Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padhma Viyugam
Padhma Viyugam
Padhma Viyugam
Ebook153 pages54 minutes

Padhma Viyugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Padhma Viyugam

Read more from Vimala Ramani

Related to Padhma Viyugam

Related ebooks

Reviews for Padhma Viyugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padhma Viyugam - Vimala Ramani

    24

    1

    பத்மநாபன் நடந்து கொண்டிருந்தார். வேகமாக நடந்து கொண்டிருந்தார். இந்த ஐம்பத்து சொச்சம் வயதில் இத்தனை வேகமாக நடப்பது சிரமம் தான்.

    இவர் என்ன சினிமா நடிகரா - வயதானாலும் டூயட் பாட? டூப் போட்டு மலை உச்சியிலிருந்து குதிக்க? இவர் சாதாரண சராசரி மனிதர். அதுவும் சில தினங்களாக ஏன்... சில மாதங்களாகவே நெஞ்சுபடபடவென்று அடித்துக் கொண்டிருக்கிறது. வேகமாக நடந்தால் மூச்சு வாங்குகிறது.

    டாக்டரிடம் ஒரு ‘செக்அப்’ செய்து கொண்டார். ‘ஸ்கேன்’ எடுத்து உடல் பூராவும் என்ன குறை என்பதைக் கேட்டறிந்து கொண்டார். ஏதோ ‘பொங்கல் ஆஃபர்’ - ஏதோ ஒரு மருத்துவ மனையில் ஆயிரம் ரூபாய்க்கு உடம்பு முழுவதும் ‘ஸ்கேன்’ செய்து ரிபோர்ட் தருவதாக அறிவித்திருந்தார்கள்.

    பல மணி நேர டெஸ்டுக்குப் பின்...? சர்க்கரை வியாதி இருக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருக்கிறது. (இது கெட்ட கொலஸ்டிராலாம்!) சிறுநீரகம் கொஞ்சம் பழுதடைந்திருக்கிறது. இதயத்தின் ஒரு வால்வு கொஞ்சமாகத் தான் வேலை செய்கிறது.

    டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மாத்திரைகளில் பாதி வாங்கிக் கொண்டார்.

    அடுத்த மாதம் ‘செக்அப்’ - என்று தேதி குறித்து ஒரு அட்டையைத் தந்திருந்தார்கள்.

    இவர் போகவில்லை.

    இருக்கிற வியாதிகளைப் பார்த்தால் தேறுகிற மாதிரித் தெரியவில்லை! மறுபடியும் எதற்குத் தண்டம்?

    இவர் சாவதற்குப் பயப்படவில்லை.

    அதற்கு முன்... அதற்கு முன்... ஒரே ஒரு காரியம்...! தன் மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும்.

    வியாதிக்குச் செலவழிக்கும் பணத்தை மகளின் திருமணத்திற்குச் செலவிட்டால் இறக்கும் முன் ஒரு நிம்மதியாவது கிடைக்கும்.

    அதனால் தான்...

    இதோ... இதோ பணத்துடன் - சும்மா இல்லை... பத்து லட்சம் ரூபாய் பணத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார். பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து கொண்டிருக்கிறார். மகள் சிந்தூரியிடம் கூடச் சொல்லவில்லை.

    சொன்னால், ‘எனக்கு எதற்கு இப்போ கல்யாணம்? அப்படி என்ன கல்யாணம் வேண்டிக் கிடக்கிறது? முதலில் உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பாள். அவளுக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. இருபது வயது தான் ஆகிறது. வீட்டில் இருந்தபடியே கரஸ்பான்டென்ஸ் கோர்ஸில் பி.காம். படித்து முடித்தாள். இப்போது அருகிலிருக்கும் கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் போய் வருகிறாள். அவளுக்கும் பொழுது போக வேண்டாமா?

    அவளுக்கு இனிமையான சாரீரம். ‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...’ என்று பாடுவதைக் கேட்டால் நிஜமாக ஒரு குறையும் தெரியாது. முறைப்படி கொஞ்சம் சங்கீதம் கற்றாள். வசதியாய் வாழ்ந்தபோது கற்றுக் கொண்டது. அதன்பின் வசதிகள் பறிக்கப்பட - இவள் கற்றுக் கொண்ட சங்கீதம் மட்டும் களவு போகாமல் அவளிடமே இருக்கிறது!

    அவள் அம்மா, இவர் மனைவி - தர்மா உயிருடன் இருந்திருந்தால் இத்தனை நேரம் இவர் தாத்தாவாகி இருப்பார்.

    போகட்டும். இது கொடுப்பினை. மகளை வேலைக்கு அனுப்பப் பிடிக்கவில்லை. காலா காலத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டால் தன் பிரச்னை தீர்ந்தது என்று தான் நினைத்திருந்தார். அந்தக் காலத் தகப்பனார் மாதிரி ஒரு மனோ நிலை! வசதிகள் இருந்த காலத்தில் அவசியம் தோன்றவில்லை. இப்போது வாய்ப்புகளை மனம் தேடுகிறது. மகளை வேலைக்கு அனுப்ப இஷ்டமின்றி இவர் வேலை பார்த்தார்.

    ஒரே மகள்! மருமகன் நல்லவனாக அமைந்தால் திருமணத்திற்குப் பின் மகளுடன் போய் இருக்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது இவர் வேலை செய்யும் அலுவலகம். ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கு எழுதும் வேலை. கம்ப்யூட்டர் வந்தாலும் கூட இவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவர் முதலாளி இவரை வேலையில் வைத்திருக்கிறார். இவர் வாழ்ந்து கெட்டவர் என்பதால் இவர் மீது ஒரு மரியாதை உண்டு.

    கிராமத்தில் இருந்த இவரது வீடும், கொஞ்சம் நில புலனும் தாயாதிச் சண்டையால் கோர்ட்டில் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று பத்து வருடங்களுக்குப் பின் இப்போது தீர்ப்பாகி இவர் பங்குக்கு பத்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. அது தான் இந்தப் பணம்! சமயத்துக்கு கைக்கு வந்திருக்கிறது.

    இதை இவர் வெளியில் சொல்லவில்லை. பணம் கைக்கு வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டார். கிராமத்தில் தன் உறவினருக்கு உடம்பு சரியில்லை என்று அலுவலகத்தில் கூறி விட்டுக் கிளம்பி விட்டார்.

    சிந்தூரியிடம் மட்டும் சொன்னார்.

    நான் வரும்போது நல்ல சேதியுடன் வருவேன். உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு வருவேன். என்று மட்டும் சொல்லி வைத்திருந்தார்.

    சிந்தூரியின் முகத்தில் நாணமோ, மகிழ்ச்சியோ எதுவும் தெரியவில்லை.

    வாழ்க்கை போரடித்தும் போயிருக்கும். தினம் தினம் ஒரே மாதிரியான வேலை. ஒரே மாதிரியான சிக்கன வாழ்வு. இதில் மகிழ்ச்சி எப்படி வரும்?

    ஊருக்குப் போனவுடன் சிந்தூரிக்கு நல்ல புடவைகளாக நாலைந்து வாங்கித் தர வேண்டும். மாற்றி மாற்றி ஒரு சில புடவைகளைத் தான் தோய்த்து தோய்த்து கட்டிக் கொண்டு வகுப்புக்குப் போய் வருகிறாள்.

    யாராவது கல்யாணம், கார்த்திகை என்று அழைத்தால் கூட...

    எனக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கிறது என்று காரணம் சொல்கிறாள்.

    காரணம் அதுவல்ல...

    கட்டிக் கொள்ள நல்ல புடவைகள் இல்லை...

    போட்டுக் கொள்ள நகைகள் இல்லை.

    ஒரு கிராமில் இரண்டு மூன்று நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு சிரித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    அவளது போலிச் சிரிப்பை நிஜச் சிரிப்பாக்கி மாற்றிக் காட்ட வேண்டும்.

    பத்மநாபன் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

    நடக்க நடக்க நெஞ்சு வலித்த மாதிரி...

    பத்மநாபன் கைப்பையை இறுகப்பற்றியபடி அங்கிருந்த திண்ணை ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்தார். படபடப்பாக இருந்தது.

    2

    "ஏய்... ஏன்

    Enjoying the preview?
    Page 1 of 1