Kanmaniye Kaadhalenbathu…
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Iruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanmaniye Kaadhalenbathu…
Related ebooks
Thendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPeraasai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Varam Rating: 5 out of 5 stars5/5Vendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsVaira Kammal Rating: 5 out of 5 stars5/5Kalyaniyin Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Konjam Puthusu Rating: 1 out of 5 stars1/5Kaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Uraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Melathaalam... Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsNilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Thakka Vachuko! Rating: 4 out of 5 stars4/5Kadai Thenkai Rating: 3 out of 5 stars3/5Vazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Ennai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsManthira Punnagai Rating: 4 out of 5 stars4/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Putham Puthusu! Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaal Purushan Rating: 3 out of 5 stars3/5
Reviews for Kanmaniye Kaadhalenbathu…
0 ratings0 reviews
Book preview
Kanmaniye Kaadhalenbathu… - Devibala
http://www.pustaka.co.in
கண்மணியே காதலென்பது...
Kanmaniye Kaadhalenbathu…
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
என்னங்க!
சொல்லு சரோ!
சுற்றிலும் ஒருமுறை விழிகளை சுழல விட்டாள் சரோஜா குரலை நன்றாகத் தழைத்துக் கொண்டாள்.
இந்த மாச பட்ஜெட்ல நூறு ரூபா துண்டு விழுது!
மோகன் புருவம் உயர்த்தினான்.
இன்னிக்கு தேதி என்னா?
ஆறு!
இந்த மாசம் தொடங்கி முதல் வாரம் கூட முடியலை. அதுக்குள்ள பட்ஜெட்ல துண்டா? என்ன செய்யற பணத்தை?
அம்மா உள்ளேயிருந்து வெளிப்பட்டாள்.
நாங்கள்லாம் குடித்தனம் பண்ற காலத்துல இன்னும் சுபிட்சமாக இருந்தம். இத்தனைக்கும் உங்கப்பா மட்டும்தான் சம்பாதிச்சார். நீங்க ஆறு குழந்தைங்க எனக்கு. குடும்பம் நடக்கலயா? புருஷன் - பொண்டாட்டி ரெண்டு பேர் சம்பாதிச்சும் பணம் பத்தலைன்னா, குடித்தனம் பண்ணத் தெரியலைன்னு அர்த்தம்!
அத்தே!
எனக்கென்னா? நான் கோயிலுக்குப் போறேன். இந்திராவுக்கு பொங்கலுக்கு இன்னமும் பணம் அனுப்பலை மோகன்!
இன்னிக்கு அனுப்புறன்மா!
அம்மா போய் விட்டாள்.
மோகன் சன்னமான கோபத்துடன் சரோஜாவை ஏறிட்டான்.
நிஜமாகவே உனக்கு குடித்தனம் பண்ணத் தெரியலையா சரோ?
இந்தக் கேள்வியை நீங்க கேட்பீங்கனுதான் கையோடு பட்டியலைத் தயாரா வைச்சிருக்கேன்!
எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. சாயங்காலம் வந்து பாக்கறேன்! சொன்ன மாதிரி அம்மா குடித்தனம் பண்ணின நாட்கள்ல பஞ்சமே இருக்கலை. உன் கைக்கு பொறுப்பு வந்த பின்னால வீடு தள்ளாடுது ரொம்பவும். ஏன்னே தெரியலை எனக்கு!
உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கலாமா நான்?
என்னா?
என்னை விமர்சிக்க, என் குடித்தனத்தைக் கண்டிக்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு. அதை உங்க அம்மா முன்னால தயவு செஞ்சு செய்யாதீங்க!
ஏன்? அம்மாவைப் பிரிச்சுப் பாக்கற?
புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்! அத்தையை நான் பிரிக்கலை. என்கிட்ட உள்ள நல்லதை நீங்க சொல்லும் போது அத்தை அதை ரசிக்கறதில்லை. தவறுகளை நீங்க விமர்சிக்கும் போது, அதை லென்ஸ் வச்சு பல மடங்கு பெரிசு பண்றாங்க. இந்தப் போக்கு நம்ம மத்தில விரிசலை உண்டாக்கும். அதை நான் விரும்பலை!
மோகன் அவளை முறைத்து விட்டு, சரிசரி! சாயங்காலம் பேசிக்கலாம். துண்டு விழற பட்ஜெட்டை எப்படி சரிக்கட்டப் போறே?
தெரியலை! ஆபீஸ்ல ஏதாவது அட்வான்ஸ் போட முடியுமானா பாக்கறேன். நீங்க புறப்படுங்க!
மோகன் வெளியே வந்து, பைக்கை உதைத்தான்.
என்னங்க!
சொல்லு!
ஆபீசுக்கு தினசரி வண்டியை எடுக்கணுமா?
ஏன்?
போக்குவரத்துல விபத்து பயம் ஒண்ணு! பெட்ரோல் செலவு ரெண்டு. கட்டுப்படுத்தலாம் இல்லையா?
பஸ்ஸுக்கு நிக்க எனக்குப் பொறுமை இல்லை. நான் வர்றேன்!
போய் விட்டான்.
சரோ உள்ளே வந்தாள்.
டிசம்பர் மாதம் ஒரு நாள் லீவு பாக்கியிருந்தது என்பதால் அன்று அதைப் போட்டு விட்டாள் சரோஜா!
வீட்டைச் சுத்தப்படுத்தும் வேலை பாக்கியிருந்தது. அங்கங்கே ஒட்டடை இருந்தது.
மாமியார் எதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி வைக்க மாட்டார்.
வயதானவர். அதனால இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவிடவும் முடியாது.
வேலைக்குப் போகும் நாட்களில் இடுப்பு விட்டுப்போகும். காலை நாலு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்தால், எட்டரை மணிக்கு அலுவலகம் புறப்படுவதற்குள் நிற்க நேரமிருக்காது. சமையல் முடித்து, குழந்தை அசோக்கை தயார் செய்து, அவனுக்கு யூனிஃபார்ம் போட்டு, அவன் புத்தகங்களை எடுத்து, எட்டே காலுக்கு வரும் ரிக்ஷாவில் அவனை ஏற்றி விட்டு வருவதற்குள், அது எங்கே இது எங்கே என்று மோகன் பறக்கடித்து விடுவான்.
எட்டரைக்கு வாசலில் ஹாரன் அடித்து விடுவான் மோகன். சாப்பிடக்கூட நேரமிருக்காது.
அள்ளி ஒரு வாய் போட்டுக் கொண்டு, அவசரமாக சேலையைச் சுற்றிக் கொண்டு, பைக்கில் போய் தொற்றிக் கொள்வாள். அலுவலகம் போய்ச் சேர்ந்ததும் அப்பாடா என்றிருக்கும்.
அது தனியார் நிறுவனம்.
மண்டல அதிகாரியின் செயலாளர் சரோஜா. அதனால் வேலை நிறையவே இருக்கும்.
மாலை ஐந்தரை வரை அலுவலகம்.
அது முடிந்து, வரும் வழியில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு, பஸ் படித்து வீடு வரும் போது ஏழாகி விடும்.
வந்ததும் சமையல்.. ராத்திரிக்கு..
குழந்தைக்கு பாடம்..
ஊறப் போட்ட அரிசி, உளுந்து க்ரைண்டரில்.
படுக்க வரும் போது மணி பத்தரை!
கண்களில் மின்னல் தெறித்து விடும்.
ஓரோர் சமயம், இந்த எந்திர வாழ்க்கை அவசியம் தானா என்ற ஆதங்கம் பீறிட்டுக் கொண்டு புறப்படும்.
எதற்காக இப்படி ஓடுகிறோம் என்று கூடத் தோன்றும்!
உள்ளே வந்தவள், மெல்ல ஒட்டடை அடிக்கத் தொடங்கினாள்.
பாதி அடிக்கும் போது மாமியார் வருவது தெரிந்தது.
அத்தே நீங்க இன்னும் ஒரு மணி நேரத்துக்கு உள்ளே வர வேண்டாம். உங்களுக்கு தூசி அலர்ஜி!
சரி!
மாமியார் போய் விட்டார்.
போன வருடம் தான் இந்த ஃப்ளாட்டை வாங்கினார்கள். இதற்கு சரோஜா பட்டபாடும், நடத்திய போராட்டமும் கொஞ்ச நஞ்சமல்ல!
மோகன் லேசில் சம்மதிக்கவல்லை.
அவனை சம்மதிக்க விடாமல் அம்மாவும், உடன்பிறப்புகளும் நடத்திய யுத்தத்தில் புகுந்து போராடி சரோஜா ஜெயிப்பதற்குள் பெரிய அக்னிப் பரீட்சையே நடந்து முடிந்தது.
அதை நினைத்தால் இப்போது கூட சரோஜாவுக்கு சுவையாக இருக்கும். இந்த வீட்டைக் கட்டுவதற்கு முன்னால் கூட மாமியாரின் கையில் தான் குடும்பம் இருந்தது.
சரோஜா தான் ஒரு நாள் மோகனிடம் தொடங்கினாள்.
என்னங்க!
சொல்லு சரோ!
உங்களுக்கு என்ன சம்பளம்?
பிடித்தம் போக ரெண்டாயிரத்து முன்னூறு ரூபா வரும்!
எனக்கு?
கிட்டத்தட்ட அதே தொகை வரும்!
நமக்கு இப்ப என்ன வயசு?
ஏன் கேக்கற?
பதில் சொல்லுங்க!
உனக்கு முப்பது.. எனக்கு அஞ்சு வயசு கூட!
நாலு வயசுல நமக்கு ஒரே ஒரு குழந்தை. அவனுக்காக என்ன செய்யப் போறம் நாம?
என்ன செய்யணும்? வீட்டுக்கு டீவி வாங்கியாச்சு. பிரிட்ஜ் இருக்கு. எங்கிட்ட வண்டி இருக்கு. ஓரளவு நல்லாத்தானே இருக்கம்?
இந்த வீட்ல எத்தனை பேர்?
நீ, நான், குழந்தை, எங்கம்மா - தங்கச்சி அஞ்சு பேர் தான்!
வீட்டுச் செலவு என்னாகுது?
யாருக்குத் தெரியும்?
சம்பாதிக்காத உங்களுக்கு அது தெரிய வேண்டாமா?
அம்மாவை கணக்கு கேக்கச் சொல்றியா?
தப்பில்லீங்க! கணக்கு அத்தை சொல்லணும்னு இல்லை. நமக்கே தெரியும். நமக்கு வர்ற நாலாயிரத்துச் சொச்சத்துல மூவாயிரம் கூட செலவாகாது. மீதி ஆயிரத்து ஐநூறுக்கு மேல வரும். அதை லோனா கட்டினா, நம்மால சொந்தமா ஒரு வீடு வாங்க முடியாதா? இப்பக் கட்டற வாடகையும் நமக்குக் கடன் அடைக்க உதவாதா?
அதிகபட்சம் எழுபத்தஞ்சு சதவீதம் லோன் தான் கிடைக்கும் சரோ!
சரி!
மீதி இருபத்தஞ்சு?
என் நகைகளை வித்துருங்க! ஏதாவது கவரிங் வாங்கிப் போட்டுக்கறேன் நான்!
நல்ல யோசனை தான். இது எனக்கேன் தோணலை?
நான் சொல்ற எதையும் நீங்க காதுல போட்டுக்கறதில்லைனு ஆன பின்னால, என்ன எடுபடும்?
தவிர அம்மாவோட பென்ஷன், வித்யா சம்பாதிக்கிற பணம் ரெண்டும் இருக்கு சரோ!
அதை நான் கணக்குல எடுக்கலை!
ஏன்?
அத்தையோ பென்ஷனைத் தொட நமக்கு உரிமையில்லை. வித்யா இந்த வீட்டுக்கு நிரந்தரமில்லை. நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப் போக வேண்டிய பொண்ணு!
அதுவும் நிஜம்தான்!
நாளைக்கே இது தொடர்பான நடவடிக்கைல நீங்க இறங்கறீங்க!
சரி.. சரோ!
மறுநாள் காலையில அம்மாவிடம் பேச்சை எடுத்து விட்டான் மோகன்.
சொந்த வீடா.. அதுக்கெல்லாம் என்ன செலவாகும்?
"ஒரு மாதிரி