Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agini Ambugal
Agini Ambugal
Agini Ambugal
Ebook108 pages34 minutes

Agini Ambugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465605
Agini Ambugal

Read more from Anuradha Ramanan

Related to Agini Ambugal

Related ebooks

Reviews for Agini Ambugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agini Ambugal - Anuradha Ramanan

    6

    1

    ‘இன்றோடு முழுசாய் இரண்டு மாதங்களாகிறதா...’ - சுஜா, தன் எதிர் சுவரிலிருந்த காலண்டரைப் பார்க்கிறாள். நெஞ்சுக்குள் இனம் புரியாத வேதனை...

    சென்னையிலிருந்து அம்மா எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும், மறக்காமல் ஒரு வரி இருக்கும்..

    ‘மாப்பிள்ளை வீடு பார்த்து விட்டாரா..? என்னதான் ஆத்ம சினேகிதர் என்றாலும் எவ்வளவு நாட்கள்தான் அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பீர்கள்..?’

    அம்மா, அவளிடம் உரிமையாய்க் கேட்பது போல, அவளால் தன் கணவன் ஜெகனிடம் கேட்க முடியவில்லை.

    அது என்னமோ, இன்னமும் அத்தனை நெருக்கம் தங்களுக்குள் உண்டாகாதது போல...

    ஒருவேளை, இந்த இரண்டு மாதங்களும் அவர்கள் தனியே இருந்திருந்தால் அத்தகைய நெருக்கம் தோன்றியிருக்குமோ...?

    அவசர அவசரமாய் கல்யாணம் நடந்து முடிந்த மாதிரியே வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது...

    இன்னும் கையில் கட்டியிருந்த கங்கணக் கயிற்றைக் கூட அவிழ்க்கவில்லை.. ஜெகன் புது நகரத்தில் அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டான்.

    நாளையிலேருந்து நீயும் என்னோட புறப்பட்டுடு சுஜா.. உன்னை உன் ஆபீஸ்லே கொண்டு விட்டுட்டு, நான் ஃபாக்டரிக்குப் போறேன்...

    இப்படி அவன் சொன்னபோதே, அவளுக்குள் ஒரு பயம்....

    என்ன அப்படிப் பார்க்கறே...?

    இல்லே.. ஊர் புதுசு... எனக்கு இந்தியே தெரியாது... மேலும், நாம புது வீட்டுக்குக் குடித்தனம் போனதுக்கு அப்புறம்... எனக்கும் எல்லாம் கொஞ்சம் பழகியாச்சுன்னா கவலை இல்லையேன்னு...

    - அவள் திக்கித் திணறிப் பேசுகிறாள்....

    இயல்பிலேயே சுஜாதா சற்று கூச்ச சுபாவம் மிகுந்தவள்.. யாருடனும் அத்தனை சுலபத்தில் பழகிவிட மாட்டாள். இத்தனைக்கும், சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில் அவள் பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தவள்தான். அவளுடன் பழகுவதற்கு முன் - வெளிப்பார்வைக்குக் கொஞ்சம் தலைக்கனம் உள்ளவள் போலத் தோன்றினாலும், நெருங்கிப் பழகினவர்களுக்குத்தான் அந்தக் குழந்தை மனசு புரியும்...

    வேலை பார்த்த நிறுவனத்திலும் அதிகம் பெண்களே இருந்ததால் இதுவரையில் அவளுக்கு எந்த ஒரு இக்கட்டும் வந்ததில்லை.

    நிறுவனத்தின் தலைமைக் குமாஸ்தாவான அம்புஜம், இவளை, ‘சுஜாக் குழந்தை’ என்றே அழைப்பாள். அலுவலகத்தில் அத்தனை பேரையும்விட வயசிலும், அனுபவத்திலும் மிகச் சிறியவளாதலால் சுஜாவிற்குக் குழந்தைப் பட்டம் ரொம்பவுமே பொருந்தும்...

    ஆ... அது தனி உலகம். உத்தியோகத்துக்குப் போகிறோம் என்கிற அலுப்பே இல்லாமல், பள்ளிக்கூடச் சிறுமி, உல்லாசப் பயணத்துக்குக் கிளம்புவது போல...

    அந்த நாட்களே மிக சுகமானவை போலத் தோன்றுகிறது சுஜாவுக்கு.

    ‘அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்...’

    ‘அப்படியேதான் பண்ணிக் கொடுத்தாளே... உள்ளூராகவோ, இல்ல பக்கத்துல எங்கேயாவதோ கொடுக்கக்கூடாதோ.. பம்பாய் எங்கே... மெட்ராஸ் எங்கே...?’

    இதை அவள் கல்யாணத்துக்கு முன்னாலேயே, ரகுவிடம் சொன்னாள்தான்.

    என்னண்ணா... அத்தனை தூரத்துல? பாஷை வேற உதைக்கும். பேசாம இங்கேயே எவனையாவது பார்த்து என்னை அவன் கழுத்துல கட்டி விட்டுடேன்...

    என்ன நீ.. இங்கே இருக்கு பம்பாய். அதுக்குப் போய் இப்படிப் பயந்து சாகறே... ஒவ்வொருத்தி லண்டன் எங்கே, சிங்கப்பூர் எங்கேன்னு கல்யாணமான அடுத்த நாளே பிளேன்லே பறக்கறா... நீ என்னடான்னா...? வெளியில சொல்லாதே..! எல்லாரும் கைகொட்டிச் சிரிப்பா..!

    ரகு, சிரிப்பும் கேலியுமாகத்தான் சொன்னான். மன்னியோ விளையாட்டாய் சொல்வது போல, தன்னைப் பற்றி, லேசான பெருமை இழையோடச் சொல்லிக் கொண்டாள்.

    எனக்குக் கூடத்தான் பிறந்தகம் கல்கத்தா. அங்கேயே படிச்சு, அங்கேயே வளர்ந்துட்டு, ஸௌத்லே வாழ்க்கைப் படவே ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. இப்பப் பழகிப் போயிடலையா... என்னை விடு... என் தங்கைய, ஸௌத் ஆப்பிரிக்காவுல வேலை பார்க்கற பையனுக்குக் கொடுத்திருக்கு. அவளுக்கு உன் வயசுதான்...

    இதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை சுஜா. மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள அதிகம் ஜனங்கள் இல்லை. திருச்சியில் ஒரு அக்காவும், அவள் புருஷனும்தான் நெருங்கிய உறவு.

    சுஜாவின் பெற்றோருக்குப் பெருத்த நிம்மதி தரும் விஷயம் என்னவென்றால், பையன் தனிக்கட்டை என்பதுதான்.

    போறது. நம்ம சுஜாவுக்கு, மாமியார், மாமனார், நாத்தனார்னு பிடுங்கல் இல்லே...

    அம்மா, ரகசியமாய் அப்பாவிடம் சிலாகித்தாள். இரைந்து சொல்லப் பயம்... எங்கேயாவது மருமகள் லலிதா கேட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1