Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhalukku Yengum Marangal
Nizhalukku Yengum Marangal
Nizhalukku Yengum Marangal
Ebook132 pages45 minutes

Nizhalukku Yengum Marangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465612
Nizhalukku Yengum Marangal

Read more from Anuradha Ramanan

Related to Nizhalukku Yengum Marangal

Related ebooks

Reviews for Nizhalukku Yengum Marangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhalukku Yengum Marangal - Anuradha Ramanan

    4

    1

    தாங்க்யூ.

    கௌதம் தன் தாயின் கையிலிருந்த காபி தம்ளரை வாங்கியபடியே சிரிக்கிறான். கண்களில் தூக்கம் இன்னமும் கலையவில்லை.

    போறுமே... அம்மாவுக்கு எதுக்குடா தாங்க்ஸ். பூரணி, அவனது முன் நெற்றி முடியைச் செல்லமாய் பிடித்துக் குலுக்க... அவன் குறும்புடன் ஒரு கண்ணை மாத்திரம் இடுக்கியபடியே தாயைப் பார்க்கிறான்.

    வேண்டாம்னா, இதோ இந்தப் பாக்கெட்லே திருப்பிப் போட்டுடு.

    மடையா, வார்த்தைய எப்படி பாக்கெட்லே போட முடியும்?

    கையிலே வாங்கி, பையிலே போடேன்.

    கௌதம், சிறு குழந்தையைப் போலச் சிணுங்க... பூரணி, மூடிய கையை அவனது தொளதொளத்த நைட் டிரஸ்ஸின் பாக்கெட்டுக்குள் நுழைத்து கிச்சு கிச்சு மூட்ட...

    வாவ்... என்னம்மா இது..

    எழுந்திருடா தடியா, மணி ஏழாகப் போகுது.

    பூரணி மிகச் சிரமப்பட்டுக் குரலில் கடுமையை வரவழைத்துக் கொள்ள முயன்று, தோற்றுப் போய், மகனைப் பார்த்துப் பரிவாய் சிரிக்கிறாள்.

    எழுந்திரும்மா... காலேஜுக்கு நேரமாச்சு இல்லே...

    அந்தப் பதினெட்டு வயசுக் குழந்தைக்கு, தினசரி இவள் பாடும் பள்ளியெழுச்சி இது.

    ஒரு காலத்தில் இவள் கையில் பூனைக்குட்டி போல உறங்கியவன்... இன்று அவளையே மிஞ்சும்படியாக உயரத்திலும், வளர்த்தியிலும்...

    ஏன், மெடிகல் காலேஜில் இடம் கிடைத்த சந்தோஷத்தில் அவன் பூரணியை, அப்படியே தூக்கி இரண்டு சுற்று சுற்றி அவளை அலற அடித்தானே...

    பூரணி இவனது அம்மா மட்டுமல்ல. தகப்பன், சினேகிதன், எல்லாமும் அவளே...

    சின்ன வயசிலிருந்தே அவனுக்குப் பூரண சுதந்திரம் அளித்திருந்ததாலோ... என்னமோ... அம்மாவிடம் எதைப் பேசலாம், எதைப் பேசக் கூடாது என்கிற பாகுபாடு கிடையாது.

    அவனது உலகம் அம்மா... நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு... பூரணியே பயப்படும் அளவுக்கு அம்மா பைத்தியம் அவன்.

    அம்மா என் ஃப்ரண்ட்ஸுக்கு ஒரு சந்தேகம்.

    என்னடா?

    நீ என்னோட சொந்த அம்மாதானா, இல்லே சின்னம்மாவான்னு... ஏன்னு கேட்டா... அவனுங்க அம்மாக்களுக்கு எல்லாம் தலை நரைச்சாச்சு.. உடம்பு எக்கச்சக்கமா ஊதிப்போச்சு. எழுந்தா உட்கார முடியல்லே. உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல்லே.

    "அது சரிதான்... உன் ஃபிரண்ட்ஸோட அம்மாக்களுக்கு அவங்க எல்லாரும் கடைசிப் புள்ளைங்க. இல்லையா? ராகவனோட அம்மா பாட்டியாயாச்சு. ஸ்ரீதரோட அக்காகூட ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா... இங்கே அப்படியா... நீதானே என்னோட மூத்த குழந்தே.

    என்னோட பதினேழாவது வயசுல நீ பொறந்தே. இன்னிக்கு உனக்கு வயசு பதினெட்டு. எனக்கு முப்பத்தியஞ்சு. இன்னும் அஞ்சாறு வருஷம் கழிச்சுப்பாரு.... நானும் புஸ்ஸுன்னு ஊதிப் போய், தலைநரைச்சு, எழுந்தா உட்கார முடியாம... உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாம..."

    ஸ்டாப், ஸ்டாப்.

    பூரணி சொல்லி முடிக்குமுன் கௌதம், அவளுடைய வாயை பொத்துவான்.

    நீ அந்த மாதிரி ஆகமாட்டே. எப்பவும் இப்படியே தான் இருப்பே.

    ஏன், எனக்கு மாத்திரம் பாட்டியாகணும்னு ஆசை இருக்கக் கூடாதா?

    தாராளமா நீ பாட்டியாகு. ஆனா, அழகான, இளமையான பாட்டியாவே இரு.

    கௌதம், தாயின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியபடி சொல்லுவான்.

    எல்லா விஷயங்களிலுமே தன் தாய், மற்ற தாய்களிலிருந்து மாறுபட்டிருக்க வேண்டுமென்பதே அவன் ஆசை.

    அவள், அவனது ரசனையை வளர்த்தவள். கௌதம் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்த போது, ஐப்பசி மாத அடைமழையை, மழைச்சரம் ஜலதாரை வழியே லயத்துடன் வழிவதை அவனுடன் ரசித்திருக்கிறாள்.

    கௌதம்... மழைச் சத்தத்துக்கு ஏத்த மாதிரி மெட்டு போடட்டுமா...?

    எங்கே... போடு, போடு...

    ஸரி கப கரி கப தப ஸரிகஸ...

    கௌதம், உழக்கு மாதிரி அவளெதிரில் நின்று, விரலைச் சொடுக்குவான்.

    அதுமட்டுமல்ல. அவனுடன் சேர்ந்து கோலி விளையாட, காற்றாடிக்குக் கண்ணாடித் தூளைப் பொடி செய்து, பசை காய்ச்சி, மாஞ்சா நூல் தயாரிக்க, விடிகாலைப் பொழுதில் ரோஜாப்பூ மலருவதை, பனித்துளி மெள்ள மெள்ள உருகி ‘பொட்’டென உதிருவதை, அவனுடன் படுத்து இந்திரஜால காமிக் படித்து ரசிக்க, கண்களில் துண்டைச் சுற்றிக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட...

    எல்லாமே அவளால்தான் முடியும்.

    இயல்பிலேயே குழந்தைத்தனம் மிகுந்தவள்தான் பூரணி. பெற்றோர்தான் அந்தக் குழந்தை மனசைப் புரிந்து கொள்ளாமல், குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல ஒரு முரட்டுக் கணவனை இவளுக்காகத் தேடிப் பிடித்து விட்டார்கள்.

    சேகர்... அவனை முரடு எனச் சொல்வதைவிட யாரிடமும் ஒட்டாத, தன் சுகத்தை மாத்திரமே கவனித்துக் கொண்டு போகிற சுயநலவாதி என்று சொல்லலாம்.

    அது அவன் தப்பில்லை. அவனைப் பெற்றவள் செய்த தப்பு. ஒரே மகன் - அதுவும் ஆறு பெண்களுக்குப் பிறகு கடைசியாய் பிறந்த தவப்புதல்வன் என்று - அவன் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து... பிள்ளையின் எதிரிலேயே மற்ற பெண்களை மட்டம் தட்டி...

    எல்லாருமே தனக்கு சேவை செய்வதற்காகத்தான் பிறந்திருக்கிறார்கள் என்பது போல அவன் நடந்து கொள்ள...

    பூரணியை அவன் மணந்த போது - அவனிடமிருந்த சொத்தும், அவன் தாயின் வரம்பு கடந்த பிள்ளை பிரதாபமும், ஆறு சகோதரிகளின் மௌனமான புன்னகையும் சேர்ந்து பூரணியின் பெற்றோர் கண்களை மறைத்தே விட்டது.

    சரியாய் நாலு வருஷங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1