Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavodu Sila Naatkal
Kanavodu Sila Naatkal
Kanavodu Sila Naatkal
Ebook74 pages29 minutes

Kanavodu Sila Naatkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'கனவோடு சில நாட்கள்' கூட சினிமாவின் பாதிப்பு கிராமப்புறங்களில் எப்படிப்பட்ட விளைவுகளை உண்டு பண்ணுகின்றன என்பதைத் தத்ரூபமாகச் சித்திரிப்பதாக அமைந்துள்ளது.

கிராமத்துக்கு வரும் ஒரு படப்பிடிப்புக்குழு, ஒரு சாதாரண இளம்பெண்ணின் மனத்தில் சினிமா நடிகையாகும் கனவை விதைத்து. என்ன பாடுபட வைத்து விடுகிறது என்பதை மகரிஷி சிறந்த சமூகப் பிரக்ஞையுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

சேலம் மாவட்ட மணம் கமழும் நேர்த்தியான நடையில் கதை செல்கிறது.

இதில் வரும் சின்னசேவிக் கவுண்டர், அவரது மகள் சின்னத்தாயி- சினிமா மோகத்தில் தன் பெயரை சித்ரா என்று மாற்றிக் கொண்டவள்- சித்ராவின் பாட்டி, தங்க துரையின் தங்கை தமிழ்மணி போன்ற பாத்திரங்களை மறக்கவே முடியாது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803426
Kanavodu Sila Naatkal

Read more from Maharishi

Related to Kanavodu Sila Naatkal

Related ebooks

Reviews for Kanavodu Sila Naatkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavodu Sila Naatkal - Maharishi

    http://www.pustaka.co.in

    கனவோடு சில நாட்கள்

    Kanavodu Sila Naatkal

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    மகரிஷி- தரமான நல்ல கதைகளை எழுதும் மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயரெடுத்தவர்.

    நான் 'தீபம்' இலக்கிய மாத இதழில் பணியாற்றிய காலங்களிலேயே அதில் வெளியான அவரது 'வட்டத்துக்குள் சதுரம்' போன்ற பல நல்ல குறுநாவல்களை வாசித்திருக்கிறேன். மூத்த எழுத்தாளரான அவரது நூலுக்கு முன்னுரை எழுதுவது எனக்குக் கிடைத்த ஓர் அரிய நல்வாய்ப்பு.

    எழுத்தில் வெற்றி பெற்ற பலரும் திரையுலகில் பிரவேசிக்க முடியவில்லையே என்று எண்ணுவதுண்டு. ஆனால், அந்த நாட்களிலேயே மகரிஷி திரையுலகிலும் கால்பதித்து, வெற்றியும் கண்டவர். அவரது பல நல்ல கதைகள் திரைப்படமாகியுள்ளன. 'பத்ரகாளி,' 'நதியைத் தேடிவந்த கடல்' போன்ற படங்களை மக்கள் நன்கறிவர்,

    இந்த நூலில் உள்ள 'கனவோடு சில நாட்கள்' கூட சினிமாவின் பாதிப்பு கிராமப்புறங்களில் எப்படிப்பட்ட விளைவுகளை உண்டு பண்ணுகின்றன என்பதைத் தத்ரூபமாகச் சித்திரிப்பதாக அமைந்துள்ளது.

    கிராமத்துக்கு வரும் ஒரு படப்பிடிப்புக்குழு, ஒரு சாதாரண இளம்பெண்ணின் மனத்தில் சினிமா நடிகையாகும் கனவை விதைத்து. என்ன பாடுபட வைத்து விடுகிறது என்பதை மகரிஷி சிறந்த சமூகப் பிரக்ஞையுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

    சேலம் மாவட்ட மணம் கமழும் நேர்த்தியான நடையில் கதை செல்கிறது.

    இதில் வரும் சின்னசேவிக் கவுண்டர், அவரது மகள் சின்னத்தாயி- சினிமா மோகத்தில் தன் பெயரை சித்ரா என்று மாற்றிக் கொண்டவள்- சித்ராவின் பாட்டி, தங்க துரையின் தங்கை தமிழ்மணி போன்ற பாத்திரங்களை மறக்கவே முடியாது.

    இந்த கதை நல்ல இலக்கிய அந்தஸ்துள்ளவை என்பதில் சந்தேகமில்லை. மகரிஷி தோட்டத்து மணமுள்ள மலர்கள் இவை.

    அன்புடன்

    கௌதம நீலாம்பரன்

    கனவோடு சில நாட்கள்

    மேட்டுப்பட்டி!

    சேலத்திலிருந்து ஆத்தூர் போகும் வழியில் காரிப்பட்டி மேட்டைத் தாண்டியவுடன் வரும் ஒரு சாலையோர கிராமம்.

    ஆத்தூர் நெடுஞ்சாலையில் நடுவில் இரண்டு பாகமாகப்பிரிந்து இருந்தது.

    தேன்மலை, ஜல்லூத்து மலை, உருண்டுக் கரடு சேத்துக் குட்டை ஏரி--இது வடபுறம்.

    எங்கு திரும்பினாலும், தக்காளிப் பயிர், கும்பல் கும்ப லாகத் தென்னந்தோப்பு, சாலையோரத்தில் அதிகமாக இடைவெளி விட்ட இரண்டு ஜவ்வரிசி ஆலை...

    அதன் கழிவு நீர் ஏற்படுத்தும் வயிற்றைக் குமட்டும் துர்நாற்றம்.

    எவ்வித கலவைகளும் இன்றி வெறும் மலைக் கற்களை மட்டும் அடுக்கி அமைக்கப்பட்ட கல்லுக்கட்டு காம்பௌண்ட். அதனுள் பின் தள்ளி இருக்கும் குடிசைக்கள். முன்புற விஸ்தாரமான வெளியில் வைக்கோல் போர். பூமியில் புதைக்கப்பட்ட கழனித் தொட்டிகள்.

    சாலையோரத்தில் சில கடைகள். அதிகமாக இருப்பது டீக்கடைகளே. நான்கைந்து டைலரிங் ஷாப், இரண்டு

    கீற்றுக் கூரையுடன் கூடிய பார்பர்ஷாப் ராயல் சலூன், இளங்கோ முடிதிருத்தகம்.

    வெற்றிலை பாக்குக் கடைகளில் நிறைய சினிமா சஞ்சி கைகள் தொங்கின.

    அது ஏற்படுத்திய பாதிப்பு.

    அந்த சின்ன கிராமத்தில் நிறையரஜனிகளையும் கமல்ஹாசன்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தன!

    'பாண்டியன் டிரஸ் மேக்கர்' என்ற பெயர்ப் பலகை. தொங்கும் அந்த டைலரிங் ஷாப், பத்தடிக்கு பத்தடி சதுரமான கடை. இரண்டு தையல் மிஷின்கள்- ஓடு வேயப்பட்ட மேல்கூரை. உட்புறம் சுவரெங்கிலும் ஏராளமான சினிமா சஞ்சிகைகளிலிருந்து கத்தரித்து ஒட்டப்பட்ட சினிமா படங்கள்.

    வாசலில் இரண்டு சின்ன பெஞ்சிகள் உண்டு. இளம் வாடிக்கையாளர்களைக் கவர அதே மாதிரி பத்திரிக்கைகள். மேலும் வெளியில் போடக் கூடாத பத்திரிக்கைகளும் அங்கே உண்டு. அதைக் கேட்பவர்களுக்கும் சங்கேதம் தெரியும்.

    துரை அத்த குடு ஒரு தபா பார்த்துட்டு தரேன்- என்று கேட்கும் இளைஞன், எதைக்கேட்கிறான் என்று துரை என்கிற தங்கத்துரைக்குத் தெரியும்.. கடையில் கீழே போடப்பட்டிருக்கும் கோரைப்பாய்

    Enjoying the preview?
    Page 1 of 1