Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Thamarai
Karuppu Thamarai
Karuppu Thamarai
Ebook114 pages55 minutes

Karuppu Thamarai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403464
Karuppu Thamarai

Read more from Rajesh Kumar

Related to Karuppu Thamarai

Related ebooks

Related categories

Reviews for Karuppu Thamarai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Thamarai - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கறுப்புத் தாமரை

    Karuppu Thamarai

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ஏ.சி.யின் குளிர் கசிந்து கொண்டிருந்த அந்த அரங்கில் ஒரு நூறு பேர் உட்கார்ந்திருக்க, அமைச்சர் மால்முருகன் மைக்குக்கு முன்பாய் நின்று தன் வெண்கலத் தொண்டையைத் திறந்து பேசிக் கொண்டிருந்தார்.

    நாம் நம் நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆன்மிகத்திலும், மனிதாபிமானத்திலும் சிறந்த நாடு என்று போற்றிக் கொண்டு இருக்கிறோம். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...' என்று மார்தட்டிக் கொள்கிறோம். உலகத்திலேயே கற்பு என்னும் வார்த்தைக்கு உரிய மரியாதையும் மதிப்பும் கொடுத்து 'பெண்கள் வாழும் நாடு என்று பறை சாற்றிக் கொள்கிறோம்.

    ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நம்மால் பெருமை கொள்ள முடியவில்லை. அது எந்த விஷயம் என்றால் உடல் உறுப்புகளைத் தானம் செய்கிற ஒரு புண்ணிய விஷயம். ஒரு மனிதர் விபத்தில் சிக்கித் தலையில் அடிபடுகிறார். டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, 'அந்த மனிதர் இனி உயிரோடு இருக்க மாட்டார். மூளை இறந்து விட்டது. மற்ற உறுப்புகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த மனிதரின் உறவினர்கள் விரும்பினால் விபத்தில் சிக்கிய நபரின் இதயம். கல்லீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகளை எடுத்து, தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தலாம் என்று சொன்னால், அதைச் சரி என்று ஏற்றுக் கொண்டு தலையாட்டும் மனப்பக்குவம் 100க்கு 90 பேருக்கு இருப்பது இல்லை. வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்கள்.

    நம் நாட்டில் மட்டும் தான் இப்படிப்பட்ட நிலைமை இருக்கின்றது. இந்த மனநிலை மாற வேண்டும். உயிரோடு இருக்கும் வரை நம் உறுப்புகள் நமக்கு, நாம் உயிரோடு இருக்க மாட்டோம் என்று தெரிந்த பின்னால் அந்த உறுப்புகள் மற்றவர்களுக்கு என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் உருவாக வேண்டும். அப்படி உருவாகாத பட்சத்தில்..."

    அமைச்சர் மால்முருகன் சில விநாடிகள் பேச்சை நிறுத்த - அரங்கம் முழுவதும் நிசப்தம். பிறகு ஒரு புன்னகையோடு தன் பேச்சைத் தொடர்ந்தார் அமைச்சர். அப்படி உருவாகாத பட்சத்தில் உறுப்புத்தானம்' என்கிற விஷயத்தை கட்டாயமாக்க சட்டரீதியான முடிவை இந்த அரசு எடுக்கும்...!"

    அரங்கில் கைதட்டல் எழுந்தது. அது ஓய்ந்ததும் மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார். "ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது கொலை செய்யப் பட்டாலோ அல்லது சாலை விபத்தில் இறந்து போனாலோ அந்த நபரின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதே சட்டம் இந்த விஷயத்திலும் பாய வேண்டும்.

    "இன்றைய தினம் எனக்கு எத்தனையோ அலுவல்கள், மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத் திருமணம் இன்றைக்கு. என் மனைவியின் தம்பி புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் இன்றைக்கு. நான் பிறந்த ஊரில் கும்பாபிஷேகம் இன்றைக்கு. நான் சொன்ன இந்த மூன்று விஷயங்களுமே முக்கியமானவை தான். ஆனாலும் அதைவிட நான் முக்கியமாக நினைத்தது இந்த விழாவைத்தான். சுபத்ரா என்கிற ஒரு வீரப் பெண்மணியை இந்த விழாவில் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    "ஒரு வார காலத்துக்கு முன்னால் ராஜகுமாரி என்கிற 21 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததும், மருத்துவ மனைக்குக் கொண்டு போகப்பட்டு சிகிச்சை அளித்ததும், சிகிச்சையளித்த டாக்டர், ராஜகுமாரிக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாகக் கூறியதும், ராஜகுமாரியின் தாயான சுபத்ரா துடித்துப் போனார். ஏற்கெனவே கணவரை இழந்த சுபத்ரா, மகள் ராஜகுமாரியை இழக்கப் போகும் துயரத்தைத் தள்ளி வைத்து விட்டு, தன் மகளின் முக்கிய உறுப்புகளான இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் போன்றவற்றை தானமாய்க் கொடுக்கச் சம்மதித்து கண்ணீரோடு கையெழுத்துப் போட்டார்.

    ராஜகுமாரியின் உடம்பில் இருந்து அகற்றப்பட்ட அந்த உறுப்புகள் இப்போது உயிர் காக்கும் கவசங்களாய் மாறி நான்கு பேரின் வாழ்க்கையில் வெளிச்ச தீபங்களை ஏற்றி இருக்கின்றது. என்னைப் பொறுத்த வரைக்கும் சுபத்ரா ஒரு சாதாரணப் பெண்ணில்லை. ஒரு வீரத்தாய். தனக்கு நேர்ந்த இழப்பைத் தள்ளி வைத்துவிட்டு பிறரின் இழப்புகளை ஈடு செய்த மங்கையர் திலகம், அவருக்கு என் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருவுருவாம் சுபத்ரா அவர்களை மேடைக்கு அழைக்கிறேன். அமைச்சர் பேசி முடித்தார்.

    அரங்கத்தின் முன்வரிசையில் உட்கார்ந்திருந்த சுபத்ரா, பெருகி வந்த கண்ணீருக்கு அணை போட்டுக் கொண்டே எழுந்து மேடையை நோக்கி நடந்தாள். சற்றே தள்ளாட்டமான - உணர்ச்சிவசப்பட்ட நடை. புடவையின் தலைப்பு அவளுடைய வாயைப் பொத்தியிருந்தது.

    சுபத்ரா மேடையேறி அமைச்சரைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு - யாரோ ஒருவர் கொண்டு வந்து கொடுத்த உருண்டை மைக்கை வாங்கிக் கொண்டு கம்மிப் போன குரலில் பேச ஆரம்பித்தாள். வார்த்தைகளில்

    அழுகை வெடித்தது.

    "எனக்குத் திருமணம் நடந்தப்ப பத்தொன்பது வயசு. தாலி கட்டின மறுநாள் தான் எனக்குத் தெரிஞ்சுது - என்னோட கணவர் ஒரு குடிகாரர்ன்னு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெரிய அதிர்ச்சி. நான் அந்த அதிர்ச்சியை

    Enjoying the preview?
    Page 1 of 1