Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Nimisam Please
Oru Nimisam Please
Oru Nimisam Please
Ebook170 pages57 minutes

Oru Nimisam Please

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465612
Oru Nimisam Please

Read more from Anuradha Ramanan

Related to Oru Nimisam Please

Related ebooks

Reviews for Oru Nimisam Please

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Nimisam Please - Anuradha Ramanan

    7

    1

    "முகூர்த்த நேரம் நெருங்கிட்டே இருக்கு. இன்னுமா, அலங்காரம் செஞ்சு முடியலே? மாப்பிள்ளை அழைப்பு கோவிலை விட்டுக் கிளம்பியாச்சாம்..."

    நீரஜாவின் அத்தை, இடுப்பில் இரு கைகளையும் பதித்தபடி அதிகாரம் செய்கிறாள்.

    இப்போதைக்கு அத்தைதான் - அந்தக் குடும்பத்துக்குப் பெரிய மனுஷி.

    என்றைக்கு - சிவராமனும், அவனது மூன்று குழந்தைகளும் - பெண்டாட்டியில்லாமல், பெற்றவளில்லாமல், திகைத்து நின்றார்களோ - அதற்கு அடுத்த நாளே - மூட்டை முடிச்சுகளுடன் வந்து இறங்கியவள்தான் அத்தை மரகதம்.

    இன்று வரையில் - அத்தைதான் அவர்களுக்கு எல்லாம்.

    அத்தைக்கு தம்பி குழந்தையிடம் பிரியம். வார்த்தைகளால் அளவிட முடியாதது. வயசை மறந்து மாங்கு மாங்கென்று செய்வாள்...

    அதே சமயம் வாயும் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி.

    தம்பி பெண்டாட்டியைப் பற்றி யாராவது பேச்செடுத்தாலே - பத்ரகாளியாக மாறிவிடுவாள்.

    சற்று முன்கூட சிவராமனின் தம்பி மனைவி, மரகதத்தின் காதோடு கேட்பது போல - தன் வெண்கலத் தொண்டையை வைத்துக் கொண்டு கிசுகிசுத்தாள்.

    அக்கா, மாப்பிள்ளை வீட்டாருக்கு - நம்ம வீட்டு விஷயம் தெரியுமோல்லியோ?

    என்னடி நம்ம வீட்டு விஷயம்?

    அத்தை வெகு சாமர்த்தியசாலி. லேசில் பிடிகொடுத்து விடமாட்டாள். அப்படியே கொடுத்தாலும் - வார்த்தைகளால் பந்தாடி விடுவாள்.

    அதாங்க.. உங்க பெரிய தம்பி பெண்டாட்டி செஞ்சிட்டுப் போன அக்கிரமம்...

    அடி போடி... ஊருல உலகத்துல எல்லாம் இல்லாத பெரிய்ய அக்கிரமம்...

    அங்கே இப்படி விட்டுக் கொடுக்காமல் சொன்னாலும், ஸ்டோர் ரூமுக்குள் வந்து, நீரஜாவிடம் தழைத்த குரலில் பொரிந்து தள்ளி விட்டாள்.

    இதப் பாரு நீரு... அவளவளுங்க நாக்கை தொங்க போட்டுட்டு, இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காளுங்க... கல்யாணம் சுமுகமா நடக்கணுமேயின்னு நானே கவலைப் பட்டுட்டிருக்கேன்... எல்லாம் நல்லபடியா முடியட்டும். ஏழுமலையானுக்கு கல்யாண உற்சவம் பண்ணி வைக்கறேன்னு வேண்டிட்டு இருக்கேன்...

    நீரஜா, மௌனமாய் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். அவள் தம்பி குமார் தான் சீறி விழுந்தான்.

    மூதேவி, மூதேவி.. அவளுக்கென்ன, குஷியா எவன் கூடவோ போயிட்டா. இப்ப ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடக்குமோன்னு கிலி பிடிச்சு உட்கார்ந்திருக்கிறது யாரு? நாமதானே.. அத்தை, இந்த விஷயத்துல அப்பா வெறும் கோழைன்னே நான் சொல்லுவேன். நான் மட்டும் அவர் நிலைமையிலே இருந்திருந்தா இப்படியொரு அவமானச் சேறை பூசின பெண்டாட்டியை துரத்திட்டுப் போய், கண்டந் துண்டமா வெட்டிப் போட்டிருப்பேன்...

    மரகதம், கை விரல்களை நெறித்தபடி சொல்கிறாள்.

    இரைஞ்சு பேசாதேடா, உங்க அப்பனுக்கு அவ இத்தனை கொடுமை செஞ்சும் அவளை ஒரு வார்த்தை சொன்னா கோபம் பொத்துட்டு வந்துடறது, இரையாதே. ஏதோ, இவ கல்யாணம் ஒழுங்கா நடந்தா சரி. நானே வயித்துல நெருப்பைக் கட்டிட்டிருக்கேன்...

    நீரஜாவின் விஷயத்தில் அத்தை மட்டுமா வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்? நீரஜா ஹோம குண்டத்தையே வயிற்றில் கட்டியிருக்கிறாள். சிவராமனோ - நெருப்பில் நிற்கிறான்.

    கல்யாணம் நிச்சயிப்பதற்கு முன்பே பிள்ளையின் தாய் யதார்த்தமாய்க் கேட்டாள்.

    பொண்ணோட அம்மா....?

    மூணாவது பிள்ளை பொறந்த மறு வருஷமே போயிட்டா.

    த்சு.. த்சு.. என்ன பண்ணித்து...?

    ஒண்ணுமே இல்லை. ஏதோ ரெண்டு நாள் ஜுரம்.. அவனும் டாக்டர்கிட்ட காட்டி, கழுத்து மட்டும் மாத்திரையும் மருந்தும் வாங்கித் தந்தான். மூணாம் நாள் ‘சட்’டுனு பிராணன் போயிடுத்து. அந்த நாள்லே நாங்கள்ளாம் ஜுரம் வந்தா ஏதோ கஷாயத்தை வச்சுக் குடிப்போம். ரெண்டு நாளைக்கு படுக்கையில சுருண்டு கிடப்போம். மூணாம் நாள் உதறிண்டு கிளம்பிடுவோம்.. இப்பத்தான் மூக்கை உறிஞ்சினாக்கூட முப்பது மாத்திரை. மேலுக்கு மருந்து; உள்ளுக்கு ஸிரப்... இதுலே எது அவளுக்கு எமனா வந்துச்சோ யாரு கண்டாங்க...

    அப்ப மருந்து கோளாறுனாலேதான் போனாங்களாக்கும்..?

    ஆமா.. பின்னே.. இல்லையின்னா, போற வயசா.. நன்னா இருப்பா. எங்க நீருவாவது இந்தக் காலத்துக்கு ஏத்தாப்பல ஸ்லிம்மா இருந்தாத்தான் அழகுன்னு பட்டினி கிடந்து, உடம்பை இப்படி வச்சிருக்கா... அது அப்படி இல்லே. அழிச்சா மூணு நீரஜாவை அம்சமா பண்ணலாம்...

    சிவராமன் அக்காவின் வாய் போகிற போக்கையெல்லாம் பயத்துடன் பார்த்தபடி கல்லாய்ச் சமைந்திருந்தான்.

    என்னதான் இருந்தாலும் மரகதத்துக்கு இருக்கிற சாமர்த்தியம் தங்கள் அப்பாவுக்கு வராது என்பது அந்த மூன்று குழந்தைகளின் கணிப்பு.

    அதுவும், அம்மா விஷயத்தில் அப்பா கோழைதான் என்பது அசைக்க முடியாத அபிப்பிராயம்.

    நீரஜாவுக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

    என்ன அவஸ்தை இது?

    ‘தாயைப் பார்த்து மகளைக் கொள்’ என்கிற பழமொழியை யார் எழுதி வைத்து விட்டுப் போனார்கள்?

    சிப்பிக்குள் முத்து பிறப்பதில்லையா?

    நிலக்கரி சுரங்கத்துக்குள் தங்கமோ, வைரமோ கிடைப்பதில்லையா...?

    அம்மா பண்ணின குற்றத்துக்கு பெண் எதற்காக தண்டனை சுமக்க வேண்டும்?

    என்ன உலகம் இது...?

    அத்தையின் சாமர்த்தியத்தினால் ஆயிரம் பொய்களைச் சொல்லி இந்தக் கல்யாணத்தை நடத்த முடியும். அதற்குப் பிறகு?

    என்றைக்கு இந்த உண்மை வெடிக்குமோ என்று ஆயுசு முழுக்க கவலைப்பட்டுக் கொண்டே காலத்தைக் கழிக்க முடியுமோ?

    நீரஜாவின் எதிர்காலத்தை முன்னிட்டு - அத்தை பதினெட்டு வருஷ காலமாக நிறைய பொய்களைச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள்.

    அப்பப்பா... எத்தனை ஜோடனை... எத்தனை மாலாசு... ஒன்றையொன்று தூக்கிச் சாப்பிடும்படியாக எத்தனைக் கட்டுக் கதைகள்...

    நீரஜாவின் தலையில் எவளோ ஒருத்தி நெற்றிச் சுட்டியை வைத்துக் கட்டுகிறாள்...

    இந்தச் சுட்டியினால் என் தலையெழுத்தை - என் பாரம்பர்யத்தை மறைக்க முடியுமா?

    அவள், தனக்குள் மூழ்குகிறாள்.

    ஆறு வயசில் அம்மாவைப் பார்த்தது.. குமாருக்கும், வருணுக்கும் தாயின் முகம் ஞாகபமிருக்கிறதோ என்னமோ...

    நீரஜாவுக்கு இன்றளவும்... அந்த முகம் பசுமையாக நினைவில் நிற்கிறது.

    அம்மா.. பளிச்சென்று இருப்பாள். அத்தை சொல்வது போல் நல்ல வாளிப்பு.

    வெறும் பருப்பு சோற்றினாலும் சிவராமன் வாங்கி வரும் இரண்டே சோனி முருங்கைக் காயினாலும் அந்த வாளிப்பு வந்து விடவில்லை. வரவும் வராது.

    அது தனி. ராஜ குடும்பத்துப் பெண் ஒருத்தி விட்ட குறையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஏழை வாத்தியாரின் எட்டாவது பெண்ணாக அவதரித்தாற் போல...

    இந்தா...

    சிவராமன் மனைவியை அழைப்பதிலேயே ஒருவித இறக்கம் இருக்கும். அது, ஆறு வயசுப் பெண்ணான நீரஜாவுக்குக் கூடப் புரியும்.

    "அவளுக்கு அவ அழகே எதிரிடி... அவளைப் பெண் பார்க்கப் போனப்பவே நான் சொன்னேன் உங்க அப்பாகிட்ட.. ஏண்டா, இத்தனை அழகு நம்ம குடும்பத்துக்கு சரிபட்டு வருமா... நீ, நான், நம்ம அப்பா, தாத்தா, பாட்டி - இப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1