Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thenkizhakku Minnal
Thenkizhakku Minnal
Thenkizhakku Minnal
Ebook117 pages1 hour

Thenkizhakku Minnal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703401
Thenkizhakku Minnal

Read more from Indira Soundarajan

Related to Thenkizhakku Minnal

Related ebooks

Related categories

Reviews for Thenkizhakku Minnal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thenkizhakku Minnal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    தென்கிழக்கு மின்னல்

    Thenkizhakku Minnal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    வெள்ளம் பாய்வது, யானை ஓடுவது, மயில் ஆடுவது மட்டும் அழகில்லை, விமானம் இறங்குவதும் தான்....

    மதுரையின் சின்ன விமான நிலைய காரைத் தரையில் ஒரு சிறகு விரித்த ராட்சஸ வெள்ளை அன்னமாட்டம் அது வளைந்து திரும்பி நிற்பது பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது.

    வெளியே காத்து நிற்கிறது ஒரு கூட்டம்.

    இறங்குபவர்கள் அத்தனை பேரும் நிச்சயம் குபேரக் கூட்டம். குறிப்பாக தனஞ்ஜெயன், அவன் மனைவி லிண்டா!

    லிண்டா நல்ல சிகப்பு. அமெரிக்க சிகப்பென்றால் கோவைப்பழம் கூட நாணிப் போகுமே... அப்படி ஒரு சிகப்பு. பழுப்பு நிறத் தலைமுடி. சற்றே பூனைக் கண்கள்!

    ஐந்து வயது மகன் அனிருத்தை நடக்க விட்டு கை பிடித்தபடி நடந்து வருகிறாள்.

    இது முதல் விஜயம்.

    இந்தியா - அதில் தமிழகம் - அதிலும் மதுரை அவளுக்கு புதிய உலகாய் தெரிய - சற்றே கூடுதலான சூரிய ஆதிக்கம், பூரிப்பில்லாத பசுமை என்று இயற்கையும் அவளை என்னவோ செய்ய, மிரண்டு விட்டதைப் போன்ற தோற்றத்தோடு நடந்து வருகிறாள்.

    ஆனால், தனஞ்ஜெயன் அப்படியில்லை! என்ன இருந்தாலும் அவன் பிறந்து வளர்ந்த மண்ணல்லவா? அமெரிக்காவில் எட்டு வருஷத்துக்கும் மேலாக இந்திய நினைப்பே இன்றி கிடந்து விட்டாலும், திரும்ப வந்து இறங்கியிருக்கும் இந்த தருணம் ஒரு ஏழெட்டு நாளை வெளிநாட்டில் கழித்து விட்டு வந்துவிட்ட மாதிரிதான் ஒரு இணக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

    மதுரை ஒன்றும் பெரிதாக மாறிவிட்டிருக்கவில்லை. போகும்போது பார்த்த நிலையில்தான் இருக்கிறது ஏர் போர்ட்! அதோ குண்டுத் திண்டாக டபராவைக் கவிழ்த்து வைத்த மாதிரி திருப்பரங்குன்றமலை... ஏர் போர்ட்டுக்கு வெளியே பிச்சைக்காரன் சட்டை மாதிரி கிழிந்து கிடக்கும் தார்ச்சாலை.

    அவன் மலையை பார்க்க, அவனையும், லிண்டாவையும், அனிருத்தையும் பார்த்துக் கையசைக்கிறது ஒரு கூட்டம்.

    தனா!... அனிருத்!

    அம்மா!... அப்பா!...- தனஞ்ஜெயனும் பதில் கூவல் கொடுக்கிறான்.

    லிண்டா, அதோ என் அம்மா... அப்பா... அவளுக்கும் காட்டுகிறான். அவள் சற்று நெர்வஸ் ஆகிறாள்

    லிண்டாங்கற வெள்ளைக்காரியையா கல்யாணம் பண்ணிக்கப் போறே? நோ... கூடாது தனா... கூடவே கூடாது...

    எப்பொழுதோ இப்படிச் சொல்லி தடை உத்தரவு போட்டவர்கள்தானே இவர்கள்?

    அவளையும் மீறி அவர்களின் எதிர்ப்பே அவள் மனதில் ஓடுகிறது. இதற்குள் அவர்களை நெருங்கியாகி விட்டது.

    'தனா எப்படிப்பா இருக்கே?'னில் தொடங்கி, செளக்யமாவில் பரவி, கட்டி அணைத்துக் கண்ணீர் வடிப்பதில் முடிந்து நிற்கிறது. லிண்டா அறிமுகமாகிறாள். எல்லோர் பார்வையும் இப்படியா தோட்டாவாகத் துளைக்கும்?

    இருந்தும் அதை விலக்கிக் கொண்டு அவளிடமும் இணக்கம் காட்டி க்ஷேமலாபங்களை விசாரித்து விட்டு அனிருத்தை தூக்கிக் கொள்கிறாள் தனஞ்ஜெயனின் அம்மா பிரகதாம்பாள்.

    வாட் ஈஸ் யுவர் நேம்? ஐ ஆம் யுவர் கிரேண்ட் மதர்டா... என்று அவனோடு ஆங்கில மல்லுக்கட்டல் வேறு.

    எல்லாரும் கார்கிட்ட இருங்க, லக்கேஜோட வரேன்... என்று பேக்கேஜ் கிளியரென்ஸ் ஏரியா பக்கம் டிக்கெட் மற்றும் டேகுடன் செல்கிறான் தனஞ்ஜெயன்.

    பிரகதாம்பாள் பேரனை விடுவதாக இல்லை. தனாவின் அப்பா சங்கரநாராயணனும் பேரனைப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போகிறார். அருகில் என்ன பேசுவது என்றே தெரியாதபடி மிரள மிரள லிண்டா நிற்கும்போது தான் நடக்கக் கூடாத அந்தச் சம்பவம் நடக்க ஆரம்பித்தது.

    அனிருத் பாட்டியின் தோள் மேலேயே வாந்தி எடுக்க ஆரம்பித்தான். ரத்த வாந்தி!

    2

    ஜவஹர் ஹாஸ்பிடல்.

    இன்டென்சிவ் கேர் யூனிட்...

    வெளியே வருகிறார் டாக்டர் நரசிம்ம ஹரி.

    எதிரில் ஆலாய் பறந்தபடி தனஞ்ஜெயன் முதல் எல்லோரும்.

    நத்திங்... அவனுக்கு எதுவுமில்லை. எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டேன். எவ்ரிதிங் நார்மல். ஈ.சி.ஜி. பீட்டிங் ரொம்ப பர்ஃபெக்டா இருக்கு. நீங்க இவன் ரத்த வாந்தி எடுத்த பையன்னு சொன்னதை என்னால இப்ப ஒத்துக்கவே முடியாது.

    டாக்டரின் விளக்கம் அனைவர் நெற்றியிலும் பூரானை ஓடவிடுகிறது.

    "டாக்டர் ஒரு தடவை இல்ல... பல தடவை இப்படித்தான் ரத்த வாந்தி எடுக்கறான். அமெரிக்கால நான் காட்டின ஆஸ்பத்திரிலையும் இதையேதான் சொன்னாங்க. நீங்களும் அதையேதான் சொல்றீங்க. ஆனா, அவன் வாந்தி எடுக்கும்போது பார்த்தா நீங்களே பயந்து போய்டுவீங்க...

    வாந்தி எடுத்து வாந்தி எடுத்தே எவ்வளவு அனிமிக்கா அவன் இருக்கான் பார்த்தீங்களா?"

    டாக்டர் நரசிம்ம ஹரி அதைக் கேட்டு தோளை உயர்த்தி ஒரு சிரிப்பு சிரித்தபடி சொல்கிறார்.

    ஆச்சரியமா இருக்கு!... ரொம்ப ஆச்சரியமா இருக்கு!...

    அப்பா என்ன பண்ணலாம்?

    அனிமிக்குக்கு டானிக் தரேன். மத்தபடி எதுவும் தேவையில்லை.- நரசிம்ம ஹரி திரும்ப தோளைக் குலுக்குகிறார். தனஞ்ஜெயன் லிண்டாவையும், அம்மாவையும் பார்க்கிறான். அவர்கள் அவன் காதைக் கடிக்கின்றனர்.

    டேய் இந்த ஆளைப் பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலை. வா, வேற நல்ல டாக்டர்கிட்ட காட்டுவோம்.

    இடத்தையும் மீறிச் சிரித்து விடுகிறான் தனஞ்ஜெயன். டாக்டருக்கும் புரிந்ததோ என்னவோ அவங்க பேசலை தனஞ்ஜெயன், அவங்க பாசம் பேச வைக்குது - என்கிறார்.

    பிரிஸ்க்ரிப்ஷனை வாங்கிக் கொண்டு வெளியே வருகின்றனர்.

    ஏ. சி. பியூஜியட் வரவேற்கிறது. ஓடிப்போய் ஏறி உட்கார்ந்து கொள்கிறான் அனிருத்.

    அப்பப்பா என்ன ஒரு வெப்ப பூமி...

    Enjoying the preview?
    Page 1 of 1