Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanmani Un Arugil
Kanmani Un Arugil
Kanmani Un Arugil
Ebook100 pages35 minutes

Kanmani Un Arugil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465612
Kanmani Un Arugil

Read more from Anuradha Ramanan

Related to Kanmani Un Arugil

Related ebooks

Reviews for Kanmani Un Arugil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanmani Un Arugil - Anuradha Ramanan

    12

    1

    "அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு புவனா... அவர் மட்டும், உன்னை வளர்க்கற பொறுப்பை சுமக்கறதுக்காக, அன்னிக்கு அந்தத் தியாகம் செய்யலையின்னா இன்னிக்கு நீ இத்தனை சிறப்பா வந்திருக்கவே முடியாது."

    தங்கை கல்யாணியின் வார்த்தைகள் பரமுவுக்குள் ஏகப்பட்ட கூச்சத்தை விளைவிக்கிறது.

    இவஒருத்தி... இப்ப நான் என்னத்தை பெரீசா தியாகத்தை செஞ்சுபிட்டேன்? அம்மா இல்லாத குழந்தைய - அப்பன்காரன் வளர்த்து ஆளாக்கறது ஒரு பெரிய விஷயமா?

    பரமு வாய்க்குள் முனக - புவனா கலகலவெனச் சிரிக்கிறாள்.

    அப்பா... அத்தை சொல்றதுல தப்பென்ன இருக்கு? சாதாரணமா புருஷன் இறந்ததுக்கு அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்காம, பெத்த குழந்தைகளுக்காக உசிரையே விடற பொம்பிளைங்களைத்தான் நாம நிறைய பார்க்கிறோம். இப்படி வேற ஒருத்தியை மனசாலக்கூட நினைச்சுப் பார்க்காத புருஷன்களைப் பார்க்கறதே இந்தக் காலத்துல அபூர்வமா இருக்கே.

    புவனாவுக்கு எப்போதுமே - அப்பாவிடம்தான் ஒட்டுதல் அதிகம். இத்தனைக்கும் தாயில்லாக் குழந்தையாயிற்றே என்று, கல்யாணி தன் அண்ணன் மகளை, உள்ளங்கையில் வைத்துதான் தாங்கினாள்.

    இன்று, புவனா - எம்.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன் நில்லாமல் பாட்டிலும், நடனத்திலும் கூட முதன்மையாக நிற்கிறாள் என்றால் - அதற்கு கல்யாணியின் இடைவிடாத கவனிப்பும்தான் காரணம்.

    ஆனாலும் - பரமு செய்துள்ள தியாகம் தான் உயர்த்தி என்பது போல - தலைக்குத் தலை பேசும் போது பரமுவிற்கே நெஞ்சுக்குள் ஊகாமுள்ளாய் ஒரு குற்றவுணர்வு உறுத்தும்.

    ‘இந்தப் புகழ்ச்சிக்கு ஏற்ற பாத்திரம் தானா நான்?’

    ‘ஐயோ, நான் செஞ்சது என்னன்னு மட்டும் இவங்களுக்குத் தெரிஞ்சதுன்னா என்னை இத்தனைப் பிரியமா நடத்துவாங்களா?’

    ‘முதலாவது என் மகளே, என் முகத்தில் காறித் துப்பமாட்டாளா.’

    பரமு நத்தையாய் சுருங்கிப் போகிறார்.

    இது போன்று, மனசாட்சியுடன் போராடும் போதெல்லாம், பரமு காரை எடுத்துக் கொண்டு, தானே கடைத்தெருவுக்குப் போய் - பெரிய ரோஜாப்பூ மாலையாய் பார்த்து இரண்டு மாலைகளை வாங்குவார்.

    ஒன்றை - கபாலீச்வரர் கோயில் கற்பகாம்பாளுக்குப் போட்டு, கண்கலங்கி நிற்பார். மற்றொன்றை வீட்டிலுள்ள தன் மனைவி அபிராமியின் புகைப்படத்துக்குப் போட்டு, மானசீகமாய் மன்னிப்புக் கேட்பார்.

    ‘அபி! என்னை மன்னிச்சிடு. உனக்கே தெரியும். நான், நம்ம புவனா பேருல எத்தனை பாசம் வச்சிருக்கேன்னு. நாளைக்கு அவளுக்கு கல்யாணமாகி, புகுந்த வீட்டுக்குப் போய் சிறப்பா வாழணும்னா - அதுக்கு உன்னோட கடந்த காலமே இடைஞ்சலா இருந்திடுமோங்கற பயத்துனாலத் தான் நான் அந்தக் குற்றத்தை செஞ்சேனே தவிர - மத்தபடி நான் நல்லவன் அபிராமி. உனக்கே தெரியும், உன் புருஷனைப் பத்தி, ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்காதவன்.’

    பரமு, மனைவியின் படத்துக்கு மாலை போட்டு கண் கலங்கி நிற்கும் போதெல்லாம் - புவனா, தன் அத்தையின் தோளில் முகம் புதைத்து, விசித்து விசித்து அழுவாள். கல்யாணி, மருமகளின் முதுகைத் தடவிக் கொண்டே அண்ணனை அதட்டுவாள்.

    நல்லாயிருக்கு அண்ணா நீ செய்யறது. புவனா குழந்தை. அவளை தேற்றி குறை தெரியாம வளர்க்க நான், படாத பாடு பட்டிருக்கேன். நீயானா தினமும் அண்ணி படத்துக்கு முன்னாடி நின்று, எங்களையும் பலவீனப்படுத்து.

    இல்லேம்மா. அவ மட்டும் இருந்திருந்தா தன் பொண்ணோட வளர்ச்சியக் கண்டு, பூரிச்சுப் போயிருப்பா. ஹூம்.

    அவங்க வாங்கிட்டு வந்த வரம் அவ்வளவுதான் அண்ணா. சும்மா அதையே நினைச்சிப் புலம்பாதே. ஏற்கனவே - பிளட் ப்ரஷர் எகிறிட்டே போறது.

    அத்தை மட்டும் இல்லையானால் - அப்பா, பெண்டாட்டி போன துக்கத்திலேயே தானும் போய் சேர்ந்திருப்பாரோ என்று நினைப்பாள் புவனா.

    அவளுக்கு தன் அம்மாவின் முகம் மறக்கவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1