Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devakiyin Kanavan
Devakiyin Kanavan
Devakiyin Kanavan
Ebook102 pages35 minutes

Devakiyin Kanavan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. Kalyanasundaram, known as Thiru Vi. Ka. Krishnamurthy's first book was published in 1927.In 1941 he left Ananda Vikatan and rejoined the freedom struggle and courted arrest. On his release after three months he and Sadasivam started the weekly, Kalki. He was its editor until his death on December 5, 1954. In 1956, he was awarded the Sahitya Akademi Award posthumously for his novel Alai Osai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101703418
Devakiyin Kanavan

Read more from Kalki

Related authors

Related to Devakiyin Kanavan

Related ebooks

Reviews for Devakiyin Kanavan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devakiyin Kanavan - Kalki

    http://www.pustaka.co.in

    தேவகியின் கணவன்

    Devakiyin Kanavan

    Author:

    அமரர் கல்கி

    Amarar Kalki

    For other books

    http://www.pustaka.co.in/home/author/Kalki-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    தேனாம் பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டு தோறும் சுதேசிப் பொருட்காட்சி நடத்துகிறவர்களை வாழ்த்துகிறேன். அந்தப் பொருட்காட்சி காரணமாக என் வாழ்க்கையில் வெகு காலமாய் மர்மமாக இருந்து வந்த ஒரு விஷயம் துலங்கியது. என் மனதில் சுமந்திருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது. அடிக்கடி என்னைச் சிந்தனையில் ஆழ்த்தி என் நிம்மதியைக் குலைத்து வந்த ஒரு சந்தேகம் நிவர்த்தி யாகி என்னுடைய உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது.

    *இந்த வருஷத்துச் சுதேசிப் பொருட்காட்சிக்கு நான் போகவில்லை. சென்ற வருஷத்தைக் காட்டிலும் இந்த வருஷம் எவ்வளவோ சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பதாக எல்லாரும் சொன்னார்கள். ஆனாலும் நான் போகவில்லை. போகலாமா, வேண்டாமா என்று யோசனை செய்து, வேண்டாம் என்று முடிவு கட்டினேன். போயிருந்தால், அங்கே நான் தேவகியைச் சந்தித்த இடத்துக்கு என் கால்கள் என்னை இழுத்துக்கொண்டு போயிருக்கும். பழைய ஞாபகங்களில் மூழ்கிப் போயிருப்பேன். எல்லாரும் பார்க்கும் காட்சிகளில் என் மனம் சென்றிராது. ஆடல் பாடல்களிலோ நாடகம் நடனங்களிலோ

    நான் எவ்விதம் கருத்தைச் செலுத்த முடியும்? சித்திரக் காட்சிக்குள் சென்றால், தேவகியின் சித்திரம்தான் என் மனக் கண்முன்னால் தோன்றும். மின்சார சக்தியின் அற்புதங்களைக் காட்டும் இடத்துக்குள் சென்றால், அங்கே திடீரென்று தேவகியை நான் பார்த்த உடனே என் உடம்பில் பாய்ந்து குலுக்கிப் போட்ட மின்சார சக்தியைத்தான் நினைத்துக் கொள்வேன்.

    ஒரு வருஷமா? இரண்டு வருஷமா? இருபத் தைந்து வருஷத்துக்குப் பிறகு அவளை நான் பார்த் தேன். கன்னிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்தவளை மூன்று குழந்தைகளின் தாயா ராகப் பார்த்தேன். ஆயினும், பார்த்த தட்சணமே அடையாளம் தெரிந்து போய்விட்டது. கொஞ்ச நஞ்சம் சந்தேகம் இருந்தாலும், செக்கச் சிவந்த அவள் கன்னத்தில், காதின் ஓரத்தில் இருந்த அழகிய மச்சம் அந்தச் சந்தேகத்தைப் போக்கி விட்டது.

    தேவகியும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டாள் என்பது அவள் என்னைப் பார்த்துப் பிரமித்து நின்றதிலிருந்து தெரிந்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்த குழந்தை அவளைப் பிடித்து இழுத்ததைக்கூடக் கவனியாமலே நின்றாள்.

    என் மனக் கொந்தளிப்பை ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ஹெட்மாஸ்டர் பெண் தேவகிதானே? என்று நாத்தழுதழுக்கக் கேட்டேன்.

    ஆமாம்; நீங்கள் கிட்டாதானே? என்றாள் தேவகி.

    ஓகோ! இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயே? என்றேன்.

    எப்படி மறக்க முடியும்?... என்றைக்காவது ஒரு நாள் உங்களைச் சந்திப்போம் என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறி விட்டது! என்று தேவகி கனிவுடன் கூறினாள்.

    அப்படியா? என்னைச் சந்திக்கும் விருப்பம்கூட உனக்கு இருந்ததா? அது என்னுடைய பாக்கியம் தான்!... இந்தச் சென்னைப் பட்டணத்தில்தான் நீ இருக்கிறாயா? ஜாகை எங்கே?... உன்னுடைய கணவர்... இந்தக் குழந்தைகளின் தகப்பனார். அவர் இங்கே வரவில்லையா? என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

    வீட்டுக்கு வாருங்கள்! எல்லாக் கதையும் சாவகாசமாகச் சொல்கிறேன்! என்று தேவகி கூறிய வார்த்தைகளிலேயே கண்ணீர் கலந்திருந்ததாகத் தோன்றியது.

    அவளுடைய வீட்டு விலாசத்தைத் தெரிந்து கொண்டேன். பிறகு பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றேன்.

    அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வரும்படி தேவகி சொல்லியிருந்தாள். அதுவரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது.

    அந்த நீண்ட யுகங்களை யெல்லாம் பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு கழித்தேன்.

    2

    ஏறக் குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம். ஆனாலும் நேற்று நடந்ததுபோல் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஹைஸ்கூலில் ஆறாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்ப னாரின் மரணம் காரணமாக நடுவில் மூன்று வருஷம் என் படிப்புத் தடைப்பட்டிருந்தது. ஆகையால் என் வகுப்பில் வாசித்த மற்றப் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்கு வயது அதிகம். பதினேழு முடிந்து பதினெட் டாவது பிறந்திருந்தது. ஆனால் பள்ளிக்கூடம் போகாத மூன்று வருஷமும் நான் சும்மா இருந்து விடவில்லை. நன்றாகப் படித்திருந்தேன். ஆகையால் இப்போது வகுப்பில் கெட்டிக்காரப் பையன் என்று பெயர் வாங்கியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எல்லாரும் என்பேரில் பிரியமாயிருப்பார்கள். அந்த வருஷத்தில் புதிதாக வந்திருந்த ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காரும் என்னிடம் மிக்க அபிமான மாயிருந்தார். அவரைக் காட்டிலும் அவர் மனையாளுக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தத் தம்பதிகள் எங்கள் ஊருக்கு வந்த புதிதில் நான் அவர்களுக்கு மிக்க ஒத்தாசையா யிருந்தேன். புதுக் குடித்தனம் போடுவதற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். இதிலிருந்து அந்த மாமிக்கு என்னை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தினசரி காலையில் பலகாரம் காப்பி எனக்கு ஹெட்மாஸ்டரின் வீட்டிலே தான். ஒரு நாளைக்கு நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், கிட்டா! நேற்றைக்கு எங்கே காணோம்? இந்த மாதிரி நீ 'ஆப்ஸெண்ட்' போட்டால், ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பரீட்சையில் 'ஸைபர்' போட்டுவிடச் சொல்வேன்! என்று மாமி சண்டை

    Enjoying the preview?
    Page 1 of 1