Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Uthikkaatha Iravu
Nilavu Uthikkaatha Iravu
Nilavu Uthikkaatha Iravu
Ebook151 pages1 hour

Nilavu Uthikkaatha Iravu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Nilavu Uthikkaatha Iravu

Read more from Vimala Ramani

Related authors

Related to Nilavu Uthikkaatha Iravu

Related ebooks

Reviews for Nilavu Uthikkaatha Iravu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Uthikkaatha Iravu - Vimala Ramani

    23

    1

    "டன்" என்றான் வருண்.

    டன் என்றாள் தயாபரி.

    இதுலே ஒண்ணும் குழப்பம் இல்லையே?

    நீ குழப்பம் பண்ணாம இருந்தா போதும். நோ ப்ராப்ளம்...

    உன்னை ஒரு ஐடியா கேட்டேன் பாரு... என் புத்தியை...

    என்னோட புதுச் செருப்பைத் தர முடியாது.

    விட்டா நீயே செருப்பைக் கழட்டி அடிச்சுடவே... அந்த ‘ரிஸ்க்’ எல்லாம் எடுக்கமாட்டேன்.

    ஓ.கே. ஒரு மாதிரி செட்டில் ஆயாச்சு. இன்னிக்கு என் ட்ரீட். வா வெளியே போய் சாப்பிடலாம். காயத்ரி, கௌரி... மங்களா...

    இவங்க எல்லாம் வராங்களா?

    நோ. காயத்ரி ரெஸ்டாரெண்ட், கௌரி சங்கர், அன்னபூர்ணா, மங்களா, இன்டர்நேஷனல் இப்படி ஏதாவது?

    தேங்க் காட்...

    ஓ.கே உன் ட்ரீட்ங்கறே... கோப்தா, நான், டு பினிஷ் வித் ப்ரூட் சாலட் எல்லாம் கேட்கலாமா? ஏஸி ரூம்லே தான் ஐயா நுழைவார்.

    நோ ப்ராப்ளம். பெட்ரூம்லே நுழையாம இருந்தா சரி. என்றவள், சட்டென்று அவன் முகம் மாறியது கண்டு -

    ஸாரி... ஜஸ்ட் லைக் தெட்... ரைமிங்குக்காகச் சொன்னேன்...

    ரைமிங்னா என்ன வேணும்னாலும் சொல்லலாமா? உன் பேர் தயாபரி. ‘நீயே கதி... தயாபரியே’ என்று நான் பாடவா?

    ஓ.கே... ஓ.கே... மன்னித்தல் தெய்வப் பண்பு...

    நான் மனுஷன்...

    ஓ.கே... இனிமே இப்படி அவசரப்பட்டு பேசமாட்டேன்... சரி கிளம்பு. டின்னரை முடிச்சுட்டு வந்துடலாம். எனக்கு டி.வி.யிலே ஒரு சீரியல் பாக்கணும்.

    பாக்கும்படியாவா இருக்கு?

    நல்ல நல்ல மலையாள சீரியல்ஸ் இருக்கு. ‘அம்மா தம்பிராட்டி’ன்னு ஸ்ரீவித்யா நடிச்ச சீரியலை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு பாதியிலே நின்னு போச்சு. பாவம்... அவங்க இறந்துட்டாங்க.

    ஒண்ணு தெரியுமா தயா...? ஸ்ரீ வித்யா தமிழ்ப் பொண்ணு. ஆனா, மலையாள சீரியல்தான் அவங்களை வாழ வைச்சது. காரெக்டர் ரோல் எடுத்து அத்தனை பேர் மனங்களையும் ஆக்ரமிச்சுட்டாங்க. கேரள அரசாங்கம், அரசாங்க மரியாதைகளுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது மனசைத் தொட்டது.

    அதுமட்டுமில்லை, எத்தனை கூட்டம்... எத்தனை பெண்கள்... எத்தனை ஆண்கள்... பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள்கூட அத்தனை பேரும் க்யூவில் காத்திருந்து - மழையையும் கூடப் பொருட்படுத்தாமல் அந்தத் தமிழ்நாட்டுப் பொண்ணுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினாங்களே பென்டாஸ்டிக்... திறமைக்கு, மொழி ஒரு தடை இல்லை. ஏஷியாநெட், கேரளா தூர்தர்ஷன், சூர்யா இப்படி அத்தனை டி.வி சேனல்களும் ஸ்ரீவித்யாவோட பேட்டி, சினிமா, பாட்டுன்னு போட்டு மரியாதை செஞ்சாங்க...

    ஆனாலும் எனக்கு ஒரு குறை. பத்மினி கேரளப் பெண்ணா இருந்தாலும் தமிழ் சினிமாவிலே கனவுக் கன்னியா, தாயா, சகோதரியா, காதலியா எத்தனை வேடம் போட்டாங்க. தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு இதுலே எல்லாம் அவங்க நடிச்ச அந்த அற்புத நடிப்பை மறக்க முடியுமா? ஆனா, கேரள அரசாங்கம் செஞ்ச மாதிரி நாம, பத்மினிக்கு மரியாதை செஞ்சோமா? தெரியல்லை. கடைசி கடைசியா அமெரிக்காவிலே இருந்து வந்து சென்னையிலே செட்டில் ஆனாங்களே.

    சரி... இதென்ன இன்னிக்கு இரங்கல் கூட்டமா?

    இல்லை... எந்த மொழியா இருந்தாலும் திறமைசாலிகளை நாம அங்கீகரிக்கணும்; அதற்குரிய மரியாதை தரணும்.

    அதான் இப்போ நிறைய அங்கீகரிக்கக் கத்துட்டோமே... நயன்தாரா, பாவனா, நமீதா, கோபிகா இப்படி எத்தனை பேர்...

    சரி... சரி கெட் ரெடி... கிளம்பலாம்...

    அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.

    திறமைக்கு மொழி, தடை இல்லை.

    திறமைக்கு இடம், தடையில்லை.

    திறமைக்கு உறவுகள், தடையில்லை.

    ஆனால், இவள் திறமைகளுக்கு

    மொழி தடையாக இருந்தது.

    இடம் தடையாக இருந்தது.

    உறவுகளும் தடையாக இருந்தன.

    தயாபரி யோசித்தாள்.

    2

    அவர்கள் அப்போது மும்பையில் இருந்தனர்.

    தயாபரியின் தந்தை மோகன் ராமும், அவர் மனைவி சஞ்சனாவும் மோகன்ராமும், சஞ்சனாவும் காதல் வயப்பட்டனர்.

    வாலிபன் மோகன்ராம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். மும்பையில் வேலைக்குப் போன இடத்தில் சஞ்சனாவைச் சந்தித்தான். காதல் பிறந்தது.

    ஆனால், மோகன்ராமுக்குத் தெரியாது, ‘சஞ்சனா ஒரு பணக்கார சேட்டில் மகள்’ என்பது. அவர் மும்பையின் ஒரு பெரிய வைர வியாபாரி விபுல்ஷா சேட்.

    கோடிக்கணக்கில் புரளும் பணம். மலபார் ஹில்ஸ்ல தனி பங்களா. வீட்டில் ஆளும் அம்பும் காரும்...

    ஏதோ ஒரு புகழ் வாய்ந்த மருந்து கம்பெனியின் ப்ராடக்ட் மேனேஜராக மோகன்ராம் இருந்த நேரம். ப்ரோஷர் டிசைனிங், மார்க்கெட்டிங் என்று ஏக பிஸி, டை கட்டிக் கொண்டு இவர்கள் ப்ராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவது, மீட்டிங் போடுவது அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்தான் மோகன்ராம் சஞ்சனாவைச் சந்தித்தான்.

    யார், என்ன என்று புரிந்து கொள்ளாமலே காதல் வயப்பட்டனர். மும்பையில் ஒவ்வொரு காபி ஷாப்பிலும் இவர்கள் காதல் தொடர்ந்தது. காட்கோப்பரில் மோகன்ராம், டூ பெட் ரூம் ப்ளாட் ஒன்று வாங்கி இருந்தான்.

    காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால், இரவு மணி பத்தோ, பதினொன்றோ? சனி, ஞாயிறுகளில் இஷ்டப்படி தூங்குவான்.

    அன்றுதான் சஞ்சனா, இவனை தன் தந்தைக்கு அறிமுகப்படுத்துவதாகக் கூறி அழைத்திருந்தாள்.

    சஞ்சனா ரொம்ப அழகு. சுண்டினால் ரத்தம் தெறிக்கும் என்பார்களே... அந்த மாதிரி ஒரு நிறம். அவளுக்கு ஹிந்தி, மராட்டி, ஆங்கிலம் எல்லாம் தெரியும். ‘தமிலும்’ கொஞ்சம் கொஞ்சம் வரும்!

    சஞ்சனா அன்று பேசிய ‘தமிழ்’ இன்று டி.வி தமிழாக அங்கீகாரம் பெற்றுவிட்டது வேறு விஷயம்.

    இவர்கள் சம்பாஷணை மும்மொழித் திட்டம் மாதிரி ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி என்று பரந்து விரியும்.

    எல்லை கடந்த காதல், இவர்கள் காதல்!

    மொழி கடந்த காதல், இவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1