Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohana Punnagaiyil Oru Naal
Mohana Punnagaiyil Oru Naal
Mohana Punnagaiyil Oru Naal
Ebook168 pages58 minutes

Mohana Punnagaiyil Oru Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Mohana Punnagaiyil Oru Naal

Read more from Vimala Ramani

Related to Mohana Punnagaiyil Oru Naal

Related ebooks

Reviews for Mohana Punnagaiyil Oru Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohana Punnagaiyil Oru Naal - Vimala Ramani

    21

    1

    பவித்ரா, நேரத்தைப் பார்த்தாள். மணி ஆகி விட்டது. இப்போதே போனால்தான் ஆபீஸுக்கு பத்து மணிக்குள் போய்ச் சேர முடியும். அங்கு ஆட்கள் காத்திருப்பார்கள். இவளின் உதவியாளர் காத்திருப்பார்.

    கம்ப்யூட்டர் செக்ஷனில் இன்ஜினியர்கள் காத்திருப்பார்கள். இன்று மூன்று நாலு பி.ஸி.களை ‘இன்ஸ்டால்ட்’ செய்ய வேண்டும். ஏற்கெனவே வாங்கியவர்கள், தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

    இருக்கும் ஆறு பி.ஸி. இன்ஜினியர்களை மூலைக்கு ஒருவராக வெளியூர் அனுப்பியாகி விட்டது. ஒரு பி.ஸி.யை ‘பார்மெட்’ பண்ணி இன்ஸ்டால் பண்ண நாலைந்து மணி நேரமாகும். பிறகு அது சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இன்டர்நெட் கனெக்ஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தன் கம்ப்யூட்டரின் காலண்டரில், இன்று என்ன என்ன ப்ரோக்ராம் என்று பார்த்தாள் பவித்ரா. மணிக்கு ஒன்றாக நிறைய இருந்தன. இன்பாக்ஸில் நிறைய ஈமெயில்கள் காத்திருந்தன. ‘நோட் பேடில்’ நிறைய குறிப்புக்கள். ஒவ்வொன்றாக ‘ஓபன்’ பண்ணிப் பார்க்க நிறைய நேரமாகும். ஆபீஸ் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ‘சாட்ரூமில்’ சிலர் தட்டிக் கூப்பிடுவார்கள்.

    பவித்ரா, எல்லா ஃபைல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். பக்கத்து அறையை மெதுவாகத் திறந்தாள்.

    அனந்தலக்ஷ்மி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். படுக்கைக்குப் பக்கத்திலிருந்த சிறிய கப்போர்டில் நிறைய பத்திரிகைகள், ப்ளாஸ்டிக் ஹாட் வாட்டர் பேக் முதலான உபகரணங்கள்.

    கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த நர்ஸ் சாரதா, இவளைப் பார்த்தவுடன் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நின்றாள்.

    என்ன சிஸ்டர்... பாட்டி நல்லா தூங்கறாங்களா?

    யெஸ் மேடம். ராத்திரியெல்லாம் வலிவலின்னு அவஸ்தைப் பட்டாங்க. இப்பத்தான் தூங்கறாங்க.

    ஓகே! நான் ஆபீஸ் கிளம்பறேன். சமையற்கார அம்மா கஞ்சி போட்டுத் தருவாங்க. வேற ஏதாவது தேவையா?

    நோ மேடம். எல்லா மெடிசனும் இருக்கு.

    ஓ.கே.! தேவைப்பட்டா போன் பண்ணுங்க. என்னோட செல் நம்பர் இருக்கு இல்லையா?

    யெஸ் மேடம்.

    பாட்டியம்மா எப்போ கேட்டாலும் இப்பத்தான் ஆபீஸ் கிளம்பிப் போறாங்கன்னு சொல்லணும். ஓகே?

    ஓ.கே. மேடம்...

    பவித்ரா, தன் கைனடிக் ஹோண்டாவில் கிளம்பினாள்.

    சாரதாவுக்கு ஆச்சர்யம். பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள இந்த உறவு புதியதாக இருந்தது. அற்புதமாக இருந்தது.

    வீட்டில் வேறு யாரும் இல்லை. பாட்டியும் பேத்தியும்தான். பவித்ராவுக்குத் திருமணமாகி விட்டதா, இல்லையா? தெரியவில்லை. பாட்டி என்றால் பவித்ரா, அனந்தலக்ஷ்மியின் பெண் வயிற்றுப் பேத்தியா? பிள்ளை வயிற்றுப் பேத்தியா? அதுவும் தெரியவில்லை.

    அவர்கள் - பெண்ணோ, பிள்ளையோ - எங்கே இருக்கிறார்கள்? இவர்களுக்குள் உறவு ஏதுமில்லையா? எல்லாமே புரியாத புதிர்.

    நல்ல அழகான தனி வீடு. சமையலுக்கு ஆள். உடல்நிலை சரியில்லாத பாட்டியைக் கவனித்துக் கொள்ள சாரதா போன்ற நர்ஸ். இரவு வாட்ச்மேன். யாருக்குமே எதுவும் தெரியவில்லை.

    போகட்டும். இவளுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு, டிபன் எல்லாம் கிடைக்கிறது. பாட்டியம்மாவிடம் பொதுவாகப் பேசுவாள். குடும்ப விபரங்கள் எதுவும் கேட்க மாட்டாள். அவ்வப்போது பவித்ரா சில மலையாள நாவல் புத்தகங்கள், மாத்ருபூமி இதழ்கள் கொண்டு வந்து கொடுப்பாள். இவளுக்கு ட்யூட்டி மாறும் போது வேறு ஒரு நர்ஸ் வருவாள். ஓமனகுட்டியோ இல்லை, பார்வதி குட்டியோ யாராவது. டாக்டர் சொல்லுவார்; இவர்கள் அதன்படி போவார்கள்.

    உம்..... உம்...

    முனகல் சப்தம்.

    பாட்டியம்மா கண் விழித்து விட்டாள். சாரதா மெல்ல அவள் அருகில் சென்றாள்.

    அம்மா, இப்போ வலி எப்படி இருக்கு?

    அனந்தலக்ஷ்மியின் முகத்தில் ஒரு தளர்வு.

    உம்... பவித்ரா...

    இப்பத்தான் ஆபீஸ் கிளம்பிப் போறாங்க. ஏம்மா காபி கொண்டு வரட்டுமா? இல்லை ஹார்லிக்ஸ் கரைச்சுத் தரட்டுமா?

    வேண்டாம். என்னை முதல்லே உக்காத்தி வை. நான் பல் விளக்கணும்.

    சாரதா, வாஷ்டேபிளை எடுத்து வந்தாள். டவலை பாட்டியம்மாவின் கழுத்துக்கு சுற்றி ‘பிப்’ மாதிரிக் கட்டினாள். பிரஷ்ஷில் பேஸ்ட் போட்டு தானே தேய்த்துவிட முயன்ற போது-

    வேண்டாம். நானே தேய்ச்சுக்கறேன். நீ தண்ணீர் மட்டும் விடு...

    பாட்டியம்மாவிற்கு பிடிவாதம் அதிகம். பாட்டியம்மா சொன்னபடி அவள் செய்தாள்.

    பல் விளக்கி, முகம் துடைத்த பின், வேறு உடை மாற்றிய பிறகு அனந்தலக்ஷ்மியை அந்த பெட்டிலேயே உட்கார்த்தி வைத்தபடி படுக்கை விரிப்புகளை அழகாக மாற்றினாள் சாரதா.

    பழைய விரிப்புக்களை ‘தோபி பாக்ஸில்’ போட்டாள். காபி எடுத்து வரக் கிளம்பினாள்.

    அனந்தலக்ஷ்மி பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘பழையன கழிதல்’ என்பார்களே! அது இது தானோ? படுக்கை விரிப்பு மட்டும் களையப்படவில்லை. உறவுகளும் இப்படித் தானோ?

    எது உறவு? என்ன உறவு? எப்படிப் பிறந்த உறவு? இந்த உறவுகள் இந்தப் பிரபஞ்ச வெளியில் எப்படித் தோன்றுகின்றன?

    பிரபஞ்சத்தின் வெடிப்பு பிரளயம்... பிரபஞ்சத்தின் துடிப்பு பிறப்பு...

    - எங்கோ படித்த வரிகள்.

    காலம்தான் பிரபஞ்சத்தின் ஆத்மாவோ? அப்போது இந்த முதுமை? பிரளயத்திற்கும் பிறப்புக்கும் இடையில் இருக்கும் காலச் சுவடுகளில்தான் எத்தனை கதைகள்!

    தாமரை இதழ்கள் முகிழ்வது போல் ஒவ்வொரு இதழாக உறவுகளின் மோகங்கள் மெல்ல மெல்ல உயிர்த்தெழ... அந்த மகரந்தத் துகள்களின் எண்ணங்களில் வீரியங்கள்... அடுத்த தலைமுறையை உருவாக்கும் புதிய மகரந்தங்கள், ஜோடிக் கண்கள் அழுதிடப் பிறப்பதும் கோடிக் கண்கள் அழுதிடப் பிரிவதும் பிரபஞ்சத்தின் ஜனன - மரண பதிவேட்டில் தினப்படி குறிப்புகள்.

    அனந்தலக்ஷ்மி யோசிக்கிறாள்.

    2

    தன் அலுவலகம் அடைந்ததுமே பவித்ராவிற்கு வரிசையாக நிறைய வேலைகள் காத்திருந்தன.

    மேடம்... அந்த கஸ்டமர் மறுபடியும் போன் பண்ணி ‘ரீ-இன்ஸ்டால்’ பண்ணச் சொல்றார் மேடம்...

    மேடம், ‘இந்த பி.ஸி. சரியில்லை. வேற அசெம்பிள் செட் தாங்க’ன்னு சொல்றார். இன்டர்நெட்டிலே கிடைக்கறதில்லையாம். செட் சும்மா சும்மா ஹேங் ஆகுதாம்...

    இப்படி வரிசையாக பல வேலைகள். சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்தான் இது. இவள் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்திருந்த காரணத்தால் முதலில் வங்கியில் கடன் வாங்கி கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று ஆரம்பித்தாள். வாடிக்கையாளர்கள் ப்ரவுஸிங்கிற்கு வர ஆரம்பித்தார்கள். தாறுமாறாக பி.ஸி.களை உபயோகப்படுத்தி தினம் தினம் ‘பார்மெட்’ பண்ண வேண்டி இருந்தது. அப்படி சில

    Enjoying the preview?
    Page 1 of 1