்னு, சொல்லப் பயந்துகிட்டேயிருக்கே. நீ சொல்லலைன்னா பரவாயில்லை. நான் போய் சொல்றேன். நான் பேசற விதம்... நடந்துக்கற விதம்... இதையெல்லாம் பார்த்து உங்கப்பா என்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்னு சொல்லி உடனே பொண்ணு கொடுக்க சம்மதிச்சுடுவாரு. நீ முதல்ல உன் அட்ரஸைக் கொடு. நான் போய் பேசறேன். இப்பவே கிளம்பறேன்.

    அவள் மௌனமாயிருந்தாள். தலைகுனிந்திருந்தாள்.

    என்ன சுருஷ்டி. நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டேயிருக்கேன். நீ பாட்டுக்கு உட்கார்ந்துக்கிட்டிருக்கே?

    அவள் மறுபடியும் பதில் பேசாது அமர்ந்திருக்கவே, மெள்ள அவளுடைய முகத்தைத் திருப்பினான்.

    திரும்பிய விழிகளில் கண்ணீர் துளிகள் நிரம்பி வழிந்தன.

    சுருஷ்டி! ஏன் அழறே?

    சுரேஷ்... என்னை மன்னிச்சிடுங்க...

    மன்னிப்பா? ஏன் நான் உன்னை மன்னிக்கணும்? நீ என்ன தப்பு செய்தே?

    சுரேஷ்... என்னோட அம்மா அப்பாவோட இப்ப எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

    இதைக் கேட்டு பெரிதும் அதிர்ந்தான் சுரேஷ். ஒரு நிமிடம் அவனுடைய கண்கள் வெளிறின.

    Enjoying the preview?
    Page 1 of 1