Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Oorvalam
Kalyana Oorvalam
Kalyana Oorvalam
Ebook115 pages57 minutes

Kalyana Oorvalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Kalyana Oorvalam

Read more from Vimala Ramani

Related authors

Related to Kalyana Oorvalam

Related ebooks

Reviews for Kalyana Oorvalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Oorvalam - Vimala Ramani

    16

    1

    புத்தம் புதிய காலை புலர்ந்தது. விடாத மழையும், அதைத் தொடர்ந்து நிற்காத மழைச் சாரலும், வீதி முழுவதும் தண்ணீர் ஆறும்... இத்தனையும் தினப்படி வாழ்வைப் பாதித்தாலும் புலர்கின்ற இந்தக் காலைப் பொழுது அமைதியாக... அழகாக இருக்கிறது. இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக வானம் துப்பரவாக துடைத்து விட்ட மாதிரி இருந்தது.

    மேகக் கூட்டங்கள் இல்லை... உடலைத் தழுவிச் செல்லும் மெல்லிய மயிலிறகுக் காற்று... எதைப் பற்றியும் கவலைப் படாத காகங்கள் கரைந்து கொண்டிருந்தன.

    பால்காரர்களின் சைக்கிள் சப்தம், பேப்பர்காரர்களின் குறி தவறாத சாகசங்கள் எல்லாவற்றையும் தன் அபார்ட்மெண்ட்டின் பால்கனியில் அமர்ந்தபடி ராகவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

    அன்று ஞாயிறு என்பதால் ஆபிஸ் டென்ஷன் இல்லை...

    பால்கனியில் வந்து விழுந்த பேப்பரை எடுத்தான் ராகவன்.. எந்தப் பக்கம் புரட்டினாலும் கொலை, கொள்ளை... கற்பழிப்பு... லஞ்சம். நாடே நாசமாகிப் போய் விட்டதா?

    பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி கற்பழிப்பு... காதலனுடன் சேர்ந்து கொண்டு கணவனைக் கொலை செய்த மனைவி... காதலால் தற்கொலை செய்து கொண்ட பள்ளிச்சிறார்கள்.

    கல்லூரிக் காதலிலிருந்து பள்ளிக்கு வந்த காதல், இப்போது மாண்டிசோரி லெவலிலும் பரவி விட்டது!

    வாழ்க... காதல்...!

    நடனப் போட்டி என்ற பெயரில் ஆபாச நடனங்கள், விளம்பரங்கள் என்ற பெயரில் கலாச்சரச் சீரழிவுகள், சீரியல்கள் என்ற பெயரில் பழி வாங்கும் வக்கிரங்கள் - எல்லாம் நம்மைச் சுற்றி படர்ந்து விட்டன. தெரிந்தோ, தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தை.

    ராகவன் ஏனோ பேப்பரை படிக்க மனமின்றி மேலெழுந்தவாரியாகப் புரட்டினான்.

    ஒரு பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு செய்தி...

    என் மகள் மைதிலிக்கு நிச்சயமாகி அடுத்தவாரம் நடக்க இருந்த கல்யாணம் எதிர்பாராக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிறகு தேதி அறிவிப்பு வரும். அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் சிரமத்துக்கு மன்னிக்கவும்.

    இப்படிக்கு

    ராதா ரகுவரன்.

    (மைதிலியின் தாயார்)

    அறிவிப்புடன் மைதிலியின் புகைப்படம்.

    இவன் அந்தப் புகைப்படத்தையே பார்த்தான்... பார்த்தான்... பார்த்துக் கொண்டே இருந்தான்...

    மைதிலி...

    இவன் முறைப் பெண்.. மாமன் மகள்.

    இதற்கு முன்னும் இப்படி ஒரு அறிவிப்பு வாயளவில் வந்தது. அப்போது இவன் மணமகனாக இருந்தான்.

    இது இரண்டாவது அறிவிப்பு!

    மைதிலி..?

    கடந்த காலம் இவன் முன் கண்ணாமூச்சி ஆடியது...

    2

    "டேய்... ராகவா.. இந்த சீட்டுக் கணக்கைக் கொஞ்சம் போட்டுக் கொடேன்..."

    சிறுமி மைதிலி ராகவனிடம் கேட்டாள்.

    ஆசை, தோசை, அப்பளம், வடை... நீயே போடேன்...

    போடா... எனக்குக் கணக்கு வர மாட்டேங்குது...

    சரி... நான் போட்டுக் கொடுத்தா என்ன தருவே...?

    ஆசை, தோசை, அப்பளம், வடை...

    இத்தனை வேண்டாம்... ஏதாவது ஒண்ணு...

    போடா... உனக்குத் தெரியலை... அதான் இப்படி டபாய்க்கறே?

    சரி... சரி... கணக்கைக் சொல்வது...

    "ஏ... என்பவன் பி யிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான். வட்டி..."

    டேய் ராகவா... நீ கூட எங்கிட்டே கமர்கட்டுக்குக் காசு வாங்கி இருக்கே இல்லை?

    அல்பம்... அல்பம்... கணக்கைக் கவனி...

    உம்... இதுவும் கணக்குதான்... ஒரு கமர்கட்டுக்கு வட்டி சேத்து ரெண்டா எனக்குத் தந்துடு..

    "இந்தக் கமர்கட் கணக்கெல்லாம் ஒழுங்காப் போடு... வீட்டுக் கணக்கிலே கோட்டைவிடு...

    போடா... வவ்வவ்வே...

    ஐயே... ஏற்கெனவே மூஞ்சி ரொம்ப அழகு... இந்த லட்சணத்துலே அழகு காட்டாதே... பாக்க பயமா - பேய்ப்படம் மாதிரி இருக்கு...

    அம்மா... ஆ... இந்த அத்தானைப் பாரேன்... அத்தான்.... சட்டைப் பொத்தான்...

    அடாடா... என்ன ரகளை இங்கே?

    கேட்டபடி மைதிலியின் அத்தை காயத்ரி - இவன் அம்மா வருவாள்.

    ஏன்டா... ராகவா... கணக்கு சொல்லிக் கொடுக்க முடிஞ்சா சொல்லு... இல்லேன்னா விடு அவளை ஏன் அழவிடறே?

    மைதிலியின் தாய் ராதா இவன் மாமி - அவளும் உடன் வருவாள்...

    ஏண்டி... நாளைக்கு நீங்கதான் கட்டிக்கப் போறீங்க! ஏன்டா ராகவா...! நாளைக்கு கல்யாணம் ஆனப்பறம்கூட அவளை இப்படித்தான் அழ விடுவியா?

    இல்லை மாமி... அவதான் முதல்லே ஆரம்பிச்சா...

    இல்லை அம்மா... இவன்தான் முதல்லே தலையிலே குட்டினான்...

    "பொய் பொய்... நான் குட்டவே இல்லை. இவ

    Enjoying the preview?
    Page 1 of 1