Meendum Antha Gnabagangal
By Stella Bruce
()
About this ebook
Read more from Stella Bruce
Sooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsKannaadi Veedu Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5En Veettu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaathal Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Aayiram Kathavugal Thirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsPanankaattu Annachi Rating: 0 out of 5 stars0 ratingsViththiyasamaana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAthu veru Mazhaikkalam Rating: 5 out of 5 stars5/5Agaala Manithan Rating: 5 out of 5 stars5/5Oru Muraithan Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsMoondraam Piraigal Rating: 0 out of 5 stars0 ratingsVegu Thoorathil Manam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Meendum Antha Gnabagangal
Related ebooks
Thendral Vanthu Ennai Sudum! Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Oruvar Manathil Oruvaradi Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsPanankaattu Annachi Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Maya Maan Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Oonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsKolla Theriyavillai! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Kolla Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Kanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsNeeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Maalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5Mazhaikooda Thenagalam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Meendum Antha Gnabagangal
0 ratings0 reviews
Book preview
Meendum Antha Gnabagangal - Stella Bruce
14
1
சென்னை மாநகர பஸ்களில் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஏதோ ஒரு பெண்ணிடம் காதல் வசப்பட்டு, வெயில் என்றும் மழை என்றும் பாராமல்; இனிமையோடும் இம்சையோடும் அவளைப் பின் தொடர்ந்தும், ஒட்டிநின்றும் அலைந்து திரிகிற காட்சிகளைக் காணுகிற போதெல்லாம் என்னுள் கனத்த நெகிழ்ச்சி நெஞ்சை அடைக்கும்படியாகப் பரவுகிறது. உண்மையில் காதலுக்கு மேலான ஆனந்தமும் வேறில்லை. இம்சையும் வேறில்லை. இதைச் சொல்வதற்கு பிரத்யேகமான அநுபவமும் தேவையாகத்தான் இருக்கிறது. ஏனெனில்; ராம் குமாராகிய நானும் என்னுடைய சுகந்தாவை முதன் முதலாக பஸ்ஸில் தானே பார்த்தேன்? அவள் போகிற பஸ்ஸிலும் செல்கிற வீதியிலும் நானும் தானே காதலோடும் கவலையோடும் அலைந்து திரிந்தேன். அதெல்லாம் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவைதான். என்றாலும் கூட எல்லாமே நேற்றுதான் நிகழ்ந்தாற் போன்ற பிரமையைத்தான் ஏற்படுத்துகின்றன. நினைத்துப் பார்த்தலில் காலம் ஏது? நினைக்கையிலே அவை நிகழ்வாகின்றன - இல்லையா? மீண்டும் நிகழ்வு என்ற பிரமை ஓர் சந்தோஷத்தையும் தான் ஏற்படுத்துகிறது. மனிதர்கள் நினைத்துப் பார்ப்பதே - அந்த சந்தோஷத்திற்காகவும்கூட இருக்கலாம். அடிப்படையில் மனிதம் ஒன்றுதானே? அதனால் நானும் அத்தகைய மகிழ்ச்சிக்காக மீண்டும் அந்த சுகந்தா சம்பந்தப்பட்ட பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்த ஊர் பெரியகுளம் என்பது எல்லோருக்குமே நினைவில் இருக்கலாம். அந்தப் பெரியகுளத்தை நானும் மனப்பூர்வமாக நேசிக்கவே செய்தேன். ஆறும் வயல்களும் தோப்புகளும் சூழ்ந்த அந்த ஊர் எனக்குப் போதுமானதாகவே இருந்தது. சென்னை நகரத்தில் வந்து குடியேற வேண்டுமென்று நான் கனவுகூட கண்டதில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்னை வருவேன். பெரியமேட்டில் இருந்த ஒரு லாட்ஜில் தங்கிக் கொள்வேன். புத்தகங்களும் நிறைய இசைத் தட்டுகளும் வாங்கிக் கொள்வேன். இரண்டொரு சினிமா பார்ப்பேன். பத்தாவது நாள் ஊருக்குக் கிளம்பி விடுவேன். பெரியகுளத்திலிருந்து தேக்கடி நோக்கியோ, கொடைக்கானல் நோக்கியோ மோட்டார் சைக்கிளில் வீர வேகத்தில் என் தலைதெறிக்கப் பறப்பது எனக்கு மிக விருப்பமான விளையாட்டு. அம்மாதிரியான விளையாட்டுக்கெல்லாம் சென்னையில் மலை சார்ந்த வீதிகள் ஏது? - அதனால் என் புத்தகங்களோடும், இசைத்தட்டுகளோடும் அமைதி சூழ்ந்த பெரியகுளத்தில் நானும் அமைதியாகவே வாழ்ந்தேன். ஆனால், பெரியகுளத்தின் பசுமைச் சூழலை நேசிக்க முடிந்த அளவு என்னால் அந்த நகரில் இருந்த உறவினர்களையோ என் தந்தை என்ற மேலக்காடு மாடசாமியையோ நேசிக்க முடியவில்லை! அதிலும் குறிப்பாக என் அப்பாவோடு அன்றாட வாழ்க்கையின் அத்தனை நியதிகளிலும் என்னால் பிணங்கியேதான் வாழமுடிந்தது. ஒருநாள் கூட அவருடன் என்னால் இணங்கி வாழ முடியவில்லையென்றால் வாழ முடியவில்லைதான்... என் அப்பா எந்தவொரு சின்ன விஷயத்திலும் என்னை இகழ்வதும், மனதைப் புண்படுத்துவதுமாக இருந்தார். என்னுடைய அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களின் மீது அவருக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு - பழைய புத்தகக் கடையில் போட்டால் நல்ல காசு கிடைக்குமேயென்று! என்னைப் பெற்ற அப்பா இப்படி இருந்தால் எனக்கு எப்படி இருக்கும்? தினசரி என்னுடைய அறைக்குள் உட்கார்ந்து எனக்குப் பிடித்தமான இந்துஸ்தானி இசையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன். அப்போது உள்ளே எட்டிப் பார்ப்பார்.
‘ஓஹோ... பாட்டு கேக்குறீயா? நான் உள்ளே ஏதும் பூனைதான் கத்துதோன்னு பார்த்தேன்’ என்று படு கிண்டலாகச் சொல்லிவிட்டு நகர்வார். ஆனால் அவருடைய கிண்டல் என்னை ஒன்றுமே செய்யாது! அவரின் கிண்டலை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவேன். ஆனால் என் அப்பாவின் ஒரே ஒரு சொல்லைத் தான் என்னால் ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில்விட முடியவில்லை.
அந்தச் சொல் - ‘பணம்!’
பூமியில் என் அப்பா பிறந்த அவதார காரணமே, பணம் ஈட்டத்தான் - பணம் ஈட்டத்தான் - பணம் ஈட்டத்தான்... அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. பணத்துக்காக என் அப்பா என்ன வேணுமானாலும் செய்வார். பணத்துக்காக இன்று அநேகமாக எல்லா மனிதர்களுமே என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் என்னை நேரிடையாக பாதித்தவர் என் அப்பா மட்டும்தானே..! பணத்திற்காக என் அப்பா எந்தத் தொழிலையும் செய்வார். எத்தனை வழிமுறைகள் உண்டோ அத்தனையையும் செய்வார். அதெல்லாம் எனக்கும் இயலுமோ? நான் சோறு தண்ணி இல்லாமல் பலூஸகர் இசை கேட்பவன். அவர் பலூன் விற்றால் பத்து ரூபாய் கிடைக்குமென்றால் ஓடுகிற பஸ்ஸில் கூட பலூன் விற்பவர். நான் எங்கே, அவர் எங்கே?
எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது அவருக்கு. தினமும் நூறு மூட்டை விற்றுக் கொண்டிருந்த உரம் என்னுடைய முயற்சியால் தினமும் 200 மூட்டை விற்க ஆரம்பித்தது. ஹூம் ; ஒரு பொம்பளை இதை வித்துக்காட்டுவாடா
என்று சொல்லி என்னைச் சிறுமைப் படுத்துவார். 250 மூட்டை விற்றுக் காட்டிய போதும் நாலாம் கிளாஸ் பையன் வித்துக்காட்டுவான் - இதை
என்பார். 300 மூட்டையை விற்றுக் காட்டினேன். சாகப் போகிற கெழவி வித்துருவாடா இதை
என்றார். அவ்வளவுதான், என்னால் இந்த அவமதிப்பையும் இகழ்ச்சியையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நேராக எங்கள் ஆயில் மில்லில் இருந்து வீட்டுக்கு வெறி பிடித்தவன் போல ஓடினேன். நான் ஓடுவதைப் பார்த்து ‘பைத்தியக்காரன் எங்கே ஓடறான்’ என்றுதான் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தார்.
நான் நேராக அவருடைய அறைக்குள் போய் அவரின் கட்டிலில் மெத்தைக்கு அடியில் கையை விட்டு ரிவால்வரை எடுத்தேன்! அது அப்பாவின் ரிவால்வர். லைசென்ஸ் இல்லாத கள்ள ரிவால்வர்! அந்த ரிவால்வரில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு மறுபடியும்