Mohana Punnagaiyil Oru Naal
()
About this ebook
Read more from Vimala Ramani
Indriravu Unnai Rating: 5 out of 5 stars5/5Irattai Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsAnanda Ragangal Rating: 5 out of 5 stars5/5Kandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Kadamai Kanniyam Kattupadu Rating: 0 out of 5 stars0 ratingsIravu Mazhai Kolai Rating: 5 out of 5 stars5/5Nilavu Uthikkaatha Iravu Rating: 5 out of 5 stars5/5Inikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMan Veenaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaathalukku Kadaisi Paritchai Rating: 0 out of 5 stars0 ratingsAatru Manal Pathayil Rating: 3 out of 5 stars3/5Ithuvum Oru Ilavasa Inaippe Rating: 0 out of 5 stars0 ratingsNandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Thappu Thappaai Oru Thappu Rating: 4 out of 5 stars4/5Naan Kolaikaaran Alla Rating: 0 out of 5 stars0 ratingsSnehavin Sinegithan Rating: 4 out of 5 stars4/5Kannum Kannum Pesiyathu Rating: 5 out of 5 stars5/5Natchathiram Pookalam Rating: 0 out of 5 stars0 ratingsIntha Pookkal Parippatharkkalla Rating: 0 out of 5 stars0 ratingsOdi Pidichu Kadathu Rating: 5 out of 5 stars5/5Kolaikaara Kombugal Rating: 4 out of 5 stars4/5Kanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Panthaya Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Kolai Kolaya Manthira Akka Rating: 0 out of 5 stars0 ratingsPadhma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Kaalam Kannae! Rating: 4 out of 5 stars4/5Vennilaave Vennilaave Rating: 5 out of 5 stars5/5Kalavupona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mohana Punnagaiyil Oru Naal
Related ebooks
Mohana Punnagaiyil Oru Naal! Rating: 0 out of 5 stars0 ratingsUn Kaiyil Ennai Koduthean Rating: 4 out of 5 stars4/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsதேடி வந்த தென்றல் Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Brindavanam Parijatham Rating: 0 out of 5 stars0 ratingsKaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Corona Kalathu Kurunovelgal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNilavin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsNaayagi Nallai Varuval Rating: 5 out of 5 stars5/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Oru Nijam Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Mudhal Theekuchi Rating: 0 out of 5 stars0 ratingsவரணும் மறுத்தால் மரணம்..! Rating: 0 out of 5 stars0 ratingsVaranum Maruththaal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsUttra Thozhi Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Dhrogam Rating: 0 out of 5 stars0 ratingsகாலமெல்லாம் உன்னோடு Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellam Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Jannal Nila and Nee Indri Naan Yethu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nee Nirainthaai Rating: 0 out of 5 stars0 ratingsஇன்று பாதி! நாளை மீதி! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAruke Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mohana Punnagaiyil Oru Naal
0 ratings0 reviews
Book preview
Mohana Punnagaiyil Oru Naal - Vimala Ramani
21
1
பவித்ரா, நேரத்தைப் பார்த்தாள். மணி ஆகி விட்டது. இப்போதே போனால்தான் ஆபீஸுக்கு பத்து மணிக்குள் போய்ச் சேர முடியும். அங்கு ஆட்கள் காத்திருப்பார்கள். இவளின் உதவியாளர் காத்திருப்பார்.
கம்ப்யூட்டர் செக்ஷனில் இன்ஜினியர்கள் காத்திருப்பார்கள். இன்று மூன்று நாலு பி.ஸி.களை ‘இன்ஸ்டால்ட்’ செய்ய வேண்டும். ஏற்கெனவே வாங்கியவர்கள், தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இருக்கும் ஆறு பி.ஸி. இன்ஜினியர்களை மூலைக்கு ஒருவராக வெளியூர் அனுப்பியாகி விட்டது. ஒரு பி.ஸி.யை ‘பார்மெட்’ பண்ணி இன்ஸ்டால் பண்ண நாலைந்து மணி நேரமாகும். பிறகு அது சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இன்டர்நெட் கனெக்ஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தன் கம்ப்யூட்டரின் காலண்டரில், இன்று என்ன என்ன ப்ரோக்ராம் என்று பார்த்தாள் பவித்ரா. மணிக்கு ஒன்றாக நிறைய இருந்தன. இன்பாக்ஸில் நிறைய ஈமெயில்கள் காத்திருந்தன. ‘நோட் பேடில்’ நிறைய குறிப்புக்கள். ஒவ்வொன்றாக ‘ஓபன்’ பண்ணிப் பார்க்க நிறைய நேரமாகும். ஆபீஸ் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ‘சாட்ரூமில்’ சிலர் தட்டிக் கூப்பிடுவார்கள்.
பவித்ரா, எல்லா ஃபைல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். பக்கத்து அறையை மெதுவாகத் திறந்தாள்.
அனந்தலக்ஷ்மி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். படுக்கைக்குப் பக்கத்திலிருந்த சிறிய கப்போர்டில் நிறைய பத்திரிகைகள், ப்ளாஸ்டிக் ஹாட் வாட்டர் பேக் முதலான உபகரணங்கள்.
கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த நர்ஸ் சாரதா, இவளைப் பார்த்தவுடன் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நின்றாள்.
என்ன சிஸ்டர்... பாட்டி நல்லா தூங்கறாங்களா?
யெஸ் மேடம். ராத்திரியெல்லாம் வலிவலின்னு அவஸ்தைப் பட்டாங்க. இப்பத்தான் தூங்கறாங்க.
ஓகே! நான் ஆபீஸ் கிளம்பறேன். சமையற்கார அம்மா கஞ்சி போட்டுத் தருவாங்க. வேற ஏதாவது தேவையா?
நோ மேடம். எல்லா மெடிசனும் இருக்கு.
ஓ.கே.! தேவைப்பட்டா போன் பண்ணுங்க. என்னோட செல் நம்பர் இருக்கு இல்லையா?
யெஸ் மேடம்.
பாட்டியம்மா எப்போ கேட்டாலும் இப்பத்தான் ஆபீஸ் கிளம்பிப் போறாங்கன்னு சொல்லணும். ஓகே?
ஓ.கே. மேடம்...
பவித்ரா, தன் கைனடிக் ஹோண்டாவில் கிளம்பினாள்.
சாரதாவுக்கு ஆச்சர்யம். பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள இந்த உறவு புதியதாக இருந்தது. அற்புதமாக இருந்தது.
வீட்டில் வேறு யாரும் இல்லை. பாட்டியும் பேத்தியும்தான். பவித்ராவுக்குத் திருமணமாகி விட்டதா, இல்லையா? தெரியவில்லை. பாட்டி என்றால் பவித்ரா, அனந்தலக்ஷ்மியின் பெண் வயிற்றுப் பேத்தியா? பிள்ளை வயிற்றுப் பேத்தியா? அதுவும் தெரியவில்லை.
அவர்கள் - பெண்ணோ, பிள்ளையோ - எங்கே இருக்கிறார்கள்? இவர்களுக்குள் உறவு ஏதுமில்லையா? எல்லாமே புரியாத புதிர்.
நல்ல அழகான தனி வீடு. சமையலுக்கு ஆள். உடல்நிலை சரியில்லாத பாட்டியைக் கவனித்துக் கொள்ள சாரதா போன்ற நர்ஸ். இரவு வாட்ச்மேன். யாருக்குமே எதுவும் தெரியவில்லை.
போகட்டும். இவளுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு, டிபன் எல்லாம் கிடைக்கிறது. பாட்டியம்மாவிடம் பொதுவாகப் பேசுவாள். குடும்ப விபரங்கள் எதுவும் கேட்க மாட்டாள். அவ்வப்போது பவித்ரா சில மலையாள நாவல் புத்தகங்கள், மாத்ருபூமி இதழ்கள் கொண்டு வந்து கொடுப்பாள். இவளுக்கு ட்யூட்டி மாறும் போது வேறு ஒரு நர்ஸ் வருவாள். ஓமனகுட்டியோ இல்லை, பார்வதி குட்டியோ யாராவது. டாக்டர் சொல்லுவார்; இவர்கள் அதன்படி போவார்கள்.
உம்..... உம்...
முனகல் சப்தம்.
பாட்டியம்மா கண் விழித்து விட்டாள். சாரதா மெல்ல அவள் அருகில் சென்றாள்.
அம்மா, இப்போ வலி எப்படி இருக்கு?
அனந்தலக்ஷ்மியின் முகத்தில் ஒரு தளர்வு.
உம்... பவித்ரா...
இப்பத்தான் ஆபீஸ் கிளம்பிப் போறாங்க. ஏம்மா காபி கொண்டு வரட்டுமா? இல்லை ஹார்லிக்ஸ் கரைச்சுத் தரட்டுமா?
வேண்டாம். என்னை முதல்லே உக்காத்தி வை. நான் பல் விளக்கணும்.
சாரதா, வாஷ்டேபிளை எடுத்து வந்தாள். டவலை பாட்டியம்மாவின் கழுத்துக்கு சுற்றி ‘பிப்’ மாதிரிக் கட்டினாள். பிரஷ்ஷில் பேஸ்ட் போட்டு தானே தேய்த்துவிட முயன்ற போது-
வேண்டாம். நானே தேய்ச்சுக்கறேன். நீ தண்ணீர் மட்டும் விடு...
பாட்டியம்மாவிற்கு பிடிவாதம் அதிகம். பாட்டியம்மா சொன்னபடி அவள் செய்தாள்.
பல் விளக்கி, முகம் துடைத்த பின், வேறு உடை மாற்றிய பிறகு அனந்தலக்ஷ்மியை அந்த பெட்டிலேயே உட்கார்த்தி வைத்தபடி படுக்கை விரிப்புகளை அழகாக மாற்றினாள் சாரதா.
பழைய விரிப்புக்களை ‘தோபி பாக்ஸில்’ போட்டாள். காபி எடுத்து வரக் கிளம்பினாள்.
அனந்தலக்ஷ்மி பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘பழையன கழிதல்’ என்பார்களே! அது இது தானோ? படுக்கை விரிப்பு மட்டும் களையப்படவில்லை. உறவுகளும் இப்படித் தானோ?
எது உறவு? என்ன உறவு? எப்படிப் பிறந்த உறவு? இந்த உறவுகள் இந்தப் பிரபஞ்ச வெளியில் எப்படித் தோன்றுகின்றன?
பிரபஞ்சத்தின் வெடிப்பு பிரளயம்... பிரபஞ்சத்தின் துடிப்பு பிறப்பு...
- எங்கோ படித்த வரிகள்.
காலம்தான் பிரபஞ்சத்தின் ஆத்மாவோ? அப்போது இந்த முதுமை? பிரளயத்திற்கும் பிறப்புக்கும் இடையில் இருக்கும் காலச் சுவடுகளில்தான் எத்தனை கதைகள்!
தாமரை இதழ்கள் முகிழ்வது போல் ஒவ்வொரு இதழாக உறவுகளின் மோகங்கள் மெல்ல மெல்ல உயிர்த்தெழ... அந்த மகரந்தத் துகள்களின் எண்ணங்களில் வீரியங்கள்... அடுத்த தலைமுறையை உருவாக்கும் புதிய மகரந்தங்கள், ஜோடிக் கண்கள் அழுதிடப் பிறப்பதும் கோடிக் கண்கள் அழுதிடப் பிரிவதும் பிரபஞ்சத்தின் ஜனன - மரண பதிவேட்டில் தினப்படி குறிப்புகள்.
அனந்தலக்ஷ்மி யோசிக்கிறாள்.
2
தன் அலுவலகம் அடைந்ததுமே பவித்ராவிற்கு வரிசையாக நிறைய வேலைகள் காத்திருந்தன.
மேடம்... அந்த கஸ்டமர் மறுபடியும் போன் பண்ணி ‘ரீ-இன்ஸ்டால்’ பண்ணச் சொல்றார் மேடம்...
மேடம், ‘இந்த பி.ஸி. சரியில்லை. வேற அசெம்பிள் செட் தாங்க’ன்னு சொல்றார். இன்டர்நெட்டிலே கிடைக்கறதில்லையாம். செட் சும்மா சும்மா ஹேங் ஆகுதாம்...
இப்படி வரிசையாக பல வேலைகள். சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்தான் இது. இவள் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்திருந்த காரணத்தால் முதலில் வங்கியில் கடன் வாங்கி கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று ஆரம்பித்தாள். வாடிக்கையாளர்கள் ப்ரவுஸிங்கிற்கு வர ஆரம்பித்தார்கள். தாறுமாறாக பி.ஸி.களை உபயோகப்படுத்தி தினம் தினம் ‘பார்மெட்’ பண்ண வேண்டி இருந்தது. அப்படி சில