Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatril Mithantha Padagu
Kaatril Mithantha Padagu
Kaatril Mithantha Padagu
Ebook121 pages48 minutes

Kaatril Mithantha Padagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803430
Kaatril Mithantha Padagu

Read more from Maharishi

Related to Kaatril Mithantha Padagu

Related ebooks

Reviews for Kaatril Mithantha Padagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatril Mithantha Padagu - Maharishi

    http://www.pustaka.co.in

    காற்றில் மிதந்த படகு

    Kaatril Mithantha Padagu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காந்தி மைதானத்து கூடைப்பந்தாட்ட தளத்தில் அரைநிக்கரும், பனியனும் அணிந்து இளம் தேன் சிட்டுகளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு...

    'ஸார்' - உங்களை துர்கா அம்மா வரச் சொன்னாங்க - பிருந்தாவின் பங்களாவில் வேலை செய்யும் வேலையாள் ஒருவன்...

    பயிற்சியை முடித்துக் கொண்டு அவன் பிருந்தாவின் பங்களாவுக்கு போனபோது பிருந்தா சக்கர வண்டியில் முன் வெராண்டாவில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்...

    'வாங்க ஸார் உட்காருங்க... துர்கா உங்களை அவசரமா பார்க்கணும்னு சொல்லிண்டு இருந்தா.... நீங்க வந்தால் உட்காரச் சொன்னாள். அவசரமாக வெளியே போயிருக்கிறாள்.'- என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பங்களா முன்கேட்டில் மடாடர் அரிங்கிரின் வேகமாக நுழைந்தது....

    கூடவே ஒரு வயசுப் பொண்ணும் இருந்தாள். டிரைவர் ஆசனத்திலிருந்து குதித்து இறங்கிய துர்கா முன் ஆசனத்தில் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்காக கதவைத் திறந்து விட்டாள்.

    துர்காவுடன் இறங்கிய பெண் பார்க்க ரொம்ப அழகாக இருந்தாள். முகத்தில் சிறு குழந்தையின் சாயல் இருந்தது. கண்களில் மருட்சி

    'வா ரம்யா தைரியமாக வா... ஏன் பயப்படுகிறாய்... வா...'

    மெதுவாகத் தயங்கித் தயங்கி நடந்த 'ரம்யா' என்கிற அந்தப்பெண்ணை கையைப் பிடித்து அழைத்து வந்தாள் துர்கா...

    'வாங்க விஷ்ணு.... இவ மேட்டரா உங்களை வரச்சொன்னேன்', என்ற துர்கா அந்த இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினாள், அவனுக்கு - எல்லோரும் பிருந்தாவின் பங்களா முன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர் - இவள் சமீபத்தில் எனக்கு அறிமுகமானவள். இவளுக்கு உங்களால் ஓர் உதவி ஆகவேண்டும்... வீட்டு வேலைக்காரப் பெண் ட்ரேயில் மூன்று சாசர்களில் டீ கொண்டு வந்து வைத்தாள்.

    'வெறும் டீ மட்டும் தானா இரண்டு மணி நேரமாக அறை நிக்கர் அணிந்த இளசுகளுடன் குதித்து விட்டு நேராக இங்கே வருகிறேன்.' - பரிதாபகரமாக துர்காவைப் பார்த்தான்....

    அவன் பார்வையில் உள்ள ஏக்கத்தை உணர்ந்த துர்கா...

    'நீலு டிபனை கொஞ்சம் சீக்கிரமாகக் கொண்டுவா...' என்றாள் - விஷ்ணுவைப் பார்த்து புன்னகை செய்து கொண்டே... விஷ்ணுவுக்கு உற்சாகம் வந்துவிட்டது.

    'அதெல்லாம் இருக்கட்டும், விஷயத்தைச் சொல்லுங்க'

    'இவள் சித்தியின் பெயர் ஆனந்தி.'

    'ஆனந்தியா'

    'ஆமாம்'

    'ரொம்ப நல்லப்பேர். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... ஒருதடவை திருச்சிக்கு ஒரு கோச்சப்புக்கு போனபோது துர்கா அவனையே பார்த்தாள்.... அவளைப் பேசச்சொல்லலாமா... வேண்டாமா... ஓ... மன்னிக்கணும்... நான் ஒரு மடையன்...

    அது அவளுக்குத் தெரியாது.' இனிமே தெரிந்து கொள்வாள். உ...ம்... சொல்லுங்க...

    ஒன்றும் பயப்படாதே ரம்யா. இவருக்கும் இப்படித்தான் நடுநடுவே அபார ரஸனை வந்துவிடும். மேலாடை நகர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடும் பெண் முதல்.... பக்கில்ஸ் கழன்று தொங்கும் பிராவரை...

    ஹீ... ஹீ... நீங்க ரொம்ப பேசறீங்க... இவங்க என்னை என்ன நினைப்பாங்க... துர்கா பேச்சை நம்பாதீங்க... அவங்க எப்பவும் இப்படித்தான்... நீங்க சொல்லுங்க...

    'உங்க சித்தி பேர் ஆனந்தி அவங்களுக்கு என்னவாச்சு'

    அவங்களுக்கு ஒண்ணும் ஆகலை. அவங்க கொஞ்சநாளாகவே காணவில்லை. எங்கே இருக்கிறாள் என்ன ஆனாள் என்றே தெரியவில்லை.

    என் தகப்பனார் இருக்கும்போதே அவர்களுக்கு நடுவே நல்ல உறவு முறையில்லாத காரணத்தால். அப்பொழுதே அதாவது நாங்கள் பம்பாயில் இருந்தபோதே பிரிந்துபோய் விட்டாள்.... நான் அவளுடைய எண்ணங்களுக்கும் முடிவுக்கும் அப்பொழுதே குறுக்கே நிற்கவில்லை...

    அப்பா காலமான பின்பும் வருவாள் என்று எதிர்ப்பார்த்தேன். குடும்பத்துடன் சேர்ந்துவிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை….

    அவள் வரவில்லை...

    அதன் பிறகும் வரவில்லை…

    நான் பம்பாயிலிருந்து இங்கே வந்து குடியேறினேன். இங்கேயும் வரவில்லை…

    ரம்யா இப்படிச் சொன்னதும் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்...

    ஏன் போனாங்க.... உங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் கூட வீட்டை விட்டு வெளியேறி செல்லும்படியாக உங்களிடையே என்ன நிகழ்ந்தது...

    சண்டையிட்டீர்களா...

    இல்லை….

    சண்டையென்றால் நான் கேட்பது வாய்ச்சண்டையை அல்ல.... கராத்தே... குஸ்தி....

    உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு என்றாள் பிருந்தா...

    உங்கள் சித்தி என்றீர்களே, எனக்கொரு சந்கேகம். அதாவது உங்கள் தந்தையின் இரண்டாவது மனைவி...

    'ஆமாம்...'

    ஒரு மனிதனுக்கு இரண்டாவது மனைவி என்றாலே ரொம்ப அழகாக இருப்பாள்.... என்பது என் முடிவு முதலில் ஒரு விவாகம் செய்து கொண்டு செய்ததவற்றை இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டு நிவர்த்தி செய்து கொள்ளுகிறான் என்பது எனது கண்டுபிடிப்பு.... எப்படி என் ஆராய்ச்சி ஹீ... ஹீ... ஒரு உலகப் பொன்மொழி ஒன்று உதிர்த்துவிட்ட பெருமை விஷ்ணுவுக்கு...

    என்னிக்காவது உங்க மூளை ஒழுங்கா வேலை செய்தால் தானே.... நான் கூடப் பாருங்கள் முதல் கல்யாணத்தில் செய்யும் தவறை இரண்டாம் கல்யாணத்தில்....

    முதல் கல்யாணம் ஆகட்டும். ரெண்டாங்கல்யாணத்தைப்பற்றி அப்புறம் பேசிக்கலாம் அவ பேசட்டுமா....

    'பேசட்டும்...'

    நீங்கள் சொல்வது போல ஆனந்தி ரொம்ப அழகிதான் நிறுத்துங்கள் மீதியை, நான் சொல்லுகிறேன்...

    'நீங்கள் கொஞ்சம் அழகில் மத்திமம்... உங்கள் சித்தி... அழகில் உச்சம்... உங்களிடையே ஒரு ஹெலன் ஆப்ட்ராய் அதாவது ஜட்ஜமெண்ட் ஆப் பாரிஸ்... நடந்திருக்கு.... நீங்கள் அவள் அழகை அங்கீகரிக்க மறுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்... இந்த அழகுப்போர் உங்களிடையே பல ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது.

    இதில் உங்கள் தந்தைக்கு தர்ம சங்கடமான நிலை. உண்மையில்தான், இரண்டாம் மனைவி அழகி என்பது அவர் கருத்தாக இருந்தாலும் கூட அதை வெளியே சொல்ல முடியாத நிலை. அவளை அழகிதான் என்றால் உன் விரோதம் இல்லை என்று சொன்னால், உள்ளே கட்டில்கள் பிரிந்து விடும்...

    கட்... கட்... உங்ககிட்ட பேசாதவங்க அத்தனை பேரும் நீங்கள் உட்பட எல்லோருமே விவாகமாகாதவர்கள் என்பது நினைவிருக்கட்டும்.

    ஓகே மேலே சொல்லுங்க... உங்ககிட்டே ஒரு அனுமதி, எனக்கு உங்களை 'நீங்கள் உங்கள் என்று சொல்ல கஷ்டமாக இருக்கிறது. நீங்க இல்லே நீ அனுமதிச்சா அனுமதி வழங்கப்பட்டது' - என்றாள் துர்கா...

    'நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் எங்களிடையே சண்டை சச்சரவு ஏதும் நடக்கவில்லை. நான் ரொம்பவும் அன்னியோன்னியமானவர்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் சண்டைக்காரர்கள் அல்ல...

    'நீங்கள் தலையை இப்படி ஆட்டி ஆட்டிப்பேசும்போது நீங்கள் காதில் அணிந்திருக்கிறீர்களே ரிங் டென்னிஸ் மாதிரி. அந்தப்பெரிய கோல்ட் ரிங் எவ்வளவு அழகாக ஆடுகிறது தெரியுமா... அஹா... பட்டை தீட்டப்பட்ட அதன் விளிம்பில்தான் எத்தனை பளபளப்பு...

    நாசமாப் போச்சு... அவள் பேச்சை கவனிக்கிறீர்களா, அவள் காதில் என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1