Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaththirukka Neramillai Karuna
Kaththirukka Neramillai Karuna
Kaththirukka Neramillai Karuna
Ebook145 pages20 minutes

Kaththirukka Neramillai Karuna

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Kaththirukka Neramillai Karuna

Read more from V.Usha

Related to Kaththirukka Neramillai Karuna

Related ebooks

Reviews for Kaththirukka Neramillai Karuna

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaththirukka Neramillai Karuna - V.Usha

    25

    1

    சலசலவென்ற மெல்லிய சப்தம் அவனை மென்மையாக எழுப்பி விட்டது.

    அருண் விழிகளைத் திறந்தான்.

    கையை நீட்டி ஜன்னல் கதவைத் திறந்த போது, பளிச்சென்ற வானம் முதலில் கண்ணில் பட்டது. தொடர்ந்து தோட்டத்து மரங்களின் மேல் பார்வை படர்ந்தது.

    அத்தனை இலைகளிலும் மழைநீர்.

    சொட்டு சொட்டாக பூமியில் விழுந்து ஒரு திடீர் நீர்ப்பாதையை உருவாக்கி விரைந்து கொண்டிருந்தது.

    ‘அட! மழை பெய்திருக்கிறதா இரவில்!’

    எழுந்து உட்கார்ந்து ஜன்னல் கதவை இன்னும் பெரிதாகத் திறந்தான். புத்தம் புதிய குளியல் முடிந்து புத்துணர்வுடன் கொய்யாவும் வேம்பும் நந்தியாவட்டையும் சிலிர்த்தபடி நின்ற காட்சி இதயத்திலும் குளிர்ச்சியைப் பரப்பியது. இவ்வளவு தூரம் மரமும் மண்ணும் நனைந்திருக்கிறதென்றால் நல்ல பலமாகத்தான் பெய்திருக்கிறது மழை. பின்னிரவில் பெய்திருக்கிறது. வீடு வந்து சேர்ந்து பாலையும் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு அவன் படுக்கும் போது மணி பதினொன்றரை ஆகியிருந்தது. மருத்துவமனையும் அன்றைக்கு அவன் செய்திருந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் உடல் முழுக்க அலுப்பையும் களைப்பையும் கொடுத்திருந்ததால் படுக்கையில் விழுந்ததுமே அவன் தூக்கத்திற்குப் போய் விட்டான். அதுவரை வறண்டிருந்த வானம் அதற்குப் பிறகே சூல் கொண்டு மழையைப் பிரசவித்திருக்கிறது.

    செல்போன் அழைத்தது.

    எண்களைப் பார்த்தான்.

    மாதவனுடையது. இன்றைய காலை ட்யூட்டி டாக்டர்.

    குட் மார்னிங் மாதவன்... சொல்லு... என்றான் ஈர ஜன்னல் கம்பியைப் பற்றியபடி.

    குட் மார்னிங் அருண்... ஸாரி, எழுப்பிட்டேன்ல? யூவார் ஸோ டயர்ட்... ஐ நோ...

    இட்ஸால்ரைட்... ஐ காட் அப்... சொல்லு... என்ன விஷயம்...?

    எமர்ஜென்ஸி கேஸ்ப்பா... அதுவும் போலீஸ் கேஸ். என்கவுண்ட்டர்... ஆனா கைதி சாகலே... ஆளவந்தான்னு... விழுப்புரம் தாண்டி விருத்தாச்சலம் ரூட்ல முந்திரிக்காட்ல... சரி அதை விடு... முதுகுத்தண்டுல பெரிய டேமேஜ். ரெண்டு கால்லயும் ஃப்ராக்சர்... சாலமன் டாக்டர் வந்துட்டார் வித் ஹிஸ் டீம்... நீயும் இருந்தா நல்லா இருக்கும் அருண்... என்ன சொல்றே? மாதவனின் குரலில் தென்பட்ட தயக்கம் அவனுக்குப் புரிந்தது.

    என்கவுண்ட்டர்னா? தீவிரவாதியா? தாதா?

    ஆ... மாம்...

    மாதவன்... ஸாரி... என்னால வர முடியாது.

    தெரியும் அருண் எனக்கு... உன் பிரின்ஸிபல் பத்தி நல்லா தெரியும் எனக்கு... வன்முறைல ஈடுபடற எந்த மனுஷனுக்காகவும் உன் டாக்டர் தொழில் பயன்படாது என்கிறதுல நீ எவ்வளவு உறுதியா இருக்கேன்னு தெரியும் எனக்கு... சொல்லப் போனா இப்போ உன்னைக் கூப்பிடறதுல எனக்குக் கூட இஷ்டமில்லதான். பெரிய டாக்டர் சொன்னதனாலதான் கூப்பிட்டேன்... ஸாரி அருண்...

    இட்ஸால் ரைட் மாதவன்... யூ கேரி ஆன்...

    செல்லை அணைத்து விட்டு வெளியில் பார்த்தான்.

    மழைநீரை சுத்தமாக வடித்து விட்டு இலைகள் வெறும் ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்தன. இரண்டு மைனாக்கள் உச்சிக் கிளையில் உட்கார்ந்து பத்தே பத்து நொடிகள் ஊஞ்சலாடி விட்டு உடனே வேகமாகப் பறந்தன. மின்னல் வேகத்தில் கண்ணை விட்டு அவை மறைந்த காட்சி ஒரு கணம் அவன் நெஞ்சைக் கலக்கியது.

    ‘இப்படித்தானே மறைந்து போனார்கள் - அம்மாவும் அப்பாவும் தம்பியும் தங்கையும்?

    ‘பொருட்காட்சிக்குப் போக வேண்டும், அங்கே இருக்கிற ராட்சத சக்கரத்தில் சுற்ற வேண்டும்’ என்று ஆசைப்பட்டார்களே தம்பி தங்கை இருவரும், அதில் என்ன தவறு இருக்க முடியும்? அடுத்த நாள் மெடிக்கல் என்ட்ரன்ஸ் பரீட்சை இருப்பதால் அவர்களுடன் போகாமல் வீட்டிலேயே நான் தங்கி விட்டதில்தான் என்ன தவறு இருக்க முடியும்?

    எல்லா தவறும் அவன் மீதுதான். இல்லை இல்லை - அதை தவறு என்று சொல்ல முடியாது. குற்றம். மன்னிக்க முடியாத குற்றம். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் அபாயகரமான அணுகுண்டை வெடிக்க வைத்தானே - அவனுடைய குற்றம் அது. ஆயிரக்கணக்கில் மக்கள் சிதறியதை கோடிக்கணக்கான மக்கள் பதைப்புடன் பார்க்க வேண்டும் என்று குரூரமாக ஆசைப்பட்டானே ஒரு வன்முறையாளன் - அவனுடைய அடிமனத்து கொடிய குற்றம் அது.’

    அருண் எழுந்தான்.

    பிரியமானவர்களை நினைத்த மாத்திரத்தில் சலசலவென்று வழியும் கண்ணீர் இப்போதும் முகத்தை கனைத்தது.

    விழிகள் மூடிக் கொண்டன.

    2

    மழைப் பருவங்களில் உலகம் மிக அழகானதாக மாறி விடுவதாகவே அவனுக்குத் தோன்றும். அதுவும் நகர சந்தடியிலிருந்து விலகி இருக்கும் இந்த பிரத்யேக காலனி. சிமிழ் சிமிழான கையடக்கமான பங்களாக்கள்.. சீரான வளர்ச்சியில் இருக்கும் தெருவோர கொன்றை மரங்கள். கூப்பிடு தொலைவில் குன்றை விட பெரிய மலைகள் இரண்டு. அதன் மறுபக்கத்தில் எப்போதாவது தோன்றி மறைகிற விமானங்கள். மலையடிவாரத்து வீடுகளில் வளரும் பசுக்கள் நடக்கிற தெருக்களில் கேட்கும் மணியோசை. அருகாமை தண்டவாளத்தில் ஓடும் ரயில்களின் குயிலோசை. இப்போது ஈரம் நிறைந்த மரங்கள், மொட்டுகள், மலர்கள்...

    பிறருக்காகவே வாழும் மரங்கள். உலகத்திற்கு நிழல் தந்து, பிராண வாயு தந்து, மழை கொடுத்து, குளுமை சேர்த்து... ஓ, இந்த மரங்களை விட எந்தவிதத்தில் மனிதன் உயர்ந்து விட்டான்?

    பெருக்கி துடைச்சுட்டேனுங்க... பால் காய்ச்சி ஃபிளாஸ்க்ல காபி வெச்சிருக்கேனுங்க. சமையலுக்கு என்னங்க செய்யட்டும்? வேலம்மாவின் குரல் அடுப்படியிலிருந்து கேட்டது.

    உடம்பு சரியில்லையா வேலம்மா? குரல் ஏன் சரியா இல்லே? ஷேவிங் க்ரீமை எடுத்தபடி அவன் சமையலறை நோக்கி நடந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1