Kana Kaanum Kangal
5/5
()
About this ebook
Read more from Anuradha Ramanan
Velvet Manasu Rating: 5 out of 5 stars5/5Kanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Uravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsAgini Ambugal Rating: 5 out of 5 stars5/5Oru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Neeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Koottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5kadhal Regai Rating: 5 out of 5 stars5/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5Oru Nadaipaathai azhugiradhu Rating: 5 out of 5 stars5/5Kadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Maalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kana Kaanum Kangal
Related ebooks
Mudhal Poo Rating: 3 out of 5 stars3/5Kaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Purusha Sikamanikal Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsGangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsMaaruthalukku Oru Hemalatha Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Unakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Eppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Anbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Aan Manam Rating: 0 out of 5 stars0 ratingsNilavoliyil Pattaam Poochigal Rating: 5 out of 5 stars5/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsImsaigal Rating: 0 out of 5 stars0 ratingsThoondirp Puzhukkal Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Inikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKanavum Kalyanamum Rating: 0 out of 5 stars0 ratingsNee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsViral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kana Kaanum Kangal
1 rating0 reviews
Book preview
Kana Kaanum Kangal - Anuradha Ramanan
9
"தந்தையால் எதையும் செய்து தர அவர் ஒன்றும் ‘ரோபோ மிஷின்’ இல்லை. ஜீ பும்பா செய்து எதையும் வாங்கித் தர அவர் மந்திரவாதியும் இல்லை. அவரும் மனிதன் தான். தன்னுடைய சக்திக்கு மீறிய நிலையிலும், தன் பிள்ளைகள் கஷ்டப்படாமல் சந்தோஷமாக இருக்க அதிகமாக பணம் சம்பாதிக்க பல வழிகளிலும் ஈடுபடுகிறார்.. இந்த பெற்றோரின் கஷ்ட நிலைமையைப் புரிந்து கொள்ளாத தன் பிள்ளைகளிடமும் ஏச்சுகளுக்கு உள்ளாகும் பரிதாப நிலையே, இன்றைய பெற்றோரின் நிலை. ஆணாக இருந்தால் கஷ்டம் பெற்றோருக்கு மட்டுமே. இதுவே பெண்ணாக இருந்தால், கஷ்டம் பெற்றவர்களுக்கு மட்டுமின்றி அவளுடைய கணவன் அவரைச் சேர்ந்த குடும்பத்திற்கும்தான். இந்த கதையின் கரு, என் தோழியின் சித்தி வீட்டில் நடந்த உண்மை. ஒரே ஒரு பெண்ணை அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து வளர்த்ததினால் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை இக்கதையின் மூலம் விளக்கி இருக்கிறேன்."
- அனுராதா ரமணன்
1
மறுபடியும் போன் செய்ய கூச்சமாக இருக்கிறது ரகுவிற்கு.
பெற்ற தாயார்தான். இருந்தாலும் என்ன நினைப்பாள்?
அம்மா, வீட்டுல போன் இருக்கறதுனால தினமும் என்கூடப் பேசணும்னு நினைக்காதே... டெலிபோன் வச்சிருக்கிறதே என் ஆபீஸ் உபயோகத்துக்காகத்தான். என்னிக்காவது, ஒரு அவசரம், சமயம்னா போன் பண்ணு... அதே மாதிரி, எனக்கு ஆபீஸ் வேலை முடிஞ்சு வீடு வர லேட்டாகும் போல இருந்தா நானே கூப்பிட்டு சொல்றேன்.
ரகுராமிற்கு ஆபீசில் பிரமோஷன் கிடைத்து வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு பொருத்தப்பட்ட அன்றைக்கு - அவன், தன் தாயிடம் சொன்னது.
இன்று என்ன நடக்கிறது...
ஒரே நாளில் நாலைந்து முறை அவனே வீட்டுக்கு போன் செய்து விட்டான். அதுவும் மாலை மூன்று மணிக்குள்...
‘அம்மா, வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனசுக்குள் நினைத்துக் கொள்ளமாட்டாளா..?’
‘இதில் நினைத்துக் கொள்ள என்ன இருக்கு?’
‘கல்யாணமான புதுசுல எல்லாம் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சுப்பா..’
‘போதும்டா.. பெத்தவ கிட்டயே என்ன மூடு மந்திரம் வேண்டிக் கிடக்கு.. கல்யாணமாகி ஆறு மாசமாறது... இதுல எத்தனை நாளைக்கு நீயும் உன் பெண்டாட்டியும் போன்லே கொஞ்சிக் குலாவியிருக்கீங்க. எத்தனை நாள் எலியும் பூனையுமா பிறாண்டிட்டிருக்கீங்கன்னு அவளுக்குத் தெரியாதா?’
‘இதோ.. இப்ப கூட நாலஞ்சு தடவையும் அம்மாதானே எதிர் முனையில ரிஸீவரை எடுக்கறா.. அவதான் மாடிய விட்டுக் கீழே இறங்கவே இல்லையாமே..!’
ரகுவிற்கு இந்த கல்யாண வாழ்க்கை அலுத்து விட்டது.
பெண் என்பவள் புரியாத புதிர் என்று அவனும்தான் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனாலும் இப்படியா..?
இந்த இருபத்தியேழு வயசுக்குள் அவன் எத்தனைப் பெண்களைப் பற்றி ஓரளவுக்கு புள்ளி பிசகாமல் கணித்திருக்கிறான்.
‘என்னிக்காவது ஒரு கோவில் குளம்னு அழைச்சிட்டுப் போயேண்டா...!’ இப்படி சலித்துக் கொள்ளும் அவன் தாய் பாகீரதிக்கு - உள்ளூர பாக்யராஜ் படம் என்றால் கொள்ளை பிரியம்...
‘என்னவோ காசைக் கொடுத்தாலும் அந்த பிள்ளையாண்டான் படம்னா வாய் விட்டு சிரிச்சுட்டாவது வரமுடியுது!’ என்பாள்.
இதோ அவன் வேலை பார்க்கும் ஆபீசர் தாமஸ்ஸின் மனைவி மேரிக்கு - ஞாயிற்றுக்கிழமை காலையில் பெசன்ட் நகர் கடற்கரை பாதையில் விற்கும் இறால் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் கொள்ளை சந்தோஷம்.
ஸ்டெனோ சீதாலட்சுமிக்கு புட்டபுர்த்தி சாயிபாபா படம்; டைப்பிஸ்ட் ஜனனிக்கு கல்கியுடைய பொன்னியின் செல்வன்; டெஸ்பாட்ச் கவிதாவுக்கு திருப்பதி லட்டு; ரிஸப்ஷனிஸ்ட் மெகரூனிஸ்ஸாவுக்கு எம்பிராய்டரி பூ வேலை செய்த ஃபாரின் புடவை - ஆபீசைக் கூட்டிப் பெருக்கும் பூவம்மாவுக்கு வாசனைப் புகையிலை...
இவ்வளவு ஏன்...! ஆறு மாதங்களுக்கு முன்பு ரஞ்சனியைப் பெண் பார்க்கச் சென்ற அதே நாளில் தானே ரகு , ரஞ்சனியின் அம்மாவையும் சந்தித்தான்.
ரஞ்சனியாவது இந்த ஆறு மாதகாலமாக அவனுடன் இருக்கிறாள். மாமியாரை ஐந்தாறு முறை பார்த்திருப்பானா.. இருக்கும். அதற்குள்ளேயே மாமியார் சரஸ்வதிக்கு என்னென்ன பிடிக்கும் என்று படித்து வைத்திருக்கிறானே..
ரஞ்சனி.. உங்கம்மாவுக்கு இன்னொரு கப் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடு..
ஒருமுறை எல்லோருமாய் ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது அவன் சொல்ல, சரஸ்வதி முகம் வெட்கத்தில் குங்குமமாய் சிவந்து போய்விட்டது.
சரசு.. உனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும்னு மாப்பிள்ளைக்கு எப்படித் தெரியும்..
ஆமா.. நான் போய் சொன்னேன். நீங்க வேற ஏங்க என் மானத்தை வாங்கறீங்க.. ஏதாவது பேச்சு வாக்குல நம்ம குழந்தை சொல்லியிருப்பாளாயிருக்கும்..
நானா.. நெவர்.. அவருக்கு இன்னும் எனக்கு என்ன பிடிக்கும்னே தெரியாது. ஏதோ, மாமியாரையாவது புரிஞ்சு வச்சிட்டிருக்காரேயின்னு நான் சந்தோஷப்படறேன்..
ரஞ்சனி சமயம் பார்த்து ஊசியை சொருகுவாள்.
‘இவளுக்கு என்ன குறை வைத்தோம்?’
ரகுவும் மூளையைக் கசக்கிக் கொள்கிறான்.
‘உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?"
திருமணமான புதுசில் எல்லாப் பெண்களும் தங்கள் புருஷனிடம் கேட்கும் யதார்த்தமான கேள்வி இது என்றுதான் முதலில் ரகு நினைத்தான்.
பின்னால் இதுவே தங்களது வாழ்க்கையில் தினசரி பூகம்பத்துக்கு விதைக்கப்படும் முதல் விதை என்பது அவனுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.
முதலிரவன்று எந்த மடையன், பெண்டாட்டியைப் பிடிக்கவில்லை என்று சொல்வான்?எத்தனை ‘சுமார்’ ரகமாக இருந்தாலும்.. அந்த நிமிஷத்தில் அவள் ரதியாகத்தானே தோன்றுவாள்..!