Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoogatha kan ondru
Thoogatha kan ondru
Thoogatha kan ondru
Ebook102 pages41 minutes

Thoogatha kan ondru

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403495
Thoogatha kan ondru

Read more from Rajesh Kumar

Related to Thoogatha kan ondru

Related ebooks

Related categories

Reviews for Thoogatha kan ondru

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoogatha kan ondru - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தூங்காத கண் ஒன்று

    Thoogatha Kan Ondru

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    இந்த இடம்தான் சார்!

    வரதன் சொல்லவும்... அந்த நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட ஒரு 'ராக்கெட்'டைப் போல சீறிப் பாய்ந்த போலீஸ் 'ஜீப்' சட்டென்று வேகத்தைக் குறைத்து, இருட்டில் தெரிந்த அந்த மரத்துக்குக் கீழே ஒதுங்கி நின்று முகப்பு விளக்குகளை அணைத்துக் கொண்டது.

    இன்ஸ்பெக்டர் சேதுமாதவன், 'ஜீப்’ பின் பக்கம் திரும்பி... கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி பவ்வியமாய் உட்கார்ந்திருந்திருந்த அந்த வரதனையும், அவன் மனைவியையும் ஒரு தீப்பார்வை பார்த்தார்.

    டேய்... இந்த இடம்தானா? நல்லாப் பார்த்துச் சொல்லு.

    இதே இடம்தான் சார்...

    சரி... ரெண்டு பேரும் இறங்குங்க...

    சேதுமாதவன் சொல்லிக்கொண்டே 'ஜீப்’பில் இருந்து குதித்தார்.

    வரதன் தம்பதியர் இறங்கினார்கள். வானத்தில் நிலா 'ஆப்சென்ட்' பக்கத்துப் புதர்களில் 'சில் வண்டு’கள் இரைய... சுற்றிலும் இருட்டு. சேதுமாதவன் தன் மணிக்கட்டில் ஒளிர்ந்த 'ரேடியம் வாட்ச்’சைப் பார்த்தார்.

    நேரம் 11.55.

    நான்கு 'கான்ஸ்டபிள்’கள் வரதனையும், மனைவி சரசாவையும் இருட்டில் தள்ளிக்கொண்டு வந்து, சேதுமாதவனுக்கு முன்பாய் நிறுத்தினார்கள். தன் கையில் வைத்திருந்த லத்தியால் வரதனின் முகத்தை நிமிர்த்தினார் சேதுமாதவன். அடித் தொண்டையில் உறுமினார்.

    ரெண்டு பேரும் இந்த இருட்டைக் காரணமா வெச்சு தப்பிச்சுப் போக முயற்சி பண்ணினா... என்னுடைய இடுப்பில் இருக்கிற 'ரிவால்வரு’க்கு வேலை கொடுக்க வேண்டியது இருக்கும். என்ன... புரியுதா?

    வரதன் கும்பிட்டான்!

    அப்படியெல்லாம் ஓடிட மாட்டோம் சார்...

    சரி... இதே இடம்தானா?

    ஆமா சார்!

    இந்த இடத்துக்கு என்ன பேரு?

    இருட்டுப் பள்ளம் சார்...

    ம்... 'ஹைவேயில்’ இருந்து எவ்வளவு தூரம் போகணும்?

    வரதன் திரும்பி நின்று இரண்டு புளிய மரங்களுக்கு நடுவில் கோணலாய் வளைந்து போன ஒரு ஒற்றைப் பாதையைக் காட்டினான். இதுல கொஞ்ச நேரம் நடக்கணும் சார்.

    கொஞ்ச நேரம்ன்னா?

    ஒரு அஞ்சு நிமிஷம் சார்...

    மொத்தம் எத்தனை லிட்டர்?

    ஆயிரம் லிட்டருக்கு மேல இருக்கும் சார்...

    பானையா... டியூப்பா?

    டியூப் சார்...

    எரி சாராயத்தைத் தவிர வேற ஏதாவது போதை சமாச்சாரங்களைப் புதைச்சிருந்தா இப்பவே சொல்லிடு. பின்னாடி நாங்களே கண்டுபிடிச்சோம்ன்னு வையி... உன்னோட உடம்புல ஒரு எலும்புகூட முழுசா இருக்காது. ரெண்டு பேரையும் 'லாக்கப்’க்குள்ளே வெச்சு தட்டி எடுத்துடுவோம்.

    மிரண்டு போன சரசா, மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்வியமாகப் பேசினாள்.

    ஐயா... ஆறு மாதத்துக்கு முந்தி வரை விவசாயம்தான் எங்க தொழில். கடந்த மூணு வருஷமா மழை பெய்யாததால் விவசாயம் பார்க்க முடியல. நிலத்து பேர்லேயும், வீட்டு பேர்லேயும் வாங்கி இருந்த கடனுக்கு வட்டியும், அசலும் கட்ட முடியல. ரெண்டு சொத்தும் கைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிற பயத்துலதான் இந்தக் கள்ளச் சாராயத் தொழிலுக்கு வந்தோம். எங்களுக்கு வேற போதைப் பொருள்களைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாதுங்கய்யா.

    சரி சரி... நீ மண்வெட்டியை எடுத்துக்க. உம் புருஷன், கடப்பாரையை எடுத்துக்கட்டும். ஒரு மணி நேரத்துக்குள்ளே எல்லாத்தையும் தோண்டி வெளியே எடுத்து வைக்கணும். ஒரு 'டியூப்’ கூட பூமிக்குள்ளே இருக்கக்கூடாது.

    சரசா மண் வெட்டியையும், வரதன் கடப்பாரையையும் எடுத்துக்கொள்ள... முன்னாலும்... பின்னாலும் காவலர்கள் நடந்தார்கள். ஒரு 'கான்ஸ்டபிள்' கையில் இடம் பிடித்திருந்த பெரிய 'டார்ச்', வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு போயிற்று. ஒற்றையடிப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் கோரைப் புற்கள் காய்ந்து போய்த் தெரிய... அதற்குள் ஒளிந்திருந்த முயல்கள், 'பூட்ஸ்' சத்தங்களைக் கேட்டுத் 'திடும்... திடும்' என்று ஓடி மறைந்தன.

    சரியாய் ஏழு நிமிட நடை.

    நடந்து கொண்டிருந்த வரதன் நின்றான்.

    இந்த இடம்தான் சார்!

    எல்லோரும் நின்றார்கள்.

    இன்ஸ்பெக்டர் சேதுமாதவன் சுற்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1