Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabalipurathu Arpangal!
Mahabalipurathu Arpangal!
Mahabalipurathu Arpangal!
Ebook211 pages1 hour

Mahabalipurathu Arpangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303437
Mahabalipurathu Arpangal!

Read more from Bakkiyam Ramasamy

Related to Mahabalipurathu Arpangal!

Related ebooks

Related categories

Reviews for Mahabalipurathu Arpangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabalipurathu Arpangal! - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    மகாபலிபுரத்து அற்பங்கள்!

    Mahabalipurathu Arpangal!

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நட்பா, காதலா, காமமா?

    கச்சேரி நிச்சயம்

    கோபமா? தாபமா?

    வீட்டுக்குள் மழை!

    உஸ் உல்லாசமா!

    பேசவல்லாயோ 'போனே'!

    நாகமணியா, கொக்கா?

    புடலங்காய்க் கூட்டு

    அடுத்த வீட்டு அரசியல்

    ஸ்தல புராணம் !

    நீலா, நீலா, வா! வா!

    கலாட்டா

    மோதிர மோகம்

    மகாபலிபுரத்து அற்பங்கள்!

    கல்யாணமே! வைபோகமே!

    குழந்தை பிடிக்க...

    நிறுத்து கல்யாணத்தை!

    எதிர் வீணை

    நட்பா, காதலா, காமமா?

    சரண்யா: நமக்குள்ளே ஏற்பட்டிருக்கறதுக்குப் பேரு, நட்பா, காதலா, காமமா, பாசமா, ஜீவ காருண்யமா, ஒண்ணும் புரியலே. இன்னைக்கி ஸ்கான் பண்ணிப் பார்த்துடுவோம். என்ன சொல்றே தனஞ்சய்?

    தனஞ்சயன்: செய்.

    சரண்யா: முதலில் நட்பை எடுத்துக்கலாம். நீயும் நானும் நண்பர்களா?

    தன: வெரிமச்.

    சர: நட்புக்கு இலக்கணமென்ன?

    தன: உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

    சர: அப்படீன்னா?

    தன: குறள் புரிந்து கொள்ளாத தமிழச்சியோடு பேசறது அவமானம். இருந்தாலும் நீ என் காதலிங்கறதாலே பேசறேன். அதாவது... இப்போ, என் வேட்டி-ஐ மீன்-பாண்ட்- தடால்னு அவிழ்ந்து விழுந்துட்டுதுன்னு வெச்சுக்கோயேன். உடனே என் கை என்ன செய்யும்.

    சர: சட்டுனு என் மேலாக்கை இழுத்து மேலாக்கால் உங்க இடுப்பைச் சுத்திக்கொண்டு விடும். பீச் ஆச்சே. பாவம் அம்மணமா எப்படி உட்கார்ந்து கொண்டு என்னோடு பேசுவீங்க?

    தன: நான் உனக்கு விளக்கறதுக்காகச் சொன்னேன். அதாவது ஒருத்தரது இடுக்கண்ணை-துன்பத்தை உடனே களையறதுக்கு-அதாவது நீக்கறதுக்குப் பேர்தான் நட்பு. வேட்டி அவுந்து போச்சுன்னா கை எப்படி உடனே வந்து அதைப் பிடிச்சுக்கறதோ அப்படி ஒரு துன்பம் வந்ததும் ஓடிவந்து ஹெல்ப் பண்றது தான் நட்பு.

    சர: ஐ பெக் டு டிஃபர். எங்க அம்மா தெலுகு, அப்பா கன்னடம். வாட்டல் விஸ்வநாதராவ்.

    தன: இப்படி ஒரு பன்மொழிப் பாவையையா ஞான் காதலிக்கணும். எண்ட குருவாயூரப்பா.

    சர: முதல்லே நட்பு. தனஞ்சய். நம்ம உறவு நட்பு உறவா? ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ். அதானா?

    தன: உனக்கு வந்த இடுக்கண்ணை உடனே களைஞ்சிருக்கேனா? (யோசித்து) ஹாங்! அன்னைக்கு ஒருநாள் மானேஜர் உன்னைக் கபால்னு வளைச்சிகினார்...

    சர: ஏமி நான்ஸென்ஸ் ஹேளுதேபா? மானேஜர் வளைக்கவுமில்லே. நிமிர்த்தவுமில்லே.

    தன: அட! ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். ப்ரோக்ராமை முடிச்சுக் கொடுத்துட்டுத்தான் கம்ப்யூட்டர் ரூமிலிருந்து வெளியே போகணும்னு உன்னை அந்த ரூமிலிலேயே வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாரில்லையா? நான் உடனே அந்த ரூமுக்கு வேற சாவி போட்டுத் திறந்து கொண்டு, உன்கூட ராத்திரி ஒன்பது மணிவரை இருந்து ப்ரோக்ராமை முடிச்சுக் கொடுத்தேனே... அது இடுக்கண் வந்தபோது உதவினதுதானே. அதனால் நம்ம உறவு நட்புதான்.

    சர: உடனே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாது.

    தன: ஏன்?

    சர: ஒன்பது மணிவரை இருந்ததோமில்லையா? எண்ட்டு கண்ட்டாகே உங்க ஸ்கூட்டரிலே ஒட்டல் பாஞ்சாலிக்குப் போய்ச் சாப்பிட்டு வந்தோமே?

    தன: எஸ். ப்ரொஸிட்.

    சர: நீங்க சொன்னீங்க. கெட்டியா இறுக்கிப் பிடிச்சிக்கோ. விழுந்திட்டியானா அம்பேலாயிடும் உன் புரோக்ராம்னீங்க. நான் உங்களைப் பின்னாலேயிருந்து இறுக்கிப் பிடிச்சுக் கொண்டேன்.

    தன: நான் சொன்னதைச் சரியா நீ காதில் வாங்கிக்கலை. இறுக்கிப் பிடிச்சிக்கோன்னு சொன்னேனே தவிர, 'என்னை'ன்னு சொன்னேனா? ஸ்கூட்டர் பின்னாலே கம்பி இருந்ததே, அதை என்கிற அர்த்தத்திலும் சொல்லியிருக்கலாமில்லையா?

    சர: சரி. நான்தான் தப்பாப் புரிஞ்சுக்கொண்டு உங்களைப் பிடிச்சுக் கொண்டேன். உடனே நீங்க, 'ஏமிதி? நெனு மாது கொத்தில்லுவா? கம்பியைப் புடீன்னா ஆளைப் புடிக்கிறியே'ன்னு ஏன் சொல்லலை? நான் உங்களை இறுக்கிப் பிடிச்சுக் கொண்டபோது உங்களுக்கு ஏதோ ஒரு சுகம் ஏற்பட்டிருக்கு. அதை நீங்க இழக்க விரும்பலே. அப்படித்தானே? அந்தச் சுகத்துக்குப் பேரு நட்பா.

    தன: தெரியலையே.

    சர: ஒரு ஆண் நண்பன் உங்களைக் கட்டிக்கறப்போ, உங்க மனசிலே கிளுகிளுப்பு ஏற்படுமா?

    தன: நாம இப்ப நட்பைப் பற்றிப் பேசறோம்! காதலைப் பற்றியில்லே.

    சர: என்னை மட்டும் ஸ்கூட்டரிலே அன்னைக்கி ராத்திரி கூட்டிட்டுப் போனீங்களே. ஏன்?

    தன: சாப்பிடாமல் நீ பசியோடிருப்பாயே என்ற ஜீவ காருண்யமாக இருக்கலாம்.

    சர: யார் பட்டினியாக இருந்தாலும் உங்க மனசிலே இப்படி ஜீவகாருண்ய ஊற்று சொர்ர்ர்னு சுரக்குமா?

    தன: ஊஹும். எங்க ஆபீஸ்லே சந்துருன்னு ஒருத்தன். மத்தியானம் டிபன் கொண்டு வரமாட்டான். வசதியில்லே-பன்னெண்டு பேர் குடும்பம். அப்பா குடிகாரர், சீட்டாட்டம்னு கெட்டப் பழக்கம். நடந்தே தான் வருவான்.

    சர: சரி. அவனை நீங்க தினமும் ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போவீங்களா, ஸ்கூட்டர் பின்னாலே உட்கார வெச்சு,

    தன: ஒரு நாள்கூடக் கூட்டிப் போனதில்லை.

    சர: அப்போ, ஜீவகாருண்யம் அடிபட்டுப் போகிறது.

    தன: நம்ம தொடர்பு, நட்புமல்ல, ஜீவகாருண்யமு மல்ல. சபாஷ் அடுத்தது காதலான்னு பார்க்கலாம். ஆனால் ரொம்பக் களைப்பாக இருக்கு-இன்னொரு நாள் அதைப் பற்றிப் பேசலாமே?

    சர: சப்போஸ், இப்போ நான் உங்களுக்கு ஒரு முத்தம் தர்றேன்னு வெச்சுக்குங்க, அப்போ உங்கள் களைப்பு போயிடுமா?

    தன: நீ தராமலே எப்படிச் சொல்ல முடியும்?

    சர: ஊகமாச் சொல்லுங்களேன். முத்தம் கொடுத்தால்-நாம காதலர்கள் என்று ஊர்ஜிதமாகி விடும். சகோதர சகோதரி பாசம் கூட இருக்கலாமில்லையா?

    தன: சிவ! சிவ! அந்த வார்த்தையைச் சொல்லாதே. எப்போ, 'முத்தம் கொடுத்தால்?'னு நீ கேட்டியோ அப்பவே என் சகோதரி இல்லேன்னு ஆகிவிட்டது. இப்போ எஞ்சுவது-காமமா, காதலா? நம்ம உறவு காமமா, காதலா, என்பதுதான்.

    சர: கரெக்ட். உங்க வயசென்ன?

    தன: இருபத்தேழு. உன் வயசு?

    சர்: ஆட்டோ பின்னாலே எழுதியிருக்குமே, அதைக் கடந்து இரண்டு வருஷமாகிறது.

    தன: அதாவது கவர்மெண்ட்டால் நியமிக்கப்பட்ட பெண்ணின் திருமண வயசாகிய 21-ஐத் தாண்டி-இரண்டு வருஷமாகிறது. நான் கேட்க ஆசைப்படுகிறேன்-இந்த அரசாங்கத்தை-திருமண வயசு 21 என்று நிர்ணயித்தீர்களே, அதற்கு முன்னதாகத் திருமணம் செய்தால் தண்டனை என்று மிரட்ட உனக்கு உரிமை இருக்கிறது, சட்டமிருக்கிறது. சாத்திரம் இருக்கிறது. எல்லாமிருக்கிறது. ஆனால் 21 வயசு தாண்டித் திருமணம் செய்யாவிட்டால் தண்டிக்க சட்டத்தில் வழி வகை செய்திருக்கிறாயா? இருபத்தொரு வயது தாண்டி-ஏன்-முப்பத்தொரு வயது தாண்டிய இளம் பெண்கள் எத்தனை பேர் திருமணமாகாமல்-புதுக் கவிதைகளை ரசித்துக்கொண்டு பொல பொலவெனக் கண்ணீர் உகுத்தவாறிருக்கின்றனர்? அந்தக் கன்னிகளின் கண்ணீரைக் கொண்டு ஒரு பயிர் செய்ய முடியுமா? ஏன் அதை அந்த அரசு தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறது? கடல் உப்புக் கரிக்கிறது. ஏன்? கன்னிகளின் கண்ணீரால் தான்.

    சர: மிஸ்டர். மிஸ்டர், உணர்ச்சிவசப்பட்டுப் பிரசங்கி ஆயிட்டீங்களே.

    தன: ஸாரி சரண், தனி ஒரு பொண்ணுக்குத் திருமணமில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்னு ஆத்திரமா வருது. உதாரணம் உனக்குப் பாரேன். நீ எத்தனை அழகு... குணம்-சர்க்கார் நியமித்த வயசு தாண்டி இரண்டு வருஷம் ஆகியும் கல்யாணமாகாதிருக்கிறது. ஐயோ, இதைவிட இந்த நாட்டுக்கு ஒரு அவமானம் அவசியமா? சர்க்காரால் விதிக்கப்பட்டு, எல்லா ஆட்டோ பின்னாலும் எழுதப்பட்ட கல்யாண வயசையும் தாண்டி இந்த இரண்டு வருஷமாக உன் மனசிலே ஓர் ஆணுக்காக நீ ஏங்கி வந்துகிட்டிருக்கே.

    சர: அசிங்கமா பேசாதீங்க. நான் கூடக்கீட இல்லே. அனந்து பக்கத்து வீட்டுப் பையன் பாவம். மூக்கு ஒழிகிண்டு நல்ல பிள்ளை, என் பாவாடையாலே மூக்கைத் துடைச்சிக்கறதுக்காக சமத்தா வந்து பக்கத்துலே நிக்கும்-சின்ன வயசுல.

    தன: நாலு பொம்மனாட்டிச் சிறுமிகள் விளையாடினால் ஒப்புக்குச் சப்பாணியா ஒரு ஆம்பிளை பிள்ளையையும் கூட்டிப்பாங்க. ஆழ்ந்து பார்த்தால் இதெல்லாம் சின்ன வயசிலேயே... அதாவது ரொம்பச் சின்ன வயசிலேயே மனசுக்குள்ளே காமம் மூளைச்சிடறதுங்கறதுக்கு சாட்சி.

    சர: ஆக... நமக்குள்ளே இருக்கற உறவு காமம்தான்னு சொல்றீங்க.

    தன: நோ, நோ! காமம் இருக்கறவர்கள்னா, நாம எப்போ ஒழுக்கம் தவறியிருக்கோம்? கிடையாது. ஏதோ அரசல் புரசலா சில சமயம் உன் உடம்பு என்மேலே உரசியிருக்கலாம். ஒரு நாளாவது ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சினிமாவுக்குப் போயிருக்கமா? கிடையாது. தனிப்பட்ட முறையிலும் கூட ஒரு ப்ளுஃபிலிம் கடப் பார்த்ததில்லே.

    சர: நானும்தான்.

    தன: சரி. நாம காமம் பிடித்தவர்களா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? ஏதாவது ஒரு ப்ளூஃபிலிம் போட்டுப் பார்த்தால் தெரிந்து போகிறது.

    சர: அது எப்படித் தெரியும்?

    தன: சினிமாவிலே ரெடி ரெக்கனர் மாதிரி காட்டறாங்களே, மழையிலே ஏதாவது மலைப் பக்கமாக காதலர்கள் சிக்கிக் கொள்வார்கள். அங்கிருக்கிற மலை ஜாதிக்காரப் பெண்களும் ஆண்களும் ஆபாசமாக ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு ஏதாவது டான்ஸ் ஆடுவார்கள். அரைகுறை டிரெஸ், எரிகிற நெருப்பு, குளிரான குளிர், மியூஸிக்கான மியூஸிக். உரசலான உரசல், முக்கலான முக்கல். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு காதலனும் காதலியும் தங்கள் அறைக்கு வந்ததும் ஒருத்தரையொருத்தர் பார்த்துகிட்டே, மெதுவா விரலைத் தொட்டு, தோளைத்தொட்டு, கழுத்தையெல்லாம் போலீஸ் நாய் மாதிரி மோந்து பார்த்துட்டுக் கடைசியிலே ஒருத்தர்கிட்டே ஒருத்தர் உடலைக் கொடுத்துக் கெட்டே போயிடுவார்கள்.

    சர: அந்தக் 'கெட்டே' என்கிற வார்த்தைதான் எனக்குப் புரியமாட்டேன் என்கிறது, ஒரு பொண்ணு எப்போ கெட்டுப் போறாள்.

    தன: என்னைக் கேட்டால்?

    சர: நான் கேட்டதற்குப் பதில், ஒரு பெண்ணைக் கெட்டுப் போனவள்னு எப்ப சொல்றாங்க?

    தன: கல்யாணத்துக்கு முன்னாடியே கணவனல்லாத வேற யார்கூடவாவது வெச்சிகிட்டிருந்தால் கெட்டுப் போனவள்னு சொல்லலாமா?

    சர: சரி. கல்யாணம் இன்னும் ஆகலை-உடல் உறவு வெச்சுக்கொண்டுவிட்டாள். மூணு மாசம் கழிச்சு அவனோடேயே கல்யாணம் நடக்கிறது. அப்போ?

    தன: அந்த மூணு மாசத்துக்கு அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டாளானால் அவள் கெட்டுப் போனவள்னு ஆகாது.

    சர: சரி. மூணு மாசத்துக்கு ரெண்டு நாள் இருக்கும் போது அந்தப் பையன் செத்துப் போயிட்டான். அவள் வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கலை. அப்போ அவள் கெட்டுப் போனவளா,...?... போனவளா?

    தன: அவளைக் கெட்டுப் போனவள்னுதான் உலகம் சொல்லும்.

    சர: அதான் ஏன்?

    தன: பொம்பிளை பேச்சை உலகம் நம்பாது. அவன் கிட்டேதான் கெட்டாளா, வேறு யார் கிட்டேயும் கெட்டிருப்பாளோன்னு சந்தேகிக்கும்.

    சர: சரி. ஒரு ஆடியோ, ஒரு வீடியோ இதெல்லாம் தயார் பண்ணிட்டுத்தான் அவன் செத்திருக்கான். கோர்ட்டிலே வீடியோவைப் போட்டுப் பார்த்தால் ரெண்டு பேர் உறவும் தெரியறது. அப்போதுகூட அவள் கெட்டவளா?

    தன: இது ஒண்ணுதான் வீடியோவா எடுக்கப்பட்டிருக்கு. எடுக்கப்படாத வீடியோக் காட்சிகள் இவள் வாழ்க்கையில் எத்தனையோன்னு உலகம் பேசும்.

    சர: நீங்க சொல்றதைப் பார்த்தால், கல்யாணத்துக்கு முன்னாலே உடல் உறவு கொள்றது தப்புன்னு தெரியறது. சரி, உறவு வெச்சுக்கறாங்க. அப்பப்போ மாத்திரை

    Enjoying the preview?
    Page 1 of 1