Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirithenum Nesithirukkalam
Sirithenum Nesithirukkalam
Sirithenum Nesithirukkalam
Ebook156 pages56 minutes

Sirithenum Nesithirukkalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Sirithenum Nesithirukkalam

Read more from V.Usha

Related to Sirithenum Nesithirukkalam

Related ebooks

Reviews for Sirithenum Nesithirukkalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirithenum Nesithirukkalam - V.Usha

    22

    1

    பதினைந்து நாட்களாக எல்லாமே தன் இஷ்டப்படித்தான் நடக்கிறது என்று யமுனா நினைத்துக் கொண்டாள்.

    நினைத்தபோது சாப்பிடுவது, நினைத்தபோது தூங்குவது, நினைத்தபோது காலாற நடப்பது என்று வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பகலில் தூங்குவது என்பதை நினைத்தாவது பார்த்திருக்கிறாளா அவள்? அதுவும் மூன்று வருடங்களாக படிப்பு படிப்பு என்று அக்கவுன்ட்டன்ஸியையும் எகனாமிக்ஸையும் கட்டிக்கொண்டு அழ வேண்டியதாகி விட்டது. அது கூட அப்பாவினால்தான். அவருக்குத்தான் ஆசை - பெண் அமெரிக்காவுக்குப் போய் எகனாமிக்ஸில் ஆராய்ச்சி செய்து ஸ்காலராகி டாலர்களில் கொழிக்க வேண்டும் என்று! அவளும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தாசானுதாசனாக பி.காம் படிப்பை கர்மசிரத்தையோடு முடித்து முதல் வகுப்பில் தேறினாள் - அதுவும் பல்கலைக்கழகத்திலேயே முதல் ஆளாக!

    முதல் அப்ளிகேஷனை ஈ-மெயிலில் தட்டி விட்ட இருபதே மணி நேரத்தில் நான்கு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சிவப்புக்கம்பளங்கள் விரித்தன. சிகாகோ பல்கலைக்கழகம் போகலாமே என்றார் அப்பா. விவேகானந்தரின் பிரசித்த பெற்ற உரை நடந்த சரித்திர இடம் என்பதால் அவளும் சரியென்று சொல்லிவிட்டாள். பாஸ்போர்ட், விசா எல்லாமே மிகச் சுலபத்தில் கிடைக்க - இன்னும் நான்கு மாதங்களில் கிளம்ப வேண்டும் என்கிற நிலையில் தான், திடீர் என்று லிங்காபுரத்திலிருந்து அத்தை அழைத்தாள்.

    தன்னந்தனியா கிராமத்துல கொட்டு கொட்டுன்னு உக்காந்திட்டிருக்கேனே... உன் பொண்ணை என் கண்ணுலயே காட்ட மாட்டியா அண்ணா? நாலு வருஷமாச்சு யமுனாவைப் பாத்து... உன்னைக் குத்தம் சொல்லலேண்ணா... நீ பாவம் இந்த அறுபது வயசுலயும் வருஷத்துக்கு ரெண்டு தடவை வந்து பாத்துட்டுத்தான் போறே... யமுனாதான் படிப்பு படிப்புன்னு இந்த அத்தையை மறந்தே போயிட்டா... அமெரிக்கா வேற போகப் போறாளே... என் கூட வந்து பத்து நாள் இருந்துட்டுப் போகச் சொல்லேன் அண்ணா என்று அத்தை முதல் தடவையாக மனக்குறையைக் கொட்டித் தீர்த்தாள்.

    யமுனா மறுபேச்சு பேசாமல் கிளம்பினாள்.

    அத்தை சாதாரணப் பெண்ணல்ல.

    புரட்சிப் பெண்மணி அவள்.

    முப்பது வருடங்களுக்கு முன்னால் கலப்புத் திருமணம் செய்து கொண்டவள். வின்சென்ட்ராஜ் என்கிற ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை நேசித்து, இரு வீட்டிலும் பயங்கரமான எதிர்ப்புக் கிளம்பியதில் அஞ்சி பின்வாங்காமல், அந்த காதலனை அழைத்துக்கொண்டு இரு வீட்டார் முன்னாலேயே வீட்டை விட்டுக் கிளம்பியவள். மூன்றே வருடங்களில் அவருக்குப் புற்றுநோய் தாக்கியபோது இந்த லிங்காபுரத்து வனத்துறை பொறுப்பாளராக இருந்தாராம் வின்சென்ட்ராஜ். இதே ஊரில்தான் உயிரும் போனதாம். கணவனுடைய கல்லறை கூப்பிடு தூரத்தில் இருக்க, அத்தை அதே ஊரில் தன் வாழ்வைக் கழிக்க உறுதி பூண்டு விட்டாள். அங்கிருந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகச் சேர்ந்து இப்போது ஓய்வும் பெற்றுவிட்டாள் தலைமையாசிரியராக.

    அதைவிடப் பெரிய சோகம் ஒன்றும் அத்தையின் வாழ்க்கையில் உண்டு.

    கணவன் இறந்தபோது அவள் தனியாய் நிற்கவில்லை. கையில் மூன்று வயதுக் குழந்தை இருந்தது. அதை தூக்கிக் கொண்டு அவள் காசிக்குப் போனாள். கணவனின் ஆத்மா சாந்தியடைய காசியில் பண்டிதர்களை வைத்து காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்பது அவள் விருப்பம். மதம் ஒரு தடையாக இருக்காது என்பது அவள் நம்பிக்கை.

    ஆனால் நடந்த சம்பவங்கள் முற்றிலுமாக அவள் வாழ்க்கையைக் குலைத்துப் போட்டன. தூங்கிக் கொண்டிருந்த மகனை விடுதியில் விட்டுவிட்டு உணவு வாங்கி வரப் போயிருக்கிறாள். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை அங்கே இல்லை. காசி முழுக்க தேடினார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். ஒரு பலனும் இல்லை. பாதிஜீவனாகி, குற்றுயிராகி, அறுந்து போன இதயத்துடன் ஊர் வந்து சேர்ந்தாள். ‘ஜீவா ஜீவா ஜீவா’ என்றே இருதயம் துடித்தது; இன்றளவும் துடித்துக் கொண்டிருக்கிறது.

    யமுனா... தூங்கறியா இல்லே புரண்டுகிட்டுதான் இருக்கியா? என்றபடி அத்தை வந்தாள். இந்த காபிய குடிச்சுட்டு தூக்கத்தை கன்டின்யூ பண்ணு... என்று பக்கத்தில் உட்கார்ந்து தலையை வருடினாள்.

    அடடா! எனக்கு டவுட்டா இருக்கே அத்தை என்றபடி யமுனா எழுந்து உட்கார்ந்தாள்.

    டவுட்டா? என்னடா அது?

    நீங்க டீச்சர்தானே?

    ஆமாம்... ஏன்?

    நாட்டுல டீச்சரா? காட்டுல டீச்சரா? பளிச்சென்ற முகத்தில் கண்கள் மினுமினுக்க அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட யமுனாவைப் பார்த்து அத்தை விழித்து புரியலையே நீ சொல்றது? என்றாள்.

    விலங்குகள்தானே அத்தை பல்தேய்க்காம குளிக்காம சாப்பிடும்? தண்ணி குடிக்கும்! பெட் காஃபி குடிக்கச் சொல்றீங்களே என்னை? அதான் கேக்கறேன்...

    இரு இரு... உன்னை.. என்று பொய்க் கோபத்துடன் அடிக்க கைநீட்டும் அத்தையைப் பார்த்து சிரித்து விட்டு யமுனா குளியலறைக்கு ஓடினாள்.

    அத்தை புன்னகையுடன் போர்வையை மடித்து தலையணையை சீராக்கினாள். ‘எவ்வளவு அழகிய முகம் இந்தக் குட்டிக்கு!’ என்று தோன்றிற்று. முகம் மட்டுமா அழகு? பழகும் நேசத்தில், பேசும் வார்த்தைகளில், உதவும் பண்புகளில் என்று எல்லாமே அழகு. கல்லறைத்தோட்டம் போல இருந்த வீடு இந்த அழகுப்பெண்ணின் வருகைக்குப் பின் நந்தவனமாக மாறிவிட்டது. கலகலப்பும் சிரிப்புமாக உயிரும் வெளிச்சமும் வந்து விட்டதைப் போல இருக்கிறது.

    அத்தை... இன்னிக்கு நான்தான் சமையல். பாகற்காய் பொரியல், சுண்டைக்காய் வத்தக்குழம்பு... நேத்திக்கு மலைப்பாதைல பாத்தேன். இப்போ போய் பறிச்சுட்டு வந்து, ஜஸ்ட் ஃப்ரஷ் ஃப்ரம் ஃபாரஸ்ட், சமைக்கப்போறேன்... பை பை.. யமுனா குருவியாய் படிகளில் இறங்கி ஓடினாள்.

    அத்தை சந்தோஷமாகப் பார்த்தாள்.

    2

    அத்தையின் வீடு ஊரிலேயே நல்ல அழகிய மச்சு வீடு. மொத்தம் நூறு வீடுகள் இருந்தாலே அதிகம்தான். தர்மபுரிக்கும் ஹொகேனக் கல்லுக்கும் இடைப்பட்ட கிராமம். காவிரியில் வெள்ளம் வந்து அருவியில் விழுந்து ஓடினாலும் தர்மபுரியில் உலர்ந்த வாழ்க்கைதான். பாறாங்கல் பிரதேசம்தான். லிங்காபுரமும் வறண்ட ஊர்தான். ஆனால் இப்போதெல்லாம் மழை அடித்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1