Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mann Kudhirai
Mann Kudhirai
Mann Kudhirai
Ebook117 pages43 minutes

Mann Kudhirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசுதேவன் ஜெயந்தியின் மகள் ராதிகா. வாசுதேவனின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் போகிறது. இந்நிலையில்தான் கிருபாகரன் உள்ளே வருகிறான். யார் அந்த கிருபாகரன்? அவனால் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? வாங்க வாசிக்கலாம்...
Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123903440
Mann Kudhirai

Read more from Indhumathi

Related authors

Related to Mann Kudhirai

Related ebooks

Reviews for Mann Kudhirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mann Kudhirai - Indhumathi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மண் குதிரை

    Mann Kudhirai

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    வீடு அமைதியாக இருந்தது. அதிநிசப்தமாக இருந்தது. வரவேற்பறையின் விளக்கு தவிர வேறு விளக்குகளின்றி இருட்டாகக் கிடந்தது. சிலுசிலுவென்ற கடற்காற்று தழுவிக்கொண்டு போனாலும், ஓர் இறுக்கம் காணப்பட்டது. வழக்கமாகிப் போனாலும் பதற்றத்தை அடக்க முடியவில்லை, ஜெயந்தியால். வியர்த்து வடிந்த முகத்தைப் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டுக் கொண்டாள். இரவு முழுதும் தூங்காத களைப்பு கண்களில் தெரிந்தது. மீண்டும் மணி பார்த்தாள், 2-10. இரண்டாவது காட்சி, சினிமா, முடிந்துகூடப் போய்விட்டார்கள். அதன்பின் தட்டிக்கொண்டு வருகிற கூர்க்காவின் கைத்தடிச் சப்தம் கேட்டு அடங்கிவிட்டது. இன்னும் வாசுதேவன் வீடு திரும்பவில்லை. அந்தக் கவலை சிறிதுகூட இன்றி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் மகள் மீது கோபம் வந்தது.

    ‘பதினெட்டு வயதுப் பொண்ணுக்கு ஒரு பொறுப்பு வேணாம்…? இந்த வயசில் நான் இவளை வயிற்றில் சுமக்கலை.’ ஜெயந்தியின் கோபம் அதிகமாயிற்று. அருகில் போய் ராதிகாவை உலுக்கி எழுப்பினாள்.

    ஏய் எழுந்திருடி…

    ப்ச்சூ… போம்மா… திரும்பிப் படுத்துக் கொண்டாள் ராதிகா.

    அப்பா இன்னிக்கும் வீட்டுக்கு வரலேடி…

    உன் வீட்டுக்காரர் எப்போ ஒழுங்கா வந்திருக்கிறார்…?

    என் வீட்டுக்காரர் உனக்கு என்னடி வேணும்?

    தூங்கறவளை எழுப்பி என்னம்மா கேள்வி இதெல்லாம்…?

    எனக்கென்னவோ பயமா இருக்குடி… இன்னிக்கும் உங்கப்பா வீட்டுக்கு வரலை.

    அதுக்கு இப்போ என்னம்மா செய்ய முடியும்?

    போய் பார்த்திட்டு வரலாம் வா… சடாரென்று எழுந்து உட்கார்ந்தாள் ராதிகா. கைநீட்டி ஸ்விட்ச் தட்டி விளக்கெரிய விட்டாள். நெற்றி சுருக்கி அம்மாவைப் பார்த்தாள்.

    உனக்கென்ன பைத்தியமாம்மா…? இந்த நடுராத்திரி இருட்டுல எங்கேன்னு போய் அவரைத் தேடுவ? நாம ரெண்டு பொம்பளைங்க தனியா போக முடியுமா? என்னம்மா மூளையில்லாமல் பேசற…

    ஜெயந்திக்கு சுருக்கென்றது, கூடவே கோபமும் வந்தது.

    ஆமாண்டி, மூளையில்லாததுனால் தான் உங்கப்பாவைக் கட்டிக்கிட்டேன். ரெண்டாவது உன்னையும் பெத்துக்கிட்டேன்.

    அந்த வார்த்தையில் இறங்கிப் போனாள் ராதிகா. அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவள் அழகிற்கும் நிறத்திற்கும் எங்கோ வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள். இந்தக் குடிகார அப்பாவைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறாள். அம்மாவைப் பார்த்தால் யாரும் முப்பத்தேழு வயதுன்னு சொல்வார்களா…!? கூடவந்தால் கல்லூரியில் ஒருவர் பாக்கியில்லாமல் கேட்கிறார்கள், ‘என்னடி ராதிகா, உங்க அக்காவா…?’

    நோ, நோ, எங்கம்மா யா

    என்ன! அம்மாவா! அதிர்ந்து போய் ஆச்சரியமாய் பார்க்கிறார்கள். அது கேட்டு லேசாய் பொறாமை வர இவள் கூட சொல்லியிருக்கிறாள்.

    இனிமேல் என்கூட வராதம்மா…!

    ஏன்டி…?

    நீ என்னைவிட அழகா, இளமையா இருபத்திரண்டு வயசுன்னுகூடச் சொல்ல முடியாமல் இருக்கியாம்.

    வேண்டுமென்றே ஜெயந்தி அவள் வாயைக் கிளறுவாள்.

    அது உனக்குப் பெருமையா இருக்கா…?

    இல்லே… பொறாமையா இருக்கு.

    போடி பைத்தியக்காரி என்று சிரித்தாலும் ஜெயந்தியின் குரலில் ஒருவிதப் பெருமிதம் தொனிக்கும்.

    பாவம் அம்மா… மீண்டும் பெருமூச்சு விட்டாள் ராதிகா. அவள் அழகிற்கு இன்னொருத்தனாக இருந்தால் ஆராதித்திருப்பான். கண்களில் ஒற்றிக் கொண்டிருப்பான். தரையில் நடக்கவிடாமல் ஏந்திக் கொண்டிருப்பான். பின்னாலேயே வளைய வந்திருப்பான். ஆனால், அப்பா என்ன செய்கிறார்…? குடியும், கூத்தியும்…

    ஒழுங்காக ஆபீசுக்குப் போவதில்லை. பாதி சம்பளம்கூட வீட்டிற்கு வருவதில்லை. தாத்தா வைத்து விட்டுப்போன இந்தப் பெரிய வீட்டைவிட்டால் வேறு எதுவுமில்லை. மாடியும் கீழுமாக நல்ல வீடு. அந்தக் கால வீடு. இந்த வீட்டைப் பார்த்து மயங்கித்தான் அம்மாவை அப்பாவிற்குக் கல்யாணம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

    விவரம் தெரிந்த நாள் முதலாக அப்பா அம்மாவோடு சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. வெளியில் போய் கண்டதில்லை. கூட உட்கார்ந்து டி.வி. கூடப் பார்த்ததில்லை. ஒரு புடவை, ஒரு நகை, ஒரு ஓட்டல், ஒரு சினிமா… ம்ஹும். ஒன்றுமில்லை. அப்பா என்றதும் கண்ணுக்குத் தெரிகிற உருவம் குடிகார உருவம்தான்.

    பாவம்தான் அம்மா. ஆனாலும் என்ன செய்ய முடியும்…? இதைத் தலைவிதி என்று எண்ணாமல் வேறு என்ன சொல்வது…?

    திரும்பிப் படுத்துத் தூங்கிப் போனாள்.

    வரவேற்பறையில் வந்து உட்கார்ந்துகொண்ட ஜெயந்திக்குத் தூக்கம் வரவில்லை. மீண்டும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்ட ராதிகாவை நினைத்துக் கோபம் வந்தது. சிறிதுகூடப் பொறுப்பற்று இருப்பதாகத் தோன்றியது. ராதிகா மட்டும்தானா பொறுப்பற்று இருக்கிறாள். வயதிற்கு வந்த பெண் இருக்கிறாள் என்பதோ அத்தனைப் பெரிய வீட்டில் நானும், அவளும் தனியாக இருப்போம் என்பதோ உறைத்திருக்கிறதா அவருக்கு? அவரிஷ்டத்திற்குக் குடித்து எங்காவது விழுந்துகிடப்பார். துணைக்கு யாருமின்றி, பெற்ற பெண்ணுடன் முழு இரவைக் கழிப்பதென்பது எவ்வளவு பெரிய சங்கடம்? இதெல்லாம், என்றாவது அவருக்குப் புரிந்திருக்கிறதா…? குடிப்பது தவிர வேறு எது தெரிந்திருக்கிறது?

    முதலில் தனிமை, கொடுமை. அதுவும் இவ்வளவு பெரிய வீட்டில் தனித்திருப்பதென்பது இன்னமும் கொடுமை. ராத்திரி எந்த சின்ன சத்தம் கேட்டாலும் தூக்கிவாரிப் போடுகிறது. பயத்தில் நெஞ்சு படபடக்கிறது. மெல்ல எழுந்து அத்தனை விளக்குகளையும் போடுவாள். வெளி இருட்டு இன்னமும் பயமுறுத்தும். மர நிழல்கள் பூதாகாரமாகத் தெரியும். வேண்டுமென்றே உரத்த குரலில் யாரது…? என்று கேட்பாள். பதில் வராது. யார் இருந்தாலும், எந்தத் திருடனானாலும் பதில் கொடுக்கமாட்டான் என்பது தெரியும். விளக்குகளை அணைக்காமல், அதன்பின் தூங்கவும் முடியாமல், ராத்திரி முழுதும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். எத்தனை நாட்கள் தூக்கமற்று அப்படி உட்கார்ந்திருப்பது…? தன் மேல்தான் அக்கறையில்லை; வேண்டாம். குறைந்தபட்சம் பெற்ற பெண்மீது அக்கறைப்பட வேண்டாம்…? யாரிடம் கேட்பது இந்தக் கேள்வியை…? சொல்வதற்குத்தான். எந்த சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்…? தானே கேள்வி கேட்டு, தானே பதில் சொல்லிக்கொண்டு, தானே எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1