Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Thean Nila
Kalyana Thean Nila
Kalyana Thean Nila
Ebook150 pages1 hour

Kalyana Thean Nila

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703456
Kalyana Thean Nila

Read more from Vidya Subramaniam

Related to Kalyana Thean Nila

Related ebooks

Reviews for Kalyana Thean Nila

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Thean Nila - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    கல்யாண தேன் நிலா

    Kalyana Thean Nila

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    காலங்காலையில் அப்பாவும் அம்மாவும் போட்ட சண்டையில் தூக்கம் கலைந்தாலும் கண் திறக்காமல் படுத்திருந்தாள் ஹேமா.

    என் உடம்பு மட்டும் என்ன இரும்பாலயா செஞ்சு வெச்சிருக்கு! என்னிக்காவது ஒரு நாள் நீங்க, சீக்கிரம் எழுந்து காப்பி போட்டு சமைச்சு இறக்கினா என்னவாம்? ஆம்பளைன்னா லேட்டா எழுந்துக்கறது, பேப்பர் படிச்சுக்கிட்டே காப்பி சாப்பிடறது, அப்புறம் நிதானமா ஷேவ் பண்ணிக் குளிச்சி, ஆயிரம் குறை சொல்லிக்கிட்டே சாப்பிடறது... இதெல்லாம் அந்தக் காலம். பொண்டாட்டி வேலைக்குப் போணும்னு நினைக்கறவா கூட மாட ஒத்தாசை பண்ணனும். இல்லாட்டி அவளை வேலைக்கு அனுப்பக் கூடாது. துப்பிருந்தா வெச்சுக் காப்பாத்தணும். அப்புறம் ஏண்டி நாயேன்னா கூட அவ எதிர்த்துப் பேசமாட்டா!

    இப்ப என்ன வேணுங்கற நீ?

    நீங்க இருக்கறது மைசூர் அரண்மனையும் இல்ல. நீங்க மகாராஜாவும் இல்லன்னு சொல்ல வரேன். நீங்களும் பாதி வேலை செய்தா ஒரு தப்பும் இல்லன்றேன்.

    என்ன வேலை செய்யணுங்கற?

    காலம்பற பத்து தேய்க்கறதுக்குள்ள நீங்க பால் காய்ச்சி காப்பி போட்டா அப்புறம் நா குக்கர் வெப்பேன். நீங்க கறிகா நறுக்கித் தந்தா நான் குழம்பும் கறியும் பண்ணுவேன். சப்பாத்திக்கு மாவு பிசையலாம். ஹேமாவுக்கு வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்து வெக்கலாம். டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வெக்கலாம் இன்னும் எத்தனையோ வேலை செய்யலாம். வேலைக்கா பஞ்சம்?

    சரி; விடு செய்யறேன்.

    கிழிச்சேள்! தினமும் நானும் கத்தறேன். நீங்களும் இதே பதிலைத்தான் சொல்றேளே தவிர எங்க செய்யறேள்? கத்திட்டு கத்திட்டு நாந்தான் மாடு மாதிரி எல்லா வேலையும் செஞ்சுட்டு ஒட வேண்டியிருக்கு. ஆபீஸ்ல ஒத்துக்கறாளா லேட்டா போனா?

    வீட்டு வேலை முக்கியம்னா ஏம்மா வெளிய வேலைக்கு வர்றீங்க? வீட்லயே இருக்க வேண்டியது தானே'ன்னு கத்தறான் அந்த கடங்கார மானேஜர். 'உனக்கென்னடா படவா, வீட்ல உன் பொண்டாட்டி வயத்தெரிச்சலைக் கொட்டிண்டு ஊருக்கு முன்னால வந்து உக்காந்துக்கறது போறாதுன்னு இங்க எங்க வயித் தெரிச்சலையும் கொட்டிக்கறயா'ன்னு கேக்க நாக்குதுறு துறுங்கும். ஆனா கேக்க முடியுமோ? ஆக மொத்தம் உங்களை மாதிரி ஆம்பளையை எல்லாம் நிக்க வெச்சு சுடணும் போல இருக்கு வளரவர்ற ஆத்திரத்துக்கு.

    இந்தாசுடு... ராஜகோபலன் தீபாவளிக்கு வாங்கிய துப்பாக்கியை எடுத்து அவளிடம் நீட்டினார்.

    இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல! வசந்தி அதைத் தட்டி விட்டாள்.

    எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும். இனிமே நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணாட்டா, போனாப் போறதுன்னு விட்டுட்டு நானே எல்லா வேலையும் செய்வேன்னு மட்டும் நினைக்காதீங்க. நா ஸ்ட்ரைக் பண்ணினா வீடு நாறிடும்! வசந்தி எழுந்து செல்ல ராஜகோபாலன் பதட்டப்படாமல் இன்னும் சற்று நேரம் படுக்கையில் படுத்து சோம்பல் முறிந்தார்.

    ஹேமா எழுந்து உட்கார்ந்து அவரைப் பார்த்தாள்.

    ஏம்பா! தினம் இந்தச் சண்டை சுப்ரபாதத்துல தான் நா கண் முழிச்சாகணுமா? அம்மாவுக்கு ஏதானும் ஹெல்ப் பண்ணக் கூடாதா?

    ம். வாம்மா. இப்பதான் அவ கத்தி ஓய்ஞ்சுட்டு போனா. இப்ப நீயா? ஏன் உனக்கு பதினேழு வயசாறதே... நீ சீக்கிரம் எழுந்து செய்ய வேண்டியதுதானே?

    நானா மாட்டேன்றேன்? பட் என்னால முடியலையே நா கார்த்தால ஆறு மணிக்கு ஒரு டியூஷன், அப்பறம் ஸ்கூல் சாயங்காலம் இன்னும் ரெண்டு டியூஷன், ஹிந்தி கிளாஸ், அப்பறம் என் ஹோம்ஒர்க்ன்னு நா படுக்கவே ராத்திரி பதினோரு மணியாயிடறதே, உங்களுக்குத் தெரியாதா என்ன? அம்மாக்கு ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சாலும் என்னால முடியல. அப்படியே ஏதாவது நா செய்யணும்னு போனாலும் அம்மா என்னை நீ போய்ப் படின்னு அனுப்பிடறா. நா என்ன செய்யட்டும்? நா தெரியாமதான் - கேக்கறேன். அம்மாக்கு ஹெல்ப் பண்ணினா குறைஞ்சா போய்டுவ?

    என்னால முடியாது. நா வளர்ந்த விதம் அப்டி எங்கம்மா என்னை ஒரு துரும்பை நகர்த்த விட்டதில்லை.

    அப்படின்னா உங்கம்மா அவளாட்டமே ஒரு படிக்காத முண்டமா பார்த்து உங்களுக்குப் பண்ணி வெச்சிருக்கணும்? எதுக்கு என்னைப் பண்ணி வெச்சு என் பிராணனை வாங்கணும்? அடுக்களையிலிருந்து வந்த வசந்தி இன்னும் ஆத்திரமாய்க் கத்தினாள்.

    த பார். எங்கம்மாவை ஏதாவது சொன்னா சும்மார்க்க மாட்டேன்.

    ஆங்! உடனே பொத்துண்டு வந்துடுமே!

    ஹேமா எழுந்து பாத்ரூம் பக்கம் சென்றாள். இன்னும் பத்து நிமிடத்தில் அவள் டியூஷன் கிளம்பியாக வேண்டும். அம்மா அப்பா சண்டை தினம் நடக்கும் கதைதான். அப்பாவும் துரும்பை அசைக்கப் போவதில்லை. அம்மாவும் புலம்புவதை நிறுத்தப் போவதில்லை. சில நேரம் 'ச்சே' என்றாகி விடும். எல்லா வீட்டிலும் இப்படித்தானா என்ற கேள்வி எழும்.

    ஹேமா குளித்து யூனிபார்ம் அணிந்து அடுக்களைக்கு வந்தபோது, அம்மா முணுமுணுத்துக் கொண்டே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். பால் இன்னும் காய்ச்சவில்லை.

    நாகிளம்பவாம்மா?

    கிளம்பு. இன்னிக்கு உனக்கு பால் கிடையாது.

    நா கேட்டேனா? ஹேமா தன் சைக்கிளை வெளியில் எடுத்து ஏறிக் கொண்டாள்.

    புருஷன் ஹாய்யாக பேப்பரைப் பிரித்து வைத்துக் கொண்டதைப் பார்த்ததும் வசந்திக்கு எரிந்தது. இவ்வளவு சொல்லியும் என்ன திமிர்! இதை 'மேல் ஷாவனிஸம்' என்று சொன்னால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் இது ஆணாதிக்கம் இல்லாமல் என்ன? ஆண் என்றால் வீட்டு வேலை செய்யக் கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறது?'

    கல்யாணமாகி முதல் குழந்தை பிறக்கும் வரை இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. மாமியார் சமைத்து இறக்க, வசந்தி சுற்று வேலை செய்து கொடுப்பாள். அவன் ஹாய்யாக ஒன்பது மணிக்கு எழுந்தாலும் கேட்பாரில்லை. அதன் பிறகு ஹேமா பிறந்த மூன்றாம் மாதம் மாமியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்ட பிறகுதான் கஷ்ட காலம் ஆரம்பித்தது.

    ஒரு பக்கம் கைக்குழந்தை, மறுபக்கம் படுக்கையில் இருக்கும் கால் ஒடிந்த மாமியார் என்று திண்டாடி விட்டாள். போதாதற்கு மூன்று மாத மெட்டர்னிடி லீவு முடிந்து, வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்சினை எழ, தற்காலிகமாக கிரீச்சில் விடுவது என்று தீர்மானமாயிற்று. காலை நாலு மணிக்கு எழுந்து சமையல் வேலையோடு மாமியாருக்குப் பல் தேய்த்து விட்டு பெட்பான் வைத்து, உடம்பு துடைத்து, காபி டிபன் கொடுத்து மத்தியானம் அவள் சாப்பிடுவதற்காக கைக்கெட்டும் தூரத்தில் பிளாஸ்க்கில் காப்பியும், ஹாட்பாக்கில் சாப்பாடும் வைத்து விட்டு, ராஜுவுக்கு காரியர் எடுத்து அவனுக்கு டிபன் கொடுத்து, குழந்தையைக் கவனித்து கிளப்பி, ஒரு கூடையில் அதற்குத் தேவையான சமாச்சாரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு, ஏனோ தானோவென்று ஒரு புடவையைச் சுற்றிக் கொண்டு சாப்பிடக்கூட நேரமில்லாது கிளம்பினால் என்றால் குழந்தையை கிரீச்சல் விட்டு விட்டு அங்கிருந்து பஸ் பிடித்து ஆபீஸ் போய்ச் சேரும்போது பாதி நாள் அட்டென்டென்ஸ் உள்ளே போயிருக்கும். பியூனைக் காக்கா பிடித்து பாதி நாள், மானே ஜரிடம் கெஞ்சிக் கூத்தாடி மீதி நாள் என்று கையெழுத்துப் போடுவதற்குள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருக்கும்.

    அதே நேரம் துளிக்கூட உடம்பு நோவாமல், அவள் கஷ்டங்களைப்பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார் ராஜூ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வசந்தி ஒரு நாள் பொங்கி வெடித்தாள்..

    "இதென்ன வீடா, சத்திரமா? இங்க நா ஒருத்தி கைக் குழந்தையோடயும் உங்கம்மாவோடயும், செத்து சுண்ணாம்பாயிண்டுருக்கேன். எத்தனை வேலை நா ஒருத்தியே செய்வேன்?

    Enjoying the preview?
    Page 1 of 1