Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathiram Pookalam
Natchathiram Pookalam
Natchathiram Pookalam
Ebook135 pages1 hour

Natchathiram Pookalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Natchathiram Pookalam

Read more from Vimala Ramani

Related to Natchathiram Pookalam

Related ebooks

Reviews for Natchathiram Pookalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathiram Pookalam - Vimala Ramani

    21

    1

    "ரேவதி" - என்றான் ரோகன்.

    உம் - என்றாள் இவள்.

    நான் உன்னைக் கூப்பிடல்லை

    பின்னே?

    ரேவதி ரொம்ப நல்ல நட்சத்திரம் தெரியுமா?

    ஏன் - இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் தான்!

    "தப்புத் தப்பா சொல்லாதே. ஒன்லி இருபத்து ஏழு தானா?

    ஆகாயத்திலே எத்தனை நட்சத்திரங்கள் இருக்கு?"

    என் மக்கு காதலனே! - உனக்கு ஜோசியம் தெரியாதுன்னு தெரியும். பொது அறிவு கூடவா இல்லை?

    எனக்குப் பொது அறிவெல்லாம் கிடையாதுப்பா. காதல் அறிவு தான் உண்டு!

    சரி இப்போ தெரிஞ்சுக்கோ...

    காதலைப் பத்தியா? அவள் முறைக்க - அவன் ஆரம்பித்தான்.

    நோ. நட்சத்திரங்களைப் பத்தி. அஸ்வதி, பரணி..., கிருத்திகை, ரோகிணி - அவன் வரிசையாக அடுக்க ஆரம்பித்தான்.

    ஏய்... என்ன இது? உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சிருந்தேன்...

    நீ நினைச்சா அதுக்கு நானா பொறுப்பு? உன்னை மாதிரியே எல்லாரையும் நினைக்காதே!

    ஏய்...!

    ஓகே பாஸ்... எங்கப்பா ஒரு ஜோஸியப் பைத்தியம் தெரியுமா? எங்க அண்ணன் நட்சத்திரம் பரணி. அவன் பேரு பரணி. மூத்த சகோதரி சுவாதி நட்சத்திரம். அவள் பேரு சுவாதி...

    பின்னே ஏன் உனக்கு மட்டும் ரோகன்னு பேரு?

    அதுதான் விசேஷம் - நான் பிறந்தது ரோகிணி நட்சத்திரத்திலே. ரோகிணின்னு ஒரு ஆம்பளையைக் கூப்பிட முடியுமா? அது தான் ரோகன்.

    வாவ்...!

    என்ன?

    என் நட்சத்திரம் ரேவதி. ருக்மணியோட நட்சத்திரம்...

    அது யார் ருக்மணி..? உன் கிளாஸ்மேட்டா?

    உதைச்சா சரி... என் நட்சத்திரம் ரேவதி, ருக்மணியோட நட்சத்திரம். உன் நட்சத்திரம் ரோகிணி - கிருஷ்ண பகவானோட நட்சத்திரம்...

    அப்போ பாமாவுக்கு என்ன நட்சத்திரம்?

    அது யார் பாமா? உன் கிளாஸ் மேடமா?

    உளறாதே... கிருஷ்ணனுக்கு ருக்மணி, சத்தியபாமான்னு ரெண்டு மனைவி...

    ஏன் ராதான்னு ஒரு காதலி... கோபியர்களோட ராஸலீலா...

    தாயே ஆளை விடு. ஏதோ ஜாலியா பேசினா நீ வில்லங்கமா பேசற?

    ஓகே. இப்போ நம்ம ப்யூச்சர் பிளான் என்ன?

    முதல்ல பாமாவைத் தேடணும். அந்த பாமா, ருக்மணி இருவருமே அந்த ஒருவனுக்காக...

    இரு கோடுகள் பழைய சினிமா பாட்டு...

    நல்லா இருக்கு. இப்போ வர்ற மாதிரி ‘என்னைக் கொஞ்சம் பிச்சுத் தின்னேன்டா... என் திமிரை அடக்கேன்டா...’ இப்படியெல்லாம் ‘மரியாதை’யா அந்தக் காலத்துல யாரும் பாடலை.

    சரி... சரி... உன்னோட பிளான் என்ன?

    ஒரு ப்ளானும் இல்லை. முதல்ல அண்ணன் பரணிக்குக் கல்யாணம் ஆகணும் - சுவாதிக்குக் கல்யாணம் ஆகணும்.

    சரி... நான் கிழவி ஆகணும்.

    இனிமேத் தானா?

    ஏய்...

    இருவரும் சிரித்தார்கள்.

    2

    பூமிநாதனுக்கு மிக்க மகிழ்ச்சி. மகள் சுவாதிக்கு ஒரு நல்ல இடம் அமைந்து விட்டது. பையன் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர். ஏதோ ஒரு திருமணத்திற்கு வந்தான். தற்செயலாக சுவாதியைப் பார்த்து விட்டு இவள் தான் என் மனைவி என்று கூறி விட்டான்.

    எல்லாவற்றையும் விட பூமிநாதனுக்குப் பிடித்திருந்த விஷயம் பையன் பெயர் கார்த்திக். கிருத்திகை நட்சத்திரம். இது கூட ஒரு பொருத்தம்தான். பாக்கி எதுவும் தேவையில்லை என்பது இவர் எண்ணம்.

    சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டால் பரணிக்கும், ரோகனுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடந்து விடும். ரோகன் சின்னவன். இருபது வயசு தான் ஆகிறது. முதலில் சுவாதி. அதன்பின் தான் பாக்கி.

    பரணி ஒரு ஆர்ட்டிஸ்ட். ஏதோ ஒரு ‘அட்வர்டைசிங்’ கம்பெனியில் டிசைனராக இருக்கிறான். எப்போது பார்த்தாலும் ஏதாவது வரைந்து கொண்டிருப்பான். இல்லை வெளிநாட்டு பளபளா அட்டை புத்தகங்களை புரட்டிக் கொண்டிருப்பான். விதவிதமான டிசைன்களைத் தேடி அலைவான். கம்ப்யூட்டரில் கிராபிக்சில் நுழைந்து விட்டால் அவனுக்கு இந்த உலகமே தெரியாது.

    ரோகன்தான் சிறியவன். கொஞ்சம் அவசரக் குடுக்கை. எப்போது பார்த்தாலும் வாயில் சினிமாப் பாடல்கள் தான்.

    கிதார் கிளாஸுக்குப் போவான். அதைப் பாதியில் விட்டு விட்டு ‘கேஸியோ’ என்பான். பிறகு ‘புல்லாங்குழல் கலைஞனாக வேண்டும். ப்ளூட் மாலி மாதிரி வாசிப்பேன்’ என்பான். திடீரென்று ஒரு நாள் ‘நான் மியூசிக் டைரக்டர் ஆகப் போகிறேன்’ - என்பான்.

    அவன் என்னவாக ஆகிறான் என்பது அவனுக்கே புரியாத புதிர்!

    ஏதேதோ நினைவுகளில் அமர்ந்திருந்த பூமிநாதனின் முன் சுவாதி வந்து நின்றாள்.

    என்னம்மா... நாளைக்கு உன்னைப் பெண் பார்க்க வரப்போறாங்க. ஓகே தானே? உங்கம்மாதான் சுவாதியை மாலையும் கழுத்துமா பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தா. கடைசிலே அவளே மாலையும் கழுத்துமா போய்ச் சேர்ந்துட்டா...

    பூமிநாதன் பெருமூச்சு விட்டார்.

    சில நினைவுகள் என்றென்றும் அழியாதவை. ஆக்கப்பூர்வமானவை. அற்புதமானவை. அந்த அற்புதங்களில் ஒன்று தான் இவருக்கு லோகநாயகி மனைவியாக வந்து அமைந்தது.

    பூமிநாதன் சிரிப்பார்.

    லோகு... உனக்கும் எனக்கும் எத்தனை பேர் பொருத்தம் தெரியுமா? நான் பூமிநாதன். நீ லோகநாயகி. இந்த நாதனுக்கு ஏற்ற நாயகி...

    Enjoying the preview?
    Page 1 of 1