Thoorathu Nilavu
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thoorathu Nilavu
Related ebooks
Innoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratingsOru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsUllathil Nalla Ullam Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsKanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsAan Manam Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Inba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Kalyana Thean Nila Rating: 5 out of 5 stars5/5Aahaya Panthal Rating: 5 out of 5 stars5/5Penn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Kaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Yaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Andhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKettathu Yaarale Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarae Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thoorathu Nilavu
1 rating0 reviews
Book preview
Thoorathu Nilavu - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
தூரத்து நிலவு
Thoorathu Nilavu
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
கெமிஸ்ட்ரி லாபில் ரசாயனக் கலவைகளோடு ஜாலியாக அல்லாடிக் கொண்டிருந்தபோது, அர்ச்சனா யாரும்மா என்று சத்தம் போட்டுக் கேட்டபடி ஒரு பியூன் வர, சோதனைக் குழாயில் சொட்டு சொட்டாக ஹைடிரோகுளோரிக் அமிலத்தை பிப்பெட்டால் ஊற்றிக் கொண்டிருந்த அர்ச்சனா திரும்பிப் பார்த்தாள். சோதனைக் குழாயையும் பிப்பெட்டையும் அதன் ஸ்டாண்டில் வைத்துவிட்டு அவளை நோக்கிச் சென்றாள்.
நான் தான் அர்ச்சனா என்ன விஷயம்?
உங்களுக்கு போன் வந்திருக்காம். உங்க புரெஃபஸர் ரூமுக்கு போங்க.
அர்ச்சனா வியப்போடு கெமிஸ்ட்டிரி பிரொபசரின் அறை நோக்கி நடந்தாள்,
ஃபஸ்ட் இயர் அர்ச்சனா நீதானா?
யெஸ் மேடம்.
பேசு
அர்ச்சனா போனை எடுத்தாள். யார் பேசறது?
ஹலோ... நாங்க லஷ்மி ஹாஸ்பிடல்ஸ்லேர்ந்து பேசறோம் உங்க அப்பாவை எங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க.
கடவுளே... அவருக்கென்ன?
ஹார்ட் அட்டாக்... ஆனா காப்பாத்திட்டோம். அபாய கட்டத்தை தாண்டிட்டார். அவர் தான் உன் நம்பர் கொடுத்து உடனே உன்னை வரச் சொல்லி போன் பண்ணச்சொன்னார்.
நா வந்துடறேன். அவரை நல்லா பார்த்துக்குங்க.
அர்ச்சனா போனை வைத்துவிட்டு புரொபசரிடம் விஷயத்தைச் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு அவசரமாய் கிளம்பினாள். ஒரு ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். மருந்து நெடிகளைக் கடந்து ஐசியூ விற்குள் நுழைந்தாள். ஒரே நிமிடத்தில் ஆளேமாறிப் போயிருந்த அப்பாவை அழுகையும் அதிர்ச்சியுமாகப் பார்த்தாள்.
அழாதடா... இப்டி உக்காரு,
அப்பா அவளை சமாதானப்படுத்தி அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
திடீர்னு என்னாச்சுப்பா...?
மனுஷ உடம்புன்னா அப்படித்தாம்மா எந்த நேரம் என்னாகும் எந்த வியாதி வந்து தாக்கும் யாரால சொல்ல முடியும்?
இப்ப எப்படிப்பா இருக்கு? எதனால இப்டியாம்?
இது பஸ்ட் ஸ்லிப்தான். விழுந்து எழுந்துட்டேன் நீ பயப்படாதே.
நா போய் டாக்டரைப் பார்த்துட்டுவரேம்பா
அர்ச்சனா எழுந்து டாக்டரின் அறை நோக்கிச் செல்ல அப்பாவின் முகம் கவலையில் சூழ்ந்தது. இன்னொருசுருக்கென்று ஒரு வலி... நேரமாக ஆக வியர்வை அதிகமாக - அவருக்கே பயமாகி வரும் வழியிலேயே டாக்டர் ஒருவரைப் பார்க்க அந்த டாக்டர் தான் இது ஹார்ட் அட்டாக் என்று சொல்லி உடனே முதலுதவி செய்து வேறு ஒரு நர்ஸிங் ஹோமுக்கு அனுப்பி வைத்தார். நல்ல நேரம் கொஞ்சமிருந்ததால் இம்முறை பிழைத்து விட்டார். இது முதல் அட்டாக். யார் யாரோ ஹார்ட் அட்டாக்கில் செத்துப்போனதாக கேள்விப்படும் போதெல்லாம் ஏற்படாத பயம் இப்போது ஏற்பட்டது. தானும் அதற்கு பலியாகி விடுவோம் என்று அப்போது தோன்றவில்லை. ஆனால் முதல் அட்டாக் தனக்கே வந்த பிறகு பயம் தொண்டையை அடைத்தது. அதைவிட தன்னந்தனியாய் பெண்ணை தவிக்க விட்டு விட்டுப் போய் விடுவோமோ என்ற கவலை அதிகமாக ஏற்பட்டது. அடுத்த அட்டாக் வருவதற்குள் அர்ச்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் அதன் பிறகு நிம்மதியாய் செத்துப் போகலாம் என்று தோன்றியது.
டிஸ்சார்ஜ் பண்ணி அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்தாயிற்று.
இன்னிக்கு என் சமையல்தாம்ப்பா.
ஏம்மா?
இந்த சமையல்காரி சரியில்லப்பா அடிக்கடி லீவு போடறா. இவளை நிறுத்திட்டு வேற ஆள் பார்க்க வேண்டியதுதான்.
ம் நீ சமையலுக்கு ஆள் பாரு. நான் உனக்கு தாலிகட்ட ஒரு ஆள் பாக்கறேன்.
அப்பா சிரித்தபடி சொல்ல அர்ச்சனா திகைப்போடு அவரைப் பார்த்தாள்.
என்ன சொல்றீங்க நீங்க?
அடுத்த அட்டாக் வரதுக்குள்ள உன்னையும் ஒருத்தன்கிட்ட பிடிச்சு கொடுத்துட்டா அப்பறம் சாவு வந்தாலும் கவலையில்ல பாரு.
அடுத்த அட்டாக்குன்றது உடனே வந்துடும்னு யார் சொன்னா. பதினஞ்சு இருபது வருஷம் கழிச்சுகூட வரலாம். இல்ல உடம்பை நல்லா கவனிச்சுக்கிட்டா வராமயே கூட இருக்கலாம், வந்துடுமோ வந்துடுமோன்னு இப்டி நீங்க கவலைப்படறதுதான ஆபத்துல கொண்டு விடும். ரிலாக்ஸ்டா இருங்கப்பா டென்ஷனே கூடாது. உங்களுக்கு எதுவும் ஆகாது. டாக்டர் டயட் எல்லாம் எப்டியிருக்கணும்னு சொல்லியிருக்கார்! அது பிரகாரம் நானே உங்களுக்கு சமைக்கப்போறேன். தினமும் வாக்போகணும்னு சொல்லியிருக்கார். அதனால நானும் கூட வரேன். தினமும் நாம மார்னிங் வாக் போறோம். சரியா? தேவையில்லாத பயம் பதட்டம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு கியர்ஃபுல்லா இருங்க. என் கல்யாணம் நடக்கத்தான் போறது. நீங்க தான் நடத்தி வெக்கப் போறீங்க. ஆனா இப்பொ இல்ல. இன்னும் ஏழெட்டு வருஷம் கழிச்சு.
அப்பா, இல்லை என்பது போல தலையசைத்தார். சாரி மை டியர் அர்ச்சனா. நீ கல்யாணத்துக்கு தயாராகத் தான் வேணும், சாவுக்கு நா பயப்படல. ஆனா எனக்கப்பறம் நீ இந்த உலகத்துல தனியா லோல்படக் கூடாதுன்னு தான் கவலைப்படறேன்
ப்ளீஸ்ப்பா நா...
நா சொல்றதை நீ கேளு. நீ மாட்டேன்னு சொன்னா என் டென்ஷன் அதிகமாகி அடுத்த அட்டாக் இன்னும் அரை மணிலயே கூட வந்தாலும் வந்துடும் ஆனா ஒரு வேளை உனக்கு கல்யாணம் பண்ணிட்டேன்னு வெச்சுக்கோ அப்பொ ஏற்படற நிம்மதில நீ சொல்றாப்பல அடுத்த அட்டாக் பதினஞ்சு வருஷத்துக்கு கூட தள்ளிப் போகலாம். நீ எதை விரும்பறம்மா? நா உடனே சாகறதையா, இல்ல இன்னும் பதினஞ்சு இருபது வருஷம் வாழறதையா?
அர்ச்சனா ஸ்தம்பித்துப் போனாள். அப்பா சீரியஸாகத்தான் பேசுகிறார் என்பது புரிய, மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் மலைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.
சொன்னது போலவே அப்பா அவளுக்கு தீவிரமாக வரன் தேட ஆரம்பித்து விட்டார்.
அட்லீஸ்ட் நா என் படிப்பையாவது. முடிச்சுடறேன்ப்பா.
கெஞ்சினாள்.
தாராளமா படி. கல்யாணத்துக்கப்பறம் படிக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க.
போற இடத்துல அதுக்கு அனுமதிக்க வேணாமா?
இங்கேர்ந்து போனாதானே?
என்னப்பா சொல்றீங்க?
இங்கயே இருக்கற மாப்பிள்ளையா தான் பார்க்கப் போறேன்.
எவன் ஒத்துப்பான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க?
பிக்கல் பிடுங்கல் இல்லாத ஒரு ஆள் கிடைக்காமயா போய்டுவான்? வீட்டோட மாப்பிள்ளையா வந்தா என் பிஸினசுக்கும் ஒரு ஆளாச்சு இல்ல?
அப்பா சொல்ல, ஒரு விதத்தில் அர்ச்சனா சந்தோஷப்பட்டாள் அப்படி ஒரு