Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kurai Ondrumillai
Kurai Ondrumillai
Kurai Ondrumillai
Ebook134 pages1 hour

Kurai Ondrumillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603459
Kurai Ondrumillai

Read more from Devibala

Related to Kurai Ondrumillai

Related ebooks

Reviews for Kurai Ondrumillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kurai Ondrumillai - Devibala

    http://www.pustaka.co.in

    குறை ஒன்றுமில்லை

    Kurai Ondrumillai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    என்னங்க! இதப்பாருங்க! - இந்தப் பையன் எம்.பி.ஏ. முடிச்சிட்டு வெளிநாட்ல இருக்கான். மாசச் சம்பளம் கிட்டத்தட்ட நாலரை லட்சம்! நாலு வருஷங்களா அங்கியே வேலை பாக்கறானாம்! ஜாதகத்தை நெட்ல டவுன் லோட் பண்ணி, நம்ம ஜோசியர்கிட்ட எடுத்துட்டுப் போனேன். ஒன்பது பொருத்தம் அற்புதமா சேர்ந்திருக்கு. பையனுக்கு பணம் கொழிக்குமாம்! இப்ப குருதசை நடக்குதாம்! எட்டு யோகங்கள் இருக்காம்! இப்ப கஜகேசரி யோகமாம். பேசிடுங்க!

    மூச்சு விடாமல் திலகா சொல்ல,

    நீ பேசிட்டியா? இனி எனக்கு பேச அனுமதி உண்டா?

    என்னங்க!

    இது நம்ம பொண்ணுக்கு பாக்கற எத்தனாவது வரன்?

    எண்ணலை?

    அந்த அளவுக்கு கரை கடந்தாச்சு! முதல்ல இதையெல்லாம் அவகிட்ட சொல்லு! நெட்ல மேட்ரி மோனியலை ஓப்பன் பண்ணி, அவளைப் பார்க்கச் சொல்லு!

    எதுக்கு டென்ஷன் படறீங்க?

    திலகா! கல்யாணம் அவளுக்கு! அவ விருப்பம் முக்கியம். கண்ணை மூடிட்டு எல்லா வரனையும் ரிஜக்ட் பண்றா! அப்படி இருக்க, நம்ம பேச்சு எடுபடலை! அவ ஒரு பெரிய பட்டியல் வச்சிருக்கா! அதெல்லாம் ஓக்கே ஆகணும்! இது வரைக்கும் இருபத்தி நாலு பசங்க வந்தாச்சு! அவகிட்ட பதில் இல்லை. நான் இந்த ஆட்டத்துக்கு இல்லை திலகா!

    - தேவிபாலா

    ஏன் கோவப்படறீங்க? இது நம்ம காலம் இல்லை! நிறைய மாறியாச்சு! இவளும் எம். பி.ஏ. படிச்சிருக்கா! மாசம் ரெண்டரை லட்சம் சம்பாதிக்கறா! நாலு தடவை வேலை நிமித்தமா வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தாச்சு! அழகா இருக்கா! கார் ஓட்டறா! எட்டு மொழிகள்ல புலமை! எல்லாம் தெரியும். தகுதிகள் இருக்கும் போது தலையாட்ட மாட்டாங்க! புரியுதா?

    அது நிஜம்தான். எந்தத் தகுதியும் இல்லாதவங்களே புருஷன் பேச்சை மதிக்கறதில்லையே!

    நீங்க யாரைச் சொல்றீங்க?

    சத்தியமா உன்னை இல்லைம்மா! நீதான் என்னோட அ…தர்மபத்தினியாச்சே!

    என்ன சொன்னீங்க?

    உன் சமையலை சாப்பிட்டு அமர்க்களம், அட்டகாசம், அசத்தல்னு 'அ' போட்டுப் பேசினா, வாய் முழுக்க பெரிசாகுது! இப்ப ஒரே ஒரு 'அ' போட்டுப் பேசினா அது தப்பா?

    நீங்க 'அ' போட்டா, நான் 'ஓ' போடுவேன்!

    என்னடி சொல்ற? கெட்ட வார்த்தையா? நீயுமா?

    கர்மம்! புத்தி போகுதே! நான் 'ஓ'ன்னு சொன்னது ஓஹோ!

    யம்மா! இப்பத்தான் மூச்சே வந்தது எனக்கு! சொல்லி விட்டு வாய்விட்டு வாசு சிரிக்க, திலகாகடுப்பாகி விட்டாள். அவர் சிரிப்பை அடக்காமல் வயிறை பிடித்துக் கொண்டு சிரித்தார்!

    போதும்! எனக்கு நிறைய வேலை இருக்கு!

    இரவு உணவைத் தயாரிக்க திலகா உள்ளே போக, வாசு தன் லேப்டாப்பில் போய் உட்கார்ந்தார்.

    வாசுவுக்கு அரசாங்க உத்தியோகம்! உள்துறையில் ஒரு உயர் அதிகாரி! திலகா பேங்க் உத்தியோகம். இரண்டு பிள்ளைகள். மூத்தவன் வருண். எம்.டெக். முடித்து, வெளிநாட்டில் உத்தியோகம். இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு ஜெர்மனிப் பெண்ணைக் காதலித்து கல்யாணமும் முடித்துக் கொண்டு, இங்கே வந்து இறங்கினான்.

    திலகா பிள்ளை பற்றி ஆயிரம் கனவுகள் சேமித்து வைத்திருந்தாள். உறவுக்காரப் பெண்ணை கண் வைத்திருந்தாள். அவர்களும் தயாராக இருந்தார்கள். எதுவும் எடுபடாமல் வருண் தன் வாழ்வை தானே முடிவு செய்ய, திலகா அழுது தீர்த்தாள்.

    முதல் இரண்டு நாட்கள் அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை!

    தங்கை ஓவியா அதைப் பொருட்படுத்தவேயில்லை!

    அப்பாவிடம் வந்த வருண், நான் அவளை காதலிச்சேன். அவளுக்கும் விருப்பம்தான்! என் வாழ்க்கை இது! நான் தேர்ந்தெடுத்தா என்னப்பா தப்பு? என்றான்.

    தப்புனு சொல்லலைடா! ஆனா உன்னைப் பெத்து வளர்த்து, படிக்க வச்சு, இந்த நிலைக்கு நீ வர யாருப்பா காரணம்? பெத்தவங்களும் முக்கியம்தானே! அட, ஒரு வார்த்தை சொல்லிட்டு நீ செஞ்சிருந்தா நாங்க தடுப்போமா! கல்யாணத்துக்குக் கூட எங்களைக் கூப்பிடாம, அந்த அளவுக்கு நாங்க அந்நியமாயிட்டமா வருண்?

    புரியுதுப்பா! தப்புதான். சூழ்நிலை அப்படி!

    என்னடா சூழ்நிலை?

    ஒரு ஜெர்மன் பெண்ணை மருமகளா ஏத்துக்கற மனப்பக்குவம் நிச்சயமா அம்மாவுக்கு இருக்காது! அம்மா உங்க மனசை மாத்திடு வாங்க. எதிர்ப்போட என் வாழ்க்கை தொடங்கறதை நான் விரும்பலை! அவளுக்கு சென்டிமென்ட் அதிகம்பா!

    எங்க சென்டிமென்டுக்கு என்ன மரியாதை!

    விடுங்கப்பா! நடந்து முடிஞ்சாச்சு! நானும் அடுத்த வாரம் புறப்படறேன். இருக்கற நாலு நாள்ல அன்பா இருக்கக் கூடாதா? அம்மாவை பேசச் சொல்லுங்க!

    அவர் திலகாவிடம் வந்தார்.

    எல்லாம் நான் கேட்டேன்! அவளை ஏத்துக்க நான் தயாரா இல்லை!

    திலகா! இதுல ஏத்துக்கற பிரச்சினைக்கு இனி இடமே இல்லை! நீ ஒப்புக்கிட்டாலும் அவ உன்னோட இருக்கப் போறதில்லை! இருக்கற நாலு நாள்ல சிரிச்சுகிட்டு இரேன்!

    என் பிள்ளையை எங்கிட்டேயிருந்து பிரிச்ச அவளை நான் மன்னிக்கவே மாட்டேன்!

    ஓவியா குறுக்கே வந்தாள்.

    இதப்பாரு! உளர்றதை நிறுத்து! உன் மன்னிப்புக்காக காலடில அவங்க காத்துக் கிடக்காங்களா! இல்லை, உன்னோட இந்த வீட்ல இங்கே இருக்காங்களா?

    நிறுத்துடி! என் பிள்ளை பணத்துக்கு விலை போயிட்டான்!

    அவகிட்ட என்ன இருக்குனு உனக்குத் தெரியுமா? முதல்ல அவ பேரை நாம கேட்டமா! அம்மா! இது அவனோட வாழ்க்கை! அவன் முடிவு பண்ணிட்டான்! காலம் முழுக்க உன் முந்தானையை புடிச்சிட்டு வாழப் போறானா? உள்ளூர் மருமகள் வந்தாலும் அதை செய்ய போறதில்லை! அவன் எனக்கு அண்ணன். இந்த நாலு நாள் நான் லீவு போட்டுட்டு ஜாலியா அவங்க கூட இருக்கப்போறேன்! அப்பா! நீயும் வா!

    அவரும் சேர்ந்து கொண்டார்.

    கார் வைத்திருந்தார் வாசு! ஓவியா நன்றாக ஓட்டுவாள்.

    நான்கு நாட்களும் சந்தோஷமாக இருந்தார்கள்.

    ஊர் சுற்றுதல், கடைகள், ஓட்டல் என வெளுத்து வாங்கினார்கள்.

    அந்த ஜெர்மன் பெண் அழகான ஆங்கிலம் பேசினாள்.

    பார்க்கவும் பளிச்சென இருந்தாள்.

    அந்த ஊரின் மிகப்பெரிய கோடீஸ்வரி. அவள் அப்பா பிஸினஸ்மென். ஒரே மகள்!

    இவனது புத்தியும் அழகும் வசீகரிக்க, காதலித்து நடந்த கல்யாணம்!

    அவளது கம்பெனி நிர்வாகம் முழுக்க இப்போது வருண் கையில். சரளமான பணப்புழக்கம்!

    ஓவியாவை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது!

    ஓவியாவுக்கு தங்க, வைர நகைகள், ஏராளமான துணிமணிகள், எலக்ட்ரானிக் அயிட்டங்கள் என கிட்டத்தட்ட எண்பது லட்சத்துக்கு வாங்கித் தந்தாள்.

    இதை ஆண்ட்டிக்கு குடு! என திலகாவுக்கும் நிறைய பொருட்கள்.

    நட்சத்திர ஓட்டலில் உணவு!

    வாசுவுக்கு லேப்டாப், கடிகாரம், செல்போன் என வாங்கிக் குவித்தாள்.

    நாளை அவர்கள் புறப்பட வேண்டும்!

    "அம்மா! இன்னிக்கு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1