Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Snehavin Sinegithan
Snehavin Sinegithan
Snehavin Sinegithan
Ebook120 pages1 hour

Snehavin Sinegithan

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Snehavin Sinegithan

Read more from Vimala Ramani

Related to Snehavin Sinegithan

Related ebooks

Reviews for Snehavin Sinegithan

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Snehavin Sinegithan - Vimala Ramani

    22

    1

    "சினேகா! சினேகா!! சினேகா!!!

    விஜய் கூப்பிட்டான்.

    ஏன் ஏலம் போடறீங்க? அதான் வந்துட்டே இருக்கேன் இல்லை?

    இப்போ நீ எந்த ஸ்டேஜிலே இருக்கே?

    அப்படீன்னா?

    அப்படீன்னா என் அருமைப் பெண்டாட்டியே... முக அலங்காரமா? உடல் அலங்காரமா?

    ஒரு அலங்காரமும் இல்லை...

    ஐயய்யோ... அப்படீன்னா...

    அப்படீன்னாவும் இல்லை... இப்படீன்னாவும் இல்லை...

    எப்படீன்னாலும் சரி... வெளியிலே வா...

    ஏன்... உங்களுக்கு அலங்காரம் பண்ணிக்கணுமா...?

    பேசுவேம்மா... பெட்ரூமுக்குள்ளே போய் கதவைச் சாத்திட்டு ஒரு மணி நேரமாகப்போகுது... கேள்வி கேட்டுட்டுஇரு...

    என்ன அவசரம் அப்படி?

    பாத்ரூம் அவசரம் தான்...

    ஐயய்யோ... இருங்க வந்துட்டேன்... இப்பத்தான் ஹால் எல்லாம் பெருக்கி துடைச்சிருக்கு...

    உம்... அதான் பாக்கி... கப்போட் வை... அட சீ... கதவைத் திற...

    கதவு திறந்தது.

    இதென்ன சொர்க்கவாசல் கதவா? சொர்க்கத்துலதானே தேவதைகள் இருப்பாங்க... தேவதையே உன் பேர் என்ன?

    என் சினேகிதனே... என் பெயர் சினேகா...

    இருவரும் சிரிக்க... விஜய் அவசரமாக பாத்ரூமில் நுழைந்தான்.

    அவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

    விஜய்...

    கொஞ்சம் தள்ளி உட்கார்... இப்படி கொஞ்சிக் கொஞ்சி பேசி... என் மூடைக் கெடுக்காதே...

    ஆமா... பெரிய மூடு...

    இல்லேம்மா... இப்படி நீ பேசினா நான் என்ன வேணுமானாலும் தந்துடுவேன்... ஹஸ்கி வாய்ஸிலே பேசாதே...

    நான் என்ன கைகேயியா வரம் கேட்க? அதான்... நம்ம புராண இதிகாசங்களைப் படிக்கணும்கிறது... கைகேயி தெரியாது? துர்யோதனனோட அம்மா...

    அம்மம்மா... போதும் உன் புராண அறிவு...

    இருவரும் சிரிக்க- - கார் அந்த ‘டிரைவ் இன் ரெஸ்ட்ராண்ட்’டில் வந்து நின்றது. ஆர்டர் எடுக்க பேரர் இவர்கள் காரை நோக்கி வந்தார்.

    என்ன சாப்பிடறே...?

    எனிதிங் யூ லைக்...

    எனக்கு நான் - வெஜ் பிடிக்கும். ஆர்டர் பண்ணட்டுமா?

    கடவுளே... பழி எடுக்காதீங்க... நான் சுத்த சைவம்...

    அதென்ன சைவத்திலே சுத்த அசுத்தம். சரி ரெண்டு கட்லட்... ரெண்டு காபி - என்று ஆர்டர் பண்ணியவன் இவளைத் திரும்பிப் பார்த்தான்.

    இப்ப சொல் என்ன வரம் வேண்டும் தாயே?

    நான் தாய் இல்லை...

    ஓகே... தாய்க்குலம்...

    என்ன குலமோ? கோத்திரமோ?

    சரி... சரி விஷயத்துக்கு வா...

    கண்ணதாசன் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

    அவர் எத்தனையோ சொல்லி இருக்கார். நீ எதைப்பத்தி கேக்கறே?

    தரமில்லாத ஒரு இடத்திலே பெண் எடுத்த காரணத்தால்தான், சக்கரவர்த்தியாக வேண்டிய பத்ரகிரியார் தத்துவஞானியானாராம். அதனால்தான் குடிப்பிறப்பை அடிக்கடி தமிழ்ப் பெரியவர்கள் வலியுறுத்தினார்களாம்...

    ஐ... ஸீ...

    மேனி மயக்கத்தில் ஏற்படும் காதலால் வாழ்க்கை கசந்து அவன் ஞானியாகிறானாம்...

    இந்தக் காலத்தில் மனைவி தவறு செய்தால் கணவன் வெறும் ஞானியாவதில்லை. கொலைகாரனாக மாறுகிறான்...

    ஓகே... உங்க கருத்துப்படி பார்த்தாலும் கொலைகாரனுக்கு தண்டனை கிடைக்கும். அந்த தண்டனைக் காலத்தில் தன் தவறுகளை நினைத்து அவன் கண்ணீர் வடித்தால் ஞானியாகிறான்...

    ஓகே... பேரர் வந்தாச்சு... இப்போ மோனியாகி முதல்லே வர டிபனை சாப்பிடுவோம்... அப்பறம் தொடருவோம்...

    ஓகே...

    இருவரும் ஆர்டர் செய்த பதார்த்தங்களை சாப்பிடுவதில் முனைப்பாக இருந்தனர்.

    அப்போது...

    சற்று தொலைவில் இன்னொரு கார் வந்து நின்றது. அதில் ஜோடியாக இருவர்.

    அவர்கள் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

    விஜய் காரை எடுக்க - கார் விரைந்தது.

    2

    ஆத்தா...

    கூப்பிட்டபடி சண்முகம் வந்தான்.

    என்னப்பா? எனக்கு வேலைக்கு நேரமாச்சு...

    இல்லே ஆத்தா... இந்த வீட்டை இடிச்சு புதுசு பண்ணலாம்னு பாக்கறேன். எனக்கு பொண்ணு வேறு பாத்து வைச்சுட்டே... அவ வந்தா வீடு பாக்க நல்லா இருக்க வேண்டாமா?

    ஆமாம்பா... உங்கப்பன் வைச்ச வீடு... இது ஒண்ணுதான் மிச்சம். எல்லாத்தையும் அந்த ஆளு குடிச்சு குடிச்சே அழிச்சான். அவனும் அழிஞ்சு போனான். என் குங்குமத்தையும் அழிச்சு சொத்தையும் அழிச்சவன் இந்த ஒத்தை ஓட்டு வீட்டை மட்டும் விட்டுட்டுப் போயிட்டான்... இத்தனை நாள் இதுலே வாழ்ந்தாச்சு... இப்போ என்ன?

    இல்லேம்மா... பத்மா... அதான் எனக்கு வரப்போறவ சொன்னா. இந்த வீட்டை கொஞ்சம் புதுசா பண்ணி ஒரு பெட்ரூம் கட்டிட்டா நல்லா இருக்கும்னா... இப்போ நாம எல்லாம் ஒரே கூடத்துலேதான் படுத்து புரளறோம்.

    சண்முகம் சொல்வதும்

    Enjoying the preview?
    Page 1 of 1