Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Varum Neram
Nilavu Varum Neram
Nilavu Varum Neram
Ebook72 pages40 minutes

Nilavu Varum Neram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703481
Nilavu Varum Neram

Read more from Vidya Subramaniam

Related to Nilavu Varum Neram

Related ebooks

Reviews for Nilavu Varum Neram

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Varum Neram - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலவு வரும் நேரம்

    Nilavu Varum Neram

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 1

    கண் விழிக்கும்போதே ரங்கராஜனின் நினைவு வந்தது. ஸ்வர்ணா ஜன்னல் வழியே தெரிந்த மாமரத்தைப் பார்த்தாள். பத்து வயது ரங்கராஜன் நிஜாரை இழுத்து விட்டுக்கொண்டு மாங்கிளைகளில் ஏறுவது மனக்கண்ணில் தெரிய புன்சிரிப்போடு எழுந்தாள். இன்று ரங்கராஜனின் ஜென்ம நட்சத்திரம். கீழே அத்தை பால் பாயாசம் வைத்துக் கொண்டிருப்பாள். ஒரு வருட மேற்படிப்பை யூஎஸ்ஸில் முடித்துவிட்டு இன்று இந்தியா திரும்புகிறான் அவன். இன்னும் மூன்றே மணி நேரத்தில் அவன் வரும் விமானம் சென்னை தரையைத் தொட்டுவிடும். அடுத்த ஒரு மணியில் அவன் கார் இந்த போர்டிகோவில் நுழைந்து நிற்கும். வந்ததும் என்ன செய்வான் அவன்? அம்மாவிடம் அரை மணி நேரம் பேசிவிட்டு அரக்க பரக்க மாடிக்கு வந்து அவளிடம் வம்பு செய்வான். அவளைச் சீண்டாவிட்டால் அவனது நாட்கள் நிறைவடையாது.

    அமெரிக்காவுக்கு கிளம்பும் முன்புகூட அவளை அழ வைத்தான்.

    அடிக்கடி போன் பண்ணிப் பேசு ரங்கா.

    ஏன் போன்ல வேற அறுக்கப்போறயா? உங்கிட்டேர்ந்து தப்பிக்கணும்னு தானே கடல் கடந்து போறேன். நோ போன், நோ ஈமெயில்.

    சும்மா பேச்சு இது. உன்னால என்கூட பேசாம இருக்க முடியாது.

    ஏதோ இங்க இருந்தவரை வேறு நாதியில்லாம உன்கூட பேசியிருக்கலாம். ஆனா இனிமே அப்டியா? அய்யா எங்கே போறேன்னு தெரியும் இல்ல? யுஎஸ்ல உன்னைவிட படா படா பொண்ணுகள் எல்லாம் என்னை சுத்தி சுத்தி வருவா. அவளோட பேசவே நேரம் பத்தாதாம் வேலை மெனக்கெட்டு போன் பண்ணி இந்த பழம்பார்ட்டிகிட்ட பேசணுமாம்.

    படவா யாரைப் பார்த்து பழசுங்கற?

    உன்னைத்தான்.

    நீ எப்படி அமெரிக்கா போறேன்னு பார்க்கிறேன்!

    பிளைட்லதான் போவேன். மொட்டை மாடில நின்னு பாரேன். முடிஞ்சா மேலேர்ந்து கையாட்டறேன்.

    ராஸ்கல்!

    நீ வேணா பாரு ஸ்வர்ணா அமெரிக்காலேர்ந்து திரும்பி வரும்போது ஜம்முனு அந்த ஊர் குட்டியோடதான் வருவேன். இந்த விளக்கெண்ணை மூஞ்சிய எவன் கட்டிப்பான்? எனக்கு வேண்டாம்பா!

    போயேன். இந்த விளக்கெண்ணை மூஞ்சிக்கும் ஒருத்தன் கிடைப்பான்.

    கிடைப்பாங்கற! எனக்கு நம்பிக்கையில்ல! அப்படி யாரும் கிடைக்காட்டி சொல்லு போனாபோறது ஒண்ணுக்கு ரெண்டா நானே உன்னை வெச்சுக்கறேன். என் அந்தபுரத்துல சின்ன ராணியா இருந்துட்டு போ!

    ஸ்வர்ணா முகம் சிவந்து கண் கலங்க விருட்டேன்று எழுந்து ஓட பின்னால் அவன் சிரிப்பு துரத்தியது.

    ஏர்போர்ட்டுக்குக்கூட அவள் போகவில்லை அவ்வளவு கோபம். அவனும் அவளை அழைக்கவில்லை. அத்தையும், அவள் மூத்த பிள்ளை உப்பிலியும் ஏறிக்கொண்டதும் கார் கிளம்ப, ஸ்வர்ணா மாடி ஜன்னல் வழியே அழுகையும், ஆதங்கமுமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் திரும்பி வரும் வரை அவள் ஜன்னலை விட்டு நகரவில்லை.

    ஸ்வர்ணா… உப்பிலியின் குரல் பின்னால் கேட்டதும் திரும்பினாள்.

    ரங்கன் இதை உங்கிட்ட கொடுக்கச் சொன்னான் என்றபடி ஒரு சின்ன பார்சலை நீட்டினான்.

    என்ன அது?

    எனக்கெப்படி தெரியும்?

    உப்பிலி பார்சலைக் கொடுத்து விட்டுப்போக கதவைத் தாளிட்டுவிட்டு பரபரப்போடு அதைப் பிரித்தாள். பிரிக்க பிரிக்க பேப்பராக வர, இறுதியில் ஒரு சின்ன அட்டைப் பெட்டிக்குள் சின்ன விளக்கெண்ணை பாட்டில் அதற்கடியில் ‘வித் லவ்’ என்ற வார்த்தைகள்.

    ஸ்வர்ணா வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாய் வலிக்க சிரித்தாள். புரைக்கேறி கண்களில் நீர் கொட்டியது.

    இரண்டு நாள் கழித்து அவனது ஈமெயில் வந்தது.

    ‘ஹாய் மை விளக்கெண்ணை! என்று ஆரம்பித்திருந்தான். ஏதாவது ஒரு வெள்ளைக்காரக் குட்டியைப் பிடித்துவிட வேண்டும் என்று பார்த்தால் எந்த முகத்தைப் பார்த்தாலும் உன்முகம் தெரிந்து தொலைக்கிறதே என்ன செய்ய? இங்கேயும் வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1