Eera Pudavai
By Maharishi
3/5
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Mara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsPoo Potta Thaavani Rating: 0 out of 5 stars0 ratingsManthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Poonai Rating: 0 out of 5 stars0 ratingsKaandhamunai Rating: 0 out of 5 stars0 ratingsSabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsPadi Paranthaval Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsMaanasa Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Ini Suzhalum Rating: 0 out of 5 stars0 ratingsSakkara Vandi Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Piditha Meen Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Paathai Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Rating: 0 out of 5 stars0 ratingsVazhndhu Kattuvom Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsManam Kavarndhavan Rating: 0 out of 5 stars0 ratingsAthuvaraiyil Kanchana Rating: 0 out of 5 stars0 ratingsKalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsMuthukal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsJothi Vanthu Piranthal Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Bridhavanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Eera Pudavai
Related ebooks
Ennuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsAnbaal Vellalaam! Rating: 0 out of 5 stars0 ratingsTheertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 5 out of 5 stars5/5Sollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsViththiyasamaana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsGomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Chinnamma Rating: 5 out of 5 stars5/5Purushan Veettu Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Pazhaya Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsKazhugu Rating: 0 out of 5 stars0 ratingsEzhilmigu Indonesia Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nappinnai Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Kadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsKan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsKadanthu Pogum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsThunai Thedum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsMayurikku Thirumanam Orumuraidhan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Eera Pudavai
2 ratings0 reviews
Book preview
Eera Pudavai - Maharishi
http://www.pustaka.co.in
ஈரப்புடவை
Eera Pudavai
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
திருச்சியிலிருந்து செந்திலின் மாமா வந்திருந்தார்.
அவர் வருவதாக ஒரு வாரம் முன்பு கடிதம் வந்த போதிலிருந்தே செந்தில் உற்சாகமாக இல்லை.
காரணம்-
செந்திலின் விவாகத்தின் பேரில் அவர் கொஞ்சம் அக்கறை காட்டினார்.
தாய் தந்தையில்லாத செந்தில் அவருடைய தாய்மாமன் ஜனார்த்தனின் ஆதரவில் வளர்ந்தான். படித்தான் அவரே எப்படியோ யாரையோ பிடித்து சேலம் மில் ஒன்றில் கணக்குப் பிரிவில் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
அத்துடன் அவருடைய கடமைகள் முடிந்து போயிருந்தால் அவன் சந்தோஷப் பட்டிருப்பான்.
வேலைக்குச் சேர்ந்து அவன் தன் தனி வாழ்க்கையை சேலத்தில் தொடங்கினான்.
ராஜாராம் நகர்ப் பகுதியில் ஓர் இரண்டு அறைகளுடன் கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டான்.
அவனுடைய வருமானத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய் வாடகையில் அந்த வீடும் வாடகையும் அதிகமே!
ஆனால்!
அவனுடைய பாரத்தின் பெரும் பங்கை தோள்மாற்றிக் கொண்டவன் அவனுடைய பணக்கார நண்பன் ஆனந்த்.
சேலத்தின் தனிமை வாழ்க்கையும் மில்லில் வேலையும் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுத்து கொள்ளாமலே இருந்து விட்டான். நாளாவட்டத்தில் அது பழக்கமாகியும் விட்டது.
உல்லாச வாழ்க்கைக்கு அவனை ஆனந்த் அழைக்கும் போதுகூட அவன் அதனின்றும் ஒதுங்கி விடுவான்.
உல்லாசத்தை பழக்கப்படுத்திக் கொண்டு அதைப் பின்பு பாதியில் விடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. உன்னால் அப்படி நிரந்தரமாக இருக்க முடியும், வாழ முடியும். ஆனால் என் நிலை அப்படியல்ல. உன்னிடமிருக்கிற எந்த பழக்கமும் எனக்கு வந்துவிடக் கூடாதே என்று நான் எவ்வளவு பயப்படுகிறேன் தெரியுமா
என்று செந்தில் கூறும்போது போடா யூஸ்லெஸ்ஃபெலோ
என்று செல்லமாகக் கூறி விடுவான் ஆனந்த்.
பழக்க வழக்கங்களைப் பொறுத்த வரையில் அது அவனுக்குச் சரியாகத் தோன்றலாம். ஒரு வேளை அதில் நியாயம் கூட இருக்கலாம். அதேபோல எல்லாவற்றையும் கூறிவிட முடியுமா!
திருமணம்!
வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திருமணத்தில் கூடவா இந்த மந்தமான மனப்போக்கு இருக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் குடும்பம். பெண்ணுக்குத் தகப்பனார் கிடையாது. தாயார் இருக்கிறாள். பெண்ணின் திருமணத்திற்காக அவள் ஏதோ சேர்த்து வைத்திருக்கிறாள். பெரிய பணக்காரக் குடும்பம் அல்ல பரம ஏழையும் அல்ல.
தாயார் ஆங்கில நர்சரியில் கரஸ்பாண்டண்டாக இருக்கிறாளாம். பெண் அழகாக இருப்பாள், கிராஜுவேட்தான் வேலை தேடிக்கொடுத்தால் வேலைக்குப் போவாள். அது உன் விருப்பத்தையும் சௌகரியத்தையும் பொறுத்தது...
என்று கூறின போது அவன் எடுத்த எடுப்பில் அதிர்ச்சிக்கு ஆளானான்.
அவன் இதுவரை தன் திருமணம் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவன்.
திருமணம் ஒரு சுமை என்று எண்ணுகிற இக்கால வாலிபர்கள் இனத்தைச் சேர்ந்தவன்.
இப்பொழுது எனக்குத் திருமணம் வேண்டாம் மாமா- திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றக்கூடிய சம்பாத்தியத்தில் நான் இல்லை. நான் இப்பொழுது குடியிருக்கும் இந்த வீட்டின் வாடகையான நூற்றி ஐம்பது ரூபாயில் பெரும்பகுதியை ஆனந்த் பகிர்ந்து கொள்கிறான்
என்றான்.
ஆனந்துடன் நீ வாடகையைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள். அதோ அந்த பீரோவில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் விதம் விதமான மேல் நாட்டு மது வகைகளைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்குப் போய் விடாதே.
மிக்க நன்றி. உங்கள் அறிவுரையின்றியே நான் ரொம்பப் பாதுகாப்பாகத் தானிருக்கிறேன். அந்தக் கண்ணாடி பீரோவும் அதில் உள்ளவைகளும் கூட அவனுடையதுதான். நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். அவன் தன் வீட்டிலோ, வெளியிடங்களிலோ இதை வைத்துக் கொள்வதில்லை.
அவைகளைப் பற்றி நான் ஒன்றும் கூறவில்லை அது பற்றி எனக்கு சிரத்தையுமில்லை. பணக்கார வீட்டுப் பையன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உன் எதிர் காலம் என்பது உன் கையிலும், உன்னுடைய முடிவிலும் தான் இருக்கவேண்டும். உன் விவாகத்திற்கு இது தான் சரியான தருணம்
என் வருமானத்தைப் பார்க்கும் போது இது தருணமல்ல என்று தோன்றுகிறது. இதை விட நல்ல வருமானமுள்ள வேலைக்காக நானும் முயன்று கொண்டிருக்கிறேன்
உன் மாத வருமானத்தையும் உன் திருமணத்தையும் ஏன் இணைத்துப் பார்க்கிறாய், இரண்டும் இரு வேறு விஷயங்கள்
அவன் சிரித்தான்.
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்கலாம் என்பது உங்களுடைய காலத்தில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் கண்முன்னால் காணும் உண்மைகளை மறைத்துவிட்டு இந்தக் காலத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது. என் மாதச் சம்பளத்தைக் கேட்டால் இப்பொழுது எதோ ஒரு பெண்ணின் சம்பந்தம் பற்றி கேட்கிறீர்களே அவளே கூட தயங்குவாள்
அதைப் பற்றியெல்லாம் உனக்கென்ன, அவளும் படித்த பெண். அவளுக்கும் ஒரு வேலையைத் தேடித்தந்தால் போகிறது.
அவன் உள்ளத்தில் முதல் சபலவீதையை தெளிப்பதில் வெற்றி அடைந்தார்.
ஆனந்த் உள்ளே நுழைந்தான்.
என் நண்பன் ஆனந்த்
ஆனந்த், என் மாமா திருச்சியில் இருப்பதாக சொல்வேனே
பரஸ்பரம் அறிமுகம் முடிந்தபோது ஜனார்த்தனன் எடுத்த எடுப்பில் அவனையே ஒரு நடுவராக்கி விட்டார்.
அவனும் செந்திலின் மாமா பக்கம்தான் பேசினான்
வாழ்க்கையே ஒரு அட்வென்ச்சர் மாதிரிதாண்டா. எல்லாருடைய வாழ்க்கையும் எடுத்த எடுப்பிலேயே மலர்ச்சோலையாக அமைந்து விடுவதில்லை. வெட்ட வெளியில் தொடங்கி நமக்குத் தேவையானதை நாமே நிர்மாணித்துக்கொள்ள வேண்டியதுதான். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது
என்று அவன் சொன்னபோது ஜனார்த்தனன் ஆனந்துக்கு நன்றி கூறினார்.
"நல்ல பெண்.